என் மலர்
நாகப்பட்டினம்
+2
- இன்று(வியாழக்கிழமை) மாதாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
- இன்று மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முக்கிய இடம் வகிக்கிறது.
மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தளமாக விளங்கும் மாதாஆலயம் அமைந்துள்ள வேளாங்கண்ணி, கீழே நாடுகளின் 'லூர்து நகர்' என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது.
கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய 'பசிலிக்கா' என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும். இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
துன்பத்தில் துவண்டு அமைதி தேடி மன்றாடி வருபவர்களின் மனதை ஆற்றுப்படுத்தி புது வாழ்விற்கு வழிகாட்டி வரும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி நடக்கிறது.
இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டு செல்வார்கள். விழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வேண்டி விரதம் இருந்த, நடைபயணமாக வேளாங்கண்ணிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா கடந்த மாதம்(ஆகஸ்டு)் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் பேராலயத்திலும், பேராலய வளாகத்திலும், விண்மீன் ஆலயம், மேல் கோவில், கீழ் கோவில் ஆகிய இடங்களிலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கு, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதேபோல சிலுவை பாதை வழிபாடு, ஜெபமாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை ஆசி உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தன.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் பிரதான நிகழ்ச்சியான மாதா பெரிய தேர்பவனி நேற்று இரவு நடந்தது. தேர்பவனியையொட்டி தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இதில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், அருட் தந்தைகள், அருட் சகோதரிகள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பலியை தொடர்ந்து தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தேரை புனிதம் செய்தார். இதையடுத்து இரவு 8 மணிக்கு பேராலயத்தின் மணிகள் ஒழிக்க மின்விளக்கு மலர் அலங்காரத்துடன் தயார் நிலையில் இருந்த புனித ஆரோக்கிய மாதா சொரூபம் தாங்கிய பெரிய தேர் பேராலய முகப்பிலிருந்து புறப்பட்டு சென்றது.
தேர் பவனி தொடங்குவதற்கு சற்று முன்பாக லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. சரியாக 8 மணிக்கு தேர்பவனி தொடங்கிய நேரத்தில் மழை கொட்டியது. கொட்டும் மழையிலும் தேர்பவனி நடந்தது.
தேர் புறப்பட்டதும் பேராலயத்தை சுற்றி திரண்டு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் உற்சாக மிகுதியில் கைதட்டி 'மரியே வாழ்க' என கோஷமிட்டு பிரார்த்தனை செய்தனர்.
மாதா தேருக்கு முன்பாக புனித மிக்கேல் சமன்சு, புனித சூசையப்பர், புனித அந்தோணியார், புனித செபஸ்தியார், அமலோற்பவ மாதா, புனித உத்ரிய மாதா ஆகிய 6 தேர்கள் வண்ண விளக்குகளில் அலங்காரங்களுடன் அணிவகுத்தன.
இந்த 7 தேர்கள் முன்பாகவும், தேரை பின்தொடர்ந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் அலங்கார தேர்கள் வலம் வரும் நிகழ்ச்சி கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
தேர்வலம் வரும்போது பக்தர்கள் தேர் மீது பூக்களை தூவி ஜெபித்தனர். தேர்பவனி பேராலய முகப்பிற்கு வந்து சேர்ந்ததும் புனித ஆரோக்கிய மாதாவிற்கு நன்றி செலுத்தும் விதமாக பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது. வேளாங்கண்ணி முழுவதும் பல்வேறு இடங்களில் பெரிய வண்ணத்திரைகள் அமைக்கப்பட்டு தேர்பவனி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. பக்தர்கள் ஆங்காங்கு இருந்தபடியே தேர் பவனி செல்வதை பார்த்து மகிழ்ந்தனர். அப்போது அவர்கள் அன்னை மரியே வாழ்க என கைகூப்பி வணங்கி கோஷமிட்டனர்.
தேர்பவனியையொட்டி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைைமயில் வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் வேளாங்கண்ணி முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
அதேபோல் கடலோர பகுதிகளில் கடலோர காவல் படை போலீசார் 200 பேர் ரோந்து பணியில் ஈடுபட்டுத்தப்பட்டனர்.
இன்று(வியாழக்கிழமை) மாதாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. மாலையில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூற்று பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பேராலய கீழ்கோவிலில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்குண ஆசி, தமிழில் திருப்பலி ஆகியவை நிறைவேற்றப்படுகிறது.
- ஆசிரியர்களுக்கு ரூ. 12 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
- 25 பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர்கள் முகமது பஷீர், அப்துல் மாலிக் ஆகியோர் சார்பில் ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் திருமருகல் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது.
இதில் 10 முதல் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் திருமருகல் ஒன்றியம் புறாக்கிராமம் அரசு மேல்நிலை பள்ளியே சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 100, 200, 400, 800, 1500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டு 25 பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் மாணிக்கவாசகம் தலைமை தாங்கினார். கட்டுமாவடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தமிமுன் அன்சாரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சிவசங்கரி வரவேற்றார்.
இதில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கண்ணன், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் ராணி, பெற்றோர் ஆசிரியர் சங்கம் உறுப்பினர்கள், ஆசிரிய, ஆசிரியைக்கள் கலந்துக் கொண்டு மாணவ, மாணவிகளை பாராட்டினர்.
முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சண்முகநாதன் நன்றி கூறினார்.
- புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
- முதல்-அமைச்சர் நம்மை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் நோக்கில் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் மற்றும் ஏனங்குடி ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
திருமருகல் ஒன்றியம் கொ த்தமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டடத்தினையும், 15 நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நெகிழி மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் அறைக்கும் ஆலையினையும், ஏனங்குடி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டடத்தினையும் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியினையும் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்ததாவது:-
முதல மைச்சர் பொதுமக்களின் நலனை கருதி இலவச பஸ் பயணம், மக்களைத்தேடி மருத்துவம், இல்லம்தேடி கல்வி போன்ற பல்வேறு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.
அதனைத் தொடர்ந்து கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறைக்கு ரூ.42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலும், நான் முதல்வன் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியும், 21 அரசு கலை அறிவியல் கல்லூரிகளையும் வழங்கியுள்ளார்.
மேலும் மாணவர்களின் நலன் கருதி நேற்றைய தினம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் என்ற புதிய திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
நம் முதலமைச்சர் நம்மை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் நோக்கில் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
பொதுமக்கள் அனைவரும் அவ்வாறு அறிவிக்கும் திட்டங்களை பயன்பெற வேண்டுமென தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து திருமருகல் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி மற்றும் ஏனங்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை அமைச்சர் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
- நாகை மாவட்டத்தில் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் பற்றி மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் முனைவர் ராஜா எடுத்துரைத்தார்.
- விளையாட்டு வீரர்களின் திறன் குறித்து நாளை இயக்கத்தின் இயக்குனர் சேகுரா மாணவர்களிடம் உரையாற்றினார்.
நாகப்பட்டினம்:
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக ஆட்சியில் துணை மற்றும் மாவட்ட விளையாட்டு துறை இணைந்து தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடினர்.
இவ்விழா வினை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள், செயலர் செந்தி ல்குமார் ஆகியோர் தலைமை யேற்று துவக்கி வைத்தனர்.
இணைச் செயலர் சங்கர் கணேஷ், ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் நடராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
தேசிய விளையாட்டு தினம், விளையாட்டு வீரர்களின் சிறப்பு மற்றும் நாகை மாவட்டத்தின் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் பற்றி மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் முனைவர் ராஜா எடுத்துரைத்தார்.
விளையாட்டு வீரர்களின் திறன் குறித்து நாளை இயக்கத்தின் இயக்குனர் சேகுரா மாணவர்களிடம் உரையாற்றினார்.
இதில் 300 மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வணிக மேலாண்மை துறை தலைவர் முனைவர் ராஜாகிருஷ்ணன், வணிக ஆட்சியில் துணை தலைவர் முனைவர் கற்பகம் மற்றும் பிரேம்நாத் ஆகியோர் செய்திருந்தனர்.
- தினமும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கனி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடக்கிறது.
- நாளை மாலை கொடி இறக்கம் நடைபெறுகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. ஆண்டுதோறும் மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாநாட்களில் தினமும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கனி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலியும், இரவு 8 மணிக்கு சிறிய தேர்பவனியும் நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிதழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று(புதன்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் குவிந்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
விழாவையொட்டி பொது சுகாதார அமைப்பின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளரும் விழாவின் சுகாதார பொறுப்பு அலுவலருமான சுப்பிரமணியன் கூறியதாவது:-
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கண்காணிப்பில் 30 டாக்டர்கள், 10 மருந்தாளுநர்கள், 30 செவிலியர்கள், 87 சுகாதார ஆய்வாளர்கள், 4 வட்டார சுகாதார ஆய்வாளர்கள், 2 மருத்துவம் இல்லா மேற்பார்வையாளர்கள், 70 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் சுகாதார பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வேளாங்கண்ணியில் 10 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்தகுமார் தலைமையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இ.சி.ஜி., நாய்க்கடி மருந்து, பாம்பு கடி மருந்து, உயிர் காக்கும் மருந்து என வசதிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தினமும் வேளாங்கண்ணியில் 4 டிராக்டர்களில் 485 துப்புரவு பணியாளர்கள் கொண்டு 6 முதல் 7 டன் வரை குப்பைகள் அகற்றப்படுகின்றன. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
வேளாங்கண்ணியில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றில் குளோரின் அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து ரெயிலில் வரும் பயணிகளை தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு காய்ச்சல் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் 12 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
நாளை(வியாழக்கிழமை) தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலியும். மாலை கொடி இறக்கமும் நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து மாதா மன்றாட்டு, திவ்யநற்கருணை ஆசிர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
விழாவையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடலோர காவல் படை போலீசாரும் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- குளத்தின் உரிமையாளர் சசிக்குமார் என்பவருக்கும் புதுதெருவை சேர்ந்த மக்களுக்கும் தகராறு இருந்து வருகிறது.
- வாக்குவாதம் கைகலப்பாக மாறவே சசிக்குமார் உள்ளிட்டோரை சில பெண்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த தொழுதூர் பகுதியில் சசிக்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாகுளம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் இந்த குளத்தை புதுதெரு பகுதியை சேர்ந்தவர்கள் சொந்தம் கொண்டாடி வருவதால், குளத்தின் உரிமையாளர் சசிக்குமார் என்பவருக்கும் புதுதெருவை சேர்ந்த மக்களுக்கும் தகராறு இருந்து வருகிறது.
இதுதொடர்பான விசாரணை வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலக த்தில் நடந்துவரும் நிலையில் குளத்திற்கு கரைகட்டி பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள ஜே.சி.பி வாகனத்துடன் சசிக்குமார் வருகைத் தந்து இருந்தார்.
அப்போது இரு தரப்பிற்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, சசிக்குமார் உள்ளிட்டோரை சில பெண்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் சோமசு ந்தரம் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கோட்டாட்சியர்விசாரணை நடத்தி வருகிறார் இதற்கிடையே இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட இடத்தகராறில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடதக்கது.
- கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, படித்துறை வசதி மற்றும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்.
- அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே 75 அணக்குடி ஊராட்சியில் உள்ள அய்யடிமங்கலம் கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி , படித்துறை வசதி மற்றும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனை தொடர்ந்து கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- புதுப்பள்ளியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் பேசியுள்ளனர்.
- கருகாபட்டினம், வடமலை ஆகிய இடங்களில் பலரிடம் பல லட்ச ரூபாய் திருடியது தெரியவந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம்பகுதியில் 5 மாதங்களாக வேட்டைக்கா ரனிருப்பு, கள்ளிமேடு, கரியாப்பட்டினம், தலை ஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் எடுப்பவரை குறிவைத்து பல லட்ச ரூபாய் கொள்ளை நடைபெற்றது.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் டி.எஸ்பி. முருகவேல், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பசுபதி, தனிப்படை எஸ்ஐ. வெங்கடாஜலம், துரைராஜ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் வேட்டை க்காரனிருப்பு அருகில் உள்ள புதுப்பள்ளியில் சந்தேகப்படும்படி நின்று கொ ண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில்முன்னுக்கு பின் பேசி உள்ளனர்.
இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து மேலும் விசாரித்ததில் வேதாரண்யம் பகுதிவங்கிகளில் பணம் எடுத்து வந்தவர்களிடம் பணத்தை திருடி வந்தது தெரியவந்தது.மேலும் வேட்டைக்கா ரனிருப்பு, கள்ளிமேடு, கருகாபட்டினம், வடமலை ஆகிய இடங்களில் பலரிடம் பல லட்ச ரூபாய் திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த குண்டு கார்த்திக் (வயது 33), அவரது மனைவி காயத்திரி(32), கார்த்திக் மாமனார்கணேசன்(60) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 3 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து்நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கபட்டனர்.
காயத்திரி திருவாரூரில் மகளிர் சிறையில் அடைக்க ப்பட்டார்.
- பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மகாதீபாராதனைக்கு பின் சவுந்திரராஜ பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
- வழியெங்கும் பக்தர்கள் விநாயகர் சிலைகளுக்கு தேங்காய் உடைத்து வழிப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் சக்தி விநாயகர் குழுவினர் சார்பில், 108 விநாயகர் சிலைகள், நாகை, கீழ்வேளூர், சிக்கல், செல்லுார், பாலையூர், நாகூர் மற்றும் நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அனைத்து பகுதிகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மகாதீபாரதனைக்கு பின், நாகை சவுந்திரராஜப் பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. கோவில் வாசலில் மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் மாலையில் புதிய கடற்கரைக்கு வந்தது. வழியெங்கும் பக்தர்கள் விநாயகர் சிலைகளுக்கு தேங்காய் உடைத்து வழிப்பட்டனர்.
புதிய கடற்கரைக்கு வந்த விநாயகர் சிலைகள் சிறப்பு தீபாரதனைக்கு பின் படகுகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு ஆழ்கடல் பகுதியில் விசர்ஜனம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஊர்வலத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பாக கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- வாழக்கரை பகுதியில் ஒரு கார் பழுதடைந்த நிலையில் சேற்றில் சிக்கி நிற்பதாக தகவல் கிடைத்தது.
- மது போதையில் இருந்த விக்னேஷ் ஆத்திரமடைந்து செந்திலை தாக்கியதுடன், கன்னத்தையும் கடித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருக்குவளை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக செந்தில் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் திருக்குவளை கடைத்தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வாழக்கரை பகுதியில் ஒரு கார் பழுதடைந்த நிலையில் சேற்றில் சிக்கி நிற்பதாக தகவல் கிடைத்தது.
இதன்பேரில் அங்கு சென்று செந்தில், காரை மீட்கும் முயற்சியை மேற்கொண்டார். அப்போது அந்த காரில் வந்த பாங்கல் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (29) என்பவர், தனது மனைவியிடம் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது காரை எடுக்க உதவாமல், ஏன் மனைவியிடம் சண்டை போட்டுக் கொள்கிறாய் என்று செந்தில்கேட்டுள்ளார். அப்போது மது போதையில் இருந்த விக்னேஷ் ஆத்திரம் அடைந்து செந்திலை தாக்கியதுடன், கன்னத்தையும் கடித்துள்ளார்.
இதில் காயம் அடைந்த செந்தில் திருக்குவளை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து செந்தில் அளித்த புகாரின்பேரில், திருக்குவளை போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- முக்கிய நிகழ்வான அன்னையின் பிறந்தநாள் விழா வரும் எட்டாம் தேதி நடைபெறுகிறது.
- இதனை ஈடுசெய்யும் விதமாக வரும் 24-ம் தேதி சனிக்கிழமை அன்று அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாள்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா 29ஆம் தேதி முதல் வரும் 8 தேதி வரைநடைபெறுவதை முன்னிட்டு அதன் முக்கிய நிகழ்வான அன்னையின் பிறந்தநாள் விழா வரும் எட்டாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு அலுவலர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது எனவும் இதனை ஈடு செய்ய விதமாக வரும் 24ஆம் தேதி சனிக்கிழமை அன்று அலுவலர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவித்தும் விடுமுறை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
- ஆலத்தூரில் இருந்து உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளுக்கு ஆலத்தூரில் இருந்து உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும் மின்கம்பங்கள் குடிசை பகுதிகளுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அம்பேத்கர் நகரில் உள்ள மின்கம்பம் ஒன்று சிமெண்ட் காரைகள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்
இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர். எனவே உயிரிழப்பு ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






