search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இட தகராறில் இரு தரப்பினர் மோதல்
    X

    மோதல் தொடர்பாக வேதாரண்யம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

    இட தகராறில் இரு தரப்பினர் மோதல்

    • குளத்தின் உரிமையாளர் சசிக்குமார் என்பவருக்கும் புதுதெருவை சேர்ந்த மக்களுக்கும் தகராறு இருந்து வருகிறது.
    • வாக்குவாதம் கைகலப்பாக மாறவே சசிக்குமார் உள்ளிட்டோரை சில பெண்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த தொழுதூர் பகுதியில் சசிக்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாகுளம் அமைந்துள்ளது.

    இந்த நிலையில் இந்த குளத்தை புதுதெரு பகுதியை சேர்ந்தவர்கள் சொந்தம் கொண்டாடி வருவதால், குளத்தின் உரிமையாளர் சசிக்குமார் என்பவருக்கும் புதுதெருவை சேர்ந்த மக்களுக்கும் தகராறு இருந்து வருகிறது.

    இதுதொடர்பான விசாரணை வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலக த்தில் நடந்துவரும் நிலையில் குளத்திற்கு கரைகட்டி பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள ஜே.சி.பி வாகனத்துடன் சசிக்குமார் வருகைத் தந்து இருந்தார்.

    அப்போது இரு தரப்பிற்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, சசிக்குமார் உள்ளிட்டோரை சில பெண்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

    சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் சோமசு ந்தரம் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கோட்டாட்சியர்விசாரணை நடத்தி வருகிறார் இதற்கிடையே இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட இடத்தகராறில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடதக்கது.

    Next Story
    ×