என் மலர்
நீங்கள் தேடியது "புனிதநீா்"
- புனிதநீா் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கலசங்களில் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினத்தில் புகழ்பெற்ற பழமைவாய்ந்த சந்தனமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்ேகாவில் புதுப்பிக்க ப்பட்டு யாகசாலை பூஜை அமைத்துகடங்கள் பூஜிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
கடந்த 5-ந்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கி, தொடர்ந்து 7-ம் தேதி காலை யாகசாலைபூஜைகள் நிறைவடைந்து புனிதநீா் அடங்கிய கடங்கள் ஊர்வ லமாக எடுத்து வரப்பட்டு கலசங்களில் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக பரிவார தெய்வங்களின் கோவிலுக்கும் கும்பா பிஷேகம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
பின்னர், இரவு அம்பாள் வீதியுலா நடந்தது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், ஆய்வாளா், பொறுப்பாளா்கள், கிராம நாட்டாண்மைகள், உபயதாரா்கள் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை கரியாப்பட்டினம் போலீசார் செய்திருந்தனர்.






