என் மலர்
மதுரை
- சுவாமி முன்னிலையில் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் 9 ஆம் நாளான இன்று அதிகாலையில் உற்ச வர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், சந்தனம், திரவியம் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி முன்னிலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.
பின்னர் திரண்டிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க ரத வீதிகள் மற்றும் பெரிய ரத வீதி வழியாக சுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை தெப்ப திருவிழா நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வன், பொம்ம தேவன், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- மதுரை ஐகோர்ட்டு, பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்தது.
- பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா பேசியிருந்தார்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே, இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஸ், மாநில செயலாளர் சேவுகன், புதுச்சேரி மாநில தலைவர் குமார், ஆர்.எஸ்.எஸ். தென் பாரத அமைப்பாளர் வன்னியராஜன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா பேசியிருந்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய எச்.ராஜா, இரு பிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது சுப்பிரமணியபுரம் காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
- இறைச்சி வெகுநாட்கள் குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி வைத்து கிரில் சமைத்ததால் உணவே விஷமாகி இருக்கலாம் என தெரிகிறது.
- சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஓட்டலில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை பாலம் பகுதியில் தனியார் அசைவ ஓட்டல் உள்ளது.
இங்கு நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த 3 குழந்தைகள் மற்றும் கூடைப்பந்தாட்டம் விளையாடும் வீரர்கள் 19 பேர் கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்டு உள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் 22 பேருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
நேற்று இரவு முதல் அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவர்களை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் சாப்பிட்ட கிரில் சிக்கன் காலாவதியானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இறைச்சி வெகுநாட்கள் குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி வைத்து கிரில் சமைத்ததால் உணவே விஷமாகி இருக்கலாம் என தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஓட்டலில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மொத்தம் 1,216 பேரை போலீசார் கைது செய்தனர்.
- அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
மதுரை:
திருப்பரங்குன்றம் மலை மீது உயிர்ப்பலியிட தடை விதிக்கக்கோரிய விவகாரம் தொடர்பாக நேற்று போராட்டம் நடத்த இந்து அமைப்பினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.
மேலும் தைப்பூச விழா தொடங்க இருக்கும் நிலையில் அசாதாரண சூழல் ஏற்படும் என்றும் காரணம் கூறியிருந்தனர்.
இருந்தபோதிலும் இந்து முன்னணியின் அறப் போராட்ட காரணமாக மதுரை மாவட்டம் முழுவதி லும் கடந்த இரு நாட்களாக 144 தடை உத்தரவு அமலில் இருந்தது.
போராட்டத்தில் பங்கேற்க பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் எனவும், மீறி வந்தால் அவர்கள் மீதும், வாகனங்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து இருந்தனர்.
போராட்ட நாளான நேற்று கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கோவிலுக்குள் பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று திருப்பரங்குன்றம் பகுதியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்த பக்தர்களுக்கு மட்டும் இன்று அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அரசியல் கட்சியினரோ, இந்து அமைப்பினரோ செல்ல 2-வது நாளாக தடை விதித்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
அதேபோல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வழக்கம் போல காலை முதலே முருகனை தரிசனம் செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர்.
- "திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம்" என்ற கோஷத்தை வலியுறுத்தி அறப்போராட்டத்தில் ஈடுபட அழைப்பு .
- போலீசார் அனுமதி மறுப்பு. மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் உத்தரவு.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சனை நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து அமைப்பினர் மற்றும் ஆதரவு அமைப்பினர் "திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம்" என்ற கோஷத்தை வலியுறுத்தி அறப்போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்தனர்.
இதனால் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அறப்போராட்டம் நடத்த காவல்துறையினர் தடைவிதித்தனர். மதுரை மாவட்டத்தில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மதுரை பழங்காநத்தத்தில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை அனுமதி வழங்கியுள்ளது.
பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது, ஒரு மைக்கிற்கு மேல் பயன்படுத்தக் கூடாது, கட்சிக் கொடிகள் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
- போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு.
- மாவட்டம் முழுவதும் இந்து அமைப்பு நிர்வாகிகளை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் இந்த மலையின் ஒரு பக்கம் சிக்கந்தர் தர்காவும் உள்ளது.
இங்கு இஸ்லாமியர்கள் பலரும் சென்று வரும் நிலையில் இந்த தர்காவில் ஆடு கோழி பலியிட்டதாகவும், ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி அசைவ உணவு உண்டதாகவும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பலரும் சமூக வளைதளங்ககளில் திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இந்த விவகாரத்தில் இந்து முன்னணியினர் தலையிட்டு இன்று இந்து முன்னணி அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர்.
ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக சமூக வலை தளங்ககளில் தகவல் பரவியது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக போலீசார் அந்தந்த பகுதியில் உள்ள பா.ஜ.க.வினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினரை கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி பா.ஜ.க. மாவட்ட முன்னாள் பொது செயலாளர் கோவிந்த ராஜூவை போச்சம்பள்ளியை அடுத்த செல்லம்பட்டி அருகே மொரசிபட்டியில் அவரது வீட்டில் சிறை வைத்து நேற்று காலை 6 மணி முதல் நாகரசம்பட்டி போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
அவருடன் 25-க்கும் மேற்ப்பட்ட பா.ஜ.க.வினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினரையும் கைது செய்யப்பட்டு போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இதன்காரணமாக பர்கூர் டி.எஸ்.பி. முத்து கிருஷ்ணன் தலைமையில் போலீசார் மாவட்ட எல்லையான மஞ்சமேடு தென்பெண்ணை யாற்றின் போலீஸ் நிலையத்தில் வாகனங்கள் தீவீர சோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்கின்றனர்.

திண்டுக்கல்
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி இன்று அறப்போராட்டம் நடத்தப்போவதாக பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததுடன் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மட்டுமின்றி தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அங்கு செல்ல முயன்ற போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 160-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் தேனி மாவட்டத்திலும் இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிவசேனா, வி.எச்.பி., பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்பைச் சேர்ந்த பெண்கள் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதே போல் திண்டுக்கல் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் போராட்டம் நடைபெறுவதை தடுக்க போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
மேலும் பழனி கோவில் உள்பட முக்கிய கோவில் முன்பும் போலீசார் அதிக அளவில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.

நாகர்கோவில்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும், மலை முழுவதும் முருகனுக்கு சொந்தமானது என்பதை உறுதிப்படுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் இன்று மாலை போராட்டம் நடத்தபோவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.
இதையடுத்து மதுரை மாநகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து இந்து அமைப்பினர் வருவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் பஸ் நிலையங்களிலும் ரெயில் நிலையங்களிலும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
நேற்று இரவு 2 ஷிப்டுகளாக போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். இரவு 10 மணி முதல் 2 மணி வரையிலும், இரவு 2 மணி முதல் 6 மணி வரையிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சந்தேகப்படும்படியாக யாராவது வருகிறார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்ட னர். நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
குழித்துறை, நாங்குநேரி, வள்ளியூர், இரணியல் போலீஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மதுரை வழியாக செல்லும் ரெயில்களில் யாராவது இந்த அமைப்பு நிர்வாகிகள் பயணம் செய்கிறார்களா? என்பது குறித்து போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து அமைப்பு நிர்வாகிகள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஷ்வ ஹிந்து பரிஷத் மாநகர தலைவர் நாஞ்சில் ராஜாவை வடசேரி போலீசார் கைது செய்தனர். துவரங்காட்டை சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் கார்த்திக்கை ஆரல்வாய் மொழி போலீசார் கைது செய்தனர்.
இந்து முன்னணி கோட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் ஜெயராம் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்து முன்னணி ஆலோசகர் மிஷாசோமனை பிரம்ம புரத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சிறை வைத்துள்ளனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் இந்து அமைப்பு நிர்வாகிகளை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
- வாகனங்களை திரும்ப ஒப்படைப்பதால் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த முடியாது.
- எதையும் பின்பற்றாமல் தமிழகத்திற்குள் கொண்டு வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மதுரை:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சிபு என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த ஆண்டு எனக்கு சொந்தமான வாகனம் மருத்துவ கழிவுகளை கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சளு மூடு ஊராட்சிக்கு உட்பட்ட பாலுக்குழி என்ற கிராமத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டியதாக அந்த ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் எனது வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
எனவே பறிமுதல் செய்யப்பட்ட எனது வாகனத்தை திரும்ப ஒப்படைக்க கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். விசாரணை செய்த கீழமை நீதிமன்றம் எனது வாகனத்தை திரும்ப ஒப்படைக்க மறுத்து என் மனுவை தள்ளுபடி செய்தது, இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து எனது வாகனத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி மனுதாரர் வாகனம் விதி முறைகளை மீறி கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டி உள்ளது, இதை அனுமதிக்க முடியாது.
இது போன்ற வாகனங்களை திரும்ப ஒப்படைப்பதால் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த முடியாது. மேலும் உள்ளாட்சி சட்ட விதிகளின்படி இந்த வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் நடத்து முழு அதிகாரம் உள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இந்த வழக்கு விசாரணைகள் முடிந்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி புகழேந்தி, மருத்துவ கழிவுகளை கையாள்வதற்கு பல்வேறு சட்ட விதிகள் உள்ளது. குறிப்பாக 75 கிலோ மீட்டர் தாண்டி மருத்துவக் கழிவுகள் கொண்டு போகக்கூடாது என்றும், மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு சட்டவிதிகள் உள்ளது. ஆனால் இதில் எதையும் பின்பற்றாமல் தமிழகத்திற்குள் கொண்டு வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, இது தீவிரமான குற்ற செயலாகும்.
மேலும் உள்ளாட்சி சட்டவிதிகள்படி மருத்துவ கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி பண்ணுவதற்கான சட்ட விதிகள் உள்ளது. அதை செய்வதில்லை. எனவே இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர், காவல்துறை தலைவர், உள்துறை செயலாளர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளாட்சித் துறை செயலர், ஆகியோரை நீதி மன்றம் தாமாக முன்வந்து சேர்த்த நீதிபதி இதுபோன்று விதிமுறை மீறி மருத்துவ கழிவுகளை கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி செய்வது குறித்து உரிய செயல்முறை வழிகாட்டுதல்களை அந்தந்த துறையினருக்கு செயலாளர்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் மருத்துவ கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்து வழக்கை நீதிபதி புகழேந்தி முடித்து வைத்தார்.
- இந்து அமைப்பினர் மற்றும் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோவில் முன்பு நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
- வழக்கறிஞர் மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி அறிவுறுத்தினார்.
மதுரை:
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சனை நிலவி வருகிறது. இந்தநிலையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து அமைப்பினர் மற்றும் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோவில் முன்பு நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து உள்ளனர். இப்பிரச்சனை காரணமாக இருதரப்பினர் இடையே அசாதாரண சூழல் நிலவும் காரணத்தால் மதுரை மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம், தர்ணா உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் நாளை இந்து முன்னணி நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கக்கோரி நீதிபதி தனபால் முன்பு அவசர முறையீடு செய்தனர். அப்போது நீதிபதி, இதனை அவசர வழக்காக விசாரணை செய்ய முடியாது. வழக்கறிஞர் மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவுறுத்தினார்.
- போராட்டங்கள், தர்ணா, பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்து முன்னணி அறிவித்துள்ளதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று இந்து முன்னணி போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள், தர்ணா, பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையே அசாதாரண சூழலுக்கு வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறையின் தடையை மீறி திருப்பரங்குன்றம் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இந்து முன்னணி அமைப்பு திட்டமிட்டுள்ளது.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்து முன்னணி அறிவித்துள்ளதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
- த.வெ.க.வின் 2-ம் ஆண்டு கொண்டாட்டம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று நடைபெற்றது.
- த.வெ.க. சார்பில் மதுரை மாவட்டத்தில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கப்பட்டாத அறிவித்தார். இதைத் தொடர்ந்து கட்சியின் கொடி, பாடல் மற்றும் கொள்கைகள் என கட்சி சார்ந்த அறிவிப்புகள் வெளியாகி வந்தன.
மேலும், கடந்த அக்டோபர் மாதம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை த.வெ.க. தலைவர் விஜய் பிரமாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் பெயர்களை அவர் அறிவித்தார்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அறிவிக்கப்பட்டு இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று (பிப்ரவரி 2) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய் த.வெ.க. கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள த.வெ.க. கொள்கை தலைவர்களான தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலையை த.வெ.க. தலைவர் விஜய் திறந்து வைத்தார். மேலும், சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனிடையே த.வெ.க.வின் 2-ம் ஆண்டு கொண்டாட்டம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று நடைபெற்றது.
அவ்வகையில், மதுரை மாவட்டத்தில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதே சமயம் த.வெ.க. நிகழ்ச்சியில் தான் வெற்றிமாறன் கலந்துகொண்டார் என்றும் அக்கட்சியில் அவர் இணையவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் அண்மையில் வெளியான 'விடுதலை 2' படத்தில் இடம் பெற்றிருந்த 'கொள்கை இல்லாத தலைவர்கள் வெறும் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள்' என்ற வசனம் விஜயை குறிப்பிடுவதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
- இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது.
- கழுத்தை அறுத்து உடலை சுடுகாட்டில் போட்டுள்ளனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி பிள்ளைமார் தெருவை சேர்ந்த அய்யாவு மகன் முருகேசன் (வயது 52). இவர் அப்பகுதியில் தி.மு.க. பிரமுகராக உள்ளார். இவரது நண்பர் மங்கம்மா பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர் (33).
இந்நிலையில் முருகேசனின் மகன் மணி (27) தனது இருசக்கர வாகன சான்றிதழை ராஜசேகரிடம் அடமானம் வைத்து ரூ.25 ஆயிரம் கடனாக பெற்றார். அதை திருப்பி கொடுத்த நிலையில் ரூ.1000 மட்டும் திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இதனிடையே கடந்த 25-ந் தேதி ராஜசேகரும், அவரது நண்பருமான அணைக்கரைப் பட்டியை சேர்ந்த பென்னி என்ற பார்த்திபனும் டி.கல்லுப்பட்டி பகுதியில் பேசிக் கொண்டிருந்த போது அங்கு தனது நண்பர்கள் சரவணன், பூமர் சரவணன், சங்கர் ஆகியோருடன் வந்த மணி ராஜசேகர் மற்றும் பென்னி என்ற பார்த்திபனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இது தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராஜசேகர், பென்னி என்ற பார்த்திபன் மற்றும் சிலர் முருகேசனின் கழுத்தை அறுத்து உடலை மங்கம்மாள்பட்டியில் உள்ள சுடுகாட்டில் போட்டுள்ளனர். தலையை டி.கல்லுப்பட்டி- பேரையூர் ரோட்டில் உள்ள மதுக்கடையில் வைத்து விட்டு அங்கேயே மது அருந்தி விட்டு சென்றுள்ளனர்.
அங்கிருந்தவர்கள் முருகேசனின் தலையை கண்டு அதிர்ச்சியடைந்து இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசுக்கு புகார் அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முருகேசன் கொலை தொடர்பாக ராஜசேகர், பென்னி என்ற பார்த்திபன் ஆகிய இருவரையும் டி.கல்லுப்பட்டி போலீசார் இன்று கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
- 10 வருடங்களுக்கும் மேலாக மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிந்தது.
- மருத்துவம் முறையாக படிக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
மதுரை:
மதுரை அரசரடி எல்லீஸ் நகர் பகுதியில் எரோசா என்ற பெயரில் மருத்துவமனை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு டாக்டர் என்று கூறிக்கொண்டு சீதாலட்சுமி நகரை சேர்ந்த ஆரோக்கிய ராணி (வயது 56) என்பவர் பலருக்கும் குறைந்த விலையில் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மதுரை நாராயணபுரதத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் அவருக்கு கை, கால் நடுக்கம், தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டது.
சிகிச்சையில் சந்தேகம் அடைந்த வழக்கறிஞர் தனக்கு மருத்துவம் பார்த்த ராணி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கடந்த 31-ந்தேதி மதுரை, உசிலம்பட்டி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் செல்வராஜ் என்பவரிடம் புகார் மனு அளித்தார்.
அதன் அடிப்படையில் நேற்று டாக்டர் செல்வராஜ், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை கண் மருத்துவ உதவியாளர் சந்திரன், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை மருந்தாளுனர் சதீஷ், இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலக உதவியாளர் சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் அரசரடி பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு ஆரோக்கிய ராணி நோயாளி களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த இணை இயக்குநர் செல்வராஜ், ஆரோக்கிய ராணி மருத்துவம் படித்ததற்கான ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் மருத்துவம் முறையாக படிக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
அத்துடன் அந்த மருத்துவமனையில் 5 படுக்கைகள் அமைக்கப்பட்டு அதில் சிலர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களை உடனடியாக வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். அந்த மருத்துவமனையில் 4 பேர் செவிலியர்களாகவும் வேலை பார்த்து வந்தனர்.
மேலும் உரிய மருத்துவ தகுதி எதுவும் இல்லாமல் பொதுமக்களுக்கு உயிர் இழப்பு ஏற்படும் வகையில் சிகிச்சை அளித்து வந்ததும் கண்டறியப்பட்டது.
ஆரோக்கிய ராணி 10-ம் வகுப்பு வரை படித்திருந்ததாகவும், நோயாளிகளுக்கு பல்வேறு சிகிச்சைகளை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அளித்த வந்ததும் தெரிந்தது.
இது குறித்து டாக்டர் செல்வராஜ் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஆரோக்கிய ராணி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலியாக மருத்துவம் பார்த்த ஆரோக்கிய ராணியையும் கைது செய்தனர். மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த பெண் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






