search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "144 order"

    சபரிமலை உள்பட 4 இடங்களில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். #sabarimala #sabarimalatemple
    பத்தனம்திட்டை:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பல இந்து அமைப்புகள், பா.ஜனதா, காங்கிரஸ் உள்பட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டன.

    இதற்கிடையே ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த அக்டோபர் 17-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது சபரிமலைக்கு வந்த இளம்பெண்களை சாமி தரிசனத்திற்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நூகு 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இந்த தடை உத்தரவு 6 நாட்கள் நீடித்தது. இதனிடையே மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை, பம்பை, நிலக்கல் மற்றும் இலவுங்கல் பகுதிகளில் தற்போதும் பதற்றம் நிலவி வருவதால் 22- ந்தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்து கலெக்டர் நூகு உத்தரவிட்டார்.

    இந்த தடை உத்தரவு 22-ந் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில், மேலும் 4 நாட்களுக்கு இந்த தடை உத்தரவு நீடிக்கும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். #sabarimala #sabarimalatemple
    ×