என் மலர்
கள்ளக்குறிச்சி
- வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, வீட்டின் பின்புற கதவு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
- மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 53) கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவர் சம்பவத்தன்று மாலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருக்கோவிலூரில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வந்த நந்தகுமார் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, வீட்டின் பின்புற கதவு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அறையில் இருந்த பீரோவை பார்த்தபோது அதன் கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் தரையில் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ஒரு வெள்ளி தட்டு, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து நந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமை யிலான போலீசார் விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- முருகனும், ஜமுனாவும் நேற்று இரவு உறவினர் வீட்டிற்கு சென்றனர்.
- 15 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.50000 கொள்ளையடிக்கப்பட்டது .
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருணகிரியார் தெருவில் வசிப்பவர் முருகன் (வயது 45). இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜமுனா (40). உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருநெ ல்வேலி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு முருகனும், ஜமுனாவும் நேற்று இரவு சென்றனர். இவர்களது மகன்களை அருகில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு, வீட்டை பூட்டிக் கொண்டு சென்றனர்.
இன்று அதிகாலை அவ்வழியே சென்றவர்கள், முருகன், ஜமுனா தம்பதியரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்ததை பார்த்தனர். உறவினர் வீட்டில் இருந்த முருகன், ஜமுனாவின் 2 மகன்களிடம் இதனை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து பெற்றோருக்கு போன் செய்தனர். அவர்களின் வழிகாட்டுதல் படி பீரோவில் இருந்த பொருட்கள் உள்ளனவா என்று பார்த்தனர். இதில் பீரோவின் பாதுகாப்பு அறை உடைக்கப்பட்டு, அதிலிருந்த 15 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்ட னர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சம்பவம் நடந்த வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய் யாரையும் கவ்விப்பி டிக்கவில்லை. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உளுந்தூர்பேட்டை போலீ சார் பூட்டிய வீட்டின் கதவு, பீரோவை உடைத்து தங்க நகை, பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகி ன்றனர். உளுந்தூர்பே ட்டை நகரின் மையப்பகுதியில் எப்போ தும் ஆள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியில் கொள்ளை நடந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கள்ளக்குறிச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
- கலந்து கொள்ள இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்வரன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமை தனி யார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த சிறு, குறு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும்.
தமிழகம் முழுவதும் உள்ள பிரபல தனியார் துறை நிறுவனங்கள் அவ்வப்பொழுது கலந்து கொண்டு தங்களது பணிக்காலியிடம் மற்றும் கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதால் இம்முகாமிற்கு 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொள்ள இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்ப டமாட்டாது. எனவே இவ்வேலை வாய்ப்பு முகாமிற்கு தகுதியும் விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞ ர்களும், தனியார்த்துறை நிறுவனங்களும் வருகிற 16- ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை அருகில் உள்ள டேனிஷ் மிஷன் நகர தொடக்க ப்பள்ளியில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- அதிரடி சோதனைகளை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டார்.
- தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதிரடி சோதனைகளை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மணலூர்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தமயந்தி (வயது 40), குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன், வரஞ்வரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட உடையநாச்சி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சம்பத்(45), நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த காசி (48), சங்கரபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊராங்கனி கிராமத்தில் வெங்கடேசன் மனைவி செல்வி(43), ஜவுளிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாயவன் மனைவி கல்யாணி(60), கள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெ.ஜெ நகர் பகுதியைச் சேர்ந்த முருகன்(45) ஆகியோர் தங்களது மளிகை கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மணலூர்பேட்டை, வரஞ்சரம் மற்றும் சங்கராபுரம் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 4 கடைகளை மூடி சீல் வைத்தனர்.
- ஆறுமுகம் உறவினருக்கு சொந்தமாக உள்ள பாத்திரக்கடையை நடத்தி வருகிறார்.
- உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை பேபி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 37). உளுந்தூர்பேட்டையில் இவரது உறவினருக்கு சொந்தமாக உள்ள பாத்திரக்கடையை நடத்தி வருகிறார். மேலும், பங்கு சந்தையில் முதலீடு செய்து தொழில் செய்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரியை பூர்வீகமாக கொண்ட இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை.
பங்குசந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக ஆறுமுகம் கடுமையான நஷ்டம் அடைந்தார். இதனால் இவருக்கு கடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும், குழந்தை இல்லாததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை ஆறுமுகம் மனைவி கழிவறைக்கு சென்றார். அங்கு ஆறுமுகம் தூக்கு போட்டு இறந்து தொங்கிய நிலையில் இருந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். உடனடியாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் விரைந்து வந்த உளுந்தூ ர்பேட்டை போலீசார், தூக்கில் தொங்கிய நிலையில் இறந்த ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
- 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 171 மலைக் கிராமங்கள் உள்ளது. இங்கு சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டுமானால் கச்சிராய பாளையம் அருகே உள்ள வெள்ளிமலைக்கு தான் வர வேண்டும். மலை கிராமங்களுக்கு முக்கிய நகரமாக வெள்ளி மலை திகழ்ந்து வருகிறது. இதனால் வெள்ளி மலைக்கு சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
வெள்ளிமலை பஸ் நிலையத்தை சுற்றி 250 கடைகள் உள்ளது. பஸ் நிலைய விரிவாக்கத்திற்காக பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகளை அகற்றும் படி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு காலக்கெடுவும் விதித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை கடைகளை அகற்ற அதிகாரிகள் வந்தனர். இதனால் ஆவேசம் அடைந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சின்னசாமி, கஜேந்திரன் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் வியாபாரிகள் கடைகளை அடைத்தும் போராட்டம் நடத்தினார்கள்.200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இச் சம்பவத்தால் வெள்ளிமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
- கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார்
- செவிலியர், சுகாதாரஆய்வாளர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.
கள்ளக்குறிச்சி:
மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் தலாரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் 500 நகர்புற நல வாழ்வு மையங்களை தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட விளாந்தங்கல் சாலையில் நகர்ப்புற நல வாழ்வு மையத்தினை சென்னை தலைமை ச்செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து குத்துவிளக்கை ஏற்றி வைத்து நகர்ப்புற நல வாழ்வு மையத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். மேலும் பொது மக்களுக்கு வழங்க ப்படும் மருத்துவ சேவையை பார்வையிட்டனர். இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,இந்த நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் ஒரு மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதாரஆய்வாளர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.
இந்த மையத்தில்கர்ப்ப கால மற்றும் பிரசவ கால சேவைகள், சிசு மற்றும் குழந்தைகள் நல சேவைகள், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்திற்கான சேவைகள், குடும்ப நலம், கருத்தடை, பேறுகால சேவைகள், தேசியசுகாதார திட்டங்களின் பொதுவான தொற்று நோய்களுக்கான சிகிச்சைகள், வெளிநோயாளிகளுக்கான சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளும் 63 ஆய்வக பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது என்றார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள்,கள்ளக்குறிச்சி நகர்மன்ற தலைவர் சுப்பராயலு, துணை இயக்குநர் சுகாதார பணிகள் ராஜா, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளர் குமரன், தியாகதுருகம் ஒன்றிய குழுதலைவர் தாமோதிரன், சின்னசேலம் ஒன்றிய குழு தலைவர் சத்தியமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள், டாக்டர்கள், அரசு அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை நகர்புற நல வாழ்வு மையத்திற்கு வந்தார். அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தரமான சிகிச்சை அளிக்கும் படி டாக்டர்கள், நர்சுகளுக்கு அறிவுறுத்தினர். அப்போது கலெக்டர் ஷ்ரவன் குமார், உதய சூரியன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.
- டிரெய்லர் லாரியில் இருந்த இரும்பு தகடு சரிந்து பஸ் டிரைவர் மீது விழுந்தது.
- சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
சென்னையில் கமுதிக்கு 46 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவு சொகுசு பஸ் நேற்று இரவு புறப்பட்டது. இந்த பஸ்சினை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள என்குன்றத்தைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 54) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் இன்று அதிகாலை 4 மணியளவில் உளுந்தூர்பேட்டைக்கு வந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூரில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு விரைவு சொகுசு பஸ் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னாள் சென்ற டிரெய்லர் லாரியின் பின்புறம் மோதியது. டிரெய்லர் லாரியில் இருந்த இரும்பு தகடு சரிந்து பஸ் டிரைவர் மீது விழுந்தது.
இதில் டிரைவர் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தகவல் அறிந்த எடக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடல் நசுங்கி இறந்து கிடந்த டிரைவரை மீட்க தீயணைப்பு துறையினரை வரவழைத்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி டிரைவரின் உடலை பஸ்சிலிருந்து மீட்டனர். தொடர்ந்து டிரைவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 5-க்கும் மேற்ப ட்டோருக்கு லேசான காய ங்களுடன் உயிர் தப்பினர். இவர்களுக்கு உளுந்தூ ர்பேட்டை அரசு ஆஸ்ப த்தி ரியில் முத லுதவி சிகி ச்சை அளி க்கப்ப ட்டது. தொடர்ந்து மாற்றுப் பஸ் வரவழை க்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்க ப்ப ட்டனர். இந்த விபத்தால் உளுந்தூ ர்பேட்டை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் பக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்க்கு ரகசிய தகவல் வந்தது.
- 3 பேரையும் கைது செய்த போலீசார் மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா சேந்தமங்கலம்பாதூர், திருநாவலூர் ஆகிய பகுதிகளில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்க்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட்டனர். அப்போது சேந்தமகலத்தில் ஒரு வீட்டிற்கு பின்னால் லலிதா (வயது 47) என்பவர் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்து வந்தார்.
இதேபோல பாதூரில் பாக்கியலட்சுமி (39), என்பவரும், திருநாவலூரில் மங்கவரத்தாள் (55) என்பவரும் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மதுபாட்டிலை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- நீலமங்கலம் ஆற்று பாலத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த சொகுசு பஸ் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து.
- இந்த விபத்தால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 போக்குவரத்து பாதிக்கபட்டது.
கள்ளக்குறிச்சி:
சென்னையில் இருந்து தனியார் சொகுசு பஸ் 29 பயணிகளை ஏற்ற க்கொண்டு கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 26) டிரைவர் ஓட்டிவந்தார். அப்போது கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் நீலமங்கலம் ஆற்று பாலத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த சொகுசு பஸ் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து.
இதில்பஸ்சில் பயணம் செய்த 5 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கள்ள க்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 போக்குவரத்து பாதிக்கபட்டது. இதனால் மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. தொ டர்ந்து புறவழிச்சாலையில் கவிழ்ந்து கிடந்த தனியார் சொகுசு பஸ்சை பொக்லின் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திருக்கோவிலூர் பகுதிகளில் மின்தடை அதிக அளவில் ஏற்படு கிறது.
- ஒரு மணி நேரத்தில் 9 முறை மின்தடை ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் பகுதிகளில் மின்தடை அதிக அளவில் ஏற்படு கிறது. இதனால் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் இரவு 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் ஒரு மணி நேரத்தில் 9 முறை மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுபோன்று திடீர் திடீரென மின்சாரம் நிறுத்தப்படுவதும் பின்னர் மின்வினியோகம் வழங்கப்படுவதால் மின்சாதன பொருட்கள் சேதமடைகிறது. இது தொடர்பாக மின்வாரி யதுறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டால் சரியான தகவல் தெரிவிப்பதில்லை. நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 மணி நேரம் தொடர்ந்து மின்வினியோகம் நிறுத்தப்பட்டது.
- பஸ்சை வழிமறித்த 2 பேர் அரசு பஸ்ஸின் கண்ணாடியை உடைத்தனர்.
- டிரைவரிடம் தகராறில் ஈடுபட்ட ரவி, பன்னீர்செல்வம் தனியார் பஸ் ஊழியர்கள் என தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
திருப்பதியில் இருந்து செங்கோட்டை நோக்கி நேற்று இரவு அரசு பஸ் ஒன்று திருக்கோவிலூர் வழியாக சென்றது. இந்நிலையில் திருக்கோவிலூர் - உளுந்தூர்பேட்டை செட்டித்தாங்கல் பகுதி அருகே வந்தது. அப்போது அதே பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் பஸ்சை வழிமறித்த 2 பேர் பஸ் டிரைவரிடம் தகராறு செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் அரசு பஸ்ஸின் கண்ணாடியையும் உடைத்தனர். இது குறித்து அரசு பஸ் டிரைவர் செல்வம் (வயது 44) கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் விரைந்து சென்று அரசு பஸ் டிரைவரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த மற்றும் அரசு பஸ்ஸின் கண்ணாடியை உடைத்த காட்டுஎடையார் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி (34) மற்றும் பணப்பாடி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த அய்யனார் மகன் பன்னீர்செல்வம் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அரசு பஸ்சை வழிமறித்து, கண்ணாடியை உடை த்து டிரைவரிடம் தகரா றில் ஈடுபட்ட ரவி, பன்னீர்செல்வம் தனியார் பஸ் ஊழியர்கள் என தெரியவந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் திருக்கோவிலூர் கோர்டடில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






