search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே மூதாட்டி தற்கொலை
    X

    தியாகதுருகம் அருகே மூதாட்டி தற்கொலை

    • பூமாலை மனைவி சிலம்பாயி.
    • அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாலை மனைவி சிலம்பாயி (வயது 70), இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலியின் காரணமாக விஷ தழையை அரைத்து குடித்துள்ளார். இதனால் மயக்கமடைந்தஅவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார். இதுகுறித்து இவரது மகள் பச்சையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×