என் மலர்
கள்ளக்குறிச்சி
- அரசு பஸ் மினி லாரி மீது மோதியது.
- மாணவர்கள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்
கள்ளக்குறிச்சி:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையிலிருந்து உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு விற்ப னைக்காக 1000 முட்டைகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று காலையில் சென்றது. இந்நிலையில் உளுந்தூர்பேட்டை சென்னை சாலை அருகே பெரிய ஏரிக்கரை அருகே மினி லாரி வந்துகொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த சேலம்- புதுவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மினி லாரி மீது மோதியது. இந்த விபத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் மினி லாரியில் இருந்த 1000 முட்டைகளும் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது. இதனையடுத்து அந்த வழியாக வந்த 5 மோட்டார் சைக்கிள்களும் சாலையில் வழுக்கி கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயம் அடைந்த மினி லாரியை ஓட்டி வந்த டிைரவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி இருந்து திருக்கோவிலூருக்கு இன்று காலை தனியார் பள்ளி பஸ் ஒன்று சென்றது. அப்போது திருக்கோவிலூர் அருகே பஸ் வந்தபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் பஸ் டிரைவர், கண்டக்டர், உதவியாளர், மாணவர்கள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் வெவ்வேறு சம்பவத்தில் தனியார் பஸ் மற்றும் மினி லாரி விபத்துக்குள்ளானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
- மேல்பாச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கிணத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் விவசாயி.
- வனத்துறை சார்பில் இந்த பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கால்பாச்சேரி, மேல்பா ச்சேரி, கேடார், சின்ன திருப்பதி, மடவாச்சி உள்ளி ட்ட பகுதிகளில் கரடிகள் அதிக அளவில் சுற்றி திரிகிறது. மேலும் இந்த பகுதியில் சாலை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் காட்டு பகுதி வழியாக ஒரு வழிபாதையில் சின்னசேலம் பகுதிக்கு வந்து தங்களது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மீண்டும் தங்களது பகுதிக்கு காட்டு பகுதி வழியாக வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் சமீபகலமா காட்டு பகுதி வழியாக வரும் பொதுமக்கள் வனவிலங்குகளால் தாக்கி படுகாயம் அல்லது உயிர் இழப்பு ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. சம்பவதன்று மேல்பா ச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கிணத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (வயது 40) விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் இருந்து சின்னசேலம் அருகே ஊனத்தூர் பகுதிக்கு சென்றார். அப்போது ஊனத்தூர் வனப்பகு தியில் இருந்து திடீரென வெளிய வந்த கரடி ஒன்று இவர் நடந்து சென்ற பாதையின் குறுக்கே வந்து கோவிந்தசாமியை தாக்கியது.
கால்களில் கடித்ததால் படுகாயம் அடைந்த கோவிந்தசாமி வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார். இதையடுத்து இவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கூச்சலிட்டதில் கரடி ஊனத்தூர் வனப்பகுதிக்கு சென்றது. இதன்பின்னர் படுகாயம் அடைந்த கோவிந்தனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில்:- எங்கள் பகுதியில் சாலை வசதி இல்லாததால் நாங்கள் நீண்ட காலமாக காட்டு பகுதி வழியாக செல்கிறோம். அப்போது செல்லும்போது வனவிலங்குகள் எங்களை தாக்கி படுகாயம் அல்லது உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால் வனத்துறை சார்பில் இந்த பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி ெபாதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.
- கடந்த 15 நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை எடை போடவில்லை.
- போலீசார் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி முதல் மே மாதம் 31- ந் தேதி வரை விவசாயிகளின் நெல் மூட்டைகள் எடை போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை எடை போடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 50- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூத்தக்குடி கள்ளக்குறிச்சி சாலையில் கூத்தக்குடி பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், வரஞ்சரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன், தனிப்பிரிவு போலீசார் கொளஞ்சி ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தகவல் தெரிவித்து நெல் மூட்டைகளை எடை போட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் உள்ள சுமார் 30 க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த 31- ந் தேதி மூடப்பட்டது. வியாபாரிகளின் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் விவசாயிகளின் கைரேகையுடன் தற்போது பதிவு செய்யப்படுகிறது. அதன்படி விவசாயிகள் பலரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் நெல் கொள்முதல் நிலையத்தை திறப்பது குறித்து உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக தாங்கள் காத்திருப்பதாகவும், உத்தரவு கிடைத்தவுடன் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல் மூட்டைகள் எடை போடப்படும் என கூறினார்.
- கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 4 நாட்கள் புகைப்பட கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.
- 21 பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடைசெய்துள்ளது. அவற்றை பொதுமக்கள் நடைமுறையில் கடைபிடிக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 4 நாட்கள் புகைப்பட கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். சுகாதார பணிகள் இணை இயக்குநர் ராஜா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் செல்வி, தாட்கோ மேலாளர் அனந்த மோகன், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மக்கள் தொடர்பாக புதுச்சேரி கள அலுவலக துணை இயக்குனர் சிவக்குமார் வரவேற்றார்.சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,
கடந்த ஆண்டு தமிழகம், புதுவை, அந்தமான் ஆகிய இடங்களில் 73 நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் நோக்கம் அரசின் மக்கள் நலன் திட்டங்கள் மக்களை சென்றடைவது மற்றும் மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக அமைகின்றது. இந்த ஆண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் பாதிக்கிறது. இவ்வாறு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் வருங்கால சந்ததியினர் வாழ தகுயில்லாத சூழ்நிலைஉருவாகும். மேலும் மாணவர்கள் அனைவரும் பாடபுத்தகத்துடன் பொது அறிவு புத்தகங்களையும் சேர்த்து படித்தால் மட்டுமே வாழ்க்கையில் நல்ல வேலைக்கு செல்ல முடியும். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேசுகையில்,
21 பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடைசெய்துள்ளது. அவற்றை பொதுமக்கள் நடைமுறையில் கடைபிடிக்க வேண்டும். இவற்றை மாணவ, மாணவிகள் தெரிந்து கொண்டு குடும்ப உறுப்பினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த படிப்பும், பொது அறிவையும் வளர்த்து கொண்டு வாழ்க்கையில் முன்னேறலாம். சத்தான உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே ஆரோக்கியமாக வாழலாம் உடல் ஆரோக்கியம் மற்றும் படிப்பு ஆகிய இரண்டும் இருந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம் என கூறினார். முன்னதாக மாவட்ட கலெக்டர் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இதில் பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- சுந்தரேசன் திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
- விவசாய நிலத்திற்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா வட மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை . விவசாயி. அவருடைய மகன் சுந்தரேசன் (வயது 25).திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த அவர் தனது பெற்றோரிடம் எனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதாக தெரிகிறது.
இதற்கு அவரது தந்தை ஏழுமலை கடன் வாங்கி திருமணம் செய்து வைக்கிறேன் என அறிவுறுத்தி உள்ளார். இதனால் விரக்தி அடைந்த சுந்தரேசன் வீட்டில் விவசாய நிலத்திற்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். பின்னர்வீ ட்டில் மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள்அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சுந்தரேசன் பரிதாபமாக இறந்தார்.தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் ,சப் -இன்ஸ்பெக்டர் ராமதாஸ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- கள்ளக்குறிச்சியில் தனியார் திருமண மண்ட பத்தில் இன்று முதல் வருகிற 16- ந் தேதி வரை 4 நாட்கள் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.
- கண்காட்சியை பொது மக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக பார்வையிட லாம் என கூறினார்.
கள்ளக்குறிச்சி:
சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்ப கத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை மண்டல அலுவலகம் சார்பில் கள்ளக்குறிச்சியில் தனியார் திருமண மண்ட பத்தில் இன்று முதல் வருகிற 16- ந் தேதி வரை 4 நாட்கள் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச யோகாதினம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை ஆகிய மையக்கருத்துக்களில் இந்த ஒருங்கிணைந்த கண்காட்சி நடைபெறுகின்றது. இன்று நடைபெறும் கண்காட்சி தொடக்க விழாவில் நாடாளு மன்ற உறுப்பினர் டாக்டர் கவுதம சிகாமணி, மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ, நகர மன்ற தலைவர் சுப்பராயுலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். மேலும் 14- ந் தேதி காலை ஊராட்சி மன்றத் தலைவர் களுக்கான சிறப்பு கருத்தரங் கமும், மாலை நகராட்சி தூய்மைப் பணியாளர் களுக்கான சிறப்பு கருத் தரங்கமும் நடைபெறு கின்றது. 15- ந் தேதி தேதி முற்பகல் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கான சிறப்பு அமர்வும், மாலை அங்கன்வாடி பணியா ளர்கள், வளர் இளம் பெண்களுக்கான சிறப்பு அமர்வும் நடைபெறுகின்றது. 16- ந் தேதி காலை கல்லூரி மாணவர்களுக்கு பூமியைக் காப்போம் மனிதம் வளர்ப்போம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி யும், மாலை பள்ளி மாண வர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஓவியப்போட்டி யும் நடைபெறுகின்றது. கண்காட்சியில், ஊட்டச் சத்து அரங்கு, ஆதார் திருத்த அரங்கு, காசநோய் அரங்கு, சுகாதாரத் துறை அரங்கு, மகளிர் திட்ட அரங்கு, சமூக நலத்துறை அரங்கு, மருத்துவ மூலிகை அரங்கு ஆகிய வைகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த கண்காட்சியை பொது மக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக பார்வையிட லாம் என கூறினார். அப்போது மத்திய மக்கள் தொடர்பாக புதுச்சேரி கள அலுவலக துணை இயக்கு னர் முனைவர் சிவக்குமார், கள விளம்பர உதவி அலுவலர்கள் வீரமணி (புதுச்சேரி), போஸ்வெல் ஆசீர் (மதுரை), தியாகராஜன் (தருமபுரி) ஆகியோர் உடன் இருந்தனர்.
- பல்லவாடி கிராமத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணு மகன் வி ஞ்ஞானி சி.கலியபெருமாள் மரணம் அடைந்தார்.
- தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கள்ளக்குறிச்சி:
மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளின் தமிழ்நாடு, கேரளா, கர்நா டகா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் அந்தமான் நிக்கோ பார், லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தென் மண்டல இயக்குன ராக பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றவரும்,இந்த துறையி ல்பிரத மரின் ஆலோசகராகவும் இருந்து வந்த திருக்கோவி லூரை அடுத்த பல்லவாடி கிராமத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணு மகன் வி ஞ்ஞானி சி.கலியபெருமாள் (வயது 60) கடந்த சில நாட்களாக திருக்கோவிலூர் அருகே உள்ள பல்லவாடி கிராமத்தில் அவரது சொந்த வீட்டில் தங்கி இருந்தார்.
கடந்த 10-ம் தேதி காலை காலை சுமார் 10.30 மணிக்கு மரணம் அடைந்தார். அதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் அவர் பணியாற்றிய மாநிலங்களில் இருந்து மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதேபோல் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழு தலைவர் காட்டுச்செல்லூர் ராஜவேல், திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் வக்கீல் எம்.தங்கம், திருக்கோவிலூர் வக்கீல் என்.ஆர்.கே என்கிற என்.ராதாகிருஷ்ணன், பெங்களூர் கே.எஸ்.ஏ குழுமத்தின் உரிமையாளர் தொழிலதிபர் கே.எஸ்.அபிஷேக், போதகர் ஆரோன், திருக்கோவிலூர் மணிவேல்ராஜ், ஆல்பர்ட், ஜெயபால் ரெட்டியார், கிருஷ்ணா பட்டாசு கடை மேலாளர் ஏ.சந்துரு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், அனைத்து கட்சி நிர்வாகிகளும், அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
விஞ்ஞானி கலிய பெருமாள் இறுதி சடங்கு நிகழ்ச்சி பல்லவாடி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்க ள்மரணம் விஞ்ஞானி கலியபெருமாலின் மனைவி சாந்தி, மகன் அபிஷேக் மற்றும் மருமகள் சிந்து ஆகியோருக்கும் ஆறுதல் கூறினர். விஞ்ஞானி கலிய பெருமாள் மரண தகவல் அறிந்து தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துறை சார்ந்த அலுவலர்களும் மற்றும் முக்கிய பிரமுகர்களும், பகுதி பொதுமக்களும் மற்றும் உறவினர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
- கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
- காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் போலீசார் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
கள்ளக்குறிச்சி உட்கோட்டம் கரியாலுர் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ராமலிங்கம்.இவர் தற்போது நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணி புரிந்து வருகிறார்.
இவர் கரியாலூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த போது சாராய வியாபாரிகளிடம் ரகசிய தொடர்பில் இருந்து வந்த காரணத்தினால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, குட்கா மற்றும் சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் தொடர்பில் இருந்து, காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் போலீசார் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- போலி மதுபான பாட்டில்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் தயாரிக்கப்பட்டது
- போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கடலூர் மாவட்ட மது விலக்கு போலீசார் வடலூர் பகுதியில் கடந்த வாரம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு போலி மதுபாட்டில்கள் விற்பனையில் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அவரை கைது செய்த மதுவிலக்கு போலீசார், போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
இதில் போலி மதுபான பாட்டில்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 தனிப்படை போலீசார் கல்வராயன்மலையில் தங்கி விசாரணை நடத்தினர். இதில் கல்வராயன்மலை அருகே நடுத்தொரடிப்பட்டில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கியதை கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று, போலி மதுபான தொழிற்சாலை கட்டிடத்தை சுற்றிவளைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது. மதுபானம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், பல்வேறு நிறுவனங்களின் பெயரில் அச்சிடப்பட்டிருந்த லேபில்கள். காலி பாட்டில்கள், பாட்டில் மூடி, காலி அட்டை பெட்டிகள், சில எந்திரங்கள் இருந்ததை கண்டனர். மேலும், 454 மதுபாட்டில்கள் அட்டைப் பெட்டியில் வைத்து வெளியில் விற்பனைக்கு அனுப்ப தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததையும் தனிப்படை போலீசார் கண்டறிந்தனர்.
இவை அனைத்தையும் பறிமுதல் செய்த கடலூர் மாவட்ட போலீசார், இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிடம் கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் ஓப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வீரன், அதே மாவட்டத்தை சேர்ந்த பொறையார் பகுதி ரியாஸ் அகமது, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதி தொரடிப்பட்டை சேர்ந்த வெங்கடேசன், கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வயலாமூர் குபேந்திரன் என்பது தெரியவந்தது.
இவர்கள் தயாரித்த போலி மதுபானங்களை தமிழகத்தில் உள்ள எந்தெந்த பகுதிகளுக்கு, எப்படி, யார் மூலமாக அனுப்பி வைத்தனர். இதில் தொடர்புடைய மற்றவர்கள் யார்? யார்? என்பது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்வராயன்மலை பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதும், இது தொடர்பாக போலீசார் வாரம் ஒரு முறை 2 ஆயிரத்திலிருந்து, 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊரல்களை கண்டறிவது வழக்கம். அதே சமயத்தில் இந்த ஊரல்களை வைத்திருந்தவர்களோ, அதனை காய்ச்சியவர்களோ இதுவரை பெரியளவில் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை தொரடிப்பட்டில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வந்ததை கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் கண்டறிந்து, கள்ளக்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதாவது, இது சம்பந்தமாக கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீசாருக்கோ, கரியாலூர் போலீசாருக்கு தெரியாதா?, தெரியவில்லை என்றால் ஏன் தெரியவில்லை, தெரிந்திருந்தால் இவ்வளவு நாட்களாக ஏன் பிடிக்கவில்லை? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் கல்வராயன் பகுதி மக்கள் போலீசார் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- கோகுல் தனது நண்பர்களுடன் சுங்கச்சாவடி அருகே யுள்ள கடைக்கு சென்று டீ அருந்தினார்.
- கோகுலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை புதுத்தெருவைச் சேர்ந்தவர் கோகுல் (வயது 19). இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் 3 மோட்டார் சைக்கிளில், நேற்று நள்ளி ரவு சுங்கச்சாவடி அருகேயுள்ள கடைக்கு சென்று டீ அருந்தினார். அங்கிருந்து உளுந்தூர் பேட்டை அன்னை நகரைச் சேர்ந்த சதீஷை மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு வீடு திரும்பினார். இவர்கள் உளுந்தூர்பேட்டை ரெயில் நிலையம் அருகில் வந்த போது எதிரில் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலைதடு மாறிய மோட்டார் சைக்கிள் அருகிலிருந்த தடுப்புக் கட்டையில் மோதியது.
இவர்களின் பின்னால் வந்த மற்ற நண்பர்கள் விபத்துக் குள்ளான கோகுல், சதீஷ் ஆகியோரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கோகுலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சதீஷை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீ சார் விபத்து குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை நகரில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் நள்ளிரவு நேரங்களில் சுங்கச்சாவடி அருகே உள்ள கடைக்கு சென்று டீ அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ள னர். அவ்வாறு செல்பவர்கள் ெஹல்மெட் அணியாமல் செல்வதால், விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். எனவே, போக்குவரத்து போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டு மென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- மண்மலை கிராமத்தில் மிகவும் பழமையான கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளது.
- குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இங்கு வந்து விளையாடி சென்று கொண்டிருக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மண்மலை கிராமத்தில் மிகவும் பழமையான கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த அலுவலகம் மண்மலை கிராமத்தில் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த கட்டிடம் பூட்டு போடப்பட்டு கேப்பாரற்று கிடக்கிறது.
மேலும் கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டும், கட்டிடத்தின் மேற் கூரையின் உள்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கீழே விழுகிறது. இதனால் இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்திற்கு எதிரே மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அடிக்கடி பள்ளி மாணவர்கள் வந்து விளையாடி செல்வதும், சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்புகளை சேர்ந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இங்கு வந்து விளையாடி சென்று கொண்டிருக்கின்றனர். எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத் தால் உயிர்பலி ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடியிருப்பு மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விமல் சென்னையில் மின் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
- கார் ஓட்டி வந்த விமல் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
கள்ளக்குறிச்சி:
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் பகுதியை சேர்ந்தவர் விமல் (வயது 35). சாப்ட்வேர் என்ஜினியர். இவர் சென்னையில் மின் பொறியாளராக பணிபுரிந்து வரும் நிலையில் இன்று காலை சேலத்தில் இருந்து தனது காரில் புறப்பட்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடு கட்டையை உடைத்துக் கொண்டு எதிர் திசை நோக்கி பறந்து சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து நடந்த போது கார் ஓட்டி வந்த விமல் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர் பேட்டை போலீசார் விமலை மீட்டு போலீசாரின் நெடுஞ் சாலை ரோந்து வாகனத்தில் உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






