search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நள்ளிரவில் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் விபத்தில் பலி
    X

    நள்ளிரவில் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் விபத்தில் பலி

    • கோகுல் தனது நண்பர்களுடன் சுங்கச்சாவடி அருகே யுள்ள கடைக்கு சென்று டீ அருந்தினார்.
    • கோகுலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை புதுத்தெருவைச் சேர்ந்தவர் கோகுல் (வயது 19). இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் 3 மோட்டார் சைக்கிளில், நேற்று நள்ளி ரவு சுங்கச்சாவடி அருகேயுள்ள கடைக்கு சென்று டீ அருந்தினார். அங்கிருந்து உளுந்தூர் பேட்டை அன்னை நகரைச் சேர்ந்த சதீஷை மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு வீடு திரும்பினார். இவர்கள் உளுந்தூர்பேட்டை ரெயில் நிலையம் அருகில் வந்த போது எதிரில் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலைதடு மாறிய மோட்டார் சைக்கிள் அருகிலிருந்த தடுப்புக் கட்டையில் மோதியது.

    இவர்களின் பின்னால் வந்த மற்ற நண்பர்கள் விபத்துக் குள்ளான கோகுல், சதீஷ் ஆகியோரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கோகுலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சதீஷை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீ சார் விபத்து குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை நகரில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் நள்ளிரவு நேரங்களில் சுங்கச்சாவடி அருகே உள்ள கடைக்கு சென்று டீ அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ள னர். அவ்வாறு செல்பவர்கள் ெஹல்மெட் அணியாமல் செல்வதால், விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். எனவே, போக்குவரத்து போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டு மென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×