search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7 injured"

    • அரசு பஸ் மினி லாரி மீது மோதியது.
    • மாணவர்கள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையிலிருந்து உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு விற்ப னைக்காக 1000 முட்டைகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று காலையில் சென்றது. இந்நிலையில் உளுந்தூர்பேட்டை சென்னை சாலை அருகே பெரிய ஏரிக்கரை அருகே மினி லாரி வந்துகொண்டிருந்தது. 

    அப்போது எதிரே வந்த சேலம்- புதுவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மினி லாரி மீது மோதியது. இந்த விபத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் மினி லாரியில் இருந்த 1000 முட்டைகளும் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது. இதனையடுத்து அந்த வழியாக வந்த 5 மோட்டார் சைக்கிள்களும் சாலையில் வழுக்கி கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயம் அடைந்த மினி லாரியை ஓட்டி வந்த டிைரவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கள்ளக்குறிச்சி இருந்து திருக்கோவிலூருக்கு இன்று காலை தனியார் பள்ளி பஸ் ஒன்று சென்றது. அப்போது திருக்கோவிலூர் அருகே பஸ் வந்தபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் பஸ் டிரைவர், கண்டக்டர், உதவியாளர், மாணவர்கள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் வெவ்வேறு சம்பவத்தில் தனியார் பஸ் மற்றும் மினி லாரி விபத்துக்குள்ளானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

    • ராமேஸ்வரம் பகுதியில் இருந்து தனியார் பஸ் சுமார் 40 பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • இதில் பயணம் செய்த சுமார் 7 பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பின்னர்

    புதுச்சேரி:

    ராமேஸ்வரம் பகுதியில் இருந்து தனியார் பஸ் சுமார் 40 பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    கடலூர் வழியாக புதுவை நோக்கி நேற்று நள்ளிரவில் வந்து கொண்டிருந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முள்ளோடை நுழைவாயில் அருகில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த சுமார் 7 பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பின்னர், பஸ் முன்பக்கம் கண்ணாடி மற்றும் எஞ்சின் சேதம் அடைந்து விட்டது.

    தகவல் அறிந்தவுடன் கிருமாம்பாக்கம் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்தவர்களை மீட்டு முதலுதவி செய்து மாற்று பஸ்ஸில் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். மேலும் கிரேன் இயந்திரத்தை வரவ ழைத்து அந்த பஸ்சை சுமார் 2 மணி நேரமாக போராடி எடுத்தனர். இது சம்பந்தமாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 7 பேர் படுகாயம் அடைந்தனர். #FireinMall
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் பர்ஹான்புர் பகுதியில் அமைந்துள்ளது பகிசா வணிக வளாகம். நேற்று இரவு அந்த வணிக வளாகத்தில் பலர் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வணிக வளாகத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றியது. அந்த தீ மளமளவென பரவியது. இந்த தீவிபத்தில் சிக்கி 7 பேர் படுகாயம் அடைந்தனர். 



    தகவலறிந்து அங்கு 7க்கும் மேற்பட்ட தீயணைப்பு படைவீரர்கள் சென்றனர். அவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை போராடி அணைத்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ம.பி.யில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சற்று பரபரப்பு ஏற்பட்டது #FireinMall
    தலைநகர் மாஸ்கோவில் கால்பந்து ரசிகர்கள் உள்பட மக்கள் இருந்த கூட்டத்தில் கார் மோதிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
    மாஸ்கோ:

    ரஷிய நாட்டில் உலக கால்பந்து போட்டி நடப்பதால் உலகமெங்கும் இருந்து கால்பந்து ரசிகர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தலைநகர் மாஸ்கோவில் நேற்று முன்தினம் செஞ்சதுக்க பகுதியில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் உள்பட மக்கள் கூட்டம் அலைமோதியது.

    அப்போது ஒரு கார் வேகமாக வந்து, மக்கள் கூட்டத்தில் மோதியது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மக்கள் நாலாபுறமும் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இருப்பினும் இந்த சம்பவத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.



    இந்த சம்பவத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டார். அவர் கிர்கிஸ்தான் நாட்டில் வழங்கப்பட்ட ஓட்டுனர் உரிமம் வைத்து இருந்தது தெரிய வந்தது.

    சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறும்போது “மக்கள் கூட்டத்தில் மோதிய காரை மக்கள் மறித்து, அதை ஓட்டி வந்தவரை வெளியே இழுத்தனர். ஆனால் அவர் ஓடத் தொடங்கினார். இருப்பினும் சிலர் அவரை விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்தனர்” என்றனர்.

    இந்த சம்பவத்தின்போது, அவர் மது அருந்தி இருந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும், மக்கள்கூட்டத்தில் மோத வேண்டும் என்ற நோக்கத்தில் மோதவில்லை என்று அவர் கூறி உள்ளார். இருப்பினும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

    படுகாயம் அடைந்தவர் களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
    ×