என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![உளுந்தூர்பேட்டையில் அரசு ஆஸ்பத்திரி நர்ஸ் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை உளுந்தூர்பேட்டையில் அரசு ஆஸ்பத்திரி நர்ஸ் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை](https://media.maalaimalar.com/h-upload/2023/06/10/1895854-nagaiabes.webp)
உளுந்தூர்பேட்டையில் அரசு ஆஸ்பத்திரி நர்ஸ் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- முருகனும், ஜமுனாவும் நேற்று இரவு உறவினர் வீட்டிற்கு சென்றனர்.
- 15 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.50000 கொள்ளையடிக்கப்பட்டது .
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருணகிரியார் தெருவில் வசிப்பவர் முருகன் (வயது 45). இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜமுனா (40). உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருநெ ல்வேலி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு முருகனும், ஜமுனாவும் நேற்று இரவு சென்றனர். இவர்களது மகன்களை அருகில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு, வீட்டை பூட்டிக் கொண்டு சென்றனர்.
இன்று அதிகாலை அவ்வழியே சென்றவர்கள், முருகன், ஜமுனா தம்பதியரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்ததை பார்த்தனர். உறவினர் வீட்டில் இருந்த முருகன், ஜமுனாவின் 2 மகன்களிடம் இதனை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து பெற்றோருக்கு போன் செய்தனர். அவர்களின் வழிகாட்டுதல் படி பீரோவில் இருந்த பொருட்கள் உள்ளனவா என்று பார்த்தனர். இதில் பீரோவின் பாதுகாப்பு அறை உடைக்கப்பட்டு, அதிலிருந்த 15 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்ட னர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சம்பவம் நடந்த வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய் யாரையும் கவ்விப்பி டிக்கவில்லை. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உளுந்தூர்பேட்டை போலீ சார் பூட்டிய வீட்டின் கதவு, பீரோவை உடைத்து தங்க நகை, பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகி ன்றனர். உளுந்தூர்பே ட்டை நகரின் மையப்பகுதியில் எப்போ தும் ஆள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியில் கொள்ளை நடந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)