என் மலர்
கள்ளக்குறிச்சி
- ஜரினாபீயிடம் சலிமா ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது.
- சலிமா மற்றும் அவரது மகள் நிஷா ஆகியோர் தேவபாண்டலம் வந்து ஜரினாபீயை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தை சேர்ந்தவர் கமருதீன் மனைவி ஜரினாபீ (வயது51). இவரின் உறவினரான தியாகதுருகம் அன்சர் மனைவி சலிமா (வயது42) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஜரினாபீ செல்போன் மூலம் சலிமாவிடம் வாங்கிய கடனை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சலிமா மற்றும் அவரது மகள் நிஷா ஆகியோர் தேவபாண்டலம் வந்து ஜரினாபீயை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சலீமா, நிஷா ஆகியோர் மீது சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சமய அறநிலைய துறையினர் சரிவர கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
- அது குறித்து கேட்டால். கேள்வி கேட்கும் நபர்களை சிலர் கூட்டாக சேர்ந்து அடித்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே எலவடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள புற்று மாரியம்மன் கோவில் கடந்த 10 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மாரியம்மன் கோவிலுக்கு உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் வேண்டுதலின் பெயரில் சாமிக்கு தங்க நகைகள் நன்கொடையாக பல ஆண்டுகளாக செலுத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.இந்தக் கோவிலை இந்து சமய அறநிலைய துறையினர் சரிவர கண்டு கொள்ளாமல் இருப்பதால் இந்த கோவி லுக்கு அறங்காவலர்கள் போன்று செயல்படும் சிலர் அந்த கோவிலுக்கு வந்து சேர்ந்த தங்கத்திலான தாலி, தாலிக்கொடி, ஒட்டியானம் போன்ற நகைகளை வெளியில் எடுத்துச் சென்று விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ரூ.9 லட்சத்திற்கு கோவில் நகைகள் விற்கப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.
இப்படி இந்த கோவில் நிர்வாகத்தில் சிலர் தலையிட்டு முறைகேடு செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதைக் கண்ட சிலர் அது குறித்து கேட்டால். கேள்வி கேட்கும் நபர்களை சிலர் கூட்டாக சேர்ந்து அடித்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. அந்த நபர்கள் கோவில் உண்டியலில் சேரும் ரொக்க பணம் மற்றும் கோவில் நிலம் ஆகியவற்றையும் முறைகேடாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றால் அவர்கள் இது குறித்து கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக சிலர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து சின்னசேலம் வட்ட இந்து சமய அறநிலைய த்துறையினரிடம் கேட்டபோது சின்னசேலம் வட்டத்தில் 145 கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது அவைகளை கண்காணித்து நிர்வகிக்க சிரமமாக உள்ளது என கூறி வருகின்றனர். எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி நிர்வாகம் தலையிட்டு எலவடி கிராமத்தில் புற்று மாரியம்மன் கோவிலில் நடைபெறும் முறைகேடுகளை கண்டுபிடித்து கோவில் உடைமைகளை மீண்டும் கோவிலுக்கே வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- வீட்டின் அருகில் உள்ள ஓடை யில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக சிக்கினார்.
- குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சிமாவட்டம், சின்னசேலம் வட்டம், கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(38) அவரது வீட்டின் அருகில் உள்ள ஓடை யில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக சின்ன சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் இருந்து 120 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. இவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாரயம் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர் நட வடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், சாராய வியாபாரி ராமச்சந்திரனை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் , ராமச்சந்திரனை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி நேற்று ராமச்சந்திரனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.
- குப்பைகளை ஏற்றிச்செல்லும் மின்கல சுமை தூக்கும் வாகனங்கள் வழங்கும் விழா நடை பெற்றது.
- கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாள ருமான வசந்தம் கார்த்தி கேயன் கலந்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 11 கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ.2½ லட்சம் மதிப்பில் குப்பைகளை ஏற்றிச்செல் லும் மின்கல சுமை தூக்கும் வாகனங்கள் வழங்கும் விழா நடை பெற்றது. ஒன்றி யக்குழு தலைவர் வடிவுக் கரசி சாமி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சென்னம் மாள் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலு வலர்கள் ரங்கராஜன், பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், பாரதி தாசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வும், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாள ருமான வசந்தம் கார்த்தி கேயன் கலந்து கொண்டு மேலப்பழங்கூர், பாக்கம், கடம்பூர் உள்ளிட்ட 11 ஊராட்சி மன்ற தலைவர் களிடம் மின்கல சுமை தூக்கும் வாகனங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சி யில் ஊராட்சி மன்ற தலை வர்கள், ஒன்றிய கவுன் சிலர்கள் மற்றும் அலுவலர் கள் கலந்து கொண்டனர்.
- புதிய மண்கள் சுத்தம் செய்யும் வாகனம் வாங்கப்பட்டது.
- நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி நகராட்சியின் சார்பில் நமக்கு நாமே திட்டம் 2022-23-ன்கீழ் பொதுமக்களின் பங்களிப்பாக, கள்ளக்குறிச்சி நகர்மன்ற தலைவர் சுப்ராயலு மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் ரூ.28.37 லட்சமும், அரசு பங்களிப்பாக ரூ.56.74 லட்சமும் என மொத்தம் ரூ.85.11 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மண்கள் சுத்தம் செய்யும் வாகனம் வாங்கப்பட்டது.
இதையொட்டி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் கள்ளக்குறிச்சி நகராட்சியின் சார்பில் சாலைகளில் உள்ள மண்களை சுத்தம் செய்யும் வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில், பொதுப்பணிகள் (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகனத்தின் மூலம் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகளில் உள்ள மண்கள் சுத்தம் செய்யப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி நகர்மன்றத் தலைவர் சுப்ராயலு, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன், கள்ளக்குறிச்சி நகர்மன்ற துணை தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பொறியாளர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மணிகண்டன் டேங்க் ஆப்ரேட்டராக பணி செய்து வந்தார்.
- தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி மணிகண்டன் நேற்று இரவு இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
திருநாவலூர் ஒன்றியம் களமருதூர் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மணிகண்டன் (வயது 40) டேங்க் ஆப்ரேட்டராக பணி செய்து வந்தார். இவர் கடந்த 12-ந்தேதி அதிகாலை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீரை திறந்து விட்டு, டீ குடிக்க நடந்து சென்றார். அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் டேங்க் ஆப்ரேட்டர் மணிகண்டன், மோட்டார் சைக்கிளில் வந்த நாராயணன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் 2 பேரையும் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு டேங்க் ஆப்ரேட்டர் மணிகண்டன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி மணிகண்டன் நேற்று இரவு இறந்தார். இது தொடர்பாக திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்று விட்டார்.
- அக்கா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (வயது 27). இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்று விட்டார். இந்நிலையில் இவரது மனைவி மலர்விழி (24), மகள்கள் இதலிகா (3), லியா (1) ஆகியோர் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று மலர்விழி தனது 2 மகள்களுடன் சிவகாசியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
ஆனால் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து இளவரசனின் அக்கா பிரவீனா வெளிநாட்டில் உள்ள தனது தம்பிக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- இளைஞர்கள் மற்றும் 60 வயதிற் குட்பட்ட பொதுமக்கள் பங்குபெற்றனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி:
போதை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ந் தேதி கடைபிடிக்கப்படு கிறது. இதனை முன்னிட்டு திருக்கோவிலூரில் மாரத் தான் போட்டி கள்ளக் குறிச்சி மாவட்ட போலீஸ் துறையின் சார்பில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் 13 வயது முதல் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகள், இளை ஞர்கள் மற்றும் 60 வயதிற் குட்பட்ட பொதுமக்கள் பங்குபெற்றனர். இந்த மாரத்தான் போட்டி யில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். திருக்கோ விலூர் அரசினர் அங்கவை சங்கவை பெண்கள் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்து காலை 7 மணி அளவில் மாரத்தான் போட்டி தொடங்கியது.
போட்டியை கள்ளக் குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்கள் 5 முனை சந்திப்பு, கிழக்கு தெரு, தெற்கு வீதி, ஏரிக்கரை வழி யாக ஆசனூர் ரோட்டில் உள்ள திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தை சென்றடைந்தது. இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் இரு வரும் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் முதல் 3 இடம் பிடித்த ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி ஆகிய இரு பிரிவைச் சேர்ந்த வெற்றி யாளர்களுக்கு முதல் பரி சாக ரூ.5000, 2-வது பரி சாக ரூ.3000, 3-ம் பரிசாக ரூ.2000 வழங்கப்பட்டது. அத்துடன் போட்டியில் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றி தழ்களை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் குமார் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சி களுக்கான ஏற்பாடுகளை திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் செய்திருந்தனர்.
- இளையராஜா அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
- பருத்தி பயிருக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தார்.
கள்ளக்குறிச்சி:
ரிஷிவந்தியம் அருகே கீழ் பாடி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா(37) விவசாயி. இவரது மனைவி உண்ணாமலை. இவர்களுக்கு ஜான்சன்(8), பாரதி(6) என்று 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இளையராஜா அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் உண்ணாமலை கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த இளையராஜா பருத்தி பயிருக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தார். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
- வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
- சந்திரலேகாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் தாலுக்கா அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 50). விவசாயி இவரது மகள் சந்திரலேகா (20). பட்டதாரியான இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கிறாயே, ஏதாவது வேலை தேடி செல்லுமாறு சந்திரலேகாவிடம் அவரது தந்தை முருகன் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சந்திரலேகா வீட்டில் இருந்த எலி பேஸ்டை கடந்த 16-ந்தேதி சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தார்.
அவரை உடனடியாக மீட்ட பெற்றோர், உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சந்திரலேகாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரலேகா நேற்று இரவு இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பதியை தாக்கி நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- விவசாயியை தாக்கி நகைகளை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே ஏர்வாய்பட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிவேல் (வயது 34).விவசாயம் செய்து வருகிறார்.
இவரது மனைவி துர்கா. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு அதே பகுதியில் 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் நெல், மணிலா, உள்ளிட்டவைகளை பயிரிட்டு தனது முழுநேர வேலையாக விவசாயம் பார்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று விவசாய நிலத்திற்கு சென்று வேலை பார்த்து விட்டு இரவு உணவு முடித்துவிட்டு தூங்க சென்றனர். இவர்கள் வீடு சிறிய அளவிலானது.
அதனால் வீட்டிற்குள்ளே ஏற்பட்ட புழுக்கத்தால் இந்த தம்பதி வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு பின் பக்க கதவை திறந்து வைத்து விட்டு தூங்கியுள்ளனர். நள்ளிரவில் அங்கு வந்த முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் வீட்டின் பின்புறம் நுழைந்து உள்ளே சென்றனர். பின்னர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மணிவேலை அந்த கும்பல் கட்டையால் தாக்கி அவரை கட்டி போட்டனர். இதை பார்த்த மணிவேல் மனைவி துர்கா திருடன்.. திருடன்.. என கத்தினார். உடனே அந்த மர்ம கும்பல் நீ சத்தம்போட்டால் உன் கணவரை கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் துர்கா அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அந்த மர்ம கும்பல் துர்கா கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின், மற்றும் பீரோவில் இருந்த தங்க நகை உள்ளிட்ட 6 பவுன் தங்க நகையை கொள்ளை அடித்து சென்றனர். இதுகுறித்து மணிவேல் மற்றும் அவரது மனைவி துர்கா ஆகியோர் கச்சிராயபாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பதியை தாக்கி நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கொள்ளையர்கள் குறித்து துப்புதுலக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் விவசாயியை தாக்கி நகைகளை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- நாய் சில்வர் குடத்தில் தலையை விட்ட போது எதிர்பாராத விதமாக தலை குடத்திற்குள் சிக்கி மாட்டிக்கொண்டது
- தீயணைப்பு நிலைய வீரர்கள் குடத்திற்குள் தலை மாட்டிய நாயை போராடி பத்திரமாக மீட்டனர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அண்ணா சத்யா தெருவை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இதற்கிடையே அந்த நாய் நேற்று இரவு தண்ணீர் குடிப்பதற்காக அவரது வீட்டு தோட்டத்தில் இருந்த சில்வர் குடத்தில் தலையை விட்ட போது எதிர்பாராத விதமாக தலை குடத்திற்குள் சிக்கி மாட்டிக்கொண்டது.
பின்னர் நாயின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த கோபாலகிருஷ்ணன் இது குறித்து உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த தீய ணைப்பு நிலைய வீரர்கள் குடத்திற்குள் தலை மாட்டிய நாயை போராடி பத்திரமாக மீட்டனர். நாயை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடிய காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது.






