search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector instructions"

    • வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் மறுவாழ்வு குறித்தும், விவாதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2-ம் காலாண்டிற்கான ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடி யினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது,

    மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, தவறுடையதாக கருதப்படும் வழக்குகளின் விசாரனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தற்போது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நிலுவையிலுள்ள வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத வழக்குகள், நீதிமன்ற விசா ரணை நிலுவை வழக்குகள், பிழையுடையதாக கருதப்பட்ட வழக்குகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு விவாதிக்கப்பட்டது. அனைத்து வழக்குகளின் மீதும் விசாரணைகள் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், வன்கொடு மையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவிகள் வழங்கப்பட்ட விவரங்கள் குறித்தும், ஆதிதிராவிட மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது தொடர்பாகவும், மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் மறுவாழ்வு குறித்தும், விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் வன்கொடுமை அதிக அளவில் நடைபெறும் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்திடுமாறும், பட்டியலின மக்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நடவடி க்கைகள் மேற்கொள்ளவும், இக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியதன்படி, நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்பு டைய அலுவலர்கள், காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி, துணை காவல் கண்காணிப்பாளர்கள் ரமேஷ், மனோஜ்குமார், மகேஷ் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கோவை மாவட்டம் கணியூரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.
    • 55 லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கோவை,

    உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது/ தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் பல்வேறு இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்ட்டுள்ளது உள்ளது.

    அதனை சரி செய்ய அரசு நிர்வகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கணியூரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. கணியூர் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-

    கோடைக்காலம் தொடங்கி விட்டதால் தண்ணீரின் தேவை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தண்ணீர் கிடைக்கும் வழி, சேமிக்கும் விதம் ஆகியவற்றை தெரிந்து கொண்டால் மட்டுமே வருங்காலத்துக்கான தண்ணீரை நம்மால் சேமிக்கவும், பயன்படுத்தவும் முடியும்.

    குழந்தைகளுக்கு தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராமப்புறங் களில் ஒவ்வொரு வீட்டுக்கும் 55 லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். நீர்நிலைகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே வீட்டுக்கழிவுகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைத்து மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தண்ணீர் சேமிப்பு, மழை நீர் சேமிப்பு, வீட்டை சுற்றிலும் சுத்தமாக வைப்பது குறித்து பேசப்பட்டது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சிறுவாணி அணையில் தண்ணீர் குறைவாக உள்ளது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பில்லூர் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள குளங்களில் வண்டல் மண் எடுக்க அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து விவசாயிகள் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியில் ரேசன் கடைகள், மாணவர் விடுதிகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் விசாகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதா? என்பது குறித்தும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியில் ரேசன் கடைகள், மாணவர் விடுதிகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் விசாகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆதி திராவிடர் மாணவர் விடுதியை பார்வையிட்டு மாணவர்களுக்காக சமைத்து வைக்கப்பட்டு இருந்த முட்டை மற்றும் உணவுகளின் தரத்தை ஆய்வு செய்தார்.

    சமையலுக்கு எந்த வகையான எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது என்றும் கேட்டறிந்தார். ரெட்டியார்பட்டி பகுதியில் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை மூலம் நடத்தப்படும் ரேசன் கடையை ஆய்வு செய்தார்.

    பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்தும், அரிசியின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நல மாணவிகள் விடுதியை ஆய்வு செய்து அங்கு மாணவிகளுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது? மாலை நேரங்களில் சிற்றுண்டி வழங்கப்படுகிறதா? எனவும் கேட்டறிந்தார்.

    கன்னிவாடி அரசு சமுதாய நல நிலையத்தை பார்வையிட்டு அங்கு டாக்டர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தேவைப்படும் வசதிகள் குறித்து அறிக்கை அனுப்பி வைக்குமாறும், வட்டார மருத்துவ அலுவலரிடம் உத்தரவிட்டார்.

    பேரூராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். வீரப்புடையான் பட்டி பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் 3 மீட்டர் ஆழத்தில் நீர் தேங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கசிவு நீர் குட்டையினை ஆய்வு செய்தார்.

    மேலும் மழை நீர் வரும் வகையில் வரத்து வாய்க்கால்களை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    ஆலத்தூரான்பட்டி அங்கன்வாடி மையத்தை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் அங்கு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதா? என்பது குறித்தும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? எனவும் கேட்டறிந்தார்.

    அதன் பின் ரெட்டியார் சத்திரம் அருகே உள்ள ஆதி திராவிடர் காலனி பகுதியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் நடக்கும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மனோ ரஞ்சிதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×