search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சியில் சேலத்தை சேர்ந்த தொழிலாளி தவறி விழுந்து சாவு
    X

    கள்ளக்குறிச்சியில் சேலத்தை சேர்ந்த தொழிலாளி தவறி விழுந்து சாவு

    • மாதையன் பால் சீலிங் வேலை செய்து வந்தார்.
    • எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் பலத்த காயங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே எம்.பெருமாபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் மாதையன் (வயது 42). பால் சீலிங் வேலை செய்து வந்தார். இவர் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 26-ந்தேதி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் பலத்த காயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து போனார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×