என் மலர்
கள்ளக்குறிச்சி
- காலை உணவுத் திட்டத்திற்கு பாத்திரங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- சுய உதவிக்குழுவினர்க்கு தரமான பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும் என கூறினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், முதல மைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பாத்திரங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார் அப்போது அவர் பேசிய தாவது:- 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஊட்டச்சத்து நிலை பாது காக்கும் பொருட்டு முதல மைச்சரின் காலை உணவு திட்டத்தினை தமிழக அரசு தொடங்கி வைத்தது.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வரா யன்மலை வட்டத்திற் குட்பட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 15 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல மைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி செயல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 8 வட்டா ரங்களில் உள்ள ஊராட்சி, நகராட்சி மற்றும் பேருராட்சி களுக் குட்பட்ட 638 அரசுத் தொடக்கப்பள்ளியில் இத்திட்டம் செயல் படுத்தப் பட உள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் தொடக்கப் பள்ளி மாண வர்கள் ஆர்வமுடனும், ஆரோக்கிய முடனும் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்பட உள்ளது. இத்திட்டம் செயல்படுத் தப்படவுள்ள பள்ளிகளில், காலை உணவு சமைத்து வழங்கும் பணி களில் ஈடுபடவுள்ள சுய உதவிக்குழுவினர்க்கு தரமான பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும் என கூறினார். இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் சுந்த ராஜன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் ரெத்தின மாலா மற்றும் அரசு அலு வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- போலீஸ் அல்லாத ஒருவர் பஞ்சாயத்து பேசு வதை கண்டித்து புறக்கணிப்பு.
- 5-ந் தேதி வரை 3 நாட்கள் கோா்ட்டு புறக்கணிப்பு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வக்கீல்கள் சங்க கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. இதற்கு செயலாளர் ராமசாமி, பொருளாளர் பரமசிவம், மூத்த வக்கீல்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தரக்கூடிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யாவை யும், போலீஸ் அல்லாத ஒருவர் பஞ்சாயத்து பேசு வதை கண்டித்தும், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தியாகு, இளங்கோ ஆகியோரை கண்டித்தும், இவர்களை பணி இட மாற்றம் செய்யக்கோரியும் வருகிற 5-ந் தேதி வரை 3 நாட்கள் கோா்ட்டு புறக்கணிப்பு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதையடுத்து சங்கராபுரம் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்தனர். இதில் மூத்த வக்கீல்கள், வக்கீல் சங்க உறுப்பி னர்களும் கலந்து கொண்டனர்.
- கடந்த சனிக்கிழமை சட்ட விரோதமாக மண் கடத்தி வந்த லாரியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் அதிரடியாக மடக்கிப்பிடித்தார்.
- பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மறவா நத்தம் ஏரியில் கடந்த சனிக்கிழமை சட்ட விரோதமாக மண் கடத்தி வந்த லாரியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் அதிரடியாக மடக்கிப்பிடித்து சின்னசேலம் தாசில்தார் இந்திரா மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் ஆகியோரிடம் மண் கடத்தி வந்த லாரியையும் சம்பந்தப்பட்டவர்களையும் ஒப்படைத்தார். இது குறித்து மறவா நத்தம் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் சூரிய பிரகாஷ், சதீஷ்குமார், வரதராஜ் ஆகிய 3 பேரையும் சின்னசேலம் போலீசார் அதிரடியாக கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். மீதமுள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் லாரி உரிமையாளர் மற்றும் பா.ம.க.பிரமுகர் பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமர் ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அைடத்தனர்.
- அழகுவாய்ந்து கூழாங்கற்கள் லாரியில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கூழாங்கற்களை ஏற்றிவிட்டு தார்ப்பாய் போட்டு மூடும் போது போலீசார் வந்ததால் உரிமையாளர் தப்பியோடி விட்டார்.
கள்ளக்குறிச்சி:
திருநாவலூர் அருகே மட்டிகை கிராமத்தில் இருந்து அழகுவாய்ந்து கூழாங்கற்கள் லாரியில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் மட்டிகை கிராமத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு நிறுத்தப்ப ட்டிருந்த லாரியை 2 பேர் தார்ப்பாய் போட்டு கட்டிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்கு ப்பின் முரணாக பதில் கூறினர். அப்போது திடிரென ஒருவர் தப்பியோடினார். மற்றொருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம், வெள்ளைக்கோவில் வீதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் துரை (வயது 35) என்பதும், இவர் லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது. மேலும், தப்பியோடியவர் கோவிலாங்குப்பத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் ஆனந்தராஜ் (40). லாரி உரிமையாளர் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் அழகிய கூழாங்கற்களை எடுத்துச் சென்று விற்க திட்டமிட்டு, லாரியில் ஏற்றியுள்ளனர். கூழாங்கற்களை ஏற்றிவிட்டு தார்ப்பாய் போட்டு மூடும் போது போலீசார் வந்ததால் உரிமையாளர் தப்பியோடி விட்டார். இதனைத் தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த திருநாவலூர் போலீசார், லாரி உரிமையாளர் ஆனந்தராஜ், டிரைவர் துரை மீது வழக்குபதிவு செய்தனர். டிரைவர் துரையை கைது செய்த போலீசார், தப்பியோடிய ஆனந்தராஜை தேடி வருகின்றனர்.
- தியாகதுருகத்தில் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் பிரிவு சாலை அருகே சித்தேரி அமைந்துள்ளது.
- ஏரியின் கரை பகுதியில் கோழி கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
கள்ளக்குறிச்சி, ஜூலை.3-
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் இருந்து விருகாவூர் செல்லும் சாலையில், சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் பிரிவு சாலை அருகே சித்தேரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் அந்தப் பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலை மற்றும் ஆயில் ஆலை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த ஏரியில் கலப்பதால் தண்ணீர் பழுப்பு நிறமாக மாறியுள்ளது.
இதனால் அப்பகுதியில் கால்நடைகளை மேய்க்கும் விவசாயிகள் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் காட்ட முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றன. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே ஆலைகளின் கழிவு நீர் ஏரியில் கலப்பதை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த ஏரியின் கரை பகுதியில் கோழி கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதியில் துரு நாற்றம் வீசுகிறது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாரதிராஜா சென்னையில் தங்கி கொத்தானார் வேலை செய்து வந்தார்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை தாலுக்கா நகர் மன்னார்குடி கிராமத்ை்த சேர்ந்தவர் பாரதிராஜா (வயது 32). சென்னையில் தங்கி கொத்தானார் வேலை செய்து வந்தார். இவர் விடுமுறையில் சொந்த கிராமத்திற்கு வந்தார். நேற்று இரவு இவரும், இவரது நண்பர்களான கந்தசாமிபுரம் மணிகண்டன் (32), முருகன் (30) ஆகியோர் கெடிலம் டாஸ்மாக்கில் மது அருந்தினர். மது அருந்திவிட்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பினர். சேந்தமங்கலம் சாலை ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றனர். அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயங்களுடன் பாரதிராஜா சாலையிலேயே இறந்து கிடந்தார். இது தொடர்பான புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு திருநாவலூர் போலீசார் விரைந்தனர்.
அங்கு இறந்து கிடந்த பாரதிராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன பாரதிராஜாவிற்கு தலையின் பின்பக்கம் தவிர வேறு எங்கும் காயம் இல்லை. இதனைத் தொடர்ந்து பாரதிராஜாவுடன் மது அருந்திய மணிகண்டன், முருகனிடம் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாரதிராஜா விபத்தில் இறந்து போனாரா? அல்லது குடி போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மண் கடத்திய லாரியை கலெக்டர் ஷ்ரவன்குமார் மடக்கி பிடித்தார்.
- தலைமறைவாகியுள்ள லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் ஏரிக்கரையில் இருந்து மண் கடத்திய லாரியை நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் மடக்கி பிடித்தார். இதனை சின்னசேலம் தாசில்தார் இந்திரா, இன்ஸ்பெகடர் ராஜாராம் ஆகியோரிடம் ஒப்படைத்து சென்றார். இது குறித்து சின்னசேலம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சின்னசேலத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசன் (வயது 46), சூரியபிரகாஷ் (27), சதீஷ்குமார் (45), ராமர் (58), டிரைவர் வரதராஜ் (43) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமரை போலீசார் தேடி வருகின்றனர். அரசிடம் அனுமதி பெறாமல் ஏரி மண் எடுத்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தாசில்தார் இந்திரா, இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- திருநா வலூர் போலீசாரை தீவிர ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிட்டார்.
- மாட்டு வண்டிகளை போலீஸ் நிலையம் ெகாண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை தாலுக்கா கெடிலம் ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் திருடப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்க்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திருநா வலூர் போலீசாரை தீவிர ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிட்டார். அதன்படி, திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் பசலை ராஜ் தலைமையிலான போலீசார் கெடிலம் ஆற்றுப் பகுதியில் ரோந்து பணியில் நேற்று இரவு ஈடுபட்டனர். அப்போது, 5 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றப்படுவதை போலீசார் பார்த்தனர். மணலை திருடி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்த 5 பேரை பிடிக்க போலீசார் முயற்சித்தனர்.
இதில் 5 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதனைத் தொடர்ந்து திருட்டு மணலை ஏற்ற பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகளை போலீஸ் நிலையம் ெகாண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிமிரெட்டிப் பாளையத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 30), வைப்பாளையத்தை சேர்ந்த ராஜா (35), தியாகராஜ் (40), வெங்கடாஜலபதி (37), களத்தூரை சேர்ந்த மணயரசன் (39) ஆகியோர் மாட்டு வண்டியின் உரிமை யாளர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் மீது போலீ சார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
- அதிகாலை 2 மணியளவில் 150-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு 4 லாரிகள் உளுந்தூர்பேட்டை வழியாக வந்தன.
- சம்பவத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை:
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு எருமை மாடுகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. இவ்வாறு கேரளாவிற்கு கொண்டு செல்லும் எருமை மாடுகள், லாரிகளில் ஏற்றப்பட்டு நள்ளிரவு நேரங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை கடந்து செல்கிறது.
அதேபோல, இன்று அதிகாலை 2 மணியளவில் 150-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு 4 லாரிகள் உளுந்தூர்பேட்டை வழியாக வந்தன.
இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து மகா சபை நிர்வாகிகள் உளுந்தூர்பேட்டையில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த லாரிகளை மடக்கி சிறை பிடித்தனர்.
மாடுகள் சட்ட விரோதமாக கடத்தி செல்லப்படுவதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அதனை பிடித்து வைத்திருப்பதாகவும் புகார் செய்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் 4 லாரிகளையும் சோதனையிட்டனர். லாரி டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து லாரிகளை மடக்கி பிடித்த இந்து மகா சபை நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எருமை மாடுகளை சட்ட விரோதமாக கொண்டு சென்றால், அவைகள் கோசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் லாரி டிரைவர்களிடம் எச்சரித்தனர். இதனை தொடர்ந்து இந்து மகா சபா நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் எருமை மாடுகளை கேரளாவிற்கு கொண்டு செல்வதற்கான ஆவணங்களை போலீசாரிடம் லாரி டிரைவர்கள் காட்டினர். இதைத்தொடர்ந்து லாரிகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- திருநாவலூர் அருகே மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருவாலூர் அருகே உடையனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 40), சோனக்கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (49). இவர்கள் அதே ஊரில் மதுபாட்டில் விற்பனை செய்து வந்தனர். இது குறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த திருநாவலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- கண்ணன் விவசாய நிலத்திற்கு சென்றார்.
- கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே உள்ள தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 46) விவசாயி. இவர் நேற்று தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்து மின் மோட்டாரில் மின் வயரை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. அக்கம், பக்கம் விசாரித்ததில் தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் மூர்த்தி (37) என்பவர் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் கண்ணன் மின் மோட்டாரில் இருந்து 15 மீட்டர் மற்றும் அதே பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி மின் மோட்டாரில் இருந்து 10 மீட்டர் மின்சார வயரை திருடியது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.4 ஆயிரம் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தனது குடும்பத்துடன் சொந்த காரில் சென்றார்.
- மாமூல் கொடுத்துவிட்டு தான் மண் எடுத்து விற்பனை செய்கிறோம், பர்மீட் இல்லை என்று டிரைவர் பதில் கூறினார்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அடுத்த வடபொன்பரப்பியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இங்கு சனிப்பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தனது குடும்பத்துடன் சொந்த காரில் சென்றார். இரவு 7 மணியளவில் சின்னசேலம் ஏரிக்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரியில் இருந்து மண்ணை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வெளியில் வந்தது. கலெக்டர் ஷ்ரவன்குமார் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். ஏரியில் இருந்து வந்த லாரியை நிறுத்தி லாரியில் என்ன ஏற்றி வருகிறாய் என்று கேட்டுள்ளார்.
இதற்கு லாரி டிரைவர், ஏரி மண்ணை ஏற்றி வருகிறேன். இதற்கு கலெக்டர் அனமதி எங்கே என்று கேட்டுள்ளார். எல்லோருக்கும் மாமூல் கொடுத்துவிட்டு தான் மண் எடுத்து விற்பனை செய்கிறோம், பர்மீட் இல்லை என்று டிரைவர் பதில் கூறினார். கலெக்டர் ஷ்ரவன்குமார் சம்பவ இடத்திற்கு உடனே வருமாறு தாசில்தார் இந்திரா, சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். இந்த சம்பவம் குறித்து லாரி டிரைவர் உரிமையாளரிடம் போனில் கூறினார். லாரி உரிமையாளரின் உதவியாளர் சதீஷ் அங்கு வந்தார்.
டிரைவர் கணேசன் (வயது 26), சதீஷ் (35) ஆகியோர் கலெக்டர் ஷ்ரவன்கு மாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் 2 பேரையும் பிடித்து சென்றனர். தாசில்தார் இந்திரா லாரியை பறிமுதல் செய்தார். லாரி டிரைவர் கணேசன், சதீஷ் ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசனை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏரி மண்ணை திருட்டு த்தனமாக ஏற்றி வந்த டிரைவர், லாரி உரிமையாளரின் உதவியாளர் கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






