என் மலர்
கள்ளக்குறிச்சி
- கொசுப்புழு ஒழிப்பு முகாம் மற்றும் டயர்கள் அப்புறப்படுத்தும் முகாம் நடைபெற்றது.
- டெங்கு கொசுப்புழு உருவாகும் இடம், வீட்டை சுற்றி தூய்மை யாக வைத்து கொள்ளவேண்டும் .
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் பொது சுகாதார துறையின் துணை இயக்குநர் ராஜா உத்தரவின் பேரில் ரிஷிவந்தியம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரிஷிவந்தியம் மற்றும் பழைய சிறுவங்கூர் கிராமத்தில் கொசுப்புழு ஒழிப்பு முகாம் மற்றும் டயர்கள் அப்புறப்படுத்தும் முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் தீபிகா தலைமையில் நடைபெற்ற முகாமிற்கு சுகாதார ஆய்வாளர் தெய்வீகன், குமாரசாமி, பிரசாந்த், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில் டயர்கள் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், ஊராட்சி துப்பரவு பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர் கலந்து கொண்டு டெங்கு கொசுப்புழு உருவாகும் இடம், வீட்டை சுற்றி தூய்மை யாக வைத்து கொள்ளவேண்டும், காய்ச்சல் வந்தால் சுயமாக மருந்து வாங்கி சாப்பிட கூடாது என அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கினார்கள்.
- காவல்துறையினர் பயன்ப டுத்தும் ஆயுதங்கள் மற்றும் கோப்புகள் காவல்துறை இயங்கும் விதம் குறித்து அறிந்துகொள்ள வழிவகை செய்யப்படும்.
- வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை முடித்து 60 நாட்களுக்குள் இறுதியறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் இமைகள் திட்டம் குறித்த விழப்புணர்வு தொட க்கவிழா நிகழ்ச்சி நடைபெ ற்றது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கி பேசிய தாவது:-
பெண் குழந்தைகளை கண் இமைபோல் பாதுகாக்க இமைகள் எனும் மகத்தான திட்டம் தொடங்கப்ப ட்டுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் தலா 50 குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களை மாவட்ட காவல் அலுவலக த்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் பயன்ப டுத்தும் ஆயுதங்கள் மற்றும் கோப்புகள் காவல்துறை இயங்கும் விதம் குறித்து அறிந்துகொள்ள வழிவகை செய்யப்படும். பெண் குழந்தைகள் ஒவ்வொருவ ரிடமும் பெண் காவல்துறை யினர் நட்பாக பழகி அவர்களுக்கு பொதுவெ ளியிலோ அல்லது பள்ளி களிலோ ஏதேனும் பாலியல் தொந்தரவு உள்ளதா என்று அறிந்து கொள்ள அறிவுறு த்தபட்டுள்ளது. ஏதேனும் பிரச்சனைகள் அவர்களுக்கு இருந்தால் அதை பெண் காவல்துறையினர் அறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பொதுமக்க ளிடையே காவல்துறையினர் கலந்துரையாடல், தெரு நாடகங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி பெண் குழந்தைகளை காவல்துறை என்றும் கண் இமைபோல் காக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார். காவல்துறையினரிடம் பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது, அதைச் சார்ந்த சட்டங்கள் பற்றியும், வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை முடித்து 60 நாட்களுக்குள் இறுதியறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு தொகை மற்றும் மறுவாழ்வு ஏற்பாடுகள் செய்வதுடன் குற்றம் நடைபெறாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளுவது குறித்தும் ஆலோ சனை வழங்கினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிர ண்டுகள் ஜவஹர்லால், மணிகண்டன், சங்கர் மற்றும் அனைத்து உட்கோ ட்ட துணை போலீஸ் சூப்பிர ண்டு அனைத்து பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் கலந்து கொண்டனர்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார அறிவுறுத்தினார்.
- 85 ஊராட்சிகள் மற்றும் வார்டுகளில் சுமார் 2,322 பழைய டயர்கள் அகற்றப்பட்டது.
கள்ளக்குறிச்சி, ஜூலை.5-
தமிழகத்தில் பருவ மழை தொடங்க உள்ளதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டெங்கு, கொசுப்புழு உற்பத்தி ஆகாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார அறிவுறுத்தினார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் மழைநீர் தேங்கி டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் பழைய டயர்களை கண்டறிந்து அகற்றும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதில் மாவட்டத்தில் சுகாதாரத்துறையுடன், கிராம ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் இணைந்து 85 ஊராட்சிகள் மற்றும் வார்டுகளில் சுமார் 2,322 பழைய டயர்கள் அகற்றப்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலக்டர் கூறியதாவது:-
பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், சுற்றுப்புறத்திலும் மழைநீர் தேங்காவண்ணம், தொட்டிகள், உடைந்த மண்பாண்டங்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், உரல்கள் போன்றவற்றை அகற்றியும், தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களை 3 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து, டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து முன்னெ ச்சரி க்கை நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் பொதுமக்கள் காய்ச்சல் என்றால் தாமாகவே கடைகளில் விற்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடாமல், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் தேவையான ரத்த பரிசோதனைகளை செய்து கொண்டு, காய்ச்சலுக்கான முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- மணிகண்டன் மோட்டார் மெக்கானிக். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த நாராயணன் மகன் கோவிந்தன் பணம் தர வேண்டியிருந்தது.
- கிராம மக்கள் ஒரு அறையில் போட்டு பூட்டிவிட்டு, நடந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே சிவனார்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மகன் மணிகண்டன் (வயது 29). மோட்டார் மெக்கானிக். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த நாராயணன் மகன் கோவிந்தன் (40) பணம் தர வேண்டியிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு மது அருந்திவிட்டு வந்த மணிகண்டன், கோவிந்தனிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர், காலையில் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், பேனாக்கத்தியால் கோவிந்தனின் முகத்தில் கிழிந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் கோவிந்தனை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருந்தபோதும் மணிகண்டன் பேனாக்கத்தியை காட்டி அனைவரையும் மிரட்டியுள்ளார். அவரை பிடித்த கிராம மக்கள் ஒரு அறையில் போட்டு பூட்டிவிட்டு, நடந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனால் பயந்து போன மணிகண்டன், கையில் வைத்திருந்த பேனாக்கத்தியால், கழுத்தை குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவிலூர் போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- காலை உணவுத் திட்டத்திற்கு பாத்திரங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- சுய உதவிக்குழுவினர்க்கு தரமான பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும் என கூறினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், முதல மைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பாத்திரங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார் அப்போது அவர் பேசிய தாவது:- 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஊட்டச்சத்து நிலை பாது காக்கும் பொருட்டு முதல மைச்சரின் காலை உணவு திட்டத்தினை தமிழக அரசு தொடங்கி வைத்தது.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வரா யன்மலை வட்டத்திற் குட்பட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 15 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல மைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி செயல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 8 வட்டா ரங்களில் உள்ள ஊராட்சி, நகராட்சி மற்றும் பேருராட்சி களுக் குட்பட்ட 638 அரசுத் தொடக்கப்பள்ளியில் இத்திட்டம் செயல் படுத்தப் பட உள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் தொடக்கப் பள்ளி மாண வர்கள் ஆர்வமுடனும், ஆரோக்கிய முடனும் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்பட உள்ளது. இத்திட்டம் செயல்படுத் தப்படவுள்ள பள்ளிகளில், காலை உணவு சமைத்து வழங்கும் பணி களில் ஈடுபடவுள்ள சுய உதவிக்குழுவினர்க்கு தரமான பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும் என கூறினார். இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் சுந்த ராஜன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் ரெத்தின மாலா மற்றும் அரசு அலு வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- போலீஸ் அல்லாத ஒருவர் பஞ்சாயத்து பேசு வதை கண்டித்து புறக்கணிப்பு.
- 5-ந் தேதி வரை 3 நாட்கள் கோா்ட்டு புறக்கணிப்பு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வக்கீல்கள் சங்க கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. இதற்கு செயலாளர் ராமசாமி, பொருளாளர் பரமசிவம், மூத்த வக்கீல்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தரக்கூடிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யாவை யும், போலீஸ் அல்லாத ஒருவர் பஞ்சாயத்து பேசு வதை கண்டித்தும், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தியாகு, இளங்கோ ஆகியோரை கண்டித்தும், இவர்களை பணி இட மாற்றம் செய்யக்கோரியும் வருகிற 5-ந் தேதி வரை 3 நாட்கள் கோா்ட்டு புறக்கணிப்பு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதையடுத்து சங்கராபுரம் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்தனர். இதில் மூத்த வக்கீல்கள், வக்கீல் சங்க உறுப்பி னர்களும் கலந்து கொண்டனர்.
- கடந்த சனிக்கிழமை சட்ட விரோதமாக மண் கடத்தி வந்த லாரியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் அதிரடியாக மடக்கிப்பிடித்தார்.
- பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மறவா நத்தம் ஏரியில் கடந்த சனிக்கிழமை சட்ட விரோதமாக மண் கடத்தி வந்த லாரியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் அதிரடியாக மடக்கிப்பிடித்து சின்னசேலம் தாசில்தார் இந்திரா மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் ஆகியோரிடம் மண் கடத்தி வந்த லாரியையும் சம்பந்தப்பட்டவர்களையும் ஒப்படைத்தார். இது குறித்து மறவா நத்தம் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் சூரிய பிரகாஷ், சதீஷ்குமார், வரதராஜ் ஆகிய 3 பேரையும் சின்னசேலம் போலீசார் அதிரடியாக கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். மீதமுள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் லாரி உரிமையாளர் மற்றும் பா.ம.க.பிரமுகர் பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமர் ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அைடத்தனர்.
- அழகுவாய்ந்து கூழாங்கற்கள் லாரியில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கூழாங்கற்களை ஏற்றிவிட்டு தார்ப்பாய் போட்டு மூடும் போது போலீசார் வந்ததால் உரிமையாளர் தப்பியோடி விட்டார்.
கள்ளக்குறிச்சி:
திருநாவலூர் அருகே மட்டிகை கிராமத்தில் இருந்து அழகுவாய்ந்து கூழாங்கற்கள் லாரியில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் மட்டிகை கிராமத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு நிறுத்தப்ப ட்டிருந்த லாரியை 2 பேர் தார்ப்பாய் போட்டு கட்டிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்கு ப்பின் முரணாக பதில் கூறினர். அப்போது திடிரென ஒருவர் தப்பியோடினார். மற்றொருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம், வெள்ளைக்கோவில் வீதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் துரை (வயது 35) என்பதும், இவர் லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது. மேலும், தப்பியோடியவர் கோவிலாங்குப்பத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் ஆனந்தராஜ் (40). லாரி உரிமையாளர் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் அழகிய கூழாங்கற்களை எடுத்துச் சென்று விற்க திட்டமிட்டு, லாரியில் ஏற்றியுள்ளனர். கூழாங்கற்களை ஏற்றிவிட்டு தார்ப்பாய் போட்டு மூடும் போது போலீசார் வந்ததால் உரிமையாளர் தப்பியோடி விட்டார். இதனைத் தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த திருநாவலூர் போலீசார், லாரி உரிமையாளர் ஆனந்தராஜ், டிரைவர் துரை மீது வழக்குபதிவு செய்தனர். டிரைவர் துரையை கைது செய்த போலீசார், தப்பியோடிய ஆனந்தராஜை தேடி வருகின்றனர்.
- தியாகதுருகத்தில் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் பிரிவு சாலை அருகே சித்தேரி அமைந்துள்ளது.
- ஏரியின் கரை பகுதியில் கோழி கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
கள்ளக்குறிச்சி, ஜூலை.3-
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் இருந்து விருகாவூர் செல்லும் சாலையில், சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் பிரிவு சாலை அருகே சித்தேரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் அந்தப் பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலை மற்றும் ஆயில் ஆலை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த ஏரியில் கலப்பதால் தண்ணீர் பழுப்பு நிறமாக மாறியுள்ளது.
இதனால் அப்பகுதியில் கால்நடைகளை மேய்க்கும் விவசாயிகள் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் காட்ட முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றன. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே ஆலைகளின் கழிவு நீர் ஏரியில் கலப்பதை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த ஏரியின் கரை பகுதியில் கோழி கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதியில் துரு நாற்றம் வீசுகிறது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாரதிராஜா சென்னையில் தங்கி கொத்தானார் வேலை செய்து வந்தார்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை தாலுக்கா நகர் மன்னார்குடி கிராமத்ை்த சேர்ந்தவர் பாரதிராஜா (வயது 32). சென்னையில் தங்கி கொத்தானார் வேலை செய்து வந்தார். இவர் விடுமுறையில் சொந்த கிராமத்திற்கு வந்தார். நேற்று இரவு இவரும், இவரது நண்பர்களான கந்தசாமிபுரம் மணிகண்டன் (32), முருகன் (30) ஆகியோர் கெடிலம் டாஸ்மாக்கில் மது அருந்தினர். மது அருந்திவிட்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பினர். சேந்தமங்கலம் சாலை ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றனர். அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயங்களுடன் பாரதிராஜா சாலையிலேயே இறந்து கிடந்தார். இது தொடர்பான புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு திருநாவலூர் போலீசார் விரைந்தனர்.
அங்கு இறந்து கிடந்த பாரதிராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன பாரதிராஜாவிற்கு தலையின் பின்பக்கம் தவிர வேறு எங்கும் காயம் இல்லை. இதனைத் தொடர்ந்து பாரதிராஜாவுடன் மது அருந்திய மணிகண்டன், முருகனிடம் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாரதிராஜா விபத்தில் இறந்து போனாரா? அல்லது குடி போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மண் கடத்திய லாரியை கலெக்டர் ஷ்ரவன்குமார் மடக்கி பிடித்தார்.
- தலைமறைவாகியுள்ள லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் ஏரிக்கரையில் இருந்து மண் கடத்திய லாரியை நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் மடக்கி பிடித்தார். இதனை சின்னசேலம் தாசில்தார் இந்திரா, இன்ஸ்பெகடர் ராஜாராம் ஆகியோரிடம் ஒப்படைத்து சென்றார். இது குறித்து சின்னசேலம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சின்னசேலத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசன் (வயது 46), சூரியபிரகாஷ் (27), சதீஷ்குமார் (45), ராமர் (58), டிரைவர் வரதராஜ் (43) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமரை போலீசார் தேடி வருகின்றனர். அரசிடம் அனுமதி பெறாமல் ஏரி மண் எடுத்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தாசில்தார் இந்திரா, இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- திருநா வலூர் போலீசாரை தீவிர ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிட்டார்.
- மாட்டு வண்டிகளை போலீஸ் நிலையம் ெகாண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை தாலுக்கா கெடிலம் ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் திருடப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்க்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திருநா வலூர் போலீசாரை தீவிர ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிட்டார். அதன்படி, திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் பசலை ராஜ் தலைமையிலான போலீசார் கெடிலம் ஆற்றுப் பகுதியில் ரோந்து பணியில் நேற்று இரவு ஈடுபட்டனர். அப்போது, 5 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றப்படுவதை போலீசார் பார்த்தனர். மணலை திருடி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்த 5 பேரை பிடிக்க போலீசார் முயற்சித்தனர்.
இதில் 5 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதனைத் தொடர்ந்து திருட்டு மணலை ஏற்ற பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகளை போலீஸ் நிலையம் ெகாண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிமிரெட்டிப் பாளையத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 30), வைப்பாளையத்தை சேர்ந்த ராஜா (35), தியாகராஜ் (40), வெங்கடாஜலபதி (37), களத்தூரை சேர்ந்த மணயரசன் (39) ஆகியோர் மாட்டு வண்டியின் உரிமை யாளர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் மீது போலீ சார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.






