search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி எஸ்.பி அலுவலகத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழப்புணர்வு
    X

    கள்ளக்குறிச்சியில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் இமைகள் திட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    கள்ளக்குறிச்சி எஸ்.பி அலுவலகத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழப்புணர்வு

    • காவல்துறையினர் பயன்ப டுத்தும் ஆயுதங்கள் மற்றும் கோப்புகள் காவல்துறை இயங்கும் விதம் குறித்து அறிந்துகொள்ள வழிவகை செய்யப்படும்.
    • வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை முடித்து 60 நாட்களுக்குள் இறுதியறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் இமைகள் திட்டம் குறித்த விழப்புணர்வு தொட க்கவிழா நிகழ்ச்சி நடைபெ ற்றது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கி பேசிய தாவது:-

    பெண் குழந்தைகளை கண் இமைபோல் பாதுகாக்க இமைகள் எனும் மகத்தான திட்டம் தொடங்கப்ப ட்டுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் தலா 50 குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களை மாவட்ட காவல் அலுவலக த்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் பயன்ப டுத்தும் ஆயுதங்கள் மற்றும் கோப்புகள் காவல்துறை இயங்கும் விதம் குறித்து அறிந்துகொள்ள வழிவகை செய்யப்படும். பெண் குழந்தைகள் ஒவ்வொருவ ரிடமும் பெண் காவல்துறை யினர் நட்பாக பழகி அவர்களுக்கு பொதுவெ ளியிலோ அல்லது பள்ளி களிலோ ஏதேனும் பாலியல் தொந்தரவு உள்ளதா என்று அறிந்து கொள்ள அறிவுறு த்தபட்டுள்ளது. ஏதேனும் பிரச்சனைகள் அவர்களுக்கு இருந்தால் அதை பெண் காவல்துறையினர் அறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் பொதுமக்க ளிடையே காவல்துறையினர் கலந்துரையாடல், தெரு நாடகங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி பெண் குழந்தைகளை காவல்துறை என்றும் கண் இமைபோல் காக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார். காவல்துறையினரிடம் பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது, அதைச் சார்ந்த சட்டங்கள் பற்றியும், வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை முடித்து 60 நாட்களுக்குள் இறுதியறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு தொகை மற்றும் மறுவாழ்வு ஏற்பாடுகள் செய்வதுடன் குற்றம் நடைபெறாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளுவது குறித்தும் ஆலோ சனை வழங்கினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிர ண்டுகள் ஜவஹர்லால், மணிகண்டன், சங்கர் மற்றும் அனைத்து உட்கோ ட்ட துணை போலீஸ் சூப்பிர ண்டு அனைத்து பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×