search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sewage in the lake"

    • தியாகதுருகத்தில் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் பிரிவு சாலை அருகே சித்தேரி அமைந்துள்ளது.
    • ஏரியின் கரை பகுதியில் கோழி கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

    கள்ளக்குறிச்சி, ஜூலை.3-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் இருந்து விருகாவூர் செல்லும் சாலையில், சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் பிரிவு சாலை அருகே சித்தேரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் அந்தப் பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலை மற்றும் ஆயில் ஆலை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த ஏரியில் கலப்பதால் தண்ணீர் பழுப்பு நிறமாக மாறியுள்ளது.

    இதனால் அப்பகுதியில் கால்நடைகளை மேய்க்கும் விவசாயிகள் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் காட்ட முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றன. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே ஆலைகளின் கழிவு நீர் ஏரியில் கலப்பதை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த ஏரியின் கரை பகுதியில் கோழி கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதியில் துரு நாற்றம் வீசுகிறது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×