என் மலர்
காஞ்சிபுரம்
- ராகுல்ராஜ் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் பிரபல தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் அதே பகுதியை சேர்ந்த ராகுல்ராஜ் (20) தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் தங்களின் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்த புள்ளலூர் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவரை சந்திப்பதற்காக பரந்தூர் சென்று விட்டு அங்கிருந்து தனது நண்பர் ஒருவருடன் சென்றுள்ளார்.
புள்ளலூரில் வாடிக்கையாளர் இல்லாததால் மீண்டும் பரந்தூர் வந்து நண்பரை விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் சிறுவாக்கம் பகுதியில் வழிமறித்து தாக்கிவிட்டு அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்து கொண்டு சென்றனர்.
இதுகுறித்து ராகுல்ராஜ் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
- மேட்டுத்தெரு காமராஜர் சாலை, கங்கைகொண்டான் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் அக்னி வெயில் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெயில் சுட்டெரித்து வந்தது. கடந்த சில நாட்களாக 105 டிகிரிக்கு வெயில் தொடர்ந்து வாட்டி வதைத்தது.
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் உருவானது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. விடிய விடிய இடி, மின்னலுடன் கனமழையாக கொட்டி தீர்த்தது. சென்னை நகர் பகுதியில் பெய்த மழை காரணமாக முக்கிய சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.
இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. இதையடுத்து இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கனமழை கொட்டியது.
பலத்த மழை காரணமாக காஞ்சிபுரம் பழைய ரெயில் நிலையம் நுழைவாயிலில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகளும், ரெயில் பயணிகளும் கடும் அவதி அடைந்தனர்.
மேட்டுத்தெரு காமராஜர் சாலை, கங்கைகொண்டான் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்பரம்பாக்கத்தில் 10.7 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. காஞ்சிபுரத்தில் 25.8 மி.மீ., வாலாஜாபாத்-36.50 மி.மீ., உத்திரமேரூர்-17 மி.மீ., ஸ்ரீபெரும்புதூர்-45 மி.மீ., குன்றத்தூர்-88.20 மி.மீ.மழை கொட்டி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. செங்குன்றம், பொன்னேரி, பூந்தமல்லி, சோழவரம், பொன்னேரி, ஆவடி, திருத்தணி, ஊத்துக்கோட்டை, பூண்டி, பெரியபாளையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பரவலாக மழை கொட்டியது.
இதனால் திருவள்ளூர் பஜார் வீதி, கலெக்டர் அலுவலகம், வீரராகவர் கோவில் பகுதி, என்.ஜி.ஓ. காலனி, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. தொடர்மழை காரணமாக வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
திருத்தணி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. திருத்தணி, திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனி மாதம் மற்றும் ஆடி மாதம் பருவங்களில் விவசாயிகள் உழவு செய்வதற்கும் விதைப்பதற்கும் இந்த மழை கை கொடுக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
பூந்தமல்லியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று இரவு முதல் பெய்த கனமழை காரணமாக பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் சூழ்ந்தது. இதனால் பள்ளி முழுவதும் ஏரிபோல் காணப்படுகிறது. மேலும் பள்ளி வளாகத்தில் பலத்த காற்று காரணமாக மரங்களும் முறிந்து விழுந்து உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஜமீன்கொரட்டூர் பகுதியில் 84 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்)வருமாறு:-
ஆர்.கே.பேட்டை-5
பூண்டி-3.
செங்கல்பட்டு மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம், கேளம்பாக்கம், செய்யூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது. இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளன.
செம்மஞ்சேரி, குமரன் நகர், சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே ஆறுபோல் மழை நீர் ஓடுகிறது. ஓ.எம்.ஆர்.சாலையில் மெட்ரோ ரெயில் பணி காரணமாக சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
திருப்போரூரில் ரவுண்டானா அருகில் உள்ள ரேசன் கடைக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அங்கி ருந்த ரேசன் பொருட்கள் சேதம் அடைந்தது.
செங்கல்பட்டு மாவட்டத் தில் அதிகபட்சமாக தாம்ப ரத்தில் 68 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. செங்கல்பட்டில்-15மி.மீ., மதுராந்தகம்-30 மி.மீ., செய்யூர்-29 மி.மீ., மாமல்லபுரம்-53 மி.மீ., கேளம்பாக்கம்-30மி.மீ., திருக்கழுக்குன்றம்-25மி.மீ., திருப்போரூர்-22மி.மீ. மழை பதிவாகி இருந்தது.
- வேல்முருகன் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளின் அடிப்படையில் வீட்டில் பதுங்கி இருந்த சின்னராசுவை கைது செய்தனர்.
காஞ்சிபுரம்:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 26). இவர் காஞ்சிபுரத்தை அடுத்த பிள்ளைச்சத்திரம் பகுதியில் தங்கி, அதே இடத்தில் இரும்பு கடை நடத்தி வருகிறார். வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்றார். அப்போது எதிரில் வந்த காஞ்சிபுரம் செட்டியார்பேட்டையை சேர்ந்த சின்னராசு என்ற சின்னா(23), வேல்முருகனை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி உள்ளார். மேலும் தரக்குறைவாக திட்டி வேல்முருகனிடம் இருந்த ரூ.1,100-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இதுகுறித்து வேல்முருகன் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளின் அடிப்படையில் வீட்டில் பதுங்கி இருந்த சின்னராசுவை கைது செய்தனர். பின்னர் அவரை காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளைச்சிறையில் அடைத்தனர். மேலும் சின்னராசுவிடம் இருந்து ஒரு கத்தி, ரூ.1,100-ஐ போலீசார் கைப்பற்றினர்.
- அதிவேகத்தில் செல்லும் மணல் லாரிகளால் விபத்து அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
- மணல் லாரிகள் வள்ளிமேடு, அவலூர், வாலாஜாபாத் பாலாற்று தரை பாலம் வழியாக செல்கின்றன.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் அருகே உள்ள நெய்யாடிவாக்கம் ஏரியை தூர்வாருவதற்காக அங்கு மணல் அள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இங்கு விதிமுறை மீறி சுமார் 20 அடி வரை மணல் அள்ளப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும் ஏராளமான லாரிகளில் உரிய அனுமதி இல்லாமல் இந்த மணல் அங்கிருந்து கொண்டு செல்லப்படுகிறது. அதிவேகத்தில் செல்லும் மணல் லாரிகளால் விபத்து அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மணல் லாரிகள் வள்ளிமேடு, அவலூர், வாலாஜாபாத் பாலாற்று தரை பாலம் வழியாக செல்கின்றன.
தற்காலிக பாலம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு உள்ள நிலையில், இது போன்ற கனரக வாகனங்களால் முற்றிலுமாக சேதம் அடையும் அபாயம் உள்ளது. நெய்யா டிவாக்கம், காவாங்கண்டலம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் புழுதி மற்றும் தூசுகளால் விளை நிலங்கள் கடும்பாதிப்பு ஏற்படுகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- சோமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் அடிக்கடி ரவுடிகளிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
- மோதலின் தொடர்ச்சியாக ரவுடி கும்பல் பழிவாங்கும் நோக்கத்தில் துப்பாக்கியுடன் வந்து இருக்கலாம் என்று தெரிகிறது
ஸ்ரீபெரும்புதூர்:
தாம்பரம் அடுத்த சோமங்கலம் பகுதியில் உக்கடை உள்ளது. நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் டீ குடிக்க வந்தனர். அவர்கள் வந்த சிறிது நேரத்தில் காரில் மர்ம கும்பல் வந்தனர். அவர்களை கண்டதும் டீக்கடைக்குள் புகுந்து பின்பக்கம் வழியாக 2 வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை மர்ம கும்பல் துரத்தியபோது ஒருவர் கால் தடுக்கி கீழே விழுந்தார். பின்னர் அவர் தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து காரில் தப்பி சென்றுவிட்டார்.
அவர்கள் சென்ற சிறிது நேரம் கழித்து டீக்கடை உரிமையாளர் பார்த்தபோது அங்கு 3 துப்பாக்கி குண்டுகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சோமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்தட வந்து 3 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் தோட்ட நிரப்பும் ஹண்டில் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண் போலியானது என்பது விசாரணையில் தெரிந்தது.
இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய 2 வாலிபர்களும் யார்? அவர்களை பின்தொடர்ந்து காரில் வந்த கும்பல் யார் என்பது குறித்து போலீசார் தீவிரவி சாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சில தகவல்கள் போலீசாருக்கு கிடைத்து உள்ளதாக கூறப்படுகிறது. சோமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் அடிக்கடி ரவுடிகளிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதலின் தொடர்ச்சியாக ரவுடி கும்பல் பழிவாங்கும் நோக்கத்தில் துப்பாக்கியுடன் வந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சி பதிவுகளை வைத்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் பி.பி.ஜி.டி. சங்கரை ரவுடி கும்பல் வெடி குண்டை வீசி ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டி கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. ரவுடி கும்பல் துப்பாக்கியுடன் வலம் வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரவடி கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- காரில் இருந்து இறங்கிய 3 பேர் டீக்கடை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை நோக்கி சென்றனர்.
- டீ கடை அருகே 3 துப்பாக்கி தோட்டாக்கள், தோட்டக்களை லோட் செய்யும் ஹேண்டில்யும் விட்டு சென்றனர்.
சோமங்கலம்:
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட நடுவீரப்பட்டு தாம்பரம் தர்காஸ் செல்லும் சாலையில் தர்காஸ் பகுதியில். டீக்கடை உள்ளது. நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் சென்றனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்தவர் இறங்கி டீக்கடைக்கு சென்று மாஸ்க் வாங்கி உள்ளார்.
அதே நேரத்தில் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து வெள்ளை நிற கார் ஒன்று டீக்கடை எதிரே வந்தது.
அப்போது காரில் இருந்து இறங்கிய 3 பேர் டீக்கடை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை நோக்கி சென்றனர். அவர்களில் ஒருவர் கத்தியுடன் சென்றார். இதை கேட்டதும் ஹெல்மெட் அணிந்திருந்தவர் டீ கடையின் உள்ளே மாடியில் ஏறி பின்பகுதியில் உள்ள காம்பவுண்ட் சுவர் வழியாக குதித்து ஓடியுள்ளார். மற்றொருவர் வேறொரு திசையில் ஓடி உள்ளார். காரில் வந்தவர்களும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
அப்போது டீ கடை அருகே 3 துப்பாக்கி தோட்டாக்கள், தோட்டக்களை லோட் செய்யும் ஹேண்டில்யும் விட்டு சென்றனர். இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று துப்பாக்கி தோட்டாக்களை கைப்பற்றினர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் யார்? ரவுடிகளுக்குள்ளே கோஷ்டி மோதலா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சோமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிள் உள்ள ரவுடிகளுக்குள் ஏதேனும் மோதல் ஏற்பட்டு பழி வாங்க வந்தனரா? துப்பாக்கி எடுத்து வரும்போது தோட்டாக்கள் சிதறி விழுந்தனவா? என்பது குறித்து 2 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்து தப்பி ஓடிய நபர்களின் மோட்டார் சைக்கிளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் அது போலி பதிவு எண் கொண்டது என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
- கைதான இருவரும் பா.ம.க.வில் நிர்வாகிகளாக உள்ளனர்.
- காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் இறந்த பின்னர் இவரது ஆதரவாளர்கள் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ரவுடி ஸ்ரீதர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஸ்ரீதரின் படத்துடன் போலீஸ் நிலையங்களை குண்டுவைத்து தகர்க்கப் போவதாக பதிவிட்டு இருந்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் புவனேஸ்வரன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்ட உழகோல்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (19), மற்றும் அவருக்கு முகநூல் பக்கத்தில் பதிவை வெளியிட உதவிய கிதிரிப் பேட்டை கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் ரோகித் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இருவரும் பா.ம.க.வில் நிர்வாகிகளாக உள்ளனர். இதுதொடர்பாக காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.
- மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல் திலகவதி என்கிற பரிதபேகம் என்பவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- போலி பெண் டாக்டர் திலகவதி என்கிற பரிதபேகத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் பெண் ஒருவர் மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதார பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது.
புகார்களின்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத் தலைமையிலான குழுவினர் தாமல் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் நடத்திய சோதனையில் மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல் திலகவதி என்கிற பரிதபேகம் (வயது 45) என்பவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத், பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் போலி பெண் டாக்டர் திலகவதி என்கிற பரிதபேகத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- காற்றாலைகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
- அதிக எடையுள்ள இந்த காற்றாலைகள் சரிந்து அதன் மீது லாரி கவிழ்ந்ததால் காற்றாலை இறக்கைகளில் சேதம் ஏற்பட்டது.
காஞ்சிபுரம்:
காற்றாலைகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. காற்றாலைகளில் இருக்கும் நீளமான இறக்கைகள் காற்றின் வேகத்தால் சுற்றுவதால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் இயங்குவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிக காற்றாலைகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளை சத்திரம் அருகே சர்வீஸ் சாலையில் 40 வீல்கள் கொண்ட 70 அடி நீளமுள்ள 3 சரக்கு லாரிகளில் காற்றாலைக்கான இறக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தது.
பூந்தமல்லியில் உள்ள தனியார் எரிசக்தி நிறுவனம் மூலம் வடிவமைத்த காற்றாலைகளை அந்த நிறுவனத்தின் அதிகாரிகளின் மேற்பார்வையில் கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
காஞ்சிபுரத்தை அடுத்த பிள்ளை சத்திரம் பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரிகள் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் காற்றாலை இறக்கைகளுடன் சாலையோர பள்ளத்தில் ஒன்றன்பின் ஒன்றாக கவிழ்ந்தது.
அதிக எடையுள்ள இந்த காற்றாலைகள் சரிந்து அதன் மீது லாரி கவிழ்ந்ததால் காற்றாலை இறக்கைகளில் சேதம் ஏற்பட்டது.
- காஞ்சிபுரம் நோக்கி வந்த தனியார் கம்பெனி பஸ் மோட்டார் சைக்கிள் பின்புறம் மோதியது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் தினேஷ் (வயது 26). இவர் பிறந்த நாள் மற்றும் திருமண வரவேற்பு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவர் இதே தொழில் செய்யும் தனது நண்பரான குமரன் மகன் மற்றொரு தினேஷ் (27) என்பவருடன் காஞ்சிபுரத்தை அடுத்த ஒலிமுகமதுபேட்டையில் பிறந்த நாள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். வழியில் செங்கழுநீரோடை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பொன்னேரிக்ரையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த தனியார் கம்பெனி பஸ் மோட்டார் சைக்கிள் பின்புறம் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்தவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த குமரன் மகன் தினேசுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
விபத்து இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முபாரக் பாஷா என்பவர் செல்வத்தின் அவதூறு கருத்து தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா மாவட்ட செயலாளர் செல்வத்தை கைது செய்தனர்.
காஞ்சிபுரம்:
பாரதிய ஜனதா கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக இருப்பவர் செல்வம். இவர் தனது சமூகவலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டு இருந்தார். இது வைரலாக பரவி வந்தது.
இந்த நிலையில் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முபாரக் பாஷா என்பவர் செல்வத்தின் அவதூறு கருத்து தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா மாவட்ட செயலாளர் செல்வத்தை கைது செய்தனர்.
- பிரசாந்த் மீது சென்னையில் மட்டும் கொலை, கொள்ளை என 5வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மர்ம நபர்கள் கத்திமுனையில் உதயகுமாரை மிரட்டி செல்போனை பறித்து சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி, பைக் திருட்டு, வீடு புகுந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிளாம்பாக்கம் புதிய புறநகர் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சக்திவேல் என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் கொள்ளையர்களை பிடிக்க கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ஜெயராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் முருகேசன் , சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கூடுவாஞ்சேரி பகுதியில் பல்வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நந்திவரம் பெரியார் நகரை சேர்ந்த விஜய்பீட்டர், நந்திவரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த இப்ராஹிம், சென்னை பூக்கடை பகுதியை சேர்ந்த சூர்யா என்கிற கொசுறு சூர்யா, வளசரவாக்கம் ஷேக் அப்துல்லாநகரை சேர்ந்த பிரசாந்த், வியாசர்பாடி பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பிரசாந்த் மீது சென்னையில் மட்டும் கொலை, கொள்ளை என 5வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் வசித்து வருபவர் உதயகுமார். இவர் இருங்காட்டுகோட்டை உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்து பழைய ரெயில்வே நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் கத்திமுனையில் உதயகுமாரை மிரட்டி செல்போனை பறித்து சென்றனர்.
இதேபோல் கடந்த 7-ந் தேதி காமராஜர் சாலையில் ஆந்திரா சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த அஜிஸ் பாஷா என்பவரிடமும் மர்ம நபர்கள் செல்போன், பணத்தை பறித்து தப்பினர்.
இந்த கொள்ளை தொடர்பாக பரத், மணிகண்டன், பாலசந்தர் ஆகிய பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன், பட்டாகத்தி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.






