search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Defamation comment"

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி உமா கார்கி தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் கூறப்பட்டது.
    • கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஹரீஷ் என்பவர் அந்த புகாரை அளித்துள்ளார்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உமா கார்கி (வயது 56).

    இவர் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளர். சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா மற்றும் பிரதமர் மோடி தொடர்பான ஆதரவு கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அதேசமயம் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியினர் பற்றியும் கருத்துக்களை பதிவிட்டார்.

    இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி உமா கார்கி தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் கூறப்பட்டது. கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஹரீஷ் என்பவர் அந்த புகாரை அளித்துள்ளார்.

    சிங்காநல்லூரைச் சேர்ந்த உமாகார்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார். மேலும் பெரியார், மணியம்மை குறித்தும் அவதூறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். அவதூறு மீம்ஸ்களையும் வெளியிடுகிறார். இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை பரப்பி வருகிறார். எனவே உமா கார்கி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    அதன்பேரில் போலீசார் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், இரு மதத்தினரிடையே மோதல் ஏற்படுத்த முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உமா கார்கியை கைது செய்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் பா.ஜ.க.வினர் கோவை கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் சைபர்கிரைம் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் உமா கார்கி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுபற்றி மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கூறியதாவது:-

    சைபர் கிரைம் போலீசார் ஒரு பெண் என்றும் பார்க்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தி உமா கார்கியை கைது செய்துள்ளனர். அவதூறு கருத்துக்களை பரப்பியதாக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கை நாங்கள் சட்டப்படி சந்திப்போம்.

    இங்கு நடப்பதையெல்லாம் மத்திய அரசும், நீதிமன்றமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு. தமிழக அரசு கைது நடவடிக்கையில் தீவிரம் காட்டாமல் மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை நிறைவேற்றுவதில் அக்கறை காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று கோவை காளப்பட்டியில் பா.ஜ.க. சமூக வலைதள செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறந்த சமூக வலைதள செயல்பட்டாளருக்கு விருது உமா கார்கிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வழங்கி உமா கார்கியை கவுரவித்தார். விருது பெற்ற மறுநாளிலேயே உமா கார்கி, கைது செய்யப்பட்டு உள்ளது பா.ஜ.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • முபாரக் பாஷா என்பவர் செல்வத்தின் அவதூறு கருத்து தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா மாவட்ட செயலாளர் செல்வத்தை கைது செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    பாரதிய ஜனதா கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக இருப்பவர் செல்வம். இவர் தனது சமூகவலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டு இருந்தார். இது வைரலாக பரவி வந்தது.

    இந்த நிலையில் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முபாரக் பாஷா என்பவர் செல்வத்தின் அவதூறு கருத்து தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா மாவட்ட செயலாளர் செல்வத்தை கைது செய்தனர்.

    பெண் பத்திரிகையாளர் பற்றி அவதூறு கருத்துக்களை பதிவிட்டதை கண்டித்து தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் அடுத்த மாதம் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. #SVeShekher
    கரூர்:

    பா.ஜ.க. பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனை கண்டித்து பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தொடர்ந்தனர். இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 2-ல் வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு கரூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த வழக்குகள் சம்பந்தமாக 6 வாரத்திற்கு கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதனை விசாரித்த நீதிபதி, அவர் 6 வாரம் கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். அதை அவரது வக்கீல் கரூர் கோர்ட்டில் சமர்ப்பித்தார்.

    இந்நிலையில் இன்று கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 2-ல் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சுப்பையா, அடுத்த மாதம் 15-ந்தேதி நடிகர் எஸ்.வி. சேகர் கரூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார். #SVeShekher
    பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அம்பத்தூர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் இன்று ஆஜரானார். #SVeShekher
    அம்பத்தூர்:

    நடிகரும், பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான எஸ். வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    எஸ்.வி.சேகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்ககத்தின் சார்பில் சேகரன் என்பவர் அம்பத்தூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று காலை நீதிபதி அனிதாஆனந்தன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராக நடிகர் எஸ்.வி.சேகர் காலை 11 மணியளவில் அம்பத்தூர் நீதிமன்றத்துக்கு வந்தார். பின்னர் அவர் தனது வக்கீல்களுடன் ஆஜர் ஆனார்.

    அப்போது எஸ்.வி.சேகர் தரப்பு வக்கீல்கள் கூறும் போது, இது தொடர்பாக பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. அனைத்தையும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரே வழக்காக விசாரிக்க மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 9-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவின் நகலை தாக்கல் செய்யும்படியும் எஸ்.வி.சேகரை அன்றும் ஆஜராகும்படியும் தெரிவித்தார். #SVeShekher
    ×