என் மலர்
காஞ்சிபுரம்

திருப்போரூர்:
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு நேற்று மாலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிசாமி தரிசனம் செய்ய வந்தார்.
இதற்காக திருப்போரூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனின் ஜீப் தேர்நிற்கும் இடத்தின் அருகில் உட்கார்ந்திருந்த முனுசாமி என்ற முதியவர் மீது லேசாக இடித்ததாக கூறப்படுகிறது.
இதில் முதியவர் கீழே விழுந்தார். இதை பார்த்த அங்கு பெயின்டிங் பணியில் ஈடுபட்டிருந்த சான்றோர் வீதியைச்சேர்ந்த முரளி என்பவர் தட்டிக் கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் நடுரோட்டில் முரளியை தாக்கினார். பின்னர் அவரை மட்ட போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விட்டனர். இதற்கிடையே காயம் அடைந்த முதியவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து போலீசார் சிகிச்சை அளித்து விட்டு அவரை அங்குள்ள சத்திரம் அருகே விட்டுசென்று விட்டனர்.
போலீஸ் நிலையத்தில் முரளி இருப்பதை அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் முரளி விடுவிக்கப்பட்டார். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் சேர்ந்தவர் ஜான்சன். இவர் தனது மனைவி, மகள், 6 வயது பேத்தி ஆகியோருடன் ராயப்பேட்டை செல்வதற்காக கால்டாக்சி பதிவு செய்தனர். இன்று காலை 10 மணி அளவில் கார் வீட்டுக்கு வந்தது.
அதில் ஜான்சனின் மகள் ரெஜினா மற்றும் 6 வயது பேத்தி உட்கார்ந்திருந்தனர். ஜான்சனும் அவரது மனைவியும் வர தாமதம் ஆனது. எனவே குழந்தையை காரில் உட்கார வைத்துவிட்டு ரெஜினா வீட்டுக்குள் சென்றார்.
ஜான்சன், அவரது மனைவி, மகள் ஆகியோர் வந்தபோது கார் இல்லை. காரில் இருந்த 6 வயது பெண் குழந்தையை டிரைவர் காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில், குழந்தையை காரில் கடத்திய டிரைவர் பெயர் கார்த்தி என்று தெரியவந்தது. குழந்தையுடன் தப்பிய கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
காரை மடக்கி பிடிப்பதற்காக மற்ற போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் டிரைவர் பிடிபடுவார். குழந்தை மீட்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம், பெரியார் நகரை சேர்ந்த நடராஜன் என்பவரது வீட்டில் கடந்த வாரம் 5 பவுன் நகை, வெள்ளிப் பொருட்கள், ரூ.30 ஆயிரம் கொள்ளை போனது. இந்த கொள்ளை தொடர்பாக ஐஸ்அவுசை சேர்ந்த தினேஷ், ஆதம்பாக்கத்தை சேர்ந்த அஜித் குமார், சாமுவேல் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சீனாவில் பரவி உள்ள ‘கொரோனா’ வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்தி உள்ளன.
சவுதி அரேபியா அரசும் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது.
இந்தநிலையில் சவுதியில் உள்ள மக்கா, மதினாவுக்கு உம்ரா பயணத்துக்கு செல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250 பேர் இன்று மதியம் 12.15 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்ய சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர்.
ஆனால் அவர்கள் சவுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெளிநாட்டு பயணிகள் புனித பயணமாக வருவதற்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்து பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாக மதினாவுக்கு செல்ல முடியாமல் 250 பேரும் சென்னை விமான நிலையத்தில் தவித்தபடி நின்றனர். இதனால் சர்வதேச விமான நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
காஞ்சீபுரத்தில் ஓரிக்கை, ஒலிமுகமதுபேட்டை, ரெயில் நிலைய சாலை, பிள்ளையார்பாளையம் போன்ற இடங்களில் மின்வாரிய அலுவலகங்கள் உள்ளன.
இந்த அலுவலகங்கள் அனைத்திலும் மின் நுகர்வோர்களின் வசதிக்காகவும், மின்கட்டண செலவை் குறைத்து, அதிக வெளிச்சம் தரக்கூடிய எல்.இ.டி. பல்புகளின் பயனை மக்கள் அறிந்து விழிப்புணர்வு அடையவும், மானிய விலையில் எல்.இ.டி. பல்புகள், மின்விசிறிகள், டியூப் லைட் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.
இது குறித்து மின்வாரிய ஊழியர் கூறியதாவது:-
எல்.இ.டி. பல்பு (9 வாட்ஸ்) ஒன்றின் விலை தனியார் கடையில் ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனையாகிறது.
அதே பல்பை மானியத்தில் ரூ.70-க்கு விற்பனை செய்கிறோம்.
எல்.இ.டி. டியூப் லைட் ஒன்று ரூ.220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை தனியார் கடைகளில் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்கிறார்கள்.
இதேபோல் 50 வாட்ஸ் மின் விசிறி கடைகளில் ரூ.1650 முதல் ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதை நாங்கள் ரூ.1110-க்கு விற்பனை செய் கிறோம்.
மத்திய அரசின் அங்கீகாரத்துடன் மானிய விலையில் இந்த பொரு ட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் காலை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மலேசியா, துபாய், இலங்கையில் இருந்து வந்த பயணிகள் சுங்க அதிகாரிகள் சோதனை முடிந்து வெளியே வந்தனர். அவர்களிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்தனர்.
இதில் 18 பயணிகள் ரூ.5½ கோடி மதிப்புள்ள 12 கிலோ 693 கிராம் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து 18 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அனைவரும் தங்கம் கடத்தல் கும்பலிடம் பணியாற்றும் ‘குருவிகள்’ என்பது தெரிந்தது.
அவர்களிடம் மேலும் விசாரணை நடத்த சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு கொண்டு செல்ல விமான நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.
அப்போது அங்கிருந்த கடத்தல்காரர்களின் ஆதரவாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினர்.
இதனை சாதகமாக பயன்படுத்தி தங்கம் கடத்தி வந்த 18 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மேலும் அதிகாரிகளை தாக்கிய 50 பேர் கும்பலும் ஓட்டம் பிடித்தனர்.
இச்சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே தப்பி ஓட்டம் பிடித்த தங்கம் கடத்தல்காரர்களில் 13 பேர் மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்தில் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும் தலைமறைவாக உள்ள 8 கடத்தல்காரர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே அதிகாரிகளை தாக்கி தங்கம் கடத்தல்காரர்கள் தப்பிக்க உதவிய 50 பேர் கும்பலை பிடிக்கவும் வேட்டை நடந்து வருகிறது.
விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் பதிவான காட்சிகளை வைத்து மேலும் நடவடிக்கை எடுக்க மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் மிகப்பெரிய அளவில் நடைபெறுவதற்கு இந்த கும்பலே காரணம் என்று தெரிகிறது. அவர்களை கூண்டோடு பிடிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இதற்கிடையே தங்கம் கடத்தி வருபவர்களுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் உடந்தையாக இருப்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக விமான நிலைய 2 சுங்க இலாகா அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் சுங்கத்துறையில் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தங்கம் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
கொளத்தூரில் உள்ள அவரது வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து ஆவணங்களை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை சென்னை விமான நிலைய அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன் படி இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி காலை சண்டி யாகத்துடன் விழா தொடங்கி மார்ச் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.
28-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு கொடியேற்றம், காலை வெள்ளி ரிபஷ வாகனம், மாலை தங்கமான் வாகனத்தில் அம்மன் நான்கு ராஜவீதிகளில் திருவீதிவுலா நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து பிரம்மோற்சவ விழா நிறைவு பெறும் நாள் வரை தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்கள் அருளிபாளிக்கிறார்.
மார்ச் 5-ந் தேதி தேரோட்டம் நடைபெறு கிறது. பிரம்மோற்சவத்தின் 11-ம் நாளான மார்ச் 8-ந் தேதி திருக்கோவில் தெப்பகுளத்தில் அம்மன் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. பகல் 12 மணியளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உள்ளுர் மற்றும் வெளியூரில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த ஆண்டு முதல் முதலாக பிரம்மோற்சவத்தின் போது தமிழர்களின் பாரம் பரியத்தை பறைசாற்றும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற உள்ளது.
உள்ளூர் மக்கள் மற்றும் காமாட்சி அம்மன் நற்பணி மன்றம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நவராத்திரி 9 நாட்கள் மட்டும் கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முதல் பிரம்மோற்சவத்தின் போது கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை கோவில் நிர்வாக அலுவலர் நாராயணன் தெரிவித்தார். அப்போது கோவில் நற்பணி மன்ற நிர்வாகிகள் ஆர்.வி.குப்பன், கணேசன், ஜீவானந்தம், ஆறுமுகம் உடனிருந்தனர்.
காஞ்சீபுரம்:
சென்னை விமான நிலையத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக இரண்டாவது விமான நிலையம் அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது.
இதற்காக காஞ்சீபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடம் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் காஞ்சீபுரம் தாலுக்கா பரந்தூர் பகுதியில் 4500 ஏக்கர் நிலம் விமான நிலையத்திற்கு ஏற்றதாக இருப்பதாக தேர்வு செய்யப்பட்டது. அந்த இடம் குறித்து நிலஅளவை துறையினர் வரைபடம் ஒன்றை தயாரித்து வருவாய் துறையினரிடம் கொடுத்து இருந்தனர்.
பாதுகாப்பாக வைக்கப்பட்ட வேண்டிய அந்த வரைபடம் பொதுமக்களின் வாட்ஸ் ஆப் குழுக்களில் பரவியது. இதனால் அதிருப்தியடைந்த காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வரைபடத்தை கசிய விட்டதாக நில எடுப்பு தாசில்தார் கருணாகரனை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டு உள்ளார். இது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






