search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கல்பாக்கம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

    கல்பாக்கம் அருகே கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கல்பாக்கம்:

    கல்பாக்கத்தை அடுத்த கடலூர் கிராமம் சின்ன குப்பம் பகுதியை சேர்ந்தவர் தயாளன். மீனவர். இவரது மனைவி வெண்ணிலா (வயது 26). இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. வெண்ணிலாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த சில ஆண்டுகளாக புதுப்பட்டினம் குப்பத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று அங்கு தனது குழந்தையுடன் வெண்ணிலா வசித்து வந்தார்.

    விரக்தி அடைந்த நிலையில் இருந்த வெண்ணிலா கடந்த 1-ந் தேதி பிற்பகல் 4 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ உடல் முழுவதும் பரவி அவர் அலறி துடித்தார்.

    அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×