search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா பீதி- சவுதி அரேபியா பயணத்துக்கு 250 பேருக்கு அனுமதி மறுப்பு

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெளிநாட்டு பயணிகள் புனித பயணமாக வருவதற்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்து பிறப்பித்த உத்தரவால் சென்னை விமான நிலையத்தில் 250 பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
    ஆலந்தூர்:

    சீனாவில் பரவி உள்ள ‘கொரோனா’ வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்தி உள்ளன.

    சவுதி அரேபியா அரசும் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது.

    இந்தநிலையில் சவுதியில் உள்ள மக்கா, மதினாவுக்கு உம்ரா பயணத்துக்கு செல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250 பேர் இன்று மதியம் 12.15 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்ய சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர்.

    ஆனால் அவர்கள் சவுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெளிநாட்டு பயணிகள் புனித பயணமாக வருவதற்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்து பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

    இதன் காரணமாக மதினாவுக்கு செல்ல முடியாமல் 250 பேரும் சென்னை விமான நிலையத்தில் தவித்தபடி நின்றனர். இதனால் சர்வதேச விமான நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×