என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆதம்பாக்கத்தில் பெண் குழந்தை காரில் கடத்தல்
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் சேர்ந்தவர் ஜான்சன். இவர் தனது மனைவி, மகள், 6 வயது பேத்தி ஆகியோருடன் ராயப்பேட்டை செல்வதற்காக கால்டாக்சி பதிவு செய்தனர். இன்று காலை 10 மணி அளவில் கார் வீட்டுக்கு வந்தது.
அதில் ஜான்சனின் மகள் ரெஜினா மற்றும் 6 வயது பேத்தி உட்கார்ந்திருந்தனர். ஜான்சனும் அவரது மனைவியும் வர தாமதம் ஆனது. எனவே குழந்தையை காரில் உட்கார வைத்துவிட்டு ரெஜினா வீட்டுக்குள் சென்றார்.
ஜான்சன், அவரது மனைவி, மகள் ஆகியோர் வந்தபோது கார் இல்லை. காரில் இருந்த 6 வயது பெண் குழந்தையை டிரைவர் காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில், குழந்தையை காரில் கடத்திய டிரைவர் பெயர் கார்த்தி என்று தெரியவந்தது. குழந்தையுடன் தப்பிய கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
காரை மடக்கி பிடிப்பதற்காக மற்ற போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் டிரைவர் பிடிபடுவார். குழந்தை மீட்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்