என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 374 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    பிற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு அதிகமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டிய ல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 835 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 43 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 727 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 374 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • திகினாரை அருகே உள்ள ரங்கசாமி கோவில் அருகில் மானாவாரி நிலத்தில் மர்ம விலங்கு கடித்து நாய் ஒன்று இறந்து கிடந்தது.
    • இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்கு அவ்வப்போது விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், கால்நடைகளை வேட்டையாடி வருவதும் தொடர்கதை ஆகிய வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட திகினாரை அருகே உள்ள ரங்கசாமி கோவில் அருகில் மானாவாரி நிலத்தில் மர்ம விலங்கு கடித்து நாய் ஒன்று இறந்து கிடந்தது. இது பற்றி ஜீர்கள்ளி வனத்துறைக்கு அப்பகுதி விவசாயிகள் தகவல் அளித்தனர்.


    இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய் இதே பகுதியில் மர்ம விலங்கு கடித்து உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது. புலி அல்லது சிறுத்தை வனப்பகுதியில் இருந்து வந்து நாயை வேட்டையாடி இருக்கலாம் என விவசாயிகள் கருதுகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    • சென்னிமலையில் திருப்பூர் குமரனுக்கு உருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து ஆய்வுமேற்கொள்ள ப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் பிறந்து நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த தியாகி திருப்பூர் குமரனுக்கு சென்னிமலையில் நினைவு அரங்கம் அமைக்க வேண்டும் என சென்னிமலை நகர மக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    தற்போது தியாகி குமரனுக்கு நினைவு அரங்கம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் சென்னிமலையில் உருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கு 3 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அமைச்சர்கள் பேசியதாவது:

    சென்னிமலையில் பிறந்து திருப்பூரில் 1932-ம் ஆண்டு நடந்த சுதந்திர போரட்டத்தில் பங்கேற்று தேசத்திற்காக தன் இன்னுயிரை துறந்த திருப்பூர் குமரனை பெருமைப்படுத்தும் விதமாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாள் விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப் பட்டு வருகிறது.

    தொடர்ந்து முதல்- அமைச்சர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சம்பத்நகர் பிரதான சாலைக்கு தியாகி குமரன்சாலை, சம்பத்நகர் என்று பெயர் சூட்டி சிறப்பு சேர்த்துள்ளார். அந்த வகையில் திருப்பூர் குமரனுக்கு மேலும் பெருமைப்படுத்தும் வகையில், சென்னிமலையில் உருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து ஆய்வுமேற்கொள்ள ப்பட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட கவுன்சிலரும், சென்னிமலை மேற்கு ஒன்றிய செயலாளருமான எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் பி.செங்கோட்டையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.பிரபு, நகர செயலாளர் ராமசாமி, சென்னிமலை யூனியன் சேர்மேன் காயத்ரி இளங்கோ, டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீ தேவி அசோக், பொதுக்குழு உறுப்பினர் சா.மெய்யப்பன், வெங்கமேடு ஈஸ்வரமூர்த்தி,

    முன்னாள் மாணவர் அணி நிர்வாகி தி.சேகர், இளைஞர் அணி நிர்வாகிகள் குமராவலசு இளங்கோ, பிடாரியூர் சதீஸ், கொடுமணல் கோபால், நகர இளைஞர் அணி அசோக், ரமேஷ் என்கிற குணசேகரன், மெற்குறி தங்கவேல், அம்மா பாளையம் ஈஸ்வரமூர்த்தி, முகாசி பிடாரியூர் சி.கே. ஆறுமுகம், குமரன் பேரவை விஸ்வநாதன், சிவக்குமார், முருங்கத்தொழுவு மு.சி., துரைசாமி, எக்கட்டாம் பாளையம் அல்லி முருகன், கவுண்டிச்சிபாளையம் முருகேசன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிள் உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சென்னிமலை அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த சிறுவன் மாயமானார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பாரதியார் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை சேர்ந்த நமச்சிவாயம் (52) செயலாளராக உள்ளார்.

    இந்த இல்லத்தில், சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் பரத் (13), ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக் குழு மூலமாக சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று காலை குழந்தைகள் ஆஜர் பட்டியல் எடுத்தபோது சிறுவன் பரத் இல்லை.

    உடனிருந்த குழந்தைகளை விசாரித்தபோது அவன் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட நலக்குழுவுக்கும் சிறுவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் உதவியுடன் ஈரோடு, பெருந்துறை, அறச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியும் பரத் கிடைக்கவில்லை. இதையடுத்து இல்லத்தின் செயலாளர் நமச்சிவாயம் அளித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெருந்துறை அருகே மது போதையில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த செல்வம் நகரை சேர்ந்தவர் சகுந்தலா (51). இவர் தனது குடும்பத்தினருடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். இவரது தந்தை கிருஷ்ணசாமி (70).

    இவர் பெருந்துறை அருகே உள்ள மேற்கு ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்தார். கிருஷ்ணசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்த ன்று இரவு மது போதையில் கிருஷ்ணமூர்த்தி தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மாத்திரையை (விஷம்) சாப்பிட்டு விட்டு தனது மகள் சகுந்தலாவுக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக சகுந்தலா தனது தம்பி வெங்கடாசலம் உதவியுடன் கிருஷ்ண சாமியை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் கிருஷ்ணசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
    • முதலிடம் பிடித்த இந்த மாணவ-மாணவிகள் 4 பேரும், இன்று காலை 44-வது செஸ் ஒலிம்பியாட் நடக்கும் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் சென்றனர்.

    ஈரோடு:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி சித்தோடு பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சரோஜினி தலைமை தாங்கினார். போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தொடங்கி வைத்தார்.

    மாணவிகளில் 9, 10-ம் வகுப்பு பிரிவில் ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைபள்ளி மாணவி மகதி, பிளஸ்-1, பிளஸ் -2 வகுப்பு பிரிவில் ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளி மாணவி சந்தியா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

    மாணவர்களில் 9,10ம் வகுப்பு பிரிவில் ஈரோடு இடையன்காட்டு வலசு அரசு மேல்நிலை பள்ளி மாணவன் எஸ்.விக்னேஸ்வரன், பிளஸ்- 1, பிளஸ்- 2 வகுப்பு பிரிவில் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவன் நவீன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.இவர்களுக்கு சான்றிதழ்- பதக்கம் வழங்கப்பட்டது.

    ஈரோடு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த இந்த மாணவ-மாணவிகள் 4 பேரும், இன்று காலை 44-வது செஸ் ஒலிம்பியாட் நடக்கும் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் சென்றனர். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர். பின்னர், வரும் 28-ந் தேதி மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் செஸ் போட்டி தொடக்க விழா, கொடி அணி வகுப்பில் மாணவ, மாணவிகள் 4 பேரும் பங்கேற்க உள்ளனர்.

    இத்தகவலை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதன்படி அ.தி.மு.க. சார்பில் இன்று வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்தும், வீட்டு வரி உயர்வை கண்டித்தும், பெண்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பா ட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலா ளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி அ.தி.மு.க. சார்பில் இன்று வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்தும், வீட்டு வரி உயர்வை கண்டித்தும், பெண்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பா ட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலா ளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான கே.எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பிரமணி, கிட்டுசாமி, பூந்துறை பாலு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி .பழனிச்சாமி கவுன்சிலர் சூரம்பட்டிஜெகதீஷ், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து, முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன், முன்னாள் மண்டல தலைவர் பெரியார் நகர் மனோகரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், பகுதி செயலாளர்கள் கேச வமூர்த்தி, கோவிந்தராஜன், ராமசாமி, மாணவரணி மாவட்ட தலைவர் ரத்தன் பிரித்வி, மாணவர் அணி மாவட்ட இணைச்செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், வீரப்பன் சத்திரம் பகுதி ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஜெயராமன், மாவட்ட வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், பெரியார் நகர் பகுதி அமைத்தலைவர் மீன் ராஜா, சிந்தாமணி கூட்டுறவு சங்க இயக்குனர் பொன் சேர்மன், மாணவரணி பொருளாளர் முருகானந்தம், 46 புதூர் தலைவர் பிரகாஷ், நிர்வாகி துரைசேவுகன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச்செயலாளர் மாதையன், மாவட்ட பிரதிநிதி கஸ்தூரி, பெரியார் நகர் பகுதி நிர்வாகி சூரியசேகர், சூரம்பட்டி தங்கவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமோதர மூர்த்தி, ஐடி விங் செயலாளர் கோபாலகிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • ஈரோடு ரெயில் நிலையம் அருகே பராமரிப்பு பணி நேற்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 13-ந் தேதி வரை 21 நாட்கள் இந்த பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • அதன்படி சேலத்தில் இருந்து ஈரோடு ரெயில் நிலையம் வராமல் நாமக்கல் வழியாக கரூர் செல்லும் வகையில் மாற்று வழி பாதையில் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மைசூர்- மயிலாடுதுறை (16232) செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் ஈரோடு ரெயில் நிலையம் வராமல் நாமக்கல் வழியாக கரூருக்கு செல்லும்.

    ஈரோடு,ஜூலை. 25-

    ஈரோடு ரெயில் நிலையம் அருகே பராமரிப்பு பணி நேற்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 13-ந் தேதி வரை 21 நாட்கள் இந்த பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக ஈரோடு வழியாக செல்லும் ரயில்கள் மாற்று வழி பாதையில் செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி சேலத்தில் இருந்து ஈரோடு ரெயில் நிலையம் வராமல் நாமக்கல் வழியாக கரூர் செல்லும் வகையில் மாற்று வழி பாதையில் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மைசூர்- மயிலாடுதுறை (16232) செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் ஈரோடு ரெயில் நிலையம் வராமல் நாமக்கல் வழியாக கரூருக்கு செல்லும்.

    இதேப்போல் மைசூர்- தூத்துக்குடி (16236) எக்ஸ்பிரஸ் ரெயில், வாஸ்கோடகாமா -நாகப்பட்டினம்(17315) எக்ஸ்பிரஸ் ரெயில், ஸ்ரீமதா வைஷ்னோதேவி கற்றா- திருநெல்வேலி (16788) எக்ஸ்பிரஸ் ெரயில், சண்டிகர்- மதுரை (12688) எக்ஸ்பிரஸ் ரயில், ஒக்கா-தூத்துக்குடி (19568) எக்ஸ்பிரஸ் ரயில், காச்சகுடா - மதுரை (17615) எக்ஸ்பிரஸ் ெரயில், தூத்துக்குடி- மைசூர் (16235) எக்ஸ்பிரஸ் ரயில், திருநெல்வேலி- ஸ்ரீ மதா வைஷ்னோ தேவி கற்றா (16787) எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை- சண்டிகர் (12687), எக்ஸ்பிரஸ் ெரயில், தூத்துக்குடி -ஒக்கா (19567) எக்ஸ்பிரஸ் ெரயில், நாகப்பட்டினம்-வாஸ்கோடகாமா (17316) எக்ஸ்பிரஸ் ெரயில், மதுரை- காச்சகுடா (17616) எக்ஸ்பிரஸ் ெரயில், மயிலாடுதுறை-மைசூர் (16231) எக்ஸ்பிரஸ் ெரயில் ஆகிய ரயில்கள் பராமரிப்பு நாட்களான 24.7.2022 முதல் 13.8.2022 வரை 21 நாட்கள் சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக கரூருக்கு மாற்று பாதையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு (06846) இயக்கப்படும் சிறப்பு ெரயில் வரும் ஆகஸ்ட் 14-ந் தேதி வரை 22 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போல் ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடுக்கு (06845) இயக்கப்படும் சிறப்பு ெரயில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை 22 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் ஈரோட்டிலிருந்து மேட்டூர் அணைக்கு (06407) இயக்கப்படும் சிறப்பு ெரயில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 14-ந் தேதி வரை 21 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மேட்டூர் அணையில் இருந்து ஈரோட்டுக்கு (06408) இயக்கப்படும் சிறப்பு ெரயில்கள் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 14-ந் தேதி வரை 21 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 0424 - 2284812 என்ற உதவி எண்ணை அழைத்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மாலை நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து.
    • நள்ளிரவு வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 29 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மாலை நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து. நேற்று காலை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலையில் மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு நகரில் பகுதியில் சுமார் 30 நிமிடம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நகரின் முக்கியப் பகுதிகளான பிரப் ரோடு, ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, காளைமாடு சிலை, முனிசிபல் காலனி, வீரப்பன் சத்திரம், குமலன்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மாநகரில் தற்போது பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த குழிகளில் மழை நீர் தேங்கி நின்றது.இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஈரோடு வீரப்பன் சத்திரம், ராஜாஜி வீதியில் பெய்த மழை காரணமாக மழை நீர், கழிவு நீருடன் சேர்ந்து தெருக்களில் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்த பகுதியில் உள்ள சாக்கடைகளை தூர் வார வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதேபோல, ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளான திண்டல், நசியனூர், வாய்க்கால்மேடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, பவானி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 29 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

    தொடர்ந்து இன்று காலையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு –-17, பெருந்துறை – 29, மொடக்குறிச்சி –-20, பவானி –-6, கவுந்தப்பாடி – 3.4, மாவட்டத்தின் மொத்த மழையளவு 75.4 மி.மீ.

    • பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்தது.
    • 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.64 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.64 அடியாக உள்ளது. நேற்று 2,300 கன அடியாக வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 953 கனஅடியாக குறைந்துள்ளது.

    அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 905 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் 100 அடியை பவானிசாகர் அணை எட்டி விடும் என்பதால் அதன் பிறகு பவானிசாகருக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும்.

    இதனால் பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. எப்போது வேண்டுமானாலும் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் பவானிசாகர் அணையின் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலாஜி தலைமையில் பொதுப்பணித்துறையினர் அணையின் மேல் பகுதியில் முகாமிட்டு நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதுபோல் மாவட்டத்தில் மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், பெரும்பள்ளம், வரட்டு பள்ளம் அணை நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 41.75 அடி உள்ள குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.99 அடியாக உள்ளது. இதேபோல் 33.50 அடி உள்ள வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.30 அடியாக உள்ளது. 30.84 அடியாக உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 18.24 அடியாக உள்ளது.

    • தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 2, 213 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 34 ஆயிரத்து 566 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 27 ஆயிரத்து 626 பேரும் என மொத்தம் 64,405 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.

    இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது. மாவட்டத்தில்

    1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டது. நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 2, 213 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 34 ஆயிரத்து 566 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 27 ஆயிரத்து 626 பேரும் என மொத்தம் 64,405 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • இதையொட்டி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார்.

    கோபி:

    தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.முக. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இதையொட்டி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார்.

    இதில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, ஆகியவற்றை கண்டித்தும் தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் அறிவிக்கப்பட்ட குடும்ப த்தலைவிக்கானரூ.1000, சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறை வேற்றாததை கண்டி த்தும் கோஷம் எழுப்ப ப்பட்டது.

    தாலிக்கு தங்கம், பெ ண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்தாததை கண்டித்தும், அரசு ஊழியருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றாததை கண்டித்தும் இதில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

    இதில் பவானிசாகர் பண்ணாரி எம்.எல்.ஏ, கோபி நகர அ.தி.மு.க. செய லாளர் பிரினியோ கணேஷ், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிர மணியன் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி, கிளை கழக, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதையொட்டி எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்கள் ஆர்ப்பாட்டத்தில் பறக்க விடப்பட்டன. மேலும் அ.தி.மு.க.வினர் பதாகைகளை ஏந்தி கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

    ×