என் மலர்tooltip icon

    சென்னை

    • பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
    • பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை விசாரிக்கக்கோரி தேசிய மகளிர் நல ஆணையத்திற்கு அ.தி.மு.க. கடிதம் எழுதி உள்ளது. அதில்,

    கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    2022-2025 வரை நடந்த வன்கொடுமைகள் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

    • மு.க.முத்துவின் உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • தனது சகோதரர் மு.க.முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், நடிகருமான மு.க.முத்து (77) உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

    அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தனது சகோதரர் மு.க.முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    சென்னை ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மு.க.முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். மு.க.முத்துவின் உடலுக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

    • நேற்று தங்கம் விலை ஒரு கிராம் 9,110 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72,880 ரூபாய்க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே இருக்கிறது.

    கடந்த 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்பட்டது. நேற்று தங்கம் விலை ஒரு கிராம் 9,110 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72,880 ரூபாய்க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,170 ரூபாய்க்கும் சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73,360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    18-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,880

    17-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,840

    16-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800

    15-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,160

    14-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    18-07-2025- ஒரு கிராம் ரூ.125

    17-07-2025- ஒரு கிராம் ரூ.124

    16-07-2025- ஒரு கிராம் ரூ.124

    15-07-2025- ஒரு கிராம் ரூ.125

    14-07-2025- ஒரு கிராம் ரூ.127

    • நடிப்பு மட்டுமில்லாமல் சில படங்களில் சொந்த குரலில் பாடியும் இருக்கிறார்.
    • மு.க.முத்து மரணம் பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து. வயது 77. இவரது தாயார் பத்மாவதி. இவர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி ஆவார்.

    மு.க.முத்துவை கருணாநிதி தனது கலையுலக வாரிசாக சினிமா படங்களில் நடிக்க வைத்தார். முதல் முதலாக மு.க.முத்து "பிள்ளையோ பிள்ளை" என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு "பூக்காரி", "சமையல்காரன்", "அணையா விளக்கு" ஆகிய படங்களிலும் தொடர்ந்து நடித்தார்.

    நடிப்பு மட்டுமில்லாமல் சில படங்களில் சொந்த குரலில் பாடியும் இருக்கிறார். இவர் பாடிய "சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க" என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றது.

    மு.க.முத்து சில படங்களில் நடித்த பிறகு அவர் திரையுலகில் இருந்து விலகினார். இதையடுத்து அவர் அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அரசியலிலும் ஆர்வம் ஏற்படவில்லை.

    இதன் காரணமாக இவர் யாரிடமும் அதிக தொடர்பு இன்றி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ஈஞ்சம்பாக்கத்தில் வாழ்ந்து வந்தார். வயது மூப்பு காரணமாக அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    வயது மூப்பு காரணமாக அவர் வெளியில் எங்கும் வருவதை தவிர்த்து வீட்டிலேயே இருந்து வந்தார். அவருக்கு தேவையான உதவிகளை அவரது மனைவி சிவகாம சுந்தரி செய்து வந்தார். இன்று (சனிக்கிழமை) காலை எழுந்து வழக்கமான பணிகளில் ஈடுபட்டார்.

    7.30 மணியளவில் அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. 8 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு அறிவுநிதி என்ற ஒரே மகனும், தேன்மொழி என்ற மகளும் இருக்கிறார்கள்.

    மு.க.முத்து மரணம் பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் கீழ்ப்பாக்கம் மற்றும் கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழாவுக்கு புறப்பட்டுக் கொண்டு இருந்தார்.

    அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈஞ்சம்பாக்கத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு மு.க.முத்து உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    • மதவாத சக்திகளை வீழ்த்த, விஜய் தலைமையில் சமத்துவ சக்திகளை சேர்த்துக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
    • மண்ணுக்கும், மக்களுக்கும் தீமை பயக்கும் மதப்பற்று பா.ஜ.க., குடும்பப்பற்று தி.மு.க. இருவரையும் தோற்கடிப்போம்.

    சென்னை:

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போதே தேர்தல் கூட்டணி பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. யார், யாருடன் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பும் கூடி வருகிறது. இந்தநிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் பிரமாண்டமான கட்சி இணைய உள்ளது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் பேசியது, அரசியல் அரங்கில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டது த.வெ.க.வை தான் என்று சமூக வலைத்தளத்தில் கருத்துகள் பரிமாறப்பட்டன.

    இந்தநிலையில், அ.தி.மு.க.வுடன் த.வெ.க. கூட்டணி அமைக்குமா? என்பதற்கு, த.வெ.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் பதில் அளித்து கூறியதாவது:-

    தமிழகத்தின் முதன்மை சக்தியான த.வெ.க. தங்களோடு சேர்வதைப் போன்ற தோற்ற மயக்கத்தை சிலர் உருவாக்குகிறார்கள். ஏனென்றால், ஆண்ட கட்சிக்கும் (அ.தி.மு.க.), ஆளும் கட்சிக்கும் (தி.மு.க.) எங்கள் தலைவரின் எழுச்சியை, கருத்துக்கணிப்புகளில் பார்த்து காய்ச்சல் வந்திருக்கிறது.

    தங்கள் இயலாமையை மறைக்க, மக்களை திசைதிருப்ப ஆளுக்கொரு கற்பனைக் கதையைச் சொல்லி வருகிறார்கள். மீண்டும் தெளிவாக உணர்த்துகிறோம். எங்கள் செயற்குழு தீர்மானத்தின்படி, எங்களது முதலமைச்சர் வேட்பாளர் விஜய் தான்.

    மதவாத சக்திகளை வீழ்த்த, விஜய் தலைமையில் சமத்துவ சக்திகளை சேர்த்துக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள் நிரந்தர எதிரியான பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் யாரையும் நாங்கள் எங்களோடு சேர்த்துக்கொள்ளமாட்டோம்.

    மாற்றிப்பேசுவதும், ஏற்றிப்பேசுவதும், ஆள் வைத்து தூற்றிப்பேசுவதும் மற்ற அரசியல்வாதிகளின் பழக்கமாக இருக்கலாம். எங்கள் தலைவர் சொன்னால் சொன்ன சொல்படி நிற்கும் மாவீரர். தான் எடுத்த முடிவை ஒரு போதும் சமரசம் செய்துகொள்ளும் பழக்கமே அவருக்கு இல்லை.

    மண்ணுக்கும், மக்களுக்கும் தீமை பயக்கும் மதப்பற்று பா.ஜ.க., குடும்பப்பற்று தி.மு.க. இருவரையும் தோற்கடிப்போம். பிளவுவாத சக்திகள் மற்றும் மக்கள் விரோத மன்னராட்சி மனப்பான்மை ஆட்சியாளர்களை, வெற்றித் தலைவர் தலைமையில் வெல்வோம். வீண் கற்பனைகளை புறந்தள்ளி, உண்மை களநிலவரத்தை அறிந்து செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிரதமர் மோடி தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் வந்து சில நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆளும் தி.மு.க. அரசின் கூட்டணி எந்தவித மாற்றமும் இன்றி நிலைத்து வருகிறது.

    அதேநேரம், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என்று மத்திய மந்திரி அமித்ஷாவும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உறுதிபட தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த சூழலில், தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மாவட்டங்கள்தோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். அதேபோல், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்று, தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில், பிரதமர் மோடியும் தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் வந்து சில நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார். அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் வருகிற 27-ந் தேதி ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, ஆடித் திருவாதிரை விழாவாக கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. கண்காட்சி நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

    இதுகுறித்து பா.ஜ.க. வட்டாரங்கள் கூறுகையில், 'கேரளாவில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் அரசு விழாவில் அவர் பங்கேற்றுவிட்டு, பின்னர் அங்கிருந்து தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தருகிறார்.

    அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் 27-ந் தேதி நடைபெறும் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவான, ஆடி திருவாதிரை விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த விழாவானது, ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா ஆகியவற்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக இந்த விழா நடைபெற இருக்கிறது. விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

    மேலும், இந்த விழாவில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. மேலும், பல்வேறு தலைவர்களும் இந்த விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள். பிரதமர் மோடி வருகையையொட்டி, அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று தெரிவித்தன.

    இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரியலூரில் நடைபெறும் விழாவில் பங்கேற்றுவிட்டு, தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. மறுநாள் (28-ந் தேதி) தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் லேசான மழை பெய்து வருகிறது.
    • சில இடங்களில் காலை 10 மணி வரை இந்த மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. அதேவேளையில் இரவு சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.

    நேற்றிரவு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்த மழை காலை வரை நீடித்தது. இந்த நிலையில் காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் கன்னியாகுமரி, திருவள்ளூர், தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல் சாலைகளில் வழுக்கும் வகையில் மழை பெய்யவும், சில இடங்களில் போக்கவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    • சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம் ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.
    • அவருக்கு சென்னை ஐகோர்ட் சார்பில் நேற்று வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு சென்னை ஐகோர்ட் சார்பில் நேற்று வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை வாழ்த்தி அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் பேசினார். இதையடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பேசியதாவது:-

    வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பதவி வகித்ததில் பெருமை அடைகிறேன். இந்த ஐகோர்ட்டில் 9 மாதங்கள் பணியாற்றியுள்ளேன். என் பணியை முழு திருப்தியுடன் செய்துள்ளேன் என்ற மன நிம்மதியுடன் விடை பெறுகிறேன்.

    தமிழ்நாடு உயர்ந்த கலாசாரம் மற்றும் பண்பாடுகளைக் கொண்ட மாநிலம். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் வக்கீல் தொழிலுக்கு அதிக அளவில் பெண்கள் வருகின்றனர். அண்மையில்கூட நீதிபதிகள் தேர்வில் 213 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், 135 பெண்கள் தேர்வாயுள்ளனர். அந்த அளவுக்கு அருமையான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என தெரிவித்தார்.

    இதில் ஐகோர்ட் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
    • இரவில் பெய்த மழை சென்னையில் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருகிற 22-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், நள்ளிரவு முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவில் பெய்த மழை சென்னையில் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • திமுக கட்சியில் உறுப்பினர்கள் குறைந்து விட்டார்கள்.
    • அதனால் ஓர் அணியில் தமிழ்நாடு என்று சொல்லிக் கொண்டு ஊர் ஊராக சென்று, வீடு வீடாக சென்று மக்கள் சந்திக்கிறார்கள்.

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    திருவாரூர் மாவட்ட பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என்ற கற்பனை உலகத்தில் மு.க. ஸ்டாலின் இருந்து கொண்டிருக்கிறார். அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்.

    எடப்பாடி பழனிசாமி 210 தொகுதிகளில் வெல்வோம் என்கிறாரே.. உங்கள் பதில் என்ன? என்று உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கிறார்கள். அவரால் பதில் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் மக்கள் செல்வாக்கை இழந்த கட்சி திமுக.

    திமுக கட்சியில் உறுப்பினர்களும் குறைந்து விட்டார்கள். அதனால் ஓர் அணியில் தமிழ்நாடு என்று சொல்லிக் கொண்டு ஊர் ஊராக சென்று, வீடு வீடாக சென்று மக்கள் சந்திக்கிறார்கள். ஏமாந்து விடாதீர்கள். அவர்கள் திமுக உறுப்பினர் சேர்க்கைக்காக வருகிறார்கள்.

    இன்றைய தினம் திமுக-வின் நிலை பரிதாபமான நிலைக்கு வந்துள்ளது. கதவை தட்டி.. தட்டி.. தாயே.. எங்க கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்ற நிலை திமுகவுக்கு வந்துவிட்டது. திமுக-வுக்கு ஸ்டாலின், உதயநிதி பொறுப்பேற்ற நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல மெல்ல மெலிந்து நலிவடைந்து மக்களுடைய கதவை தட்டி உறுப்பினர்களை சேர்க்கின்ற அளவிற்கு தாழ்ந்து போய்விட்டது.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • 898 தம்பதியினரின் திருமணங்களை பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க உத்தரவு.
    • சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமண பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போரின் திருமணப் பதிவுகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில் அவற்றைப் பதிவு செய்ய தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

    898 தம்பதியினரின் திருமணங்களை பதிவு செய்ய வரும் 26ஆம் தேதி (சனி) அன்று சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமண பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு போக்குவரத்துத் துறை மிகப்பெரிய மாற்றத்தை எட்டியுள்ளது.
    • எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை பார்க்கும்போது, அவர்கள் சாலையில் பயணிப்பதே இல்லை என்பதை காட்டுகிறது.

    தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் "எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஓடிய சுந்தரா டிராவல்ஸ் பேருந்துகளுக்கு பதிலாக, தற்போது புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாடு போக்குவரத்துத் துறை மிகப்பெரிய மாற்றத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை பார்க்கும்போது, அவர்கள் சாலையில் பயணிப்பதே இல்லை என்பதை காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    ×