சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.இரவில் பெய்த மழை சென்னையில் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை
Published on

சென்னை:

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருகிற 22-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், நள்ளிரவு முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவில் பெய்த மழை சென்னையில் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com