என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • தினமும் காலையில் கடையின் உரிமையாளரான அசோக் சக்ரவர்த்தி, கடையின் பூட்டைத் திறந்துவிட்டு வேலைக்குச் செல்வார்.
    • கடைக்காரர்கள் யாரும் இல்லாமலேயே இங்கு டீ விற்கப்படுகிறது.

    தேநீர் பிரியர்கள் காலையிலோ அல்லது மாலையிலோ வழக்கமான தேநீர் அரட்டைகளைத் ஒருபோதும் தவறவிட விரும்புவது இல்லை. தேநீர் மற்றும் தேநீர் குடித்தபடியே அரட்டை அடிப்பது என இந்த இரண்டும் அவர்களுக்கு ரொம்ப முக்கியம்.

    இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் ஒரு டீக்கடை கடைக்காரர் இல்லாமல் இயங்கி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேற்கு வங்காள மாநிலம் சம்பூரில் உள்ள ஒரு சந்தில் அமைந்துள்ள இந்த சிறிய டீக்கடை ஊழியர்களை கொண்டிருக்கவில்லை. இது சம்பளம் வழங்குவதில்லை. ஆனால் இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணற்ற கப் டீயை வழங்கி உள்ளது. 

    தினமும் காலையில் கடையின் உரிமையாளரான அசோக் சக்ரவர்த்தி, கடையின் பூட்டைத் திறந்துவிட்டு வேலைக்குச் செல்வார். காலை முதல் மாலை 7 மணி வரை பெரும்பாலும் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் உள்ளூர்வாசிகள் என கடைக்கு வரும் எல்லோரும் மாறி மாறி பார்த்துக்கொள்கின்றனர்.

    கடைக்கு வருபவர்களே தேநீர் தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறார்கள், பணம் வசூலிக்கிறார்கள், சுத்தம் செய்கிறார்கள். இவை அனைத்தும் ஒரு ரூபாயை கூட எதிர்பார்க்காமல் செய்கிறார்கள்.

    கடைக்காரர்கள் யாரும் இல்லாமலேயே இங்கு டீ விற்கப்படுகிறது. எனினும், அவர்கள் குடித்த டீக்கான பணத்தை அங்குள்ள பணப்பெட்டியில் தவறாமல் போட்டுவிடுகிறார்கள்.

    இது முழுக்க முழுக்க நம்பிக்கை மற்றும் அன்பின் அடிப்படையில் இயங்குகிறது.

    • ஆபரேஷன் சிந்தூரை அடுத்து எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
    • பூஞ்ச், ரஜோரி பகுதிகள் பாகிஸ்தான் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. அதனைத் தொடர்ந்து இந்தியா ஆபரேஷசன் சிந்தூர் நடவடிக்கையை 7ஆம் தேதி நள்ளிரவு மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.

    அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது. கடந்த 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மதியம் வரை இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள மக்கள் வாழும் இந்திய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. அத்துடன் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதலை இந்தியா முறியத்ததுடன், கடுமையான பதிலடி கொடுத்தது.

    குறிப்பாக 7ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி மக்கள் வசிக்கும் பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் ஒரு ராணுவ வீரர், 4 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், பூஞ்ச், ரஜோரி பகுதிகளில் உள்ள வீடுகள் கடுமையாக சேதம் அடைந்தன.

    இந்த நிலையில் பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் 5 பேர் கொண்ட குழுவை அனுப்புகிறது. குழு வருகிற 21 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறது.

    இந்த குழுவில் தெரிக் ஓ'பிரையன், சகாரியா கோஸ், முகமது நதிமுல் ஹக் ஆகிய எம்.பி.க்கள் மற்றும் மேற்கு வங்க மாநில அமைச்சர் மனாஸ் புனியா, முன்னாள் எம்.பி. மமதாக தாகூர் இந்த குழுவில் இடம் பிடித்துள்ளனர்.

    மம்தா பானர்ஜியின் வழிகாட்டுதலின்படி ஐந்து பேர் கொண்ட குழு ஸ்ரீநகர், பூஞ்ச், ரஜோரி செல்லும் என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    • 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மத்திய இணையமைச்சர் ஆனார்.
    • 2024 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்து வந்தார்.

    மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 2019 தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யானவர் ஜான் பார்லா. இவர் சிறுபான்மை விவகாரத்துறை இணை அமைச்சராக இருந்தவர். பாஜக தலைவர் இவர் தற்போது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கடசியில் இணைந்தது குறித்து ஜான் பார்லா கூறியதாவது:-

    நான் பாஜகவில் இருந்தபோது பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக என்னை பணியாற்ற அனுமதிக்கவில்லை. மம்தா பானர்ஜியின் தலைமையின் கீழ், பழங்குடியின மக்களுக்கான நியாயத்தை என்னால் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு ஜான் பார்லா தெரிவித்தார்.

    2019 பாராளுமன்ற தேர்தலில் ஜான் பார்லா அலிப்பூர்துவார்ஸ் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2024ஆம் ஆண்டு இவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்தார். அவருக்குப் பதிலாக மேற்கு வங்க சட்டமன்ற பாஜக தலைமை கொறடாவாக இருநது மனோஜ் திக்கா நிறுத்தப்பட்டார். இவர் வெற்றி பெற்று எம்.பி.யானார்.

    இதனால் பாஜக மேலிடம் மீது அதிருப்தி ஏற்பட்டு கட்சியில் இருந்து விலகியிருந்தார். தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    • BSF வீரரின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார்.
    • ரஜனியிடம் தொலைபேசியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசி ஆறுதல் கூறினார்.

    கடந்த மாதம் 23 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹு என்பவர் தவறுதலாக சென்று மாட்டிக்கொண்டார்.

    பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து BSF கான்ஸ்டபிள் சாஹுவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர்.

    எல்லைக்கு அருகே விவசாயிகள் குழுவை அழைத்துச் சென்ற சாஹு, ஒரு மரத்தின் கீழ் ஓய்வெடுக்கச் சென்று, தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக BSF அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பாகிஸ்தான் சிறைபிடித்துள்ள BSF வீரரை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

    பூர்ணம் சாஹு மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர். இந்நிலையில், பூர்ணம் சாஹுவின் மனைவி ரஜனியிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவரது கணவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    பூர்ணம் சாஹுவின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். தனது கணவரின் நிலை குறித்து பேசிய ரஜனி, "என் கணவர் பாகிஸ்தான் ராணுவத்தால் கடத்தப்பட்டுள்ளார். அவர் அவர்களின் காவலில் உள்ளார். அவரது கண்கள் கட்டப்பட்ட புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

    BSF அதிகாரிகள் எங்கள் வீட்டிற்கு வந்து என் கணவரை மீண்டும் அழைத்து வர முயற்சிப்பதாக எங்களிடம் சொன்னார்கள். ஆனால் இப்போது நிலைமை ஒரு போர் போல் உள்ளது. அடுத்து என்ன செய்தி வரும் என்று எனக்குத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

    ஆபரேசன் சிந்தூர் குறித்து கேள்வி எழுப்பியபோது மனம் உடைந்த ரஜனி, "எனது சிந்தூரைத் திருப்பிக் கொடுங்கள்" என்று அழுதார்.

    • ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது.
    • இதில் கொல்கத்தா அணியை சென்னை அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் கொல்கத்தா, சென்னை அணிகள் மோதின. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி, ஐ.பி.எல். வரலாற்றில் 200 விக்கெட் வீழ்த்திய முதல் விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனை படைத்துள்ளார்.

    கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சுனில் நரைனை ஸ்டம்பிங் செய்தார். தொடர்ந்து, அங்கிரிஷ் ரகுவன்ஷியின் கேட்சை பிடித்தார். இதன்மூலம் 200 விக்கெட் வீழ்த்திய முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்துள்ளார். இதில் 153 கேட்சுகள் மற்றும் 47 ஸ்டம்பிங் அடங்கும்.

    • முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய சென்னை அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் கொல்கத்தா, சென்னை அணிகள் மோதின.

    முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், வெற்றிக்கு பிறகு சி.எஸ்.கே. கேப்டன் எம்.எஸ்.தோனியிடம் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்த தோனி, எனக்கு இப்போது 43 வயது ஆகிறது. நீண்ட நாள் கிரிக்கெட் விளையாடிவிட்டேன். ஐ.பி.எல். தொடரில் எனது கடைசி ஆண்டு என யாருக்கும் தெரியாது. நான் ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன். இந்த ஐ.பி.எல். முடிந்த உடன் அடுத்த 8 மாதத்துக்கு எனது உடல் இந்த அழுத்தத்தை தாங்குகிறதா என்பதை பார்க்க வேண்டும். ஓய்வு குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் நான் எடுக்கவில்லை. எல்லா இடங்களிலும் கிடைக்கும் ரசிகர்கள் அன்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரகானே 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரசல் 38 ரன்னும், மனீஷ் பாண்டே 36 ரன்னும், சுனில் நரைன் 26 ரன்னும் எடுத்தனர்.

    சிஎஸ்கே சார்பில் நூர் அகமது 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

    அடுத்து இறங்கிய உர்வில் படேல் 11 பந்தில் 4 சிக்சர் உள்பட 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அஷ்வின் 8 ரன்னும், ஜடேஜா 19 ரன்னும் எடுத்தனர்.

    அதிரடியாக ஆடிய பிரேவிஸ் 25 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 52 ரன்கள் குவித்து வெளியேறினார்.

    6வது விக்கெட்டுக்கு ஷிவம் துபேவுடன் எம்.எஸ்.தோனி இணைந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.

    இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது சிஎஸ்கே அணியின் 3வது வெற்றி ஆகும். கொல்கத்தாவுக்கு கிடைத்த 6வது தோல்வி இதுவாகும்.

    • தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
    • பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த சமீர் குஹாவும் ஒருவர்.

    ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில் கடந்த மாதம் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். மிருகத்தனமான இந்த தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

    முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதனை தொடர்ந்து, பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 'நீதி வென்றது' என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

    மேலும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த சமீர் குஹாவும் ஒருவர்.

    இந்நிலையில் அவரது மனைவி சார்போரி குஹா இந்திய ராணுவத்தின் பதில் தாக்குதல் குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இது நடக்க வேண்டிய ஒன்றுதான். மொத்த பாகிஸ்தானுமே அழித்தொழிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற (பஹல்காம் தாக்குதல் போன்ற) சம்பவங்கள் மீண்டும் நடக்கத்தான் செய்யும் என்று தெரிவித்தார்.

    • திகாவில் நாங்கள் ஜெகநாதர் கோவில் கட்டியதற்கு அவர்கள் ஏன் இவ்வளவு கோபப்படுகிறார்கள்?.
    • மேற்கு வங்காளத்தில் ஜெகநாதரை வழிபடுவது குற்றமா?.

    ஒடிசா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஜெகநாதர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. 12ஆம் நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டதாகும். இந்த கோவில் தேரோட்டம் உலகப் புகழ் பெற்றது. பூரி ஜெகநாதர் கோவிலைப் போன்று, மேற்கு வங்கத்தில் உள்ள திகா என்ற இடத்தில் ஜெகநாதர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் சிலை பிரதிஷ்டை கடந்த 30ஆம் தேதி நடைபெற்றது.

    இந்த விழாவில் பூரி ஜெகநாதர் கோவிலைச் சேர்ந்த பல பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையே ஸ்ரீகெஜநாதர் கோவில் நிர்வாகம், மூத்த பணியாளரிடம் பூரி ஜெகநாதர் கோவில் புனித வேப்பமரத்தின் உபரி பாகங்கள் திகா கோவில் சிலை செய்வதற்கான பயன்படுத்தப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளது.

    இந்த நிலையில், ஏற்கனவே ஒடிசாவில் வேலைபார்த்து வரும் பெங்காளி பேசும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக தற்போது பூரி ஜெகநாதர் கோவில் புனித வேப்ப மரக்கட்டையை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டுகின்றனர் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    நாங்கள் ஏன் திருட்டு வேப்ப மரக்கட்டையை பயன்படுத்த வேண்டும்? வேப்ப மரக்கட்டைக்கான வளங்களை நாங்கள் பெற்றுள்ளோம். இந்த குற்றச்சாட்டுக்கள் முற்றிலம் ஆதாரமற்றவை. ஏற்றுக்கொள்ள முடியாதது.

    திகாவில் நாங்கள் ஜெகநாதர் கோவில் கட்டியதற்கு அவர்கள் ஏன் இவ்வளவு கோபப்படுகிறார்கள்?. மேற்கு வங்காளத்தில் ஜெகநாதரை வழிபடுவது குற்றமா?.

    ஒடிசாவிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மேற்கு வங்கத்தில் அமைதியாக வேலை செய்வது போல, வங்காளத்தைச் சேர்ந்தவர்களும் ஒடிசாவில் வேலை செய்கிறார்கள். பெங்காளி மொழி பேசுவதனால் மட்டுமே தொந்தரவுக்கு உள்ளாகுவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    மேற்கு வங்க டிஜிபி, ஒடிசா டிஜிபி-யிடம் இது தொடர்பாக பேசுவார். எங்களுடைய மக்கள் தாக்குப்படுவதை நாங்கள் பொறுத்துக் கொள்ளமாட்டோம்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் அதிகபட்சமாக 95 ரன் எடுத்தார்.

    கொல்கத்தா:

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை 54 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

    கொல்கத்தாவில் நேற்று நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தது.

    அடுத்து ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 95 ரன் எடுத்தார்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் ராஜஸ்தான் பேட்டிங் செய்தபோது ஆட்டத்தின் 13-வது ஓவரை மொயீன் அலி வீசினார். அந்த ஓவரின் 2வது பந்தில் இருந்து ஓவரை முழுமையாக எதிர்கொண்ட ரியான் பராக் தொடர்ந்து 5 சிக்சர்களை அடித்து அமர்க்களம் செய்தார். இதன்மூலம் அவர் சாதனை பட்டியல் ஒன்றிலும் இடம் பிடித்துள்ளார். அதாவது, ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரியான் பராக் இணைந்துள்ளார்.

    ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில், ராகுல் தெவாட்டியா, ரவீந்திர ஜடேஜா, ரிங்கு சிங் ஆகியோரும் அடங்குவர்.

    • தீ விபத்தில் ஏராளமானோர் சிக்கிக்கொண்ட நிலையில் தீக்காயங்களுடன் பலர் மீட்கப்பட்டுள்ளனர்.
    • தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு விட்டதையடுத்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

    கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் உள்ள ரிதுராஜ் ஓட்டலில் நேற்று இரவு 8.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.

    தீ விபத்தில் ஏராளமானோர் சிக்கிக்கொண்ட நிலையில் தீக்காயங்களுடன் பலர் மீட்கப்பட்டுள்ளனர். தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு விட்டதையடுத்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ் குமார் வர்மா கூறுகையில, இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

    மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்காக ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    • டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 201 ரன்கள் குவித்தது.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 44வது லீக் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

    பிரியன்ஷு ஆர்யா 69 ரன்னும், பிரப்சிம்ரன் சிங் 83 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    ×