என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
    • இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக உள்ளன.

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், கடற்கொள்ளையர்கள் அச்சுறுத்துவதும் தொடர்கதையாகவே உள்ளது.

    தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறது.

    இருப்பினும், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதுமாக உள்ளது.

    இந்த விவகாரத்தில், மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு மிக மிக கடுமையான அபராதத் தொகை விதிப்பது, 6 மாதம் முதல் இரண்டரை ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பது, பறிமுதல் செய்யப்படும் படகுகளை நாட்டுடைமையாக்கிவிடுவது என்கிற அட்டூழியங்களில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படை மொட்டை அடித்து அனுப்பியது. இதற்கு மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

    சமீப காலமாக தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 

    இதற்கிடையே, தமிழக மீனவர்கள் கைது மற்றும் அவர்களின் படகுகள் நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி 2014-ல் 787 பேர், 2015-ல் 454 பேர், 2016-ல் 290, 2017-ல் 453, 2018-ல் 148, 2019-ல் 203, 2020-ல் 59, 2021-ல் 159, 2022-ல் 237, 2023-ல் 230, 2024 ஜூலை வரை 268 பேர் என இதுவரை 3,288 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது தெரியவந்துள்ளது.

    நடப்பாண்டில் மட்டும் இதுவரை இலங்கை கடற்படையினர் மொத்தம் 554 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளதாகவும், 72 மீன்பிடி படகுககள் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் மீனவர்களில் பலர் தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இலங்கை அதிபர் அனுராகுமார திசநாயகா தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்தார். அப்போது, பிரதமர் மோடியை இலங்கை அதிபர் திசநாயகா சந்தித்துப் பேசினார். 

    பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது மீனவர் பிரச்சனையில் சுமூக தீர்வு காண வேண்டும் என்று இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க வலியுறுத்தினார். பிறகு, " மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்து பேசியதாக கூறிய பிரதமர் மோடி, இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று இருவரும் ஒப்புக்கொண்டதாகவும், தமிழர்களின் விருப்பங்களை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம்" என்றார்.

    இரு நாட்டு முக்கிய புள்ளிகளும் மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகும், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவம் தொடர்கிறது. ஆண்டாண்டு காலமாக தொடரும் இந்த விவகாரத்திற்கு அரசு நிரந்தர தீர்வு காணும் தேதி எப்போது என்று மீனவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    • ஒரு குற்றவாளி உள்ளூர் திமுக நிர்வாகிகளுடன் நெருக்கமாகி திமுக உறுப்பினராக மாறுகிறார்.
    • உள்ளூர் திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக காவல்துறை அவர் மீது ஏற்கனவே உள்ள வழக்குகளை விசாரிக்கவில்லை.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர் ஞானசேகரன் என்பது தெரியவந்துள்ளது. போலீசார் அவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் இது தெரியவந்துள்ளது.

    அவர் மீது பல்வேறு வழக்குகள் ஏற்கனவே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க. அண்ணாமலை, கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டனர். திமுக நிர்வாகி, தமிழக மக்கள் இதை எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்ள வேண்டும்?. மு.க. ஸ்டாலின் எப்போதாவது பொறுப்பேற்பாரா? என கேள்வி எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக நான்கு படங்களை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, பதிவிட்டுள்ளது பதிவில் கூறியிருப்பதாவது:-

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் மீண்டும்

    குற்றம் செய்த குற்றவாளி மற்றும் திமுக நிர்வாகி என்பது தெரிய வந்துள்ளது.

    கடந்த காலங்களில் இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கையிலிருந்து ஒரு தெளிவான முறை வெளிப்படுகிறது:

    1. ஒரு குற்றவாளி உள்ளூர் திமுக நிர்வாகிகளுடன் நெருக்கமாகி திமுக உறுப்பினராக மாறுகிறார்.

    2. அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் நசுக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் காவல் நிலையத்தின் கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்படாமல் இருப்பதன் மூலம் அவர் விடுவிக்கப்படுகிறார்.

    3. உள்ளூர் திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக காவல்துறை அவர் மீது ஏற்கனவே உள்ள வழக்குகளை விசாரிக்கவில்லை. இது அவருக்கு மேலும் குற்றங்களைச் செய்ய இடமளிக்கிறது.

    தமிழக மக்கள் இதை எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்ள வேண்டும்?

    மு.க. ஸ்டாலின் எப்போதாவது எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வாரா?

    இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

    • அரபுச் வார்த்தையான ஹபீபிக்கு தமிழில் 'என்அன்பே' என்று பொருளாகும்.
    • ஹபீபி படத்தை மீரா கதிரவன் இயக்கியுள்ளார்.

    தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கும் தமிழ் பேசக்கூடிய இஸ்லாமியர்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் 'ஹபீபி'. அரபுச் வார்த்தையான ஹபீபிக்கு தமிழில் 'என்அன்பே' என்று பொருளாகும்.

    இப்படத்தை அவள் பெயர் தமிழரசி, விழித்திரு ஆகிய படங்களை இயக்கிய மீரா கதிரவன் இயக்கியுள்ளார். இயக்குநர் கஸ்தூரிராஜா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஈஷா என்பவர் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாக 'ஜோ' படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா மனோஜ் நாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் 'ஹபீபி' திரைப்படத்தில், AI தொழில்நுட்பத்தில் நாகூர் ஹனிபா குரலில் பதிவு செய்யப்பட்டுள்ள பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது மு.க.ஸ்டாலின் அவர்களுடன் அமைச்சர் துரைமுருகன், எம்.பி. ஆ. ராசா ஆகியோர் உடன் இருந்தனர். இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
    • கொடூரக் குற்றத்தில் வேறு எவரேனும் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனப் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

    மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவர் மீது விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும் இக்கொடூரக் குற்றத்தில் வேறு எவரேனும் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும்.

    ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படும் நிர்பயா நிதியைப் பயன்படுத்தி, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இடங்களைக் கண்டறிந்து, அங்கு ஸ்மார்ட் கம்பங்கள் அமைத்தல், அவசர கால பட்டன்கள், சிசிடிவி கேமரா, தொலைபேசி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல், மாநகரப் பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பறை வசதிகள், பெண்கள் பாதுகாப்புக்கான அவசர காலத் தொலைபேசி மற்றும் கைப்பேசிச் செயலி வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி, கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    இவை அனைத்தையும் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இவை முழுமையாகச் செயல்படுகின்றனவா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    இவற்றைச் செய்வதில் எவ்விதச் சமரசத்திற்கும் உடன்படாமல் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். எவ்விதச் சூழலிலும் பெண்கள் மனவலிமையுடன் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வது தொடர்பாகப் போதிய சட்ட உதவி மற்றும் உளவியல் சார்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம்.

    இந்த விழிப்புணர்வை, பெண்களுக்கு அவர்கள் கல்வி பயிலும் காலக்கட்டத்திலேயே அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவரிடம் இருந்து பகீர் தகவல்கள் வெளிவந்துள்ளன.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவியின் புகார் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க நான்கு சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    போலீசார் நடத்தி வரும் விசாரணையில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவரிடம் இருந்து பகீர் தகவல்கள் வெளிவந்துள்ளன.

    இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்கலைக்கழகம் நாளை வழக்கம்போல் இயங்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தற்போது முதல் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. அதனால், நாளை அட்டவணைப்படி தேர்வு நடக்கும். விடுமுறை அல்ல என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    • கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை.
    • ஞானசேகரன் வேறு ஏதேனும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் விசாரணை.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவியின் புகார் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க நான்கு சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஞானசேகரன் நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், ஞானசேகரன் வேறு ஏதேனும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவ- மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23.12.2024ம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும் அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் AWPS- ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காவல் அதிகாரிகள் பல்கலைக்கழக உள் புகார் குழுவின் (ICC-POSH) ஒத்துழைப்புடன் விசாரணை/ செய்து வருகிறார்கள்.

    இதுதொடர்பாக குற்றவாளியை கைது செய்வதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. புலன்விசாரணையின் போது, அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    சத்தேக குற்றவாளியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் நடைப்பாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேறு ஏதாவது குற்ற செய்கையில் ஈடுபட்டிருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

    பெருநகர சென்னை காவல்துறை அதிகாரிகளும், பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசனை செய்து (Joint Security Review) மாணவ- மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கனிம சுரங்க விவகாரத்தில் ஏல நடைமுறை திட்டம் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என கடிதத்தில் குறிப்பிட்டேன்.
    • டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என அக்டோபரிலேயே மத்திய அரசுக்கு கடிதம்.

    டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு மீது குற்றஞ்சாட்டிய நிலையில் அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

    துரைமுருகன் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    * கனிம சுரங்க விவகாரத்தில் ஏல நடைமுறை திட்டம் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என கடிதத்தில் குறிப்பிட்டேன்.

    * டஸ்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என அக்டோபரிலேயே மத்திய அரசுக்கு கடிதம்.

    * அரிட்டாப்பட்டி உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரிய தளம் என்பதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

    * அமைச்சகத்தால் ஏலம் மட்டுமே விட முடியும், குத்தகையை மாநில அரசுதான் வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

    * மாநில அரசின் ஆட்சேபனையை மீறி மத்திய அரசு ஏலம் மேற்கொண்ட விவகாரத்தை முதல்வர் பிரதமரிடம் கொண்டு சென்றார்.

    * பிரதமரிடம் விவகாரம் கொண்டு செல்லப்பட்டதால் அரிட்டாப்பட்டியில் சுரங்கம் அமைக்கும் முடிவை அமைச்சகம் மறுஆய்வு செய்ய முடிவு.

    * மறுஆய்வு செய்ய முடிவு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    * ஆயிரக்கணக்கான மக்களின் நலன், சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்துஸ்தான் நிறுவனத்திற்கு வழங்கிய சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

    • திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.

    சென்னை அண்ணா பலகலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கிண்டி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக் கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

    தனிப்பட்ட ஒரு மாணவி பாதிக்கப்பட்டுள்ள இச்சம்பவத்தை அரசியல் ஆக்க விரும்புகிறவர்கள் கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அன்றைய ஆட்சியாளர்களின் அழுத்தத்தால் காவல்துறையில் புகார் அளிக்கக் கூட பாதிக்கப்பட்டவர்கள் பயந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எங்களின் கவலை அதிமுக பலவீனப்பட்டால் அந்த இடத்தில் பாஜக வந்து அமர்ந்துவிடும் என்பது தான்.
    • திமுக தேர்தல் கட்சி, ஆண்ட கட்சி, ஆளுகின்ற ஆட்சி அதை விமர்சிக்கலாம், விமர்சிக்காமல் இருக்க முடியாது.

    சென்னையில் நடைபெற்ற 'என் பெயர் அம்பேத்கர்' என்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்துக்கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திராவிட கட்சிகளுடன் முரண்பாடு, மாறுபட்ட கருத்துக்கள், விமர்சனங்கள் எங்களுக்கும் உண்டு.

    ஆனால், திராவிட கட்சிகளை பலவீனப்படுத்திவிட்டு சனாதன கட்சிகள் உள்ளே வர அனுமதிக்க முடியாது.

    அதிமுக பாஜகவை விட்டு வெளியே வந்தால் தான் எங்களை தற்காத்துக் கொள்ள முடியும் என ஏன் சொல்கிறோம் என புரியாமல் அவதூறு பரப்புகிறார்கள்.

    எங்களின் கவலை அதிமுக பலவீனப்பட்டால் அந்த இடத்தில் பாஜக வந்து அமர்ந்துவிடும் என்பது தான்.

    திமுக தேர்தல் கட்சி, ஆண்ட கட்சி, ஆளுகின்ற ஆட்சி அதை விமர்சிக்கலாம், விமர்சிக்காமல் இருக்க முடியாது.

    திமுகவை விமர்சிப்பது என்ற போர்வையில் ஒட்டுமொத்த திராவிட அரசியல் சித்தாந்தத்தையே விமர்சிப்பது ஆபத்தானது.

    எந்த பதவிக்கும் ஆசைப்படாமல், எதிர்பார்க்காமல் செயல்பட்டு வருகிறோம்.

    திமுகவுக்கு முட்டு கொடுக்கிறீர்களா என்று கேட்கிறார்கள், திமுக திராவிட அரசியலை பேசுகின்ற ஒரு அரசியல் கட்சி.

    திராவிட அரசியல் என்பது திமுக அரசியலோடு மட்டுமே சுருங்கி விடக் கூடியது அல்ல.

    திராவிட அரசியல் என்பது ஒரு நொடிய பாரம்பரியம் உள்ள ஆரிய எதிர்ப்பு அரசியல். அதனால்தான் என்ன பாதிப்பு, விமர்சனங்கள் வந்தாலும் திமுக கூட்டணியில் விசிக நீடிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • “இசைமுரசு” ஹனிபா அவர்கள் காலங்கள் கடந்து வாழ்வார்!
    • இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபா நூற்றாண்டு பிறந்தநாளை ஒட்டி அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அவரது பாடல் குறுந்தகட்டினையும் வெளியிட்டார்.

    திமுக தலைவiரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கழகத்தின் கம்பீரக் குரல் "இசைமுரசு" நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டில் அவரைப் போற்றுவோம்! எல்லோரும் கொண்டாடுவோம்!

    தலைவர் கலைஞரின் நண்பரும் - ஆருயிர்ச் சகோதரருமான "இசைமுரசு" ஹனிபா அவர்கள் காலங்கள் கடந்து வாழ்வார்! கலைஞர் நிறைந்திருக்கும் இடமெல்லாம் ஹனிபாவும் இருப்பார்! என்று தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலத்தில் இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபா நூற்றாண்டு பிறந்தநாளை ஒட்டி அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அவரது பாடல் குறுந்தகட்டினையும் வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் துரைமுருகன், ஆ.ராசா எம்.பி., அமைப்பு செயலாளர் ஆர் .எஸ். பாரதி,. டி.கே.எஸ் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, எஸ். ஆஸ்டின், தாயகம் கவி எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் சிற்றரசு, திரைப்பட இயக்குனர் கஸ்தூரிராஜா, யுகபாரதி, சுரேஷ் காமாட்சி, சி.எஸ். சாம், மீரா ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாளையே பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேற தயார்.
    • நான் 25 ஆண்டுகளாக பா.ம.க. தலைவர் பதவியில் இருந்தேன்.

    பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * நாளையே பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேற தயார்.

    * தி.மு.க.வுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவையும் வழங்குவதற்கு தயார்.

    * ஆதரவு அளித்தால் வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றுமா?

    * இப்போது உள்ள தடைகள் பா.ஜ.க. அணியிலிருந்து பா.ம.க. வெளியேறினால் உடனடியாக விலகி விடுமா?

    * நான் 25 ஆண்டுகளாக பா.ம.க. தலைவர் பதவியில் இருந்தேன்.

    * பா.ம.க.விலிருந்து கேள்வி எழுப்பினால் தி.மு.க.விலிருந்து வன்னியரை வைத்து பதில் சொல்வதை கலைஞரை தொடர்ந்து ஸ்டாலினும் செய்கிறார்.

    * பா.ம.க.வில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான்கு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்.
    • ஒருவரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருவதாக கமிஷனர் அலுவலகம் தகவல்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவியின் புகார் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க நான்கு சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

    காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். மாணவியின் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க பாதுகாப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதிவாளர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    புகழ்வாய்ந்த அண்ணா பல்கலைக்கழத்தின் வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புவதாக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    ×