என் மலர்
ராஜஸ்தான்
- மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பின்பு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு முதன்முறையாக தடை விதிக்கப்பட்டது.
- சில வருடங்களுக்கு பிறகு நன்னடத்தை பேரில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
1948 ஆம் ஆண்டு தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக முதல் முறையாக தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சர்தார் வல்லபாய் படேல் தடை விதித்தார்.
சில காலங்களுக்கு பிறகு நன்னடத்தை பேரில் அந்த தடை நீக்கப்பட்டது. பின்னர், 1966 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரவும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதித்தார்.
அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்வதற்கும் அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் 58 ஆண்டு காலமாக இருந்து வந்த தடையை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அண்மையில் நீக்கியது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்க, 1972ம் ஆண்டில் விதிக்கப்பட்ட தடையை, 52 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் மாநில பாஜக அரசு நீக்கியுள்ளது.
ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநில அரசுகள், அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைக்கும் கட்டுப்பாடுகளை ஏற்கனவே நீக்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரபல நகைக்கடைக்குள் நேற்று இரவு 7.30 மணிக்கு முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது.
- கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளர் ஜெய் சிங் உயிரிழந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நகை கடைக்குள் புகுந்து உரிமையாளரை சுட்டுக்கொன்று நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிவாண்டி பகுதியில் பிரபல நகைக்கடைக்குள் நேற்று இரவு 7.30 மணிக்கு முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது.
அப்போது, நகைக்கடையில் இருந்தவர்களை சரமாரியாக கொள்ளை கும்பல் தாக்கியது.
கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளர் ஜெய் சிங் உயிரிழந்துள்ளார். அவரது தம்பிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
நகைக்கடையில் இருந்த நகைகளை அள்ளிச்சென்ற மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.
வெறும் 4 நிமிடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
- சேதன் என்ற 24 வயது இளைஞர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.
- சிறுமிக்கு 18 வயதுக்கு பூர்த்தியான பின்பு அப்பெண்ணை சேதன் திருமணம் செய்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பூந்தி மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு சேதன் என்ற 24 வயது இளைஞர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.
சிறுமியை காணவில்லை அவரது அப்பா கொடுத்த பேரில் வழக்கு பதிந்த காவல்துறை ஒரு மாதத்திற்கு பிறகு சிறுமியை மீட்டு, சேதனை கைது செய்தது.
பின்னர் ஜாமினில் வெளியே வந்த சேதன் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியான பின்பு 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு பூந்தி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட சேதனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 80,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வாதாரத்திற்காக அவருக்கு 4 லட்சம் ரூபாயை குற்றவாளி கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
- ஹுமாயுனை சகோதரனாக பாவித்து உதவி கேட்டும் விதமாக அவருக்கு வண்ணக் கயிற்றினை அனுப்பி வைத்தார்.
- நான் சிறுமியாக இருந்தபோது கேட்டு வளர்ந்த அந்த கதையை நான் கூறினேன்
மாநிலங்களவை எம்.பியும் பத்ம பூஷன் வென்ற எழுத்தாளருமான சுதா மூர்த்தி இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி ஆவார். நேற்றைய தினம் நாடு முழுவதும் ரக்க்ஷா பந்தனுக்கு சுதா மூர்த்தி வெளியிட்ட வாழ்த்து செய்தி சர்ச்சையானது. அதில் ராணி கார்னாவதி ஆபத்தில் இருந்தபோது மன்னர் ஹுமாயுனுக்கு வண்ணக்கயிறு ஒன்றை அனுப்பி அவரை உதவிக்கு அழைத்தார். ரக்க்ஷா பந்தனின் பின்கதை இது என்று பேசியிருந்தார்.
16 ஆம் நூற்றாண்டில் தற்போதைய ராஜஸ்தானில் அமைந்துள்ள சித்தோர்கர் Chittorgarh பகுதி ராஜ்யத்தின் அரசர் ராணா சங்கா உயிரிழந்த பிறகு அவரது மனைவி கார்னாவதி ராஜ்யத்தின் ராணியானார். அப்போது குஜராத் சுல்தான் பகதூர் ஷா சித்தோர்கர் ராஜ்யத்தின் மீது படையெடுத்து வந்தார். இந்த தாக்குதலை சமாளிக்க ராணி கார்னாவதி டெல்லி சுல்தான் ஹுமாயுனின் உதவியை நாடினார். ஹுமாயுனை சகோதரனாக பாவித்து உதவி கேட்டும் விதமாக அவருக்கு வண்ணக் கயிற்றினை அனுப்பி வைத்தார். [இந்து-முஸ்லீம்] சகோதரத்துவத்தை உணர்த்தும் இந்த நிகழ்வே ரக்க்ஷா பந்தன் கொண்டாடப்பட காரணம் என்ற பின்கதை ஒன்று உண்டு. இதை மையப்படுத்தியே சுதா மூர்த்தி தனது வாழ்த்து செய்தியில் பேசியிருந்தார்.
ஆனால் ரக்க்ஷா பந்தன் பழம்பெரும் பண்டிகை எனவும், ஒரு பொய்யான கதையோடு அதை தொடர்புப்படுத்துகிறார் எனவும் இணையத்தில் அவருக்கு எதிராக சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுதா மூர்த்தி விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் சொன்ன கதை ரக்க்ஷா பந்தன் கொண்டப்படுவற்கான காரணமாக கூறப்படும் பல்வேறு கதைகளில் ஒரு கிளைக் கதை. நான் சிறுமியாக இருந்தபோது கேட்டு வளர்ந்த அந்த கதையை நான் கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.
- இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரிடமும் மொபைல் போன் இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்தீர்களா?
- இன்று மொபைல் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் திறன் உள்ளது. ஏனென்றால் மொபைல் தேவையாகிவிட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசும்போது கூறியதாவது:-
உடல் உறுப்பு தானம் உயரும்போது, நம் நாட்டில் திறமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மருத்துவ சகோதரத்துவம் உயரும், நிபுணத்துவம் பெறும். மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு மக்கள் செல்வதை நாம் அறிவோம். அது நடக்கக்கூடாது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரிடமும் மொபைல் போன் இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்தீர்களா?. இன்று கிராமத்தினரிடம் மொபைல் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் திறன் உள்ளது. ஏனென்றால் மொபைல் தேவையாகிவிட்டது. அதே வழியில் உடல் உறுப்பு தானம் சமுதாயத்தின் தேவை.
இவ்வாறு ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
- வாகனங்களைப் போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்து ஒருவர் மீது ஒருவர் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
- மாணவர்கள் பள்ளிகளுக்கு கூர்மையான பொருட்களை கொண்டு செல்ல தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
விபரீதத்தில் முடித்த லன்ச் பீரியட் சண்டை
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவனை சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவத்தால் அங்கு கலவரம் ஏற்பட்டுள்ளது. பள்ளியில் உணவு இடைவேளையின்போது இரு மாணவர்களும் சண்டையிட்டுக் கொண்டதாகவும், அப்போது ஒரு மாணவன் மற்றொரு மாணவனின் தொடையில் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாணவனைப் பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மதக் கலவரமாக மாறும் அபாயம்
கத்தியால் குத்திய மாணவன் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளது. பள்ளி அமைந்துள்ள மதுபன் பகுதியில் உள்ள வாகனங்களைப் போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
144 தடை
தாக்கப்பட்ட சிறுவன் ஐசியுவில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் உதய்ப்பூர் பகுதியில் இந்து அமைப்பினர் மற்றும் இஸ்லாமிய தரப்புக்கு இடையில் வெடித்துள்ள மோதல் மதக் கலவரமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உதய்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வதந்திகள் பரவாமல் இருக்க இணையசேவை துண்டிக்கப்பட்டது. கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.
பள்ளிகளில் கூர்மையான பொருட்கள்
இதற்கிடையே ராஜஸ்தானில் மாணவர்கள் பள்ளிகளுக்கு கூர்மையான பொருட்களை கொண்டு செல்ல தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆசிரியர்கள் தினமும் மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனை செய்ய வேண்டும் எனவும், யாராவது கூர்மையான பொருட்களை கொண்டு வந்திருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல்டோசர் நடவடிக்கை
கத்தியால் குத்திய மாணவனையும், அவனது தந்தையையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவனின் குடும்பம் குடியிருந்த வீட்டை மாவட்ட நிர்வாகம் ஜேசிபி இயந்திரங்களால் இடித்து தரைமட்டமாக்கி உள்ளது. அரசுக்கு சொந்தமாக இடத்தில் வீடு கட்டப்பட்டுள்ளதால் முறையாக நோட்டீஸ் கொடுத்து விதிகளின்படி வீடு இடிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் கலவரங்கள் ஓயாத நிலையில் மாணவனின் வீட்டை இடித்த சம்பவம் சூழலை மேலும் மோசமாக்குவதாக அமைத்துள்ளது.
- அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவனை சக மாணவன் கத்தியால் குத்தினான்
- இரு தரப்புக்கு இடையில் வெடித்துள்ள மோதல் மதக் கலவரமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவனை சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் உணவு இடைவேளையின்போது இரு மாணவர்களும் சண்டையிட்டுக் கொண்டதாகவும், அப்போது ஒரு மாணவன் மற்றொரு மாணவனின் தொடையில் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த மாணவனைப் பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தின் முன்பு திரண்டனர். கத்தியால் குத்திய மாணவனையும், அவனது தந்தையையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்தியால் குத்திய மாணவன் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளது. பள்ளி அமைந்துள்ள மதுபன் பகுதியில் உள்ளவாகனங்களை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி வருகின்றனர்.
தாக்கப்பட்ட சிறுவன் ஐசியுவில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் உதய்ப்பூர் பகுதியில் இந்து அமைப்பினர் மற்றும் இஸ்லாமிய தரப்புக்கு இடையில் வெடித்துள்ள மோதல் மதக் கலவரமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உதய்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வதந்திகள் பரவாமல் இருக்க இணையசேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
- சமூக வலைத்தளம் மூலம் பாகிஸ்தான் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
- பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்யவதற்கு முன் மனைவிக்கு போன் மூலம் முத்தலாக் கொடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சுருவை சேர்ந்தவர் ரெஹ்மான் (வயது 35). இவரது மனவைி ஃபரிதா பானோ (வயது 29). ரெஹ்மான் வேலைக்காக குவைத் சென்றிருந்தார்.
குவைத்தில் வேலைபார்த்துக் கொண்டிக்கும்போது மேவிஷ் என்ற பாகிஸ்தான் பெண்மணியுடன் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். மனைவிக்கு போன் செய்து அதன் மூலம் மூன்று முறை தலாக் கூறி மனைவிக்கு விவாகரத்து வழங்கியுள்ளார். அதன்பின் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
பாகிஸ்தான் பெண் கடந்த மாதம் சுருவில் உள்ள ரெஹ்மான் வீட்டிற்கு வந்துள்ளார். சுற்றுலா விசாவில் வந்த அவர் ரெஹ்மான் வீட்டிலேயே தங்கியுள்ளார்.
ரெஹ்மானின் மனைவியின் ஃபரிதா பானோ, கணவர் வீட்டிற்கு சென்றபோது அங்கு மேவிஷ் இருந்ததை பார்த்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஃபரிதா பானோ காவல் நிலையம் சென்று தனது கணவர் போன் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து எனத் தெரிவித்துள்ளார். மேலும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார் என புகார் அளித்துள்ளார்.
புகார் அடிப்படையில் போலீசார் வழக்கப்பதிவு செய்தனர். இந்த நிலையில் குவைத்தில் இருந்து நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ரெஹ்மான் ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்தபோது போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தியபின் கைது செய்துள்ளனர். ரெஹ்மான்- ஃபரிதா பானோ ஆகியோருக்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
- இந்த சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்துள்ளது.
- யாரும் இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கவில்லை.
ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் தனது மனைவியின் கால்களை கட்டி ஒரு மோட்டார் சைக்கிளில் கணவன் இழுத்து செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்துள்ளது. யாரும் இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கவில்லை. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தனது சகோதரியை பார்க்க வேண்டும் இழுத்து செல்லப்பட்ட பெண் தனது கணவனிடம் வற்புறுத்தியுள்ளார். அது கணவனுக்கு பிடிக்கவில்லை. கணவர் மறுத்தாலும் தனது சகோதரியை பார்க்க அவர் விரும்பியுள்ளார்.
இதனால் கோவமான கணவன், தனது மோட்டார் சைக்கிள் பின்புறத்தில் மனைவியின் கால்களை கட்டி இழுத்து சென்றுள்ளார். குடிப்பழக்கம் உள்ள கணவர் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியை அடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
- காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் ஒருவர், சொந்த வேலையாக ஜெய்ப்பூர் வந்துள்ளார்.
- அவரிடம் ராணுவத்தைக் குறித்துத் தரக்குறைவாகப் பேசியுள்ளனர்
ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரரை போலீசார் நிர்வாணாபடுத்தி அடித்துத் துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் ஒருவர், சொந்த வேலையாக ஜெய்ப்பூர் வந்துள்ளார். அவரை எந்த காரணமும் இன்றி சாஸ்திரி பாத் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்துள்ளனர்.
அங்கு வைத்து அவரது ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தி, அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். மேலும் அவரிடம் ராணுவத்தைக் குறித்துத் தரக்குறைவாகப் பேசியுள்ளனர். இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அம்மாநில தொழில் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு நேரில் சென்று அங்கிருந்த போலீசாரை அவர்களின் தரக்குறைவான செயலுக்காகக் கண்டித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ராணுவ வீரர் அடித்துத் துன்புறுத்தப்பட்டது மருத்துவ அறிக்கையில் உறுதியாகியுள்ளது, போலீசின் செயல் ஏற்றுக்கொள்ளமுடியாதது, சட்டத்தை மீறிய அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- காங்கிரசை சேர்ந்த மணி சங்கர் ஐயருக்கும், வங்காளதேசத்துடன் இந்தியாவை ஒப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பினார்
- அண்டை நாட்டில் நடப்பது நமது பாரத் - திலும் நடக்கும் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சி நடந்து வருகிறது.
வங்காளதேசத்தில் நடந்ததது இந்தியாவிலும் நடக்கலாம் என்று கருத்துக்கு ஜெகதீப் தன்கர் கண்டனம்
வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடங்கிய போராட்டம், ஷேக் ஹசீனா அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரானதாக மாறியது. இது ஆட்சிக் கவிழ்ப்புக்கு வழிவகுத்தது. மாளிகையைப் போராட்டக்காரர்கள் சூறையாடிய நிலையில் ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.
வங்காளதேச ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம், முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசை அமைத்துள்ளது. இந்நிலையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த புத்தக வெளியீடு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், இப்போது பார்ப்பதற்கு எல்லாம் சாதாரணமாக இருப்பது போல் உள்ளது. ஆனால் வங்காள தேசத்தில் தற்போது நடந்து வருவது இந்தியாவிலும் நடக்கலாம் என்று தெரிவித்தார்.

மேலும் காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் ஐயருக்கும், வங்காளதேசத்துடன் இந்தியாவை ஒப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவனந்தபுர எம் .பி சசி தரூர், வங்காள தேசத்தில் கடந்த ஜனவரியில் நடந்த தேர்தலில் வெளிப்படைத் தன்மை இல்லாததைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
தற்போது இந்த கருத்துக்கள் குறித்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற பவள விழாவில் பேசிய ஜககீத் தன்கர், ஜாக்கிரதையாக இருங்கள், அண்டை நாட்டில் நடப்பது நமது பாரத் - திலும் நடக்கும் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சி நடந்து வருகிறது.
இந்த நாட்டின் குடிமகனாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து கொண்டு இவ்வாறு பேச முடிகிறது என்று கேள்வியெழுப்பினார். மேலும், தேச விரோத சக்திகள் அரசியலமைப்பைப் பயன்படுத்தி நாசகர வேலைகளை நியாயப்படுத்தி வருகிறது என்று எச்சரித்துள்ளார்.
- 115 அடி உயரமான நீர்வீழ்ச்சிக்கு பைரவா என்ற இளைஞர் குளிக்க சென்றுள்ளார்.
- மீட்புப்படையினர் பைரவாவின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கனமழையால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் குளிக்க சென்ற 3 பேரை காணவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள மேனல் நீர்வீழ்ச்சிக்கு 26 வயதான பைரவா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.
கிட்டத்தட்ட 115 அடி உயரமான அந்த நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்த பாறையில் நின்று தனது நண்பர்களுடன் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது நிலை தடுமாறி பைரவா கீழே விழுந்துள்ளார்.
அங்கு கட்டப்பட்டிருந்த கயிற்றைப் பிடித்து அவர் தப்பிக்க முயன்றுள்ளார். அங்கிருந்த நண்பர்களும் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் கன மழையினால் நீரோட்டம் அதிகமாகி அந்த இளைஞன் இழுத்து செல்லப்பட்டு 115 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மீட்புப்படையினர் பைரவாவின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.






