என் மலர்tooltip icon

    ஒடிசா

    • மக்களிடம் பா.ஜனதா சொல்லும் பொய்களுக்கு ஒரு அளவு உண்டு.
    • நான் மிகவும் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். கடந்த சில மாதங்களாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்தேன்

    ஒடிசா மாநிலத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. பிரசாரத்தின் போது ஒடிசா மாநில முதல்வரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக்கின் உடல் நலம் குறித்து பா.ஜனதா தலைவர்கள் பேசினார்கள். பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பட்நாயக் அவருடைய வயது மற்றும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

    இந்த நிலையில் தான் ஆரோக்கியத்துடன் இருப்பதாக நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "மக்களிடம் பா.ஜனதா சொல்லும் பொய்களுக்கு ஒரு அளவு உண்டு. நான் மிகவும் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். கடந்த சில மாதங்களாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்தேன் என்பதை உங்களால் பார்க்க முடியும்" என்றார்.

    பா.ஜனதா கட்சி தலைவர்கள் பட்நாயக் தனது வீடியோ மெசேஜ்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார் என விமர்சனம் செய்கிறார்களே என்று கேட்டதற்கு, பா.ஜனதா அவர்களுடைய சொந்த புலனாய்வை பயன்படுத்துகிறது என பதில் அளித்தார்.

    நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக கருதப்படும் தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன் "முதல்வர் நவீன் பட்நாயக்கை அவதூறு செய்வதன் மூலம், பிஜு ஜனதா தளத்தின் வாக்கு வங்கியை உயர்த்த அவர்களால் உதவி செய்ய மட்டுமே முடியும். வாக்குகளுக்காக நீங்கள் சிறந்த தலைவர்களை இழிவுப்படுத்த முடியாது. வரலாறு அவர்களை மன்னிக்காது" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒடிசாவின் ஒவ்வொரு குடிமகன் முன்பும் சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும்.
    • ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்திருக்கிறார்.

    பிரதமர் மோடி, "நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்" என்று கூறியிருப்பது மீண்டும் விமர்சனமாகி உள்ளது.

    ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா, "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

    அவரது பேச்சுக்காக தேசிய ஊடகங்கள் மற்றும் ஒடிசாவின் ஒவ்வொரு குடிமகன் முன்பும் சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

    இதைதொடர்ந்து, பூரி ஜெகன்நாதர் பற்றி பேசிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பூரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா 3 நாட்கள் விரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.

    மேலும், "மோடி பூரி ஜெகன்நாதரின் பக்தர் என சொல்வதற்கு பதிலாக பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர்" என தவறுதலாக கூறிவிட்டதாக வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில், ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்திருக்கிறார்.

    அதில் பிரதமர் மோடி, "நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை.

    ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்.

    நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது கிடையாது. அது கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும்" என்றார்.

    "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று பாஜக வேட்பாளர் பேசிய கருத்து சர்சையை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி, "நான் மனிதப் பிறவியே அல்ல" என்று கூறியிருப்பது மீண்டும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒடிசாவின் பூரி நகரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உள்துறை மந்திரி பங்கேற்றார்.
    • தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா என கேள்வி எழுப்பினார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் பூரி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தத் தேர்தல் மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்குவதற்கான தேர்தல். இந்தத் தேர்தல் ஜெகந்நாதரின் பெருமையையும் சுயமரியாதையையும் மீண்டும் நிலைநாட்டுவதற்கான தேர்தல்.

    நாட்டிலேயே மிகவும் வளமான, கனிம வளம் நிறைந்த மாநிலமாக ஒடிசா இருப்பினும் மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். மக்களின் ஏழ்மையைப் போக்க வேண்டுமானால் பிரதமர் மோடிக்கு வாக்களித்து அவரை மீண்டும் பிரதமராக்க வேண்டும்.

    நவீன் பட்நாயக்குக்கு நீங்கள் 25 ஆண்டுகள் கொடுத்தீர்கள். 25 ஆண்டு கால அவரது ஆட்சியில் சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு என அனைத்தும் தடம் புரண்டுள்ளன. நவீன் பாபுவின் அரசு போலி அரசு.

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்குகிறார். நவீன் பாபு, அதன் மீது தனது ஸ்டிக்கரை ஒட்டி ஏழைகளுக்கு வழங்குகிறார்.

    தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி ஒடிசாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் 2 ஆண்டுகளில் ரூ.50,000 வழங்கப்படும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும். மீனவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும். 1.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்.

    ஒடிசா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க 75 இடங்களில் பா.ஜ.க.வை வெற்றிபெறச் செய்ய வேண்டும். ஒடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி அமைக்க முடியுமா? ஒடிசாவின் முதல் மந்திரியாக வரக்கூடியவர், ஒடியா மண்ணைச் சேர்ந்தவராகவும், ஒடியா மொழி பேசக் கூடியவராகவும் இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

    • பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி இன்று வழிபட்டார்.
    • ஒடிஷா பாஜக தலைவர் பேச்சுக்கு ஒடிஷா காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி இன்று வழிபட்டார்.

    கோயிலுக்குச் சென்ற புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "நான் பூரியில் உள்ள ஸ்ரீஜெகன்நாதரிடம் பிரார்த்தனை செய்தேன். அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும், மேலும் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அடைய வழிகாட்டட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று ஒடிஷா பாஜக தலைவர் சம்பித் பத்ரா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஒடிஷா பாஜக தலைவர் பேச்சுக்கு ஒடிஷா காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த பேச்சுக்காக தேசிய ஊடகங்கள் மற்றும் ஒடிசாவின் ஒவ்வொரு குடிமகன் முன்பும் சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    • 25 ஆண்டுகால பிஜு ஜனதா தள அரசு ஒடிசா மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.
    • ஜூன் 10-ந்தேதி ஒடிசாவில் முதன்முறையாக இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கப்படும்.

    புவனேஸ்வர்:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    பிரதமர் மோடி இன்று காலை பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் வழிபாடு நடத்தினார். அதை தொடர்ந்து அவர் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இரு புறத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக நின்று அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

    ரோடு ஷோவை முடித்த பிறகு தேன்கனலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    25 ஆண்டுகால பிஜு ஜனதா தள அரசு ஒடிசா மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. இன்று ஒட்டு மொத்த ஒடிசாவும் இதை சிந்திக்கிறது.

    ஒடிசா மாநிலம் இயற்கை வளங்கள் மிக்கதாக இருந்த போதிலும் அங்கு அதிக வறுமை இருப்பதை கண்டு நான் வேதனைப்படுகிறேன். பிஜு ஜனதா தளம் ஆட்சியில் ஒடிசாவில் கனிமங்கள், கலாச்சாரம் பாதுகாப்பாக இல்லை. இந்த ஆட்சியில் பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோவில் பாதுகாப்பற்றதாக இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளாக ஜெகநாதரின் கருவூலகத்தின் சாவிகள் காணவில்லை.

    ஒடிசா முதல்-மந்திரி அலுவலகம், வீடு போன்றவற்றை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

    ஒடிசாவில் பா.ஜ.க.வை தேர்ந்தெடுங்கள். மாநிலத்தின் மகன் அல்லது மகளை முதல்-மந்திரி ஆக்குவோம். ஜூன் 10-ந்தேதி ஒடிசாவில் முதன்முறையாக இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கப்படும். பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அழைக்க வந்துள்ளேன்.

    புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட கனிம நிதியில் இருந்து ஒடிசா ரூ.26,000 கோடி பெற்றது. அந்தப் பணத்தை சாலைகள், பள்ளிகள் மற்றும் குடிநீருக்காகச் செலவழித்து இருக்க வேண்டும். ஆனால் பிஜு ஜனதா தளம் அரசு அதை தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இந்த ஆட்சியில் சிறு தொழிலாளர்கள் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டனர்.

    இங்கு பா.ஜ.க. ஆட்சி அமைந்தால், சத்தீஸ்கரை போன்று, நெல் பயிருக்கு குவிண்டாலுக்கு 3,100 ரூபாயாக உயர்த்துவோம் என்பது மோடியின் உத்தரவாதம். இன்னும் 2 நாட்களில் நெற்பயிர்க்கான பணம் விவசாயிகளுக்கு வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    • நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து தங்கம் வென்றார்.
    • 3 ஆண்டில் முதன்முறையாக இந்திய மண்ணில் நடந்த போட்டியில் அவர் பதக்கம் வென்றார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

    3 ஆண்டுகளில் முதன்முறையாக இந்திய மண்ணில் நடந்த போட்டியில் அவர் பதக்கம் வென்றுள்ளார்.

    போட்டியின் தொடக்கத்தில் முன்னிலை பெற கடுமையாக போராடினார். 3 சுற்றுகளுக்கு பின் 2-வது இடம் பிடித்த அவர், 4-வது சுற்றில் 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து முன்னிலை பெற்றார். போட்டியில் மற்றவர்களைவிட தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில் இறுதிச்சுற்றில் அவர் விளையாடவில்லை.

    இந்தப் போட்டியில் டி.பி.மானு 82.06 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • பா.ஜனதா இந்த புத்தகத்தை (கையில் வைத்திருந்த அரசியலமைப்பு புத்தகத்தை பார்த்து) கிழிக்க விரும்புகிறது.
    • பா.ஜனதா வெற்றி பெற்றால் அவர்கள் இடஒதுக்கீட்டை நீக்கி விடுவார்கள்.

    காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று ஒடிசா மாநிலம் போலங்கீரில் நடைபெற்று தேர்தல் பிரசார பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா இந்த புத்தகத்தை (கையில் வைத்திருந்த அரசியலமைப்பு புத்தகத்தை பார்த்து) கிழிக்க விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் மற்றும் இந்திய மக்களாகிய நாம் அதை அனுமதிக்கமாட்டோம். பா.ஜனதா வெற்றி பெற்றால் அவர்கள் இடஒதுக்கீட்டை நீக்கி விடுவார்கள். பொது நிறுவனங்கள் தனியார் மயமாகும். நாட்டை 22 பணக்காரர்கள் இயக்குவார்கள். இதனால் மக்களுடைய அரசாங்கம் ஆட்சி அமைக்க வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் பிரச்சாரத்திற்காக பல முறை ஒடிசா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஆளும் பிஜேடி அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
    • அடுத்த 10 ஆண்டுகளில் கூட ஒடிசாவில் பாஜக வெற்றி பெற முடியாது.

    ஒடிசா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பிரதமருக்கு நினைவில் உள்ளதா என்று ஒடிசா முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் கேள்வி எழுப்பி உள்ளார்.

    நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளமும், பாஜகவும் இந்த முறை தனித்தனியாக போட்டியிடுவதால் இரு கட்சிகளுக்கு இடையே அதிகபட்ச மோதல் போக்கு நிலவுகிறது. இந்தக் கட்சிகள் உட்பட அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. தேர்தல் பிரச்சாரத்திற்காக பல முறை ஒடிசா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஆளும் பிஜேடி அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்

    இந்நிலையில் நேற்று ஒடிசாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், "ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பெயர்களையும், தலைநகரங்களையும் காகித குறிப்பு ஏதுமின்றி சொல்ல முடியுமா" என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு சவால் விடுத்தார்.

    நினைவுத்திறன் தொடர்பாக சவால் விடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடனடியாக தனது எக்ஸ் தள பதிவில் பதிலடி கொடுத்துள்ளார்.

    பிரதமர் மோடி அவர்களே, "தாங்கள் ஒடிசா மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவில் வைத்திருக்கிறீர்களா?" "ஜூன் 10ம் தேதி எதுவும் நடக்காது. அடுத்த 10 ஆண்டுகளில் கூட ஒடிசாவில் பாஜக வெற்றி பெற முடியாது. ஜகந்நாதரின் ஆசியுடனும், ஒடிசா மக்களின் அன்புடனும் பிஜேடி ஆட்சி அமைக்கும் என நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

    • எதிர்க்கட்சியாக இருப்பதற்குத் தேவையான இடங்களை காங்கிரஸ் பெற மாட்டார்கள் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்பதை காங்கிரசார் எழுதி வைத்து கொள்ளுங்கள்.
    • 26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வாஜ்பாய் அரசால் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனையானது, உலகம் முழுவதும் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது.

    புவனேஸ்வர்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு தற்போதுவரை மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

    பிரதமர் மோடி, பாரதிய ஜனதா தலைவர்கள், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என்று பிரதமர் மோடி தெரிவித்து வருகிறார்.

    ஆனால் பா.ஜனதா 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 50 தொகுதிகளில் கூட வெற்றிப்பெறாது என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

    பிரதமர் மோடி இன்று ஒடிசா மாநிலம் கந்தமாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    பாராளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை தாண்டும் என்று நாடு முடிவு செய்து விட்டது. எதிர்க்கட்சியாக இருப்பதற்குத் தேவையான இடங்களை காங்கிரஸ் பெற மாட்டார்கள் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்பதை காங்கிரசார் எழுதி வைத்து கொள்ளுங்கள்.

    காங்கிரஸ் 50 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறாது. காங்கிரஸ் மீண்டும் மீண்டும் தனது சொந்த நாட்டை பயமுறுத்த முயற்சிக்கிறது. பாகிஸ்தானிடம் மென்மையாக நடந்து கொள்கிறது. பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கிறது. கவனமாக இருங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகிறார்.

    அவர்கள் பாகிஸ்தானின் வெடிகுண்டு பற்றி பேசுகிறார்கள். ஆனால் பாகிஸ்தானின் நிலையை பார்த்தால் அதை எப்படி வைத்திருப்பது என்று தெரியாமல், தங்கள் வெடிகுண்டுகளை விற்க ஆட்களை தேடுகிறார்கள்.

    ஆனால் தரம் பற்றி மக்களுக்குத் தெரியும் என்பதால் யாரும் அவற்றை வாங்க விரும்பவில்லை. மும்பை தாக்குதலுக்கு காங்கிரஸ் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

    26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வாஜ்பாய் அரசால் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனையானது, உலகம் முழுவதும் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதன் மூலம் மக்களின் 500 ஆண்டுகால காத்திருப்புக்கு பா.ஜனதா முடிவு கட்டியது. ஒடிசாவில் முதன்முறையாக இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கப்படும். ஒடியா மொழி, கலாச்சாரம் தெரிந்த மண்ணின் மகனோ அல்லது மகளோ ஒடிசாவில் பா.ஜனதா அரசின் முதல்வராக வருவார்.

    ஒடிசா முதல்-மந்திரியாக இருக்கும் நவீன் பட் நாயக்குக்கு சவால் விட விரும்புகிறேன். ஒடிசா மாவட்டங்கள் மற்றும் அந்தந்த தலைநகரங்களை காகிதத்தில் பார்க்காமல் அவரை எழுத சொல்லுங்கள். மாநிலத்தின் மாவட்டங்களின் பெயரை முதல்-மந்திரி சொல்ல முடியாவிட்டால், உங்களது வலி அவருக்கு எப்படி தெரியும்?.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    கூட்ட மேடையில் பத்மஸ்ரீ விருது பெற்ற பூர்ணமாசி ஜானி என்ற மூதாட்டிக்கு சால்வை அணிவித்து கவுரவப்படுத்திய மோடி, அவரது பாதங்களை தொட்டு வணங்கினார்.


    • கிராமங்களில் கூட கூட்டு குடும்ப வாழ்க்கை என்பது அரிதாகி விட்டது.
    • ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

    புவனேசுவர்:

    இன்றைய காலகட்டத்தில் கிராமங்களில் கூட கூட்டு குடும்ப வாழ்க்கை என்பது அரிதாகி விட்டது. அனைவரும் மனைவி, குழந்தைகள் மட்டும் போதும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதால் தனி குடித்தனம் அதிகரித்து விட்டது.

    ஆனாலும் இன்னும் பழமைமாறாமல் ஒடிசாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வருவது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

    அம்மாநிலத்தில் உள்ள கோர்தா மாவட்டம் கயாபந்த் கிராமத்தை சேர்ந்தவர் ரத்னகர் ஸ்ரீசந்தன் (வயது 85) குடும்பத்தில் மூத்தவரான இவரது குடும்பத்தில் மொத்தம் 125 உறுப்பினர்கள் உள்ளனர்.

    கடந்த 4 தலைமுறைகளாக கூட்டு குடும்பமாக ஒன்றாக இருந்து வரும் இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். சொந்த கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள விவசாய தோட்டத்தில் நெல், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் முந்திரி, மாம்பழம், பலாப்பழம், கொய்யாப்பழம் போன்றவற்றை பயிரிட்டு உள்ளனர். இதன் மூலம் இந்த குடும்பத்தினருக்கு கணிச மான வருமானம் கிடைத்து வருகிறது.

    ஆனாலும் இந்த குடும்பத்தை சேர்ந்த இளைய தலைமுறையினர் விவசாயத்தில் ஆர்வம் கொண்டிருந்தாலும் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை தேடி நகரங்களுக்கு சென்று விட்டனர். இதனால் மற்ற குடும்ப உறுப்பினர்கள் விவசாயத்தை கவனித்து வருகின்றனர்.

    இவர்கள் வசிக்கும் வீடு அந்த கிராமத்திலேயே மிகப்பெரியது. இந்த வீட்டில் 36 படுக்கை அறைகள் உள்ளன. தினமும் விழாவுக்கு சமையல் செய்வது போல 16 கிலோ அரிசி மற்றும் 4 கிலோ பருப்பு வகைகளுடன் ஒன்றாக உணவு தயார் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.

    கூட்டு குடும்பம் என்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குடும்பத்தை சேர்ந்த சிலர் வெளி மாநிலங்களில் வேலை பார்த்து வந்தாலும் ஆண்டுக்கு இரு முறை எல்லோரும் சொந்த கிராமத்தில் ஒன்று கூடுகின்றனர்.

    மார்ச் மாதம் ஹோலி பண்டிகை மற்றும், அக்டோபர் மாதம் தசரா பண்டிகையை ஒன்றாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

    இந்த சமயங்களில் திருமணம் போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர்.

    குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஓட்டுரிமை உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் அனைவரும் ஒன்றாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். முன்னதாக அனைவரும் ஒன்று கூடி பேசி யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்கேற்ப ஓட்டு போட்டு வருகின்றனர்.

    2014-ம் ஆண்டு வரை இவர்கள் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்தனர். இந்த குடும்பத்தை சேர்ந்த திலீப் ஸ்ரீசந்தன் கோர்தா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1995 முதல் 2000-ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அதன்பிறகு 2009 மற்றும் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இவர் தோல்வி அடைந்தார்.

    இருந்தபோதிலும் தொடர்ந்து பொதுமக்களுக்கு சேவை செய்வதை குறிக்கோளாக கொண்டு இவர் செயல்பட்டு வருகிறார். மரம் நடுவதில் அதிக ஆர்வம் கொண்ட திலீப் அதில் தீவிர கவனமும் செலுத்தில் வருகிறார்.

    இருந்தபோதிலும் கயாபந்த் கிராமம் பல்வேறு பிரச்சினைகைள சந்தித்து வருவதாக இந்த குடும்பத்தினர் தெரிவித்தனர். வேலை வாய்ப்பு இன்மை, குடிநீர் பிரச்சினை, யானைகள் அச்சுறுத்தல் போன்றவற்றால் சிக்கி தவிக்கிறது. கோர்தா மாவட்டத்தில் அணை நீர் திட்டம் இன்னும் முழுமையாக முடியாததால் கோடை காலங்களில் பொதுமக்கள் குடிநீருக்காக கஷ்டப்பட்டு வருகின்றனர்.

    இந்த கால கட்டங்களில் 3 நாட்களுக்கு ஒரு முறை டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீசந்தன் குடும்பத்தை சேர்ந்த கோபால் என்பவர் தெரிவித்தார்.

    இவர்களுக்கு இருக்கும் மற்றொரு ஆசை தங்கள் கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்பது தான். எங்கள் குடும்ப உறுப்பினர்களை கணக்கில் கொண்டாவது சொந்த கிராமத்தில் ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த குடும்பத்தை சேர்ந்த மது சூதன் என்பவர் கூறும் போது நீங்கள் கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்திருந்தால் அதில் இருந்து வெளியே செல்ல விரும்ப மாட்டீர்கள், குடும்பம் ஒரு பெரிய ஆதரவான அமைப்பு. அன்பு, பாசம், ஒத்துழைப்பு,அனுசரித்து செல்லுதல் ஆகியவை நம்மை ஒற்றுமையாக வைத்து இருக்கின்றன.

    குடும்பத்தினரிடையே நிச்சயம் கருத்து வேறுபாடுகள், தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். இருந்த போதிலும் அவற்றை எளிதாக சமாளித்து விடலாம் என்று தெரிவித்தார்.

    • ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சிக்காலம் ஜூன் 4-ந்தேதியுடன் காலாவதியாகிவிடும்- பிரதமர் மோடி
    • நவீன் பட்நாயக் ஜூன் 9-ந்தேதி 6-வது முறையாக ஒடிசா மாநில முதல்வராக பதவி ஏற்பார்- வி.கே. பாண்டியன்

    ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்வராக இருந்து வருகிறார். ஒடிசாவில் பா.ஜனதாவும், பிஜு ஜனதா தளம் கட்சியும் இணைந்து போட்டியிடுவதாக இருந்தது. தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நிலவியதால் தனித்து போட்யிடுகின்றன.

    ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி இரண்டு முறை ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். பெர்ஹாம்பூர் மற்றும் நபரங்பூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும்போது, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சிக்காலம் ஜூன் 4-ந்தேதியுடன் காலாவதியாகிவிடும்" என்றார்.

    ஜூன் 4-ந்தேதி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அன்றைய தினம்தான் ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவும் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதை வைத்துதான் பிரதமர் மோடி அவ்வாறு கூறியிருந்தார்.

    இது தொடர்பாக நவீன் பட்நாயக்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் "பா.ஜனதா நீண்ட நாட்களாக பகல் கனவு காண்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே. பாண்டியனிடம், இந்த முறை ஒடிசாவில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் எனக் கூறுகிறதே? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு வி.கே. பாண்டியன் கூறுகையில் "நவீன் பட்நாயக் ஜூன் 9-ந்தேதி காலை 11.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள் 6-வது முறையாக ஒடிசா மாநில முதல்வராக பதவி ஏற்பார்" என்றார்.

    • மோடி, ஒடிசாவில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
    • முதல்-மந்திரியாக பதவி ஏற்கும் நிகழ்வுக்கு தற்போதே அழைப்பு விடுக்கிறேன்.

    பெர்காம்பூர்:

    ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலும் (21 தொகுதி), சட்டசபை தேர்தலும் (147 இடங்கள்) இரண்டு கட்டங்களாக வருகிற 13 மற்றும் ஜூன் 1-ந்தேதி நடக்கிறது.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசாவில் பிரசாரம் செய்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். பெர்காமில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    ஒடிசாவின் கடலோர பொருளாதாரத்தில் எங்கள் கவனம் உள்ளது. முதல் முறையாக மீன்வளத் துறை அமைச்சகத்தை உருவாக்கினோம். படகுகள் தயாரிக்க மானியம் வழங்கினோம். கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்கினோம். மீனவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கிேனாம்.

    ஒடிசாவில் இரண்டு மாற்றங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. ஒன்று நாட்டில் சக்தி வாய்ந்த அரசு அமைவதாகும். மற்றொன்று ஒடிசாவில் பா.ஜனதா ஆட்சி அமைவதற்கான மாற்றம்.

    ஜூன் 4-ந்தேதியுடன் ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாகி விடும். இங்கு முதல் முறையாக இரட்டை என்ஜின் அரசாங்கம் விரைவில் அமைய உள்ளது. இது உங்களின் உற்சாகத்தில் இருந்து தெரிகிறது.

    பிஜு ஜனதா தளம் அரசு காலாவதி யாகும் நாளில் பா.ஜனதாவின் முதல்-மந்திரி யார்? என்பது அறிவிக்கப்படும்.புவனேஸ்வரில் ஜூன் 10-ந்தேதி அவர் முதல்-மந்திரியாக பதவிஏற்கும் நிகழ்வுக்கு தற்போதே உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

    ஒடிசாவை பல ஆண்டுகளாக பிஜு ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது. இங்கு தண்ணீர், விவசாயம், நீண்ட கடற்பரப்பு, கனிம தாதுக்கள், வரலாறு, பாரம்பரியம் என அனைத்தும் உள்ளது. இருப்பினும் ஒடிசா மக்கள் ஏழைகளாக இருப்பது ஏன்?

    காங்கிரசும், பிஜு ஜனதா தளமும் கொள்ளையடித்தது தான் மக்களின் இந்த நிலைக்கு காரணம். பிஜு ஜனதா தளம் கட்சியில் சிறிய தலைவர்களும் பெரிய பங்களாக்களுக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர்.

    பிஜு ஜனதா தளம் அரசு ஆயுஷ்மான் பாரத் யோ ஜனா திட்டத்தை (மத்திய அரசின் பொது சுகாதார காப்பீடு திட்டம்) செயல்படுத் தாததால் ஒடிசா மாநிலம் பலன் அடையவில்லை.

    'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ் ஒடிசாவுக்கு மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் கோடி வழங்கியது. ஆனால் பிஜு ஜனதா தள அரசு பணத்தை சரியாக செலவழிக்கவில்லை.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    ×