பாஜக-வுக்கு ஆதரவு என்ற பேச்சே கிடையாது: நவீன் பட்நாயக் கட்சி எம்.பி.

இந்த முறை பிஜு ஜனதா தளம் எம்.பி.க்கள் பிரச்சனையை மட்டுமே பேசப்போவதில்லை. பாஜக தலைமையிலான அரசு ஒடிசா மாநில நலத்தை புறக்கணித்தால், போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.
பாஜக-வுக்கு ஆதரவு என்ற பேச்சே கிடையாது: நவீன் பட்நாயக் கட்சி எம்.பி.
Published on

மக்களவை தேர்தலில் ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. சட்டசபை தேர்தலிலும் தோல்வியை சந்தித்தது. அந்த கட்சிக்கு 9 மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளனர்.

இந்திய நாடாளுமன்றம் மக்களவை இன்று கூடியது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பதவி ஏற்று வருகின்றனர். ஜூன் 27-ந்தேதி மாநிலங்களவை கூட இருக்கிறது. இந்த நிலையில் நவீன் பட்நாயக் தனது கட்சி மாநிலங்களவை எம்.பி.க்களை சந்தித்து ஆலோசனை வழங்கினார். அப்போது மாநில நலன் குறித்து மாநிலங்களவையில் கடுமையான வகையில் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அக்கட்சிக்கான மாநிலங்களவை எம்.பி. தலைவர் சஸ்மித் பத்ரா கூறியதாவது:-

இந்த முறை பிஜு ஜனதா தளம் எம்.பி.க்கள் பிரச்சனையை மட்டுமே பேசப்போவதில்லை. பாஜக தலைமையிலான அரசு ஒடிசா மாநில நலத்தை புறக்கணித்தால், போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகளாக நிலக்கடி சுரங்க ராயல்டி ஒடிசாவுக்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அந்த ராயல்டி கிடைக்கும் வகையில் கோரிக்கை வைப்போம். இதன் காரணமாக எங்கள் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமையான பங்கு குறைக்கப்பட்டு மக்கள் இழப்பை சந்தித்து உள்ளனர்.

பாஜகவுக்கு ஆதரவு கிடையாது. நாங்கள் எதிர்க்கட்சிகள் மட்டுமே ஒடிசா மாநிலத்திற்கான நலனை காப்பாற்றுவதற்கான எந்த எல்லை வரையும் செல்வோம். பாஜகவுக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. ஒடிசாவின் நலம் புறக்கணிக்கப்பட்டால் கடுமையான வகையில் எதிர்க்க வேண்டும் என நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாஜகவும் பிஜு ஜனதா தளமும் தனித்தனியாக போட்டியிட்டு வந்தாலும் பாஜகவுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்தது. தற்போது பாஜக கடுமையாக விமர்சனம் செய்து ஒடிசாவில் ஆட்சியை பிடித்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com