என் மலர்
குஜராத்
- 569 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தோல்வியடைந்தது.
- ஒப்புதல் இல்லாமல் சுமார் 500 நோயாளிகளிடம் சுமார் 50 நிறுவனங்களின் மருந்துகளைப் பயன்படுத்தி சோதனைகளை நடத்தினர்.
குஜராத்தின் அகமதாபாத்தில் மாநில அரசு நடத்தும் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (IKDRC) ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 2352 நோயாளிகளில் 741 பேர் இறந்ததாக CAG அறிக்கை வெளியாகி உள்ளது. 1999 மற்றும் 2017 க்கு இடையில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இவை சட்டவிரோதமாக நிகழ்ந்த பரிசோதனைகள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
91 சதவீத வழக்குகளில் சிகிச்சை தோல்வியடைந்ததாக CAG அறிக்கை கூறுகிறது. சோதனைகளில் பாதிக்கப்பட்டவர்களில் 569 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததாக அறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பார்த்திவ்சிங் கட்வாடியா பேசுகையில், அங்கீகரிக்கப்படாத பரிசோதனைகளை மேற்கொண்டவர்கள் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.
அகமதாபாத் கார்ப்பரேஷன் மருத்துவமனையில் அங்கீகரிக்கப்படாத மருந்து பரிசோதனைகள் மூலம் மருத்துவர்கள் பணத்தை மோசடி செய்த சம்பவம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் சிறுநீரக நோயாளிகளின் இறப்புகள் வெளிச்சத்திற்கு தற்போது வந்துள்ளன.
இதற்கிடையே அரசுக்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதியின்றி நடத்தப்படும் ஸ்டெம் செல் சிகிச்சை சோதனைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு வெள்ளிக்கிழமை மாநில சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநருக்கு உத்தரவிட்டது.
கூடுதலாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் தலைவர் (DCGI) வெள்ளிக்கிழமை, அகமதாபாத் மாநகராட்சிக்குச் சொந்தமான VS மருத்துவமனை மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்குத் தடை விதித்தார். அவர்கள் 2021 மற்றும் 2025 க்கு இடையில் நெறிமுறைக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் சுமார் 500 நோயாளிகளிடம் சுமார் 50 நிறுவனங்களின் மருந்துகளைப் பயன்படுத்தி சோதனைகளை நடத்தினர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.
- மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் அதைச் சுற்றியிருந்த பகுதியில் இருந்த 19 பேரும் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானம் முற்றிலுமாக எரிந்த நிலையில், கல்லூரி விடுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் தீப்பிடித்து எரிந்தது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விடுதி மற்றும் அருகில் உள்ளவர்கள் 29 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மொத்தம் 270 உயிரிழந்ததாக கூறப்பட்டது.
உயிரிழந்தவர்கள் தீயில் உரிந்து கரிக்கட்டையாகியதால் உடலை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொண்டு அதன்மூலம் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வந்தது.
கடந்த 23ஆம் தேதி வரை 259 உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொண்டு, உறவினர்களிடம் வழங்கப்பட்டு வந்தது. ஒருவருடைய உடல் மட்டும் உறவினர்களின் டிஎன்ஏ பரிசோதனையுடன் ஒத்துப்போகாமல் இருந்தது.
இந்த நிலையில் இன்று அந்த உடலும் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டதாக அகமதாபாத் பொது மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக 270 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மொத்த உயிரிழப்பு 260 ஆகும் என அதிகாரிப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 260 பேர்களில் 181 இந்திய பயணிகள் ஆவார்கள். 19 பேர் விமானத்தில் பயணம் செய்யாதவர்கள் அடங்குவார்கள். 7 பேர் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்தவர்கள். 52 பேர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர்.
- பின் தன்னைத்தானே அவர் சுத்தம் செய்து கொள்வதை வீடியோ காட்டுகிறது.
- நீதிமன்றத்தில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்து தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
குஜராத் உயர்நீதிமன்ற வீடியோ கான்பரன்ஸ் விசாரணையில் கழிவறையில் இருந்தபடி பங்கேற்ற நபரின் வீடியோ விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.
வைரலாகி வரும் வீடியோவில், அந்த நபர் காதில் புளூடூத் ஹெட்போன்களை அணிந்துகொண்டு கழிப்பறைக்கு சென்று வசதியாக தனது தொலைபேசி கேமராவை வைட் ஆங்கலில் தெரியும்படி வைக்கிறார்.
பின் தன்னைத்தானே அவர் சுத்தம் செய்து கொள்வதை வீடியோ காட்டுகிறது. இது அனைவரையும் முகம் சுழிக்க வைப்பதாக இருந்தது.
கடந்த ஜூன் 20 ஆம் தேதி தன் மீதான எப்ஐஆர் ஒன்றை ரத்து செய்யக்கோரி அந்த நபர் அளித்த மனு மீது நீதிபதி நிர்சார் தேசாய் அமர்வில் நடந்த விசாரணையின்போது இந்த சம்பவம் நடந்ததாக தெரிய வருகிறது.
இதுதொடர்பாக கமென்ட் செய்து வரும் நெட்டிசன்கள், நீதிமன்ற அவமதிப்பு செய்த அவரை நீதிமன்றத்தில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்து தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
- 2022 தேர்தலில் 5 எம்எல்ஏ வெற்றி பெற்றனர்.
- விசவதார் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது.
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற விசவதார் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ.-வான உமேஷ் மக்வானா, தனது கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜினாமா செய்துள்ள நிலையில், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
உமேஷ் மக்வானா காந்தி நகரில் உள்ள போடாட் தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் கோலி (Koli) என்ற இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகவும், குஜராத் சட்டமன்ற ஆம் ஆத்மி கட்சியின் கொறடாகவும் இருந்தார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரச்சினைகளை எழுப்ப ஆம் ஆத்மி தோல்வியடைந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார். மற்ற ஆம் ஆத்மி தொண்டர் போல் தொடர்ந்து பணியாற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் 5 பேர் வெற்றி பெற்றனர். அவர்களில் ஒருவர் உமேஷ் மக்வானா ஆவார்.
இடைத்தேர்தலில் கோபால் இட்டாலியா வெற்றி பெற்ற 3 நாட்களுக்குள், உமேஷ் மக்வானா திடீரென கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளார்.
- 60 இங்கிலாந்து, போர்ச்சுகல், கனடா நாட்டவர்கள் அடங்குவர்.
- 240 பேர் விமானத்தில் பயணித்தவர்கள், 13 பேர் விமான விபத்தால் தரையில் பலியான பயணிகள் அல்லாதவர்கள் ஆவர்.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சசிறிது நிமிடத்திலேயே அருகிலிருந்த மருத்துவ மாணவர்கள் விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் விபத்து நடந்து பதினொரு நாட்களுக்குப் பிறகு, 259 பேரின் உடல்கள் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 199 இந்தியர்கள், 60 இங்கிலாந்து, போர்ச்சுகல், கனடா நாட்டவர்கள் அடங்குவர். 256 உடல்கள் ஏற்கனவே அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மூன்று பிரிட்டிஷ் நாட்டவர்களின் உடல்களை விமானம் மூலம் அனுப்பும் பணி நடைபெற்று வருவதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்திருந்ததாலும், சேதமடைந்ததாலும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த அதிகாரிகள் டிஎன்ஏ சோதனைகள் நடத்தப்பட்டது.
259 உடல்களில் , 253 உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலமும், மீதமுள்ள ஆறு பேரின் உடல் அடையாளம் முக அம்சங்கள் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிஎன்ஏ சோதனைகள் மூலம் அடையாளம் காணப்பட்ட 253 பேரில், 240 பேர் விமானத்தில் பயணித்தவர்கள், 13 பேர் விமான விபத்தால் தரையில் பலியான பயணிகள் அல்லாதவர்கள் ஆவர்.
இதுவரை விபத்தில் உயிரிழந்த 19 பயணிகள் அல்லாதவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இவர்களில் 13 பேர் டிஎன்ஏ சோதனை மூலமாகவும், ஆறு பேர் முக அடையாளம் மூலமாகவும் அடையாளம் காணப்பட்டனர்.
- குஜராத் இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ளது.
- குஜராத்தின் விஸ்வதார் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் இத்தாலியா கோபால் வெற்றி பெற்றார்.
குஜராத், கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெற்றது.
குஜராத்தின் விஸ்வதார் மற்றும் காடி ஆகிய 2 தொகுதிகளுக்கும், கேரளாவின் நிலாம்பூர், மேற்கு வங்காளத்தின் காளிகஞ்ச், பஞ்சாபின் லூதியானா மேற்கு என மொத்தம் 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
குஜராத்தின் காடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை 39452 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாஜக வேட்பாளர் ராஜேந்திர குமார் வெற்றி பெற்றார்.
அதே சமயம் குஜராத்தின் விஸ்வதார் தொகுதியில் பாஜக வேட்பாளரை 17554 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆம் ஆத்மி வேட்பாளர் இத்தாலியா கோபால் வெற்றி பெற்றார்.
குஜராத் இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ளது.
- குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
- முன்னெச்சரிக்கையாக குஜராத்தின் பவ் நகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் இந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஜுனாகட், துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட், பவநகர், கட்ச், காந்தி நகர், சூரத் மற்றும் படான் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு மீட்புப்படையினர் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தின் பவ் நகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட 25 மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்தனர்.
- 135 உடல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், 101 உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
விமானம் விழுந்ததில் விடுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள சிலரும் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 270 ஆக உயர்ந்துள்ளது.
அகமதாபாத் விமான விபத்தில் 57 வயதான போகிலால் மற்றும் அவரது மனைவி 55 வயதான ஹன்சா ஆகியோர் உயிரிழந்தனர்.
தனது தம்பி போகிலால் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அவரது அக்கா (65) கோமதி மாரடைப்பால் உயிரிழந்தார். .
இதில் துக்கம் என்னவென்றால் போகிலால் உடல் இன்னும் அடையாளமா காணப்படாததால் அவருக்கு இன்னும் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட நிலையில், கோமதியின் இறுதிச் சடங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
- குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்தனர்.
- 135 உடல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், 101 உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
விமானம் விழுந்ததில் விடுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள சிலரும் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 270 ஆக உயர்ந்துள்ளது.
உடல்கள் அனைத்தும் எரிந்ததால் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. டி.என்.ஏ. பரிசோதனைகள் மேற்கொண்டு உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. இதுவரை 135 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதில் 101 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 101 பேரில் 5 பேர் விமானத்தில் பயணம் செய்யாதவர்கள் ஆவார்கள்.
விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1.25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.
+2
- அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி நடந்த விமான விபத்தில் 279 பேர் உயிரிழந்தனர்.
- இந்த விமான விபத்து இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி நடந்த விமான விபத்தில் 279 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விமானத்தில் பயணம் செய்த 241 பேர் மற்றும் அகமதாபாத்தில் விமானம் விழுந்த பயிற்சி டாக்டர்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், விமானம் விழுந்த நேரத்தில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் சிலர் அங்கிருந்து தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
சில மாணவர்கள் இரண்டாவது மாடியில் இருந்து பெட்ஷீட் மூலம் கீழே குதித்து தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
- விமானத்தில் பயணம் செய்த விஸ்வாஸ்குமார் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
- விபத்தில் காயம் அடைந்தவர்களை சேலைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் பயன்படுத்தி மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்ட விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் அருகில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் விமானம் வெடித்து சிதறியதில் அதில் பயணம் செய்த 241 பேர், மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த 5 மாணவர்கள், பொதுமக்கள் 24 பேர் என மொத்தம் 270 பேர் பலியாகினர்.
விமானத்தில் பயணம் செய்த விஸ்வாஸ்குமார் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்நிலையில் விமான விபத்து நடந்த சில நிமிடங்களில் அப்பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் ராஜூபடேல் என்பவர் தனது குழுவினருடன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
விபத்தில் காயம் அடைந்தவர்களை சேலைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் பயன்படுத்தி மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் கட்டிடம் இடிந்து சிதறி கிடந்த இடிபாடுகளில் இருந்து மொத்தம் 800 கிராம் (சுமார் 100 பவுன்) தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கப்பணம், பாஸ்போர்ட்டுகள், பகவத் கீதை ஆகியவற்றையும் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நகைகள் ஆவணபடுத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என உள்துறை இணை மந்திரி ஹர்ஸ் சங்கவி தெரிவித்தார்.
- இதுவரை 76 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
- 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12 அன்று நடந்த ஏர் இந்தியா 171 விமானம் அருகில் உள்ள மாணவர் விடுதி மீது விழுந்ததில், விமானத்தில் பயணம் செய்த 241 பேரும், விடுதி பகுதியில் இருந்த 29 பேரும் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒரு பயணி மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார்.
உடல்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிரமங்களால், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதுவரை 76 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த விமான பயணிகளில் முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியும் ஒருவர். அவரின் உடல், டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு, நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று, விஜய் ரூபானியின் உடல், மூவர்ணக் கொடியால் போர்த்தப்பட்டு, ராஜ்கோட்டில் உள்ள அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.






