என் மலர்tooltip icon

    குஜராத்

    • எல்-1 புள்ளியில் விண்கலம் நுழைவதற்கான கடைசி ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
    • வெற்றிகரமாக எல்-1 புள்ளியில் ஆதித்யா-எல்1 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அங்கு இருக்கும்.

    அகமதாபாத்:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த விண்கலம், பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை 125 நாட்களில் பயணித்த பிறகு, சூரியனுக்கு மிக அருகில் உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி எல்-1 யைச் சுற்றி ஒரு ஹாலோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

    ஏற்கனவே ஆதித்யா-எல்1 சூரியனின் முழு-வட்டுப் படங்களை எடுத்து இந்த விண்கலம் பூமிக்கு அனுப்பி உள்ளது. தொடர்ந்து அறிவியல் சோதனைகளுக்காக சூரியன் தொடர்பான படங்களை எடுத்து இந்த விண்கலம் அனுப்ப இருக்கிறது. இந்தநிலையில் தற்போது ஆதித்யா எல்-1 விண்கலத்தின் பயணம் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

    இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் அகமதாபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்வெளி பயணமான ஆதித்யா எல்-1 விண்கலம் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. எல்-1 புள்ளியில் விண்கலம் நுழைவதற்கான கடைசி ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற ஜனவரி 6-ந்தேதி (சனிக்கிழமை) அன்று ஆதித்யா எல்-1 புள்ளியில் நுழையும். குறிப்பாக, ஜனவரி 7-ந்தேதிக்குள் இறுதி கட்டப்பணிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வெற்றிகரமாக எல்-1 புள்ளியில் ஆதித்யா-எல்1 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அங்கு இருக்கும். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் தேவையான மிகவும் முக்கியமான அனைத்து தரவுகளையும் சேகரிக்கும். சூரியனின் இயக்கவியல் மற்றும் அது நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது? என்பதைப் புரிந்துகொள்ள தரவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி `பாரதிய விண்வெளி நிலையம்' என்ற இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்க இஸ்ரோ திட்டம் வகுத்துள்ளது.

    இவ்வாறு இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறினார். 

    • காந்திநகரில் உள்ள கிஃப்ட் சிட்டியில் மதுபானம் அருந்த அனுமதி.
    • நியமிக்கப்பட்ட பகுதிக்குள் மதுபானங்களை உட்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    குஜராத் அரசு காந்தி நகர் மாவட்டத்தில் உள்ள குஜராத் சர்வதேச நிதி டெக்-சிட்டியில் (GIFT City) உள்ள ஓட்டல், ரெஸ்டாரன்ட், கிளப்களில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.

    கிஃப்ட் சிட்டியில் பணிபுரியும் அனைத்து நபர்களும், அங்கீகரிக்கப்பட்ட பார்வையாளர்களும் நியமிக்கப்பட்ட பகுதிக்குள் மதுபானங்களை உட்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அதேவேளையில் ஓட்டல், ரெஸ்டாரன்ட்கள் மதுபான பாட்டில்களை விற்பனை செய்ய அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுபானம் அருந்துதல், சாப்பிடுதல் வசதி கொண்ட ஓட்டல், ரெஸ்டாரன்ட் மற்றும் கிளப்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி பெற்ற ஓட்டல், ரெஸ்டாரன்ட் மற்றும் கிளப்கள் மட்டுமே மதுபானம் விற்பனை செய்யமுடியும். இங்கு உலகளாவிய வணிக சூழலை வழங்கும் முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிஃப்ட் சிட்டி இந்தியாவின் முதல் க்ரீன்பீல்டு ஸ்மார்ட் சிட்டியாக கருதப்படுகிறது. மேலும் சர்வதேச நிதிச்சேவை மையமாகவும் கருதப்படுகிறது. அதிக அளவில் ஆரக்கிள், சைரில், பேங்க் ஆஃப் அமெரிக்கா, சிட்டி பேங்க் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களும் சிஃப்ட் சிட்டியில் அமைந்துள்ளது.

    • இரண்டு கிலோ வெள்ளியில் வைரஸ் பதிக்கப்பட்டுள்ளது.
    • 40 கலைஞர்கள் 35 நாட்களாக வடிவமைத்துள்ளனர்.

    வைரம் வியாபாரத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரம் முன்னிலை வகிக்கிறது. நேற்று முன்தினம் உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையத்தை தொடங்கி வைத்தார். அடுத்த மாதம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேசம் நடைபெற இருக்கிறது. இதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சூரத்தில் உள்ள வைர வியாபாரிகள், சூரத்தில் உள்ள ராமர் கோவில் விடிவிலான வைர நெக்லஸை வடிவமைத்துள்ளனர்.

    இந்த வைர நெக்லஸ் 5 ஆயிரம் அமெரிக்கா வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. 2 கிலோ எடை கொண்ட வெள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது.

    40 கலைஞர்கள் 35 நாட்களாக இந்த நெக்லஸை வடிவமைத்துள்ளது. இது வணிக நோக்கத்திற்கானது அல்ல. நாங்கள் இதை ராமர் கோவிலுக்கு பரிசாக வழங்க இருக்கிறோம் என வைர வியாபாரி தெரிவித்துள்ளது. சூர்த்தில் உளள் ராமர் கோவில் போன்று இந்த நெக்லஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • குஜராத் மாவட்டத்தில் 'சூரத் வைர பங்குச்சந்தை' என்ற மிகப்பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
    • இதன் திறப்பு விழாவில் பிரதமர் மோடி இன்று கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    அகமதாபாத்:

    இந்தியாவின் வைரத்தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாக கூறப்படுகிறது. இங்கு வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து செயல்படும் விதத்தில் 'சூரத் வைர பங்குச்சந்தை' என்ற மிகப்பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. சூரத் வைர நகரில், 35 ஏக்கர் நிலப்பரப்பில், தலா 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடங்களை இணைக்கும் முதுகெலும்பு போல ஒரு மைய கட்டிடம் அமைந்திருக்கிறது.

    இந்த அலுவலக கட்டிட வளாகத்தின் மொத்த தள பரப்பளவு 70 லட்சத்து 10 ஆயிரம் சதுர அடி ஆகும். டெல்லியைச் சேர்ந்த கட்டிடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ் சுமார் 4 ஆண்டுகளில் இந்த கட்டிடத்தை கட்டி முடித்துள்ளது. இங்குள்ள 4 ஆயிரத்து 700 அலுவலகங்களையும், கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்பே வைரத் தொழில் நிறுவனங்கள் வாங்கிவிட்டன.

    இந்நிலையில், இந்தக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    கடந்த 80 ஆண்டாக உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக இருந்த பென்டகனை சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் தற்போது முந்தியுள்ளது.

    • தலா 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    • இந்த வர்த்தக மையத்தில் 65,000 பேர் பணியாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாக கூறப்படுகிறது. வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து செயல்படும் விதமாக, 'சூரத் வைர பங்குச்சந்தை' என்ற மகா பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

    சூரத் வைர நகரில் 35 ஏக்கர் நிலப்பரப்பில், தலா 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலக கட்டிட வளாகத்தின் மொத்த தள பரப்பளவு 70 லட்சத்து 10 ஆயிரம் சதுர அடி ஆகும்.

    டெல்லியைச் சேர்ந்த கட்டிடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ் சுமார் 4 ஆண்டுகளில் இந்தக் கட்டிடத்தை கட்டி முடித்துள்ளது. இதற்கான மொத்த பட்ஜெட் ரூ.3 ஆயிரம் கோடி ஆகும்.

    உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக இருந்த பென்டகனை, சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் முந்தியுள்ளது.

    இந்நிலையில், சூரத் வைர பங்குச்சந்தை அலுவலக கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

    மேலும், 4,700 அலுவலகங்கள் உள்ள இந்த வர்த்தக மையத்தில் 65,000 பேர் பணியாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதலில் ஆடிய அரியானா அணி 50 ஓவரில் 293 ரன்கள் எடுத்தது.
    • தமிழக அணி சார்பில் நடராஜன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ராஜ்கோட்:

    விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டிகளின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

    இந்நிலையில், இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு, அரியானா அணிகள் மோதின. டாஸ் வென்ற அரியானா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அரியானா அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியின் ஹிமான்ஷு ராணா சதமடித்து அசத்தினார்.

    தமிழக அணி சார்பில் நடராஜன் 3 விக்கெட்டும், சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடாமல் அவுட்டாகினர்.

    பாபா இந்திரஜித் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 64 ரன்னில் வெளியேறினார். தினேஷ கார்த்திக் 31 ரன்னும், ஜெகதீசன் 30 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், தமிழக அணி ரன்களுக்கு 230 ஆல் அவுட்டானது. இதன்மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் அரியானா வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    அரியானா சார்பில் அன்ஷுல் கம்போஜ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    நாளை நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் மோத உள்ளன.

    • இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது.
    • சூரத் வைர பங்குச்சந்தையை டிசம்பர் 17-ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

    அகமதாபாத்:

    இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாக கூறப்படுகிறது. வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து செயல்படும் விதமாக, 'சூரத் வைர பங்குச்சந்தை' என்ற மகா பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

    சூரத் வைர நகரில் 35 ஏக்கர் நிலப்பரப்பில், தலா 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலக கட்டிட வளாகத்தின் மொத்த தள பரப்பளவு 70 லட்சத்து 10 ஆயிரம் சதுர அடி ஆகும்.

    டெல்லியைச் சேர்ந்த கட்டிடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ் சுமார் 4 ஆண்டுகளில் இந்தக் கட்டிடத்தை கட்டி முடித்துள்ளது. இதற்கான மொத்த பட்ஜெட் ரூ.3 ஆயிரம் கோடி ஆகும்.

    உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக இருந்த பென்டகனை, சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் முந்தியுள்ளது.

    இந்நிலையில், சூரத் வைர பங்குச்சந்தை அலுவலக கட்டிடத்தை டிசம்பர் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என

    அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இங்குள்ள 4 ஆயிரத்து 700 அலுவலகங்களையும், கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்பே வைரத் தொழில் நிறுவனங்கள் வாங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • வழக்கமான கட்டணத்தில் பாதி அளவு வசூலிக்கப்பட்டதால் யாரும் வாய் திறக்கவில்லை.
    • சுமார் ஒன்றரை ஆண்டு தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்துள்ளது.

    விதவிதமான மோசடியை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சினாமாவை மிஞ்சிய வகையில் குஜராத் மாநிலத்தில் போலி சுங்கச்சவாடி அமைத்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

    குஜராத் மாநிலம் மொர்பி மாவட்டத்தில் கட்ச் பகுதியை இணைக்கும் பாமன்போர்- கட்ச் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் வகசியாக சுங்கச்சவாடி உள்ளது.

    இந்த வாக்குச்சாவடிக்கு அருகில் உள்ள வர்கசியா கிராமத்தில் பீங்கான் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று மூடிய நிலையில் உள்ளது. இந்த தொழிற்சாலையை போலி சுங்கச்சாவடியாக மாற்ற சில மோசடி பேர்வழிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி போன்று போலியான சுங்கச்சாவடி அமைத்தனர். மேலும் நெடுஞ்சாலை அதிகாரிகள் கண்ணில் மண்ணைத்தூவி ஒரு துணைச்சாலை அமைத்தனர். இந்த சாலை வழியாக நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு வரிவசூல் செய்யப்பட்டுள்ளது.

    வகசியா சுங்கச்சவாடியில் வசூல் செய்யும் பணத்தை விட 50 சதவீதம் குறைவாக வசூலித்துள்ளனர். இதனால் வாகனம் ஓட்டிகள், கனரக வாகன ஓட்டிகள் இதுகுறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. தங்களுக்கு 50 சதவீதம் லாபம் கிடைப்பதால் அந்த வழியாக செல்ல ஆரம்பித்துள்ளனர்.

    சுமார் ஒன்றரை ஆண்டுகள் இந்த போலி சுங்கச்சாவடி செயல்பட்டு வந்துள்ளது. லட்சக்கணக்கானோரிடம் சுமார் 75 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. 110 ரூபாய் முதல் 595 ரூபாய் வரையிலான வரி வசூலுக்கு 20 ரூபாய் முதல் 200 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.

    இறுதியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரியவர, அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தபோது போலி சுங்கச்சாவடி செயல்பட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக அந்த தொழிற்சாலையின் உரிமையாளரான அமர்ஷி பட்டேல், அவருடைய கூட்டாளிகள் வன்ராஜ் சிங் ஜாலா, ஹர்விஜய் சிங் ஜாலா, தர்மேந்திர சிங் ஜாலா, யுவ்ராஜ் சிங் ஜாலா உள்ளிட்ட பலமர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குஜராத் மாநிலத்தில் கடந்த மாதம் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் ஆறு போலி அலுவலகங்களை நடத்தி வந்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    • 50 கிமீ தூரத்தில் உள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் பிரிவு ஆகஸ்ட் 2026ல் நிறைவடைகிறது.

    குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள "சபர்மதி மல்டி மாடல் டிரான்ஸ்போர்ட் ஹப்" என பெயரிடப்பட்டுள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் முனையத்தின் வீடியோவை ரெயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று வெளியிட்டார்.

    இந்த முனையம் அதிநவீன அம்சங்களைக் கொண்டுள்ளது மற்றும் பயணிகளுக்கு வசதியான மற்றும் சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் அகமதாபாத் மற்றும் மும்பை இடையே இயக்கப்பட உள்ளது. ஜப்பான் அரசாங்கத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில், வீடியோவை வெளியிட்ட ரெயில்வே அமைச்சர்,"இந்தியாவின் முதல் புல்லட் ரெயிலுக்கான முனையம். சபர்மதி மல்டிமாடல் போக்குவரத்து மையம், அகமதாபாத்," என்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ வெளியானதில் இருந்து 565,000க்கும் அதிகமான பார்வைகளையும் 20,000க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் குவித்துள்ளது.

    மேலும், குஜராத்தில் உள்ள பிலிமோரா மற்றும் சூரத் இடையேயான 50 கிமீ தூரத்தில் உள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் பிரிவு ஆகஸ்ட் 2026ல் நிறைவடையும் என்று ரெயில்வே அமைச்சர் அறிவித்திருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த இரண்டு நாட்களில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • இரண்டு பேர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    குஜராத் மாநிலம், கேதா மாவட்டத்தில் ஆயுர்வேத சிரப் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்களைத் தவிர, மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கேதா மாவட்டத்தில் உள்ள நடியாட் டவுன் அருகே பிலோதரா கிராமத்தில் உள்ள கடை ஒன்றில் "கல்மேகசாவ்- அசாவா அரிஷ்டா" என்கிற பெயரில் ஆயுர்வேத சிரப் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

    இந்த சிரப் குறைந்தது 50 பேருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த சிரப்பில் மிகவும் விஷத்தன்மை கொண்ட "மெத்தில் அல்கோஹால்" என்கிற வேதியியல் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், சிரப்பை உட்கொண்ட கிராமவாசி ஒருவரின் ரத்த மாதிரியும் சோதனை செய்யப்பட்டது. அதில், மெத்தில் ஆல்கோஹால் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேதா போலீஸ் கண்காணிப்பாளர் ராஜேஷ் காதியா தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், "கடந்த இரண்டு நாட்களில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணைக்காக கடைக்காரர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனவும் கூறினார்.

    • திடீரென 50 முதல் 117 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    • ஏறக்குறைய குஜராத் முழுவதும் என்ற வகையில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது.

    குஜராத் மாநிலத்தில் தற்போது மழை சீசன் கிடையாது. இருந்த போதிலும் நேற்று எதிர்பாராத வகையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இடியுடன் கூடிய கனமழையால் பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமாகின. மேலும், மின்னல் தாக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    குஜராத்தில் உள்ள 252 தாலுக்காவில் 234 தாலுக்காவில் மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் 50 முதல் 117 மி.மீ. வரை மழை பெய்துள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, "மின்னல் தாக்கி பலர் உயிரிழந்த செய்தி கேட்டு கவலையடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உள்ளூர் அதிகாரிகள் நிவாரணப் பணிக்காக முடுக்கிவிடப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிராவில் உள்ள மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பில்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • ரனிபா டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்
    • நிலேஷை ரனிபா பிறருடன் சேர்ந்து அலுவலக மாடிக்கு அழைத்து சென்றார்

    குஜராத் மாநில கதியாவார் தீபகற்ப பகுதியில் உள்ள நகரம், மோர்பி (Morbi). இந்நகரம், செராமிக் பொருட்கள் தயாரிப்பில் இந்தியாவில் முன்னணியில் உள்ளதால், இங்கு கட்டிடங்களில், சுவர்களிலும், தரையிலும் ஒட்டப்படும் "டைல்ஸ்" வர்த்தகத்தில் பல தொழிலதிபர்கள் பல காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்குள்ள ரவாபார் குறுக்குசாலையில் ரனிபா (என்கிற விபூதி படேல்) என்பவர் ரனிபா இண்டஸ்ட்ரீஸ் எனும் டைல்ஸ் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இவர் சகோதரன் ஓம் படேல், இவருக்கு உதவியாக உள்ளார்.

    இவர்கள் நிறுவனத்தில் நிலேஷ் தல்சானியான் எனும் தொழிலாளி ரூ.12 ஆயிரம் மாத சம்பளத்திற்கு பணியாற்றி வந்தார். கடந்த அக்டோபர் 18 அன்று அவரை ரனிபா திடீரென வேலையை விட்டு நிறுத்தி விட்டார்.

    இதையடுத்து, பாதி மாத சம்பளத்தை மேலாளர் பரிக்ஷித் என்பவரிடம் நிலேஷ் பல முறை கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து சென்ற நிலேஷ், தன் சகோதரர் மேகுல் மற்றும் அண்டை வீட்டுக்காரர் பாவேஷ் ஆகியோருடன் மீண்டும் வந்து மேலாளருடன் சம்பள பாக்கி குறித்து கேட்டார்.

    இந்த சச்சரவில் தீர்வு ஏற்படாததால், மேலாளர் பரிக்ஷித், ரனிபாவுக்கு தகவல் அளித்தார். ரனிபா தன் சகோதரர் ஓம் படேல் மற்றும் சிலருடன் அலுவலகத்திற்கு வந்து, மேலாளர் பரிக்ஷித்துடன் நிலேஷை அலுவலக மேல் தளத்திற்கு அழைத்து சென்றார். அங்கு வாக்குவாதம் மோதலாக மாறியது.

    அப்போது அவர்கள் அனைவரும் நிலேஷை பெல்டால் அடித்து, காலால் உதைத்து, முகத்தில் குத்தி பயங்கரமாக தாக்கினர். ஆத்திரத்திலிருந்த ரனிபா, நிலேஷ் வாயில் தன் காலணியை அழுத்தி சம்பளம் கேட்டதற்காக மன்னிப்பு கேட்க சொல்லி கடுமையாக தாக்கினார். அத்துடன் நிற்காமல், அப்பகுதியில் மீண்டும் நிலேஷை கண்டால் கொன்று விட போவதாகவும் மிரட்டினார்.

    அவமானத்துடனும், காயங்களுடனும் கீழே வந்த நிலேஷ் தன்னுடன் வந்தவர்களிடம் இதை தெரிவித்ததை அடுத்து அவர்கள் நிலேஷை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. அவர்கள் அனைவரும் மோர்பி நகர காவல்நிலையத்தில் இது குறித்து புகாரளித்தனர்.

    பட்டியலின பிரிவை சேர்ந்த நிலேஷின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக ரனிபா, அவர் சகோதரர் ஓம் படெல் மற்றும் மேலாளர் பரிக்ஷித் ஆகியோர் மீது சம்பந்தபட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்போது வரை கைது நடவடிக்கை ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×