என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    குழந்தைகள் தங்களுக்கென ஒரு கற்பனை நண்பனை, பொம்மை அல்லது வேறு ஏதேனும் வடிவில் உருவாக்கிக் கொள்வர். இது பின்னாளில் குழந்தைகளின் வாழ்வில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று பார்க்கலாம்.
    குழந்தைப் பருவத்தில் தான் களிமண்ணை பொம்மையாக வடிவமைப்பது போல, குழந்தையின் தூய மனது தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை வைத்துப் பல விஷயங்களை கற்றுக் கொண்டு ஒரு முழு மனிதனாக மாறுகிறது.

    பெரும்பாலான குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தில் தங்களுக்கென ஒரு கற்பனை நண்பனை, பொம்மை அல்லது வேறு ஏதேனும் வடிவில் உருவாக்கிக் கொள்வர். அவ்வாறு குழந்தைகள் சிறு பிராயத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் கற்பனை நண்பன் எனும் விஷயம் அவர்களை பின்னாளில் எப்படி பாதிக்கிறது, குழந்தைகளின் வாழ்வில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது போன்ற தகவல்களை பார்க்கலாம்.

    குழந்தைகளுக்குக் கற்பனை நண்பன் என்பது அவர்களுக்குப் பிடித்த பொம்மைகள், அல்லது செல்லப் பிராணிகள், பொருட்கள் போன்றவை தான். சமயங்களில் யாருமே இல்லாமல் வெற்றிடங்களைப் பார்த்துக் கூட அவர்கள் பேசத் தொடங்கலாம்.

    குழந்தைகள் பொம்மை, பிராணிகள், பொருட்கள் போன்ற இந்த விஷயங்களை தங்கள் வாழ்வில் மிகப்பெரிய விஷயமாக, உற்ற நண்பனாகக் கருதி அவர்களுடன் தனது அனைத்து இரகசியங்கள், உணர்வுகள், செயல்பாடுகள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வர்.

    குழந்தைகளின் கற்பனை நண்பன் உருவாகும் விஷயத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அவையாவன:

    ஒன்று குழந்தை இருக்கும், வளரும் சூழல்,

    மற்றொன்று குழந்தையின் உணர்வுகள். குழந்தைகள் தாங்கள் இருக்கும் இடம் மற்றும் அவர்கள் கொள்ளும் உணர்வுகளின் அடிப்படையில் தான் தனக்கென ஒரு நண்பனைத் தானே உருவாக்கிக் கொள்ளும் நிலைக்குச் செல்கிறார்கள் அது எப்படி என விரிவாக இப்பொழுது பார்க்கலாம்.



    குழந்தைகளின் இந்தக் கற்பனை நண்பன் எனும் இந்த விஷயம் எப்படி உருவாகிறது என்று பார்த்தால், குழந்தைகளுக்கு விளையாடத்துணை இல்லாத பொழுது, பெற்றோர் குழந்தைகளுடன் நேரம் செலவிடாத பொழுது, குழந்தைகள் தனிமையில் அதிகமாக இருக்க நேரிடும் பொழுது, குழந்தைகளுக்கு நண்பர்கள் இல்லாத நிலை போன்ற சூழ்நிலைகளின் பொழுது அவர்கள் தங்கள் சூழலில் இருந்து விடுபடத் தேடி அமைத்துக் கொள்ளும் விஷயம் தான் இந்தக் கற்பனை நண்பன்.

    குழந்தைகள் வெளி மனிதர்களோடு பேசிப் பழக தயக்கமாக உணரும் பொழுது, குழந்தைகளில் தன்னம்பிக்கை குன்றிக் காணப்படும் பொழுது, அவர்கள் பார்த்த படங்கள் மற்றும் கேட்ட கதைகளினால் அவர்களின் மனதில் ஏற்பட்ட மாறுபாடுகள், படங்களில் அல்லது மற்ற குழந்தைகள் பொம்மைகளைத் தங்கள் நண்பனாகக் காட்டி பேசுவதைப் பார்த்துத் தானும் முயற்சித்தல் போன்ற உணர்ச்சிகளின் காரணமாகக் கூட குழந்தைகள் தங்களுக்கென கற்பனையாக ஒரு நண்பனை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

    குழந்தைகளுக்குச் சற்று விவரம் தெரியும் பருவமான இரண்டு வயதினில் இந்தக் கற்பனை நண்பன் பழக்கம் குழந்தைகளில் ஏற்படலாம் என்று கண்டறியப்பட்டு உள்ளது. மேலும், குழந்தைகளின் இரண்டு அல்லது இரண்டரை வயது முதல் ஒன்பது வயது வரையிலான கால கட்டத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் அவர்கள் தங்கள் கற்பனை நண்பனை உருவாக்கிக் கொள்ள முயல்வர்.

    குழந்தைகள் தங்கள் மனதிற்குப் பிடித்த மற்றும் விருப்பமான விஷயங்களின் அடிப்படையில் தனது நண்பனை உருவாக்கிக் கொள்வர். இந்தக் கற்பனை நண்பன் உருவாக்கம் மற்றும் தேர்ந்தெடுப்பு ஆண் மற்றும் பெண் குழந்தைகளிடையே வேறுபடும். ஆண் குழந்தைகள் தங்கள் சக்திக்கு இணையாக அல்லது தங்களை விட சக்தி வாய்ந்தவனாக இருக்கும் ஒருவனை நண்பனாக வைத்துக் கொள்வர்,

    அவர்கள் தேர்ந்தெடுக்கும் பொம்மையை அவ்வாறு பலசாலியாக எண்ணிக் கொண்டு பழகுவர். பெண் குழந்தைகள் தங்களை விட அறிவு மற்றும் பலத்தில் குறைந்த பொருட்களை அல்லது பொம்மையை தங்களது கற்பனைத் தோழியாக எடுத்துக் கொள்வர்.

    குழந்தையின் 2 முதல் 9 வயது வரையிலான கால கட்டத்தில், குழந்தைகள் அனைத்து விஷயங்களிலும் சாதாரணமாக ஈடுபட்டு தனக்கெனப் பிடித்த பொம்மையைக் கொஞ்சுவது, அலங்கரிப்பது, அதனுடன் விளையாட்டாகப் பேசுவது போன்ற செயல்பாடுகள் காணப்பட்டால் அது சாதாரணமே விபரீதம் ஏற்படும் சூழல். ஆனால், அந்த வயது வரம்பை மீறித் தனது கற்பனை நண்பனுடனான நட்பை நீட்டித்து அந்த ஒரு நண்பனுடன் மட்டுமே எப்பொழுது பார்த்தாலும் தனது நேரத்தை செலவிட்டுக் கொண்டு, மற்ற விஷயங்களில் ஈடுபாடு காட்டாமல் தனித்து, விலகிச் சென்றால், அந்தச் சூழல் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

    இந்நிலையைக் குழந்தைகள் அடைந்து விட்டால், அது அவர்களின் மனநிலையில் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தி விபரீத விளைவுகளை உண்டாக்கலாம்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை நன்கு கவனித்து, குழந்தை சராசரி மனிதனை போல் வளர வழி வகை செய்ய வேண்டும். உங்கள் கவனிப்பையும் மீறி குழந்தை அந்த கற்பனை நண்பன் உலகில் மூழ்க நேர்ந்தால், பெற்றோர்கள் அதை உடனடியாக கவனித்து குழந்தைக்கு மனநிலை மருத்து வருடன் ஒரு கலந்தாய்வு ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம்.

    குழந்தை தன் கற்பனை நண்பனை உங்களிடம் காட்டி பேசும் பொழுது உங்கள் வெறுப்பைக் காட்டாமல், குழந்தையின் பாணியிலேயே பாசமாக பேசிக் குழந்தைக்கு உண்மை நிலையை உணர்த்த முற்படுங்கள்.
    மெனோபாஸ் என்பது பெண்களின் உடல்நிலையைச் சுட்டிகாட்டும் ஒரு ரிமைண்டர் என்று சொல்லலாம். இந்த ஸ்டேஜைக் கடந்த பெண்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்றே அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    ஒவ்வொரு பெண்ணும் கடந்து செல்லவேண்டிய ஸ்டேஜ் என்பதால், இதன் அசௌகரியங்களைத் தாங்கிக் கொண்டு தான் ஆக வேண்டும். 45 வயதைக் கடந்த பெண்கள் டி.என்.சி செய்து கொள்வது நல்லது. அந்த உதிரப் போக்கின் மற்றும் பல காரணங்களைத் தெரிந்து கொள்ள இது உதவும். இதன் மூலம் பிளீடிங்கும் ஓரளவுக்குக் குறையலாம்.

    மருத்துவரை அணுகி வைட்டமின் சப்ளிமெண்டுகள் எடுத்துக் கொள்ளவேண்டும். Omega 3 fathya* ids உள்ள மீன் வகைகள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    ஸ்ட்ரெஸ்ஸை முற்றிலுமாகத் தவிருங்கள். இந்தக் காலகட்டத்தில் உடல் நலன் கருதி எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது! குறிப்பாக குடும்பப் பிரச்சனைகள்.

    குடும்பத்தில் இருப்பவர்களும் அவர்களைப் புரிந்துகொண்டு பொறுமையாக நடந்து கொண்டு உதவி பண்ணணும். வீட்டு வேலைகளை இளைய தலைமுறையினரிடம் ஒப்படைக்கலாம். உடலை அதிகம் வருத்திக் கொள்ளக் கூடாது.

    உணவினை எரிக்கும் சக்தியான Basa*  Metabo* ic Rate  சற்றே குறைந்து விடுவதால் உணவில் கட்டுப்பாடு அவசியம். காலை வேளையில் சின்ன மீல்ஸாகவும் இரவு நேரங்களில் டிஃபன் ஐயிட்டங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.

    ஞாபகத் தன்மை குறையத் தொடங்கும். ஒரு நாளைக்கு ஐந்துமுறை பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறப்பு உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் உலர்ந்த தன்மையைச் சரிசெய்ய மருத்துவர் பரிந்துரைத்த க்ரீம்களை மட்டும் பயன்படுத்தலாம்.

    உடல் மற்றும் முகச்சருமம் உலர்ந்து விடுவதால் மாய்சுரைஸர், கிளென்ஸர், டோனர் அப்பை செய்து கொள்ளலாம். எலும்புகளுக்கு வலுவூட்ட ஏரோபிக் உடற்பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.

    மெனோபாஸ் என்பது பெண்களின் உடல்நிலையைச் சுட்டிகாட்டும் ஒரு ரிமைண்டர் என்று சொல்லலாம். இந்த ஸ்டேஜைக் கடந்த பெண்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்றே அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தொடர்ந்து ஒரு வருடம் மாதவிடாய் சுழற்சி நின்றால் மட்டுமே மெனோபாஸ், மூன்று அல்லது ஆறு மாதங்கள் பீரியட்ஸ் நின்றால், மெனோபாஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

    40 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் முடிந்த வரை முழுமையான மெடிக்கல் செக் அப் எடுத்துக் கொள்வது நல்லது!

    மெனோபாஸ் ஏற்பட்டுள்ள பெண்களின் குடும்பத்தில் இருப்பவர்களும் அவர்களின் கணவன்மாரும் நிலைமையைப் புரிந்து கொண்டு பொறுமையாக நடந்து அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்தால் அவர்கள் சந்தோசமாக நீண்ட நாட்கள் வாழமுடியும்.
    கோஸ், கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டு காய்கறிகளை வைத்து சத்தான பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    முட்டைக் கோஸ் - 250 கிராம்
    கேரட் - 100 கிராம்
    தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
    துவரம் பருப்பு - 4 மேஜைக்கரண்டி
    ப.மிளகாய் - 3
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    கடுகு - 1 தேக்கரண்டி
    உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 



    செய்முறை :

    துவரம் பருப்பை நன்றாக கழுவி வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், முட்டைக் கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவியில் துருவிக் கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, ப.மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளித்து பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து கோஸ், கேரட், உப்பு சேர்த்து வதக்கவும்.

    சிறிது தண்ணீர் தெளித்து 15 நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும்.  

    இறுதியில் தேங்காய்துருவல், வேக வைத்த பருப்பு போட்டு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    கோஸ் கேரட் பொரியல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மூட்டு வலியை குணமாக்கவும், கால்களின் நரம்பு சுருண்டு இருந்தால் சரி செய்யவும் ஆஞ்சநேய ஆசனம் பயன் தருகிறது. இன்று இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    செய்முறை :

    விரிப்பில் முதலில் 2 கால்களையும் நீட்டி உட்கார்ந்து கொள்ள வேண்டும். பின்னர் கால்களின் பாதங்களை முன்னும்,பின்னுமாக அசைத்து தளர்த்திக் கொள்வது முக்கியம். இடது முன்னங்காலை தரையில் ஊன்றி குதிங்காலை மேல் நோக்கி தூக்கிய நிலையில் வைக்க வேண்டும்.

    பின்பு குதிங்கால் மீது படத்தில் உள்ளது போன்று உடலின் பின்பகுதியை வைத்து உட்கார்ந்து கொள்ள வேண்டும். இப்போது வலது காலை மடக்கி வலது கால் பாதமானது இடது தொடை மீது வயிற்றுடன் ஒட்டிய நிலையில் இருக்குமாறு வைக்க வேண்டும். 2 கைகயையும் மார்புக்கு நேராக கும்பிட்ட நிலையில் வைக்க வேண்டும்.



    இது தான் ஆஞ்சநேய ஆசனத்தின் அமைப்பாகும். இவ்வாறு 10 முதல் 20 வினாடிகள் வரை உட்கார்ந்து விட்டு பின்னர் படிப்படியாக பழைய நிலைக்கு வர வேண்டும். ஆசனப்பயிற்சியின் போது சுவாசம் சாதாரண நிலையில் இருப்பதுடன் செய்து முடித்த பின்பு கால்களை மாற்றி இதே முறையில் வலது காலை ஊன்றி ஆஞ்சநேய ஆசனத்தை செய்யலாம்.

    பயன்கள் :

    முகம் பொலிவு பெறவும், தொடை தசை இறுக்கம் குறையவும், தட்டையான பாதத்தை சரி செய்யவும், மூட்டு வலியை குணமாக்கவும், கால்களின் நரம்பு சுருண்டு இருந்தால் சரி செய்யவும் ஆஞ்சநேய ஆசனம் பயன் தருகிறது.
    உடலில் நிரந்தரமாக பதித்துக்கொள்ளும் டாட்டூஸ் சின்னங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தம் இருக்கிறது. அதனால் அர்த்தத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ற சின்னங்களை பதிவு செய்யவேண்டும்.
    உடலில் நிரந்தரமாக பதித்துக்கொள்ளும் டாட்டூஸ் சின்னங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான அர்த்தம் இருக்கிறது. அதனால் அர்த்தத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ற சின்னங்களை பதிவு செய்யவேண்டும். ‘டாட்டூஸ்’ சின்னங்கள் உணர்த்தும் அர்த்தங்கள்!

    செமிகோலன்: ‘என் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி எதுவும் கிடையாது. எத்தனை நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதை எல்லாம் கடந்து நான் வாழ்வேன்’ என்பதை ‘செமிகோலன்' சின்னம் குறிப்பிடுகிறது. மிகப் பெரிய கஷ்டங்களில் இருந்து விடுபட்டவர்களும், தற்கொலை முயற்சிகளில் இருந்து மீண்டவர்களும் இந்த டாட்டூ சின்னத்தை பொறித்துக்கொள்கிறார்கள்.

    தாமரை: இந்த மலரை பொறித்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தாமரை தண்ணீருக்கு மேல் பூத்திருக்கும். அடி ஆழம் வரை தண்டினை வளர்த்து நிலைத்து நிற்கும். சேற்றில் கூட செந்தாமரை மலர்ந்து நிற்கும். அதனால் பல விஷயங்களில் தான் தன்னிகரற்றவர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறவர்கள், இதனை பொறித்துக்கொள்கிறார்கள்.

    ஆங்கர்: ‘எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் நான் அசையமாட்டேன். மற்றவர்களைகூட பிடித்து இழுத்து வசீகரித்து என்னோடு தக்கவைத்துக்கொள்ளும் ஆற்றல் எனக்கு இருக்கிறது’ என்பதை காட்டுவது இந்த ‘நங்கூரம்’ சின்னம். இது பலத்தின் அடையாளம்.



    யிங்-யாங்: இது சீனத் தத்துவத்தை பிரதி பலிக்கும் சின்னம். வாழ்க்கையை புரிந்துகொண்டு வாழ்பவர்கள் இந்த சின்னத்தை வரைந்து கொள்கிறார்கள். ‘உலக வாழ்க்கை நன்மையும், தீமையும் கலந்தது. எல்லா நன்மையிலும் தீமை கலந்திருக்கும். அதுபோல் எல்லா தீமையிலும் நன்மையும் கலந்திருக்கும்’ என்ற தத்துவத்தை இந்த சின்னம் உணர்த்துகிறது.

    டிராகன்: இது இரண்டுவிதமான அர்த்தங்களை கொண்டிருக்கிறது. வேகம், எதிர்பார்ப்பு, ஆற்றல் போன்ற நேர்மறை சக்தியின் வெளிப்பாடாகவும், மற்றவர்களை மிரள வைத்து பயம் கொள்ளச் செய்தல், பொறாமை போன்ற எதிர்மறை சக்திகளின் வெளிப்பாடாகவும் இதில் உள்ளது.

    சிறகு: சுதந்திரத்தை உணர்த்துகிறது. இவர்கள் அதிக சுதந்திரத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனந்தமாக வாழ விரும்புவார்கள்.

    சூரியன்: பரந்த ஆற்றல், புதுமையான செயல்பாடு, தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.

    இவைகளைத் தவிர வேறு பலவிதமான சின்னங்களையும் பொறித்துக்கொள்கிறார்கள். டாட்டூவில் ஒருவர் பொறித்திருக்கும் சின்னத்தை வைத்து அவரது குணாதிசயத்தையும் ஓரளவு கணித்துவிட முடியும்.
    ‘பயம் என்பது குடி, மது, புகையினை விட மிக மோசமானது.’ தொடர்ந்து பயத்திலேயே இருப்பவன் செயற்திறன் அற்றவனாகி விடுகிறான். ‘
    மனிதன் நிலவில் கால் வைத்தான். மற்ற கிரகங்களை தனியே பயணித்து காண துணிகிறான். பல சிலிர்க்க வைக்கும் சாகசங்களை செய்கின்றான். ஆனால் ஒரு தலைவலிக்கும், பல் வலிக்கும் மிகுந்த சங்கடங்கள் கொள்கின்றான். பலருக்கு ஒரு பழக்கம் உள்ளது. விழிப்புணர்விற்காக எழுதப்படும் கட்டுரைகள் டி.வி. நிகழ்ச்சிகளைப் படித்தவுடன், பார்த்தவுடன் எனக்கு அதே போல் தான் இருக்கின்றது. எனக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கின்றது என்று பயந்து அதிலேயே மூழ்கி விடுவர். பயம் மனிதனின் உணர்ச்சிகளின் வெளிப்பாடு. பலர் எப்பொழுதுமே பயத்திலேயே வாழ்கின்றனர். ஏதோ ஒரு காரணம், நிகழ்வு, கற்பனை, முன் நிகழ்ந்த நிகழ்வின் ஆழ்ந்த பதிவு போன்ற ஏதோ ஒரு காரணத்தினால் எப்பொழுதும் பயத்திலேயே இருக்கின்றனர்.

    ‘பயம் என்பது குடி, மது, புகையினை விட மிக மோசமானது.’  தொடர்ந்து பயத்திலேயே இருப்பவன் செயற்திறன் அற்றவனாகி விடுகிறான். ‘அஞ்சுவதற்கு அஞ்ச வேண்டும்’.

    * பயம் என்ற உணர்வு மனிதனுக்கு கட்டுப்பாட்டினைத் தரும். கடமையை ஒழுங்காய் செய்யும். நல்ல ஒழுக்கத்தினைத் தரும். ஆனால் எல்லைகளைத் தாண்டிய பயம் மனித வாழ்வினை அழித்து விடும்.

    தொடர் பயம் என்பதே ஒரு நோய். இந்த தொடர் பயத்தால்

    * நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
    * இருதய பாதிப்பு ஏற்படும்.
    * ஜீரண உறுப்புகளில் பிரச்சினை ஏற்படும்.
    * குடல் பாதிப்பு அதிகமாய் இருக்கும்.

    * பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு பாதிக்கப்படும்.
    * வயதுக்கு மீறிய மூப்பு தோற்றம் ஏற்படும்.
    * இளவயதிலேயே இறப்பு ஏற்படும்.
    * மறதி அதிகமாகும்.

    * சோர்வு ஏற்படும்.
    * மனஉளைச்சல் அதிகமாகும்.
    * உலகமே பயமானதாகத் தோன்றும்.
    * உடல், நோய் பற்றிய பயம் எப்போதும் இருக்கும்.

    * வெளி உலகத்தோடு பழக முடியாது.
    * தோற்றமே மாறி விடும்.
    * அன்றாட பணிகளை செய்ய இயலாது.
    * இருதய துடிப்பு மிக அதிகமாக இருக்கும்.

    * தசைகள் வலுவிழந்து இருக்கும்.
    * மிக அதிக வியர்வை இருக்கும்.
    * வாய் வறண்டு இருக்கும்.
    * அதிக மூச்சு வாங்கும்.

    இத்தனை பாதிப்புகள் தரும் பயத்தினை தூக்கி எறியுங்கள்.

    தேவையற்ற பயங்களில் இருந்து வெளிவர:

    * பயம் உங்கள் வாழ்வினை உடல் நலத்தினை அழிக்கின்றது என்பதனை நன்கு உணர வேண்டும்.
    * எதனைப் பற்றி நீங்கள் பயப்படுகின்றீர்கள் என ஆழ்ந்து சிந்தியுங்கள். உங்கள் உள் மனமே இதிலிருந்து வெளி வர வழி கூறும்.
    * எதனையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும் என டென்ஷன் பட்டு குறுக்கு வழிகளில் செல்லாதீர்கள்.
    * நிகழ் நொடியில் கவனம் செலுத்துங்கள்.
    நிகழ்நொடியில்தான் பல செயல்களை சாதிக்க முடியும்.

    • வேலை செய்யுங்கள். முழு கவனத்துடன் வேலை செய்யுங்கள்.
    • ‘நான் நன்றாக இருக்கிறேன்’ என உங்களுக்கு நீங்களே அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள்.
    • நீங்கள் தேவை என நினைத்தால் சற்றும் தயங்காது மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறுங்கள்.
    • நல்ல ஆக்கப்பூர்வமான புத்தகங்களைப் படியுங்கள்.

    • முறையான உணவு மிக முக்கியம்.
    • யோகா, தியானம், உடற்பயிற்சி இவை பெரிதும் உதவும்.
    • கடவுள் நம்பிக்கை உடையவர் என்றால் பிரார்த்தனை செய்யுங்கள்.
    • ஆழ்ந்த மூச்சு பயிற்சி செய்யுங்கள்.
    • வாழ்வில் வெற்றி பெறுவதே உங்கள் கண்களில் தெரிய வேண்டும்.

    ஒவ்வொருவருக்கும் தன்தோற்றத்தினைப் பற்றியும், அவரது நல்ல பண்பு, குண நலன்களை பற்றியும் ஒரு ஆக்கப்பூர்வமான கருத்து இருக்கும். புற்று நோய் போன்ற கடும் நோய்கள் தாக்குதல் ஏற்படும் பொழுதும், சிகிச்சை பெறும் பொழுதும் அவர்கள் தோற்றத்தில், மனதில் சில மாறுதல்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இது அவர்களுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.



    • முடி கொட்டுதல், •எடை கூடுதல் (அ) குறைதல்
    • அறுவை சிகிச்சை தழும்புகள் • மருந்தினால் சில சரும பாதிப்புகள் அவசியம் காரணமாக உறுப்புகளை இழக்க வேண்டி இருத்தல் •சோர்வு போன்றவை ஏற்படலாம்.
    இவை தானே சிறிது காலத்தில் முன்னேற்றம் பெறும் என்றாலும் இவர்களது மன உளைச்சல் இவர்களுக்கு கீழ்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
    • அதிக சோகம் • படபடப்பு •தனிமையிலேயே இருத்தல்

    • பயம் •கோபம் • வெறுப்பு • குற்ற உணர்வு
    • எதிர்காலத்தினைப் பற்றிய கவலை என இருக்கும். ஆனால் சிலர்
    • நவீன மருத்துவ முன்னேற்ற உதவியினைப் ப்றறிய நிம்மதி
    • உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துதல் போன்ற நல்ல பாதிப்புகளையும் வெளிப்படுத்து கின்றனர்.
    இது போன்ற மனதினை குலைக்கும் பாதிப்புகளி லிருந்து வெளிவர கீழ் கூறப்பட்டுள்ள குறிப்புகள் நன்கு உதவும்.

    • எதற்கும் சிறிது காலம் தேவை என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள். இன்று மருத்துவ உலகில் புற்று நோய்க்கு
    மிகசிறந்த மருத்துவ சிகிச்சைகள் உள்ளன.
    * உங்களைப் போன்று பாதிப்பில் இருந்து சிகிச்சையின் மூலம் முன்னேற்றம் பெற்றவர்களுடன் பேசுங்கள். பயம் விலகும்.
    * உங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களுடன் இருங்கள்.

    * உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள்.
    * எப்பொழுதும் சுறுசுறுப்பாய் இருங்கள்.
    * கண்டிப்பாய் ‘கவுன்சிலிங்’ எடுத்துக்கொள்ளுங்கள்.
    * உங்களது கோபம் உணர்ச்சி பூர்வமானதாக இருக்கும் பொழுது உண்மை களையும், சிகிச்சை முறைகளையும் அறிய தவறிவிடுவோம். எனவே கோபத்தினை கைவிடுங்கள்.
    * சுய பரிதாபம் வேண்டாம்.

    * மருத்துவரிடம் அனைத்து சந்தேகங் களையும் எழுதி வைத்து கேட்டு தெளிவு பெறுங்கள்.
    * தொடர் பயம் என்பது
    நோய் எதிர்ப்பு சக்தியினை வெகுவாய் குறைத்து விடும்.
    * தூக்கமின்மை ஏற்படும்.
    * ஹார்மோன் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்
    * முறையான உணவு எடுத்துக்கொள்ளமை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் உடல் நலம் வெகுவாய் பின்னடையும்.
    ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் உடல் நலம், மன நலம் இரண்டினையும் மேம்படுத்தும் அழிவுப் பூர்வமான சிந்தனைகள் உடல் நலம், மனநலம் இரண்டினையும் அழித்துவிடும் என்பதனை அனைவரும் உணர வேண்டும்.

    உடனடி கவனம் செலுத்த வேண்டிய சில அறிகுறிகள்

    • திடீரென சிறிய விஷயங்களுக்கு அதிக கோபம் வருகின்றதா? மேஜையை தட்டுவது, பல்லைக்கடிப்பது போன்றெல்லாம் இருக்கின்றதா?
    • தூக்கம் மிகக் குறைவாக உள்ளதா?
    • அவசியமில்லாமல் அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் செலவழிக்கின்றீர்களா?
    • வீட்டில் நிகழ்ந்த ஏதோ ஒரு இழப்பு, சோகம் தொடர்ந்து உங்களை பாதிக்கின்றதா?
    உடனடி மருத்துவ உதவி பெறுங்கள்.
    சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் நண்டு குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நண்டு - அரை கிலோ
    வெங்காயம் - 4
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 5
    தேங்காய் - அரை முடி
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    கடுகு, பட்டை, சோம்பு, கசகசா, மிளகு தூள் - தேவையான அளவு



    செய்முறை :

    நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியம் தக்காளி, பச்சை, மிளகாய் சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    தேங்காய், சோம்பு, கசகசா மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கம், கடுகு சேர்த்துத் தாளித்த பின்னர் அரை டீஸ்பூன் சோம்பு, சிறிது மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளித்த பின்னர் நண்டை அதில் கொட்டிக் கிளறுங்கள்.

    ஐந்து நிமிடம் கழித்து அரைத்துவைத்த வெங்காய தக்காளி விழுதைச் சேர்த்து, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரை டம்ளர் தண்ணீர்  ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.

    பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடுங்கள். குழம்பு நன்றாகக் கொதித்ததும் தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பின்னர் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்குங்கள்.

    நண்டு குருமா ரெடி.

    குறிப்பு - தேங்காய் பாலும் சேர்க்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிடித்த உணவு என்று எதையும் பாராமல் சாப்பிடுவது தான் பின்னாளில் ஆபத்தாக முடிகிறது. சில வழிமுறைகளை பின்பற்றி வந்தால் உணவு ஒவ்வொமை வராமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம்.
    பிடித்த உணவு என்று எதையும் பாராமல் சாப்பிடுவது தான் பின்னாளில் ஆபத்தாக முடிகிறது. பெரும்பாலும் பலரும் விரும்பும் உணவாக இருப்பது எண்ணெய் உணவாக தான் இருக்கும். எண்ணெயிலிருந்து தான் பிரச்சனை ஆரம்பிக்கும். அப்பொருளை சாப்பிடும் முன் எண்ணெயில் இருந்து கெட்டுப்போன வாசனை வந்தால் அதை சாப்பிட வேண்டாம்.

    அதேபோல் நம்மிடம் தான் ஃபிரிட்ஜ் உள்ளதே என்று பிரோலில் துணி அடுக்குவது போல் உணவை அதில் அடுக்கி வைக்க வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக சமைத்து சாப்பிடுங்கள், மீதமுள்ளதை மட்டும் ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுங்கள். அதில் வைத்து கொள்ளலாம் என்று நினைத்தே சமைக்க வேண்டாம்.

    புரதம் அதிகமுள்ள பொருட்கள் எல்லாம் எளிதில் கெட்டுப்போக கூடியவை. வேர்கடலை, பால், எண்ணெய் உணவு வகைகள் எல்லாம் சீக்கிரமே கெட்டுப்போக கூடியவை. அதனை சேர்த்து வைத்து சாப்பிட்டாலே பாதிப்பு ஏற்படும்.

    எந்த ஒரு ஸ்நாக்ஸ் பொருட்களாக இருந்தாலும் அதனுடைய எக்ஸ்பைரி தேதியை பாருங்கள். அதனை பார்த்துவிட்டு பிறகு சாப்பிடுங்கள். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது முடிந்தவரை வீட்டில் தயார் செய்யும் ஸ்நாக்ஸ் பொருட்களையே கொடுக்கவும்.

    மழை, பனிக்காலத்தில் உணவுகள் கெட்டுபோகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள். அரிசி, பருப்பு போன்றவற்றையில் உடனடியாக தாக்கும், அதனாலேயே உணவுகள் கெட்டுப்போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்து கொள்ளவும். அதில் பூஞ்சைகள் இருப்பது தெரிய வந்தால், அதனை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன்படுத்துவர். ஆனால் அப்படி பயன்படுத்தினாலும் உணவு கெட்டுபோவதற்கு வாய்ப்புள்ளது.

    இவை போன்றவைகளை தவிர்த்தாலே உணவு ஒவ்வொமை வராமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம்.
    உலகெங்கும் சிகரெட் பிடிக்கும் தாய்க்கு பிறந்த குழந்தைகள் எடை குறைந்து, மந்தமாக நோஞ்சான் டைப்பாக இருப்பதாகத்தான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
    புகையிலையில் நிகோட்டின் என்கிற போதை ரசாயனம் இருக்கிறது. சிகரெட் புகை உங்கள் உடம்பில் எந்த உறுப்பையும் விட்டு வைக்காமல் எல்லாத் திசுக்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பொசுக்கிவிடும். அதிலும் குறிப்பாக இனப்பெருக்கத் திசுக்களை. உலகெங்கும் சிகரெட் பிடிக்கும் தாய்க்கு பிறந்த குழந்தைகள் எடை குறைந்து, மூளை சிறுத்து, மந்தமாக நோஞ்சான் டைப்பாக இருப்பதாகத்தான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    புகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும். புகைப்பழக்கம் பல்லோப்பியன் குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.

    புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்கமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் சீக்கிரமே துவங்கி விடும்.

    கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் செல்லும் சிகரெட்டிலுள்ள போதைப் பொருளான நிக்கொட்டின் குழந்தையின் நுரையீரலை நேரடியாகத் தாக்கி சிறு வயதிலேயே அக்குழந்தை ஆஸ்துமாவால் பீடிக்கப் பட காரணமாகின்றது.
    சூடான சாதத்துடன் சாப்பிட கனவா மீன் (கடம்பா மீன்) தொக்கு சூப்பராக இருக்கும். இன்று இந்த கனவா மீன் தொக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கனவா மீன் - அரை கிலோ
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    தனியாத் தூள் - அரை டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    கடுகு, சீரகம், சோம்பு, பட்டை, கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கனவா மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளி சேர்தது வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி நன்றாக குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் சுத்தம்செய்த கனவா மீனைக் கொட்டி வதக்குங்கள். சிறிது நேரம் மூடி போட்டு வேகவிடவும்.

    உப்பை சேர்த்து கிளறி அடுப்பை சிம்மில் வையுங்கள்.

    அனைத்தும் நன்றாகச் சேர்ந்து தொக்கு பதம் வந்தவுடன் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்குங்கள்.

    சூப்பரான கனவா மீன் தொக்கு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிலர் முகத்தில் கீழ் தாடைக்கு அடியில் கொழுப்பு சேர்ந்து தொங்கியது போல் தோன்றும். இந்த கொழுப்பை குறைக்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றி வந்தால் போதுமானது.
    சிலர் முகத்தில் கீழ் தாடைக்கு அடியில் கொழுப்பு சேர்ந்து தொங்கியது போல் தோன்றும். பெண்களுக்கு இது அவர்களது அழகை கெடுக்கும். இந்த கொழுப்பை குறைக்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றி வந்தால் போதுமானது.

    மனித உடலில் பல்வேறு இடங்களில் இயற்கையாகவே கொழுப்பு தேங்கும். உதாரணத்திற்கு- கால்களில், மேல் கைகளில், இடுப்பு பகுதியில், பின்புறங்களில், தொடைகளில் என பல்வேறு பகுதிகளில் கொழுப்பு தேங்கும். இது ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் பிரச்சனையை உண்டாக்கும்.

    இவ்வாறு கழுத்தில் சதை தோன்றுவதற்கான காரணம் கூட அவர்களின் உடலில் கொழுப்பு தேங்கும் இடம் கழுத்து பகுதியாக இருப்பது தான்.

    கழுத்தில் கொழுப்பு சேர்வது மட்டும் இல்லாது அனைத்து விதமான கொழுப்பு பிரச்சனைகளுக்கும் தீர்வு என்ன தெரியுமா? கொழுப்பை கரைப்பதுதான்.! அதற்கான டிப்ஸ் இதோ,



    * கிரீன் டீ பருகுங்கள். அது உடலில் தேவையில்லாமல் தேங்கியிருக்கும் கொழுப்புகளை கரைக்கும்.

    * காலை உணவு சாப்பிடும் முன்பு ஒரு ஸ்பூன் எக்ஸ்டிரா விர்ஜின் தேங்காய் எண்ணெயை சாப்பிடுங்கள்.

    * தேங்காய் எண்ணெயை தண்ணீர் பாத்திரத்தில் ஒரு கப்பில் வைத்து கொதிக்கவிட்டு அதைக்கொண்டு கழுத்து சதைப்பகுதியில் மசாஜ் செய்யுங்கள்.

    * காலையில் தினமும் சூடான நீரில் எலுமிச்சை பிழிந்து பருகுங்கள். சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்துக்கொள்ளுங்கள்.

    * ஆளி விதைகளை தண்ணீரில் இட்டு கொதிக்கவிட்டு தேன் கலந்து குடியுங்கள்.

    இதெல்லாம் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும் விஷயங்கள் ஆகும். பயன்படுத்தி பாருங்கள். உங்கள் கழுத்தும் அழகாக மாறும்.

    குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடிய உணவுகளில் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்கள் வயதுக்கேற்ற உயரம், எடையுடன் இருப்பது முக்கியம்.
    பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கொழுகொழுவென குண்டாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், குண்டான குழந்தைதான் ஆரோக்கியமான குழந்தை என்று நினைத்தால் அது தவறானது.

    இன்றைய குழந்தைகள் ஓடி ஆடி விளையாடாமல் டி.வி, வீடியோ கேம்ஸ், மொபைல் என்று வீட்டிற்குளேயே முடங்கிக்கிடக்கிறார்கள். ஆனால், ஃபிஸிக்கல் ஆக்டிவிட்டீஸ் இருந்தால்தான் ஒபிஸிட்டியைத் தவிர்க்க முடியும். அதனால் பெற்றோர்கள் பிள்ளைகளை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரமாவது விளையாடவிடவேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஸ்போர்ட்ஸில் சேர்க்கலாம். இதனால் உடல் உறுப்புகள் அனைத்துக்கும் இயக்கம் கிடைத்து குழந்தை சுறுசுறுப்பாவதுடன் எடையும் அதிகரிக்கது.

    குழந்தைகளுக்கு பீட்ஸா, பர்கர், லேஸ், ஃப்ரைடு அயிட்டம்ஸ், க்ரீம் கேக், ஐஸ்க்ரீம் என இதுபோன்ற உணவுகளை பெற்றோர்கள் வாங்கிக்கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த உணவு வகைகளில் வைட்டமின்கள், புரோடீன்கள், நார்ச்சத்து போன்ற எந்த ஊட்டச்சத்தும் உடலுக்குக் கிடைக்காது. வெறும் கொழுப்புச் சத்தும், மாவுச் சத்தும் மட்டுமே கொண்ட இந்த உணவுகளைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு, உடல் பருமன் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

    சரியான நேரத்துக்கு குழந்தைகளை சாப்பிடச்செய்யும் பழக்கமும் முக்கியமானது. காலையில் பள்ளி கிளம்பும் அவசரத்தில் குழந்தைகள் சாப்பிடாமல் செல்வது மிகத் தவறு. காலை வேளையில் உடலுக்கு அதிக எனர்ஜி தேவைப்படும். எனவே, காலை 8 மணிக்குள்  அவர்களை சாப்பிடவைத்துவிட வேண்டும். இல்லை என்றால் செல்கள் பலவீனமாகி எனர்ஜி குறைந்துவிடும்(Energy metabolism).

    பெப்சி, கோலா, பாட்டில் ஜூஸ், பாக்கெட்  ஜூஸ் என கண்டதையும் சாப்பிடப் பழக்காமல், பிள்ளைகளிடம்  பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை வளர்ப்பது நல்லது. உணவு வேளை தவிர்த்து, காலை, மாலை மற்றும் உறங்கச் செல்லும் முன் பழங்கள் சாப்பிடக் கொடுக்கலாம்.

    பெற்றோர் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம்... குழந்தைக்கு பசி எடுப்பதற்கு முன், சாப்பாட்டை வைத்துத் திணிக்கக் கூடாது. அதேபோல பசி எடுக்கும் நேரத்தில் நொறுக்குத்தீனி கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
    ×