என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கருமாரியம்மனை துதிக்கும் இந்த 108 போற்றியை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கூறி வழிபட குடும்பத்தில் இருக்கும் வறுமை நிலை நீங்கும்.
வேண்டியவர்களுக்கு அனைத்தையும் வழங்குபவள் ஸ்ரீ கருமாரியம்மன். அவளின் புகழ்பாடி இயற்றப்பட்ட 108 போற்றி துதிகள் தினமும் பாடி அவள் அருளை பெறுங்கள். குடும்ப உறுப்பினர்களின் உடல் நலம் மேம்படும் மனக்கவலைகள் நீங்கும்.
ஓம் அம்மையே போற்றி
ஓம் அம்பிகையே போற்றி
ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி
ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி
ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம் இருள் நீக்குபவளே போற்றி
ஓம் இதயம் வாழ்பவளே போற்றி
ஓம் இடரைக் களைவாய் போற்றி
ஓம் இஷ்ட தேவதையே போற்றி
ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
ஓம் ஈடிணை இலாளே போற்றி
ஓம் ஈகை மிக்கவளே போற்றி
ஓம் உமையவளே தாயே போற்றி
ஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எலுமிச்சை பிரியாயே போற்றி
ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி
ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி
ஓம் ஏழையர் அன்னையே போற்றி
ஓம் ஐங்கரத்தவளே போற்றி
ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
ஓம் ஓங்கார ரூபினியே போற்றி
ஓம் ஔடதம் ஆனவளே போற்றி
ஓம் கவுமாரித்தாயே போற்றி
ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி
ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
ஓம் காக்கும் அன்னையே போற்றி
ஓம் கிள்ளை மொழியாளே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி
ஓம் குங்கும நாயகியே போற்றி
ஓம் குறை தீர்ப்பவளே போற்றி
ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி
ஓம் கை கொடுப்பவளே போற்றி
ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி
ஓம் சக்தி உமையவளே போற்றி
ஓம் சவுந்தர நாயகியே போற்றி
ஓம் சித்தி தருபவளே போற்றி
ஓம் சிம்ம வாகினியே போற்றி
ஓம் சீரெலாம் தருபவளே போற்றி
ஓம் சீதளா தேவியே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
ஓம் செந்தூர நாயகியே போற்றி
ஓம் செண்பகாதேவியே போற்றி
ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி
ஓம் சொல்லின் செல்வியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
ஓம் தத்துவ நாயகியே போற்றி
ஓம் தர்ம தேவதையே போற்றி
ஓம் தரணி காப்பாய் போற்றி
ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி
ஓம் தாலிபாக்கியம் தருவாய் போற்றி
ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
ஓம் தீமை களைபவளே போற்றி
ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
ஓம் தூய்மை மிக்கவளே போற்றி
ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி
ஓம் தேசமுத்து மாரியே போற்றி
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
ஓம் தோன்றாத் துணையே போற்றி
ஓம் நன்மை அளிப்பவளே போற்றி
ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி
ஓம் நாக வடிவானவளே போற்றி
ஓம் நாத ஆதாரமே போற்றி
ஓம் நாகாபரணியே போற்றி
ஓம் நானிலம் காப்பாய் போற்றி
ஓம் நித்ய கல்யாணியே போற்றி
ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி
ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி
ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி
ஓம் நேசம் காப்பவளே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பவளவாய் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாம்புரு ஆனாய் போற்றி
ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிழை பொறுப்பவளே போற்றி
ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி
ஓம் பீடை போக்குபவளே போற்றி
ஓம் பீடோப ஹாரியே போற்றி
ஓம் புத்தி அருள்வாய் போற்றி
ஓம் புவனம் காப்பாய் போற்றி
ஓம் பூமாரித்தாயே போற்றி
ஓம் பூவில் உறைபவளே போற்றி
ஓம் பூஜைக்குரியவளே போற்றி
ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
ஓம் மழைவளம் தருவாய் போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி
ஓம் மந்திர வடிவானவளே போற்றி
ஓம் மழலை அருள்வாய் போற்றி
ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மகமாயித் தாயே போற்றி
ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
ஓம் முத்தாலம்மையே போற்றி
ஓம் கருமாரியம்மனே போற்றி
ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
ஓம் வீரபாண்டி வாழ்பவளே போற்றி
ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி
ஓம் ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி.
ஓம் அம்மையே போற்றி
ஓம் அம்பிகையே போற்றி
ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி
ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி
ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம் இருள் நீக்குபவளே போற்றி
ஓம் இதயம் வாழ்பவளே போற்றி
ஓம் இடரைக் களைவாய் போற்றி
ஓம் இஷ்ட தேவதையே போற்றி
ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
ஓம் ஈடிணை இலாளே போற்றி
ஓம் ஈகை மிக்கவளே போற்றி
ஓம் உமையவளே தாயே போற்றி
ஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எலுமிச்சை பிரியாயே போற்றி
ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி
ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி
ஓம் ஏழையர் அன்னையே போற்றி
ஓம் ஐங்கரத்தவளே போற்றி
ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
ஓம் ஓங்கார ரூபினியே போற்றி
ஓம் ஔடதம் ஆனவளே போற்றி
ஓம் கவுமாரித்தாயே போற்றி
ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி
ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
ஓம் காக்கும் அன்னையே போற்றி
ஓம் கிள்ளை மொழியாளே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி
ஓம் குங்கும நாயகியே போற்றி
ஓம் குறை தீர்ப்பவளே போற்றி
ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி
ஓம் கை கொடுப்பவளே போற்றி
ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி
ஓம் சக்தி உமையவளே போற்றி
ஓம் சவுந்தர நாயகியே போற்றி
ஓம் சித்தி தருபவளே போற்றி
ஓம் சிம்ம வாகினியே போற்றி
ஓம் சீரெலாம் தருபவளே போற்றி
ஓம் சீதளா தேவியே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
ஓம் செந்தூர நாயகியே போற்றி
ஓம் செண்பகாதேவியே போற்றி
ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி
ஓம் சொல்லின் செல்வியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
ஓம் தத்துவ நாயகியே போற்றி
ஓம் தர்ம தேவதையே போற்றி
ஓம் தரணி காப்பாய் போற்றி
ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி
ஓம் தாலிபாக்கியம் தருவாய் போற்றி
ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
ஓம் தீமை களைபவளே போற்றி
ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
ஓம் தூய்மை மிக்கவளே போற்றி
ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி
ஓம் தேசமுத்து மாரியே போற்றி
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
ஓம் தோன்றாத் துணையே போற்றி
ஓம் நன்மை அளிப்பவளே போற்றி
ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி
ஓம் நாக வடிவானவளே போற்றி
ஓம் நாத ஆதாரமே போற்றி
ஓம் நாகாபரணியே போற்றி
ஓம் நானிலம் காப்பாய் போற்றி
ஓம் நித்ய கல்யாணியே போற்றி
ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி
ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி
ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி
ஓம் நேசம் காப்பவளே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பவளவாய் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாம்புரு ஆனாய் போற்றி
ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிழை பொறுப்பவளே போற்றி
ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி
ஓம் பீடை போக்குபவளே போற்றி
ஓம் பீடோப ஹாரியே போற்றி
ஓம் புத்தி அருள்வாய் போற்றி
ஓம் புவனம் காப்பாய் போற்றி
ஓம் பூமாரித்தாயே போற்றி
ஓம் பூவில் உறைபவளே போற்றி
ஓம் பூஜைக்குரியவளே போற்றி
ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
ஓம் மழைவளம் தருவாய் போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி
ஓம் மந்திர வடிவானவளே போற்றி
ஓம் மழலை அருள்வாய் போற்றி
ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மகமாயித் தாயே போற்றி
ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
ஓம் முத்தாலம்மையே போற்றி
ஓம் கருமாரியம்மனே போற்றி
ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
ஓம் வீரபாண்டி வாழ்பவளே போற்றி
ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி
ஓம் ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி.
செவ்வாய் வக்ரம் பெற்ற பெண்கள் மன நிறைவான மணவாழ்வு அமையவில்லை என்றே கூறுகிறார்கள். இவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
ஒருவருக்கு செவ்வாய் நல்ல யோகம் தரும் நிலையில் 3,6,8,12-ல் மறையாமல் இருந்தால் மட்டுமே ஒரு ஆணால் உற்சாகமாக அனைத்து செயல்களிலும் ஈடுபட முடியும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வீடு, வாகனம், பொன்பொருள் சேர்க்கை, அரசு வழி ஆதாயம் கிடைக்கும். கால்நடை அபிவிருத்தி விவசாயத்தில் மேன்மை உண்டாகும். ஆண் ஜாதகத்தில் செவ்வாய் மறைவு பெற்றால் சொத்து சுகம் இருக்காது. இருந்தாலும் பயனற்று போகும். உறவுகள் பகையாகும்.
பெண் ஜாதகத்தில் செவ்வாய் சுப ஸ்தானத்தில் வலிமையுடன் இருந்தால் புகுந்த வீட்டில் தனக்கென்று ஒரு தனி ராஜாங்கம் அமைத்து குடும்ப உறுப்பினர்களை தன் வசப்படுத்தி முடிசூடா ராணியாக வாழ்நாள் முழுவதும் திகழ்கிறார்கள். செவ்வாய் வலிமையற்ற பெண்கள் பலருக்கு திருமணம் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. திருமணம் நடந்த பிறகு திருமணமே செய்யாமல் வாழ்வை கழித்து இருக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
செவ்வாய் வக்ரம் பெற்ற பெண்கள் மன நிறைவான மணவாழ்வு அமையவில்லை என்றே கூறுகிறார்கள். இவர்களுக்கு செவ்வாயின் தசாபுத்தி காலங்களில் முன் கோபம் மிகுதியாகும். திட்டமிடுதலில்-ஆலோசகராக இருப்பதில் சாதனை புரிவர். ஆனால் செயல்திறன் இருக்காது. உடன் பிறந்த சகோதரர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்காது.
வீடு, வாகனம், சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருக்கும். ரத்தம் தொடர்பான நோய்கள் ஏற்படும். வக்ர செவ்வாய் சனியுடன் சம்பந்தம் பெறும் போது விபத்து / காயம் ஏற்படும்.
பரிகாரம்: பழனி தண்டாயுதபாணி சுவாமியை வழிபட வாழ்வின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகி மன நிறைவான மண வாழ்க்கை கிட்டும்.
பெண் ஜாதகத்தில் செவ்வாய் சுப ஸ்தானத்தில் வலிமையுடன் இருந்தால் புகுந்த வீட்டில் தனக்கென்று ஒரு தனி ராஜாங்கம் அமைத்து குடும்ப உறுப்பினர்களை தன் வசப்படுத்தி முடிசூடா ராணியாக வாழ்நாள் முழுவதும் திகழ்கிறார்கள். செவ்வாய் வலிமையற்ற பெண்கள் பலருக்கு திருமணம் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. திருமணம் நடந்த பிறகு திருமணமே செய்யாமல் வாழ்வை கழித்து இருக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
செவ்வாய் வக்ரம் பெற்ற பெண்கள் மன நிறைவான மணவாழ்வு அமையவில்லை என்றே கூறுகிறார்கள். இவர்களுக்கு செவ்வாயின் தசாபுத்தி காலங்களில் முன் கோபம் மிகுதியாகும். திட்டமிடுதலில்-ஆலோசகராக இருப்பதில் சாதனை புரிவர். ஆனால் செயல்திறன் இருக்காது. உடன் பிறந்த சகோதரர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்காது.
வீடு, வாகனம், சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருக்கும். ரத்தம் தொடர்பான நோய்கள் ஏற்படும். வக்ர செவ்வாய் சனியுடன் சம்பந்தம் பெறும் போது விபத்து / காயம் ஏற்படும்.
பரிகாரம்: பழனி தண்டாயுதபாணி சுவாமியை வழிபட வாழ்வின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகி மன நிறைவான மண வாழ்க்கை கிட்டும்.
கடந்த காலங்களில் அபிஷேக செலவை, 3 பேர் ஏற்கும் வகையில் நடைமுறை இருந்து வந்தது. ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒருநாள் அபிஷேகத்தில் 5 பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு தினமும் காலையில் நடை திறக்கப்பட்டு, 1,008 வடைமாலை சாத்தப்படும்.
பின்னர் நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், பால், தயிர் மற்றும் மஞ்சள், சந்தனம் போன்ற நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதற்கான செலவை பக்தர்கள் ஏற்று நடத்தி வருகின்றனர்.
கடந்த காலங்களில் அபிஷேக செலவை, 3 பேர் ஏற்கும் வகையில் நடைமுறை இருந்து வந்தது. ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒருநாள் அபிஷேகத்தில் 5 பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி ஒரு நபருக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2022-ம் ஆண்டுக்கான வடமாலை அபிஷேகத்திற்கான முன்பதிவு தொடங்கியது.
பின்னர் நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், பால், தயிர் மற்றும் மஞ்சள், சந்தனம் போன்ற நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதற்கான செலவை பக்தர்கள் ஏற்று நடத்தி வருகின்றனர்.
கடந்த காலங்களில் அபிஷேக செலவை, 3 பேர் ஏற்கும் வகையில் நடைமுறை இருந்து வந்தது. ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒருநாள் அபிஷேகத்தில் 5 பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி ஒரு நபருக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2022-ம் ஆண்டுக்கான வடமாலை அபிஷேகத்திற்கான முன்பதிவு தொடங்கியது.
மீனாட்சி அம்மன் கோவிலில் பொது தரிசன பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதாகவும், கட்டண தரிசனத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்ககம் சார்பில் கலெக்டர் அனிஷ் சேகரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலுக்கு கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து அதிகளவில் வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு ஒய்வெடுக்கும் அறைகள் இல்லை. மேலும் அவர்கள் குளிக்க, கழிப்பறை செல்ல எந்தவொரு அடிப்படை வசதியும் சரியாக இல்லை. அதே போல் செல்போனை சார்ஜ் செய்வதற்கும் வசதி இல்லை.
மிக முக்கியமாக கட்டண தரிசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இலவச தரிசனம் செய்ய வரும் பக்தர்களை அதிக நேரம் காக்க வைக்கிறார்கள். இது குறித்து கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சிக்கும் புகார் மனு அனுப்பினோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.
அதே போல் கோவிலில் பக்தர்கள் சிறிய தேங்காய் உடைப்பதற்கு அனுமதி தர வேண்டும். கோவிலுக்கு புதிதாக வரும் வெளிமாநில பக்தர்கள் தங்கள் உடன் வருபவர்களை தவற விட்டு விடுகிறார்கள். எனவே அவர்களை தேடி அலையும் நிலை உள்ளது. எனவே கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தரிசன கட்டணத்தால் சிரமம் ஏற்படுகிறது. எனவே அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலுக்கு கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து அதிகளவில் வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு ஒய்வெடுக்கும் அறைகள் இல்லை. மேலும் அவர்கள் குளிக்க, கழிப்பறை செல்ல எந்தவொரு அடிப்படை வசதியும் சரியாக இல்லை. அதே போல் செல்போனை சார்ஜ் செய்வதற்கும் வசதி இல்லை.
மிக முக்கியமாக கட்டண தரிசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இலவச தரிசனம் செய்ய வரும் பக்தர்களை அதிக நேரம் காக்க வைக்கிறார்கள். இது குறித்து கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சிக்கும் புகார் மனு அனுப்பினோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.
அதே போல் கோவிலில் பக்தர்கள் சிறிய தேங்காய் உடைப்பதற்கு அனுமதி தர வேண்டும். கோவிலுக்கு புதிதாக வரும் வெளிமாநில பக்தர்கள் தங்கள் உடன் வருபவர்களை தவற விட்டு விடுகிறார்கள். எனவே அவர்களை தேடி அலையும் நிலை உள்ளது. எனவே கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தரிசன கட்டணத்தால் சிரமம் ஏற்படுகிறது. எனவே அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருக்குர்ஆன், நபிமொழிகளில் கூறப்பட்டவற்றை நாம் எடுத்துக் கொண்டு நற்குணங்களின் ஆளுமையின் கீழ் நம்மை ஈபடுத்திக் கொண்டால் நம் வாழ்வு செம்மையாகும்.
எதற்கும் அடங்காத அரபு குதிரைகள் போன்று கடிவாளமில்லாமல் வாழ்ந்த மக்களை, தனது நற்குணங்களைக் கொண்டு செம்மைப்படுத்தியவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
நற்குணங்கள் இல்லாத வாழ்க்கை, நாணல் வகையைச் சார்ந்தவையாகும். நிலையானதாக இருக்காது என்பதால் ஒழுக்கம் சார்ந்தவற்றில் மிகுந்த கவனம் செலுத்துகிறது இஸ்லாம்.
சொல்லும், செயலும் நேர்கோட்டில் பயணிப்பதுதான் ஆளுமையின் அடையாளமாகும். நபியவர்களின் ஆழ்மனதில் நங்கூரமிட்ட நற்குணங்களின் ஆணிவேரின் தாக்கம் அவர்களின் செயல், சொற்களில் தென்பட்டன.
‘இறைதூதுவை போதிக்க அனுப்பப்பட்டது போன்று, நற்குணங்களைப் போதிக்க அனுப்பப்பட்டுள்ளேன்’ என்று நபியின் பிரகடனம் கூறுகிறது.
“நல்ல ஒழுக்கங்களைப் பரிபூரணமாக்கு வதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்” என்பது நபி (ஸல்) மொழியாகும்.
ஓர் இறைக் கொள்கையை மக்களிடம் போதிக்க அனுப்பப்பட்டவர் நபி (ஸல்) அவர்கள். அதற்காகப் பல துன்பங்களை அனுபவித்தார்கள். நபியின் சொல், செயல் கண்டு பலர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றார்கள். ஒரு சிலர் ஏற்க மறுத்தார்கள். ஏகத்துவத்தை வாழ் வியல் நெறியாக ஏற்க மறுக்கும் மக்களைச் சபிக்கும்படி கோரப்பட்டத் தருணத்தில், ‘சபிக்கக் கூடிய பணி என் பணியல்ல’ என்று மறுமொழி தெரிவித்த சம்பவம் நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் இடம்பெற்றுள்ளது.
“அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து, உங்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரிகளாக இருப்பவர்கள் மீது சாபமிடும்படி நபி ஸல் அவர்களிடம் வேண்டப்பட்டது. ‘நான் யாரையும் சாபமிடுபவனாக அனுப்பப்படவில்லை, இரக்கம் காட்டுபவனாகவே அனுப்பப்பட்டுள்ளேன்’ என நபி (ஸல்) கூறினார்”. (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), நூல்: முஸ்லிம்)
நற்பண்புகளின் நாயகர் நபி (ஸல்) அவர்கள் என்பதை நாம் திருக்குர்ஆன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. தனது திருமறையில் நபியின் நற்குணத்திற்கு அல்லாஹ் சாட்சி பகருகின்றான். இதுவே நபியவர்களின் நற்குணங்களுக்கு முதல் ஆதாரமாக மாறுகிறது.
“மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்”. (திருக்குர்ஆன் 68:4)
தனக்கு ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளுதல், மன்னிப்பது, இவையெல்லாம் இயற்கையாக நபி (ஸல்) அவர்களுக்கு அமைந்த குணங்களில் ஒன்றாகும். தன்னுடைய சொந்த விஷயத்திற்காக யாரையும் பழிவாங்கும் பழக்கம் இல்லாதவராக வாழ்ந்தவர் நபி (ஸல்) அவர்கள்.
“ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்: இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் நபி (ஸல்) அவர்கள் அதில் மிக எளிதானவற்றையே எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அது பாவமாக இருக்கக் கூடாது. அது பாவமானதாக இருந்தால் அதை விட்டு வெகு தூரம் சென்று விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்காக யாரையும் பழிவாங்கியதில்லை. எனினும், அல்லாஹ்வின் கண்ணியம் பாழாக்கப்பட்டால், அல்லாஹ்வுக்காகப் பழிவாங்குவார்கள். மெதுவாகக் கோபம் வரும். விரைவாக மகிழ்ச்சி அடைவார்கள். கணக்கிட முடியாத அளவு தான தர்மங்களை வழங்கி வந்தார்கள். வறுமைக்கு அஞ்சாமல் ஏழை எளியோருக்குத் தேவையுடையோருக்குச் செலவு செய்தார்கள்”. (நூல்: ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தினால், அது மனிதச் சமூகத்திற்கு நலன் பயக்கும். ஒரு விஷயத்தை விட்டு தவிர்த்து கொண்டால் அதுவும் மனித சமூகத்திற்கு பயன்தரும். ஆக நபி (ஸல்) அவர்களின் சொல், செயல் இரண்டும் மானுட அமைதிக்கு வழிவகுக்கும்.
நபியின் வாழ்வு எப்படி அமைந்தது என்று கேட்கப்பட்டபோது. `அவர்களின் வாழ்க்கை குர்ஆனாக இருந்தது' என்ற பதில் கிடைத்தது. ஆம், திருக்குர்ஆன், நபிமொழிகளில் கூறப்பட்டவற்றை நாம் எடுத்துக் கொண்டு நற்குணங்களின் ஆளுமையின் கீழ் நம்மை ஈபடுத்திக் கொண்டால் நம் வாழ்வு செம்மையாகும்.
ஏ.எச். யாசிர்அரபாத் ஹசனி, லால்பேட்டை.
நற்குணங்கள் இல்லாத வாழ்க்கை, நாணல் வகையைச் சார்ந்தவையாகும். நிலையானதாக இருக்காது என்பதால் ஒழுக்கம் சார்ந்தவற்றில் மிகுந்த கவனம் செலுத்துகிறது இஸ்லாம்.
சொல்லும், செயலும் நேர்கோட்டில் பயணிப்பதுதான் ஆளுமையின் அடையாளமாகும். நபியவர்களின் ஆழ்மனதில் நங்கூரமிட்ட நற்குணங்களின் ஆணிவேரின் தாக்கம் அவர்களின் செயல், சொற்களில் தென்பட்டன.
‘இறைதூதுவை போதிக்க அனுப்பப்பட்டது போன்று, நற்குணங்களைப் போதிக்க அனுப்பப்பட்டுள்ளேன்’ என்று நபியின் பிரகடனம் கூறுகிறது.
“நல்ல ஒழுக்கங்களைப் பரிபூரணமாக்கு வதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்” என்பது நபி (ஸல்) மொழியாகும்.
ஓர் இறைக் கொள்கையை மக்களிடம் போதிக்க அனுப்பப்பட்டவர் நபி (ஸல்) அவர்கள். அதற்காகப் பல துன்பங்களை அனுபவித்தார்கள். நபியின் சொல், செயல் கண்டு பலர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றார்கள். ஒரு சிலர் ஏற்க மறுத்தார்கள். ஏகத்துவத்தை வாழ் வியல் நெறியாக ஏற்க மறுக்கும் மக்களைச் சபிக்கும்படி கோரப்பட்டத் தருணத்தில், ‘சபிக்கக் கூடிய பணி என் பணியல்ல’ என்று மறுமொழி தெரிவித்த சம்பவம் நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் இடம்பெற்றுள்ளது.
“அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து, உங்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரிகளாக இருப்பவர்கள் மீது சாபமிடும்படி நபி ஸல் அவர்களிடம் வேண்டப்பட்டது. ‘நான் யாரையும் சாபமிடுபவனாக அனுப்பப்படவில்லை, இரக்கம் காட்டுபவனாகவே அனுப்பப்பட்டுள்ளேன்’ என நபி (ஸல்) கூறினார்”. (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), நூல்: முஸ்லிம்)
நற்பண்புகளின் நாயகர் நபி (ஸல்) அவர்கள் என்பதை நாம் திருக்குர்ஆன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. தனது திருமறையில் நபியின் நற்குணத்திற்கு அல்லாஹ் சாட்சி பகருகின்றான். இதுவே நபியவர்களின் நற்குணங்களுக்கு முதல் ஆதாரமாக மாறுகிறது.
“மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்”. (திருக்குர்ஆன் 68:4)
தனக்கு ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளுதல், மன்னிப்பது, இவையெல்லாம் இயற்கையாக நபி (ஸல்) அவர்களுக்கு அமைந்த குணங்களில் ஒன்றாகும். தன்னுடைய சொந்த விஷயத்திற்காக யாரையும் பழிவாங்கும் பழக்கம் இல்லாதவராக வாழ்ந்தவர் நபி (ஸல்) அவர்கள்.
“ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்: இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் நபி (ஸல்) அவர்கள் அதில் மிக எளிதானவற்றையே எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அது பாவமாக இருக்கக் கூடாது. அது பாவமானதாக இருந்தால் அதை விட்டு வெகு தூரம் சென்று விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்காக யாரையும் பழிவாங்கியதில்லை. எனினும், அல்லாஹ்வின் கண்ணியம் பாழாக்கப்பட்டால், அல்லாஹ்வுக்காகப் பழிவாங்குவார்கள். மெதுவாகக் கோபம் வரும். விரைவாக மகிழ்ச்சி அடைவார்கள். கணக்கிட முடியாத அளவு தான தர்மங்களை வழங்கி வந்தார்கள். வறுமைக்கு அஞ்சாமல் ஏழை எளியோருக்குத் தேவையுடையோருக்குச் செலவு செய்தார்கள்”. (நூல்: ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தினால், அது மனிதச் சமூகத்திற்கு நலன் பயக்கும். ஒரு விஷயத்தை விட்டு தவிர்த்து கொண்டால் அதுவும் மனித சமூகத்திற்கு பயன்தரும். ஆக நபி (ஸல்) அவர்களின் சொல், செயல் இரண்டும் மானுட அமைதிக்கு வழிவகுக்கும்.
நபியின் வாழ்வு எப்படி அமைந்தது என்று கேட்கப்பட்டபோது. `அவர்களின் வாழ்க்கை குர்ஆனாக இருந்தது' என்ற பதில் கிடைத்தது. ஆம், திருக்குர்ஆன், நபிமொழிகளில் கூறப்பட்டவற்றை நாம் எடுத்துக் கொண்டு நற்குணங்களின் ஆளுமையின் கீழ் நம்மை ஈபடுத்திக் கொண்டால் நம் வாழ்வு செம்மையாகும்.
ஏ.எச். யாசிர்அரபாத் ஹசனி, லால்பேட்டை.
மண்டல பூஜைக்காக நாளை (புதன்கிழமை) காலை 7 மணிக்கு தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு புறப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் சபரிமலைக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மண்டல பூஜைக்காக நாளை (புதன்கிழமை) காலை 7 மணிக்கு தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு புறப்படுகிறது. பல்லக்கு வாகனத்தில் புறப்படும் அங்கிக்கு போலீஸ் சார்பில் துப்பாக்கி ஏந்திய வரவேற்பு அளிக்கப்படுகிறது.
நாளை இரவு ஓமல்லூரிலும், 23-ந் தேதி இரவு கோண்ணியிலும், 24-ந் தேதி பெரிநாட்டிலும் இரவு நேரம் தங்கிய பிறகு 25-ந் தேதி மதியம் தங்க அங்கி பம்பை கணபதி கோவில் வந்து சேரும். பின்னர் அங்கிருந்து மேள, தாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு செல்வார்கள். அன்று மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும்.
தொடர்ந்து 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்படும் தங்க அங்கி 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் வழக்கமான பூஜைகளுடன் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். மீண்டும் 26-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். காலை 11 மணிக்கு நடைபெறும் களபாபிஷேகத்திற்கு பிறகு 11.55 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜைகள் நடைபெறும். அத்துடன் 41 நாள் மண்டல பூஜை நிறைவு பெறும்.
நாளை இரவு ஓமல்லூரிலும், 23-ந் தேதி இரவு கோண்ணியிலும், 24-ந் தேதி பெரிநாட்டிலும் இரவு நேரம் தங்கிய பிறகு 25-ந் தேதி மதியம் தங்க அங்கி பம்பை கணபதி கோவில் வந்து சேரும். பின்னர் அங்கிருந்து மேள, தாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு செல்வார்கள். அன்று மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும்.
தொடர்ந்து 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்படும் தங்க அங்கி 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் வழக்கமான பூஜைகளுடன் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். மீண்டும் 26-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். காலை 11 மணிக்கு நடைபெறும் களபாபிஷேகத்திற்கு பிறகு 11.55 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜைகள் நடைபெறும். அத்துடன் 41 நாள் மண்டல பூஜை நிறைவு பெறும்.
டிசம்பர் மாதம் 21-ம் தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 27-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
21-ம் தேதி செவ்வாய் கிழமை :
* கரிநாள்
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை
* பத்ராசலம் ராபிரான் புறப்பாடு
* சந்திராஷ்டமம் - கேட்டை, மூலம்
22-ம் தேதி புதன் கிழமை :
* சங்கடஹர சதுர்த்தி
* சித்தயோகம்
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை
* சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்
23-ம் தேதி வியாழக்கிழமை :
* அமிர்தயோகம்
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை
* விநாயகர் தரிசனம் நன்று
* சந்திராஷ்டமம்- பூராடம், உத்திராடம்
24-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* கரிநாள்
* கிறிஸ்மஸ் ஈவ்
* தேய்பிறை பஞ்சமி திதி
* சந்திராஷ்டமம் - உத்திராடம், திருவோணம்
25-ம் தேதி சனிக்கிழமை :
* கிறிஸ்மஸ் பண்டிகை
* ஸ்ரீவில்லிபுத்தூர், திருமயம் தலங்களில் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு
* குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் ஆராதனை
* கருட தரிசனம் நன்று
* சந்திராஷ்டமம் - திருவோணம், அவிட்டம்
26-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* அமிர்தயோகம்
* கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
* இன்று கண்ணூறு கழித்தல், சூரிய வழிபாடு, ஆரோக்கிய ஸ்நானம் செய்ய நன்று.
* சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்
27-ம் தேதி திங்கள் கிழமை :
* தேய்பிறை அஷ்டமி
* சித்தயோகம்
* அஷ்டமி பிரதட்சணம்
* சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி
* கரிநாள்
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை
* பத்ராசலம் ராபிரான் புறப்பாடு
* சந்திராஷ்டமம் - கேட்டை, மூலம்
22-ம் தேதி புதன் கிழமை :
* சங்கடஹர சதுர்த்தி
* சித்தயோகம்
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை
* சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்
23-ம் தேதி வியாழக்கிழமை :
* அமிர்தயோகம்
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை
* விநாயகர் தரிசனம் நன்று
* சந்திராஷ்டமம்- பூராடம், உத்திராடம்
24-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* கரிநாள்
* கிறிஸ்மஸ் ஈவ்
* தேய்பிறை பஞ்சமி திதி
* சந்திராஷ்டமம் - உத்திராடம், திருவோணம்
25-ம் தேதி சனிக்கிழமை :
* கிறிஸ்மஸ் பண்டிகை
* ஸ்ரீவில்லிபுத்தூர், திருமயம் தலங்களில் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு
* குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் ஆராதனை
* கருட தரிசனம் நன்று
* சந்திராஷ்டமம் - திருவோணம், அவிட்டம்
26-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* அமிர்தயோகம்
* கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
* இன்று கண்ணூறு கழித்தல், சூரிய வழிபாடு, ஆரோக்கிய ஸ்நானம் செய்ய நன்று.
* சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்
27-ம் தேதி திங்கள் கிழமை :
* தேய்பிறை அஷ்டமி
* சித்தயோகம்
* அஷ்டமி பிரதட்சணம்
* சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருக்கைத்தல சேவை நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது. அப்போது உற்சவர் நம்பெருமாளை அர்ச்சகர்கள் கைகளில் ஏந்தி, எதிரில் நிற்கும் பக்தர்களுக்கும், பராங்குச நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி காத்திருக்கும் நம்மாழ்வாருக்கும் நன்கு தெரியும்படி காட்டுவார்கள். அர்ச்சகர்களின் கைகளில் இருந்து நம்பெருமாள் சேவை சாதிப்பதால், இந்த நிகழ்ச்சிக்கு திருக்கைத்தல சேவை என்று பெயர்.
திருக்கைத்தல சேவையையொட்டி மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு பரமபதவாசலை கடந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு திருமாமணி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு மாலை 5.30 மணி முதல் மாலை 6 மணிவரை திருக்கைத்தல சேவை (நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில்) நடைபெற்றது. மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொது ஜனசேவையும் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பரமபத வாசல் திறப்பு கிடையாது. வேடுபறி நிகழ்ச்சியையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வையாளி வகையறா கண்டருளுகிறார். பின்னர் இரவு 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைகிறார். அங்கு இரவு 8.15 மணிமுதல் இரவு 9.30 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொதுஜனசேவையும் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
10-ம் திருநாளான 23-ந்தேதி தீர்த்தவாரியும், 24- ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவிஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருக்கைத்தல சேவையையொட்டி மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு பரமபதவாசலை கடந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு திருமாமணி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு மாலை 5.30 மணி முதல் மாலை 6 மணிவரை திருக்கைத்தல சேவை (நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில்) நடைபெற்றது. மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொது ஜனசேவையும் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பரமபத வாசல் திறப்பு கிடையாது. வேடுபறி நிகழ்ச்சியையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வையாளி வகையறா கண்டருளுகிறார். பின்னர் இரவு 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைகிறார். அங்கு இரவு 8.15 மணிமுதல் இரவு 9.30 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொதுஜனசேவையும் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
10-ம் திருநாளான 23-ந்தேதி தீர்த்தவாரியும், 24- ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவிஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 9-வது தலம் என்ற சிறப்பை பெற்றிருக்கிறது. காசிக்கு நிகராக சொல்லப்படும் ஆறு தலங்களில் இதுவும் ஒன்று.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் உள்ளது, சாயாவனம் என்ற ஊர். இந்த ஊரின் சாலைஓரத்திலேயே, மிகவும் பழமையான சாயாவனேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 9-வது தலம் என்ற சிறப்பை பெற்றிருக்கிறது. காசிக்கு நிகராக சொல்லப்படும் ஆறு தலங்களில் இதுவும் ஒன்று.
தேவலோகத்தின் அதிபதியான இந்திரனின் தாய் அதிதிக்கு, பூலோகத்தில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபாடு செய்ய வேண்டும் என்ற ஆசை நெடுநாட்களாக இருந்துவந்தது. அந்த ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, அதிதி பூமிக்கு வந்தாள். தாயை காணாமல் தேடிய இந்திரன், தனது தாய் சாயாவனத்தில் இருப்பதையும், அந்த வனத்தில் இருக்கும் இறைவனின் சிறப்பையும் பற்றி அறிந்துகொண்டான்.
அவன் தன் தாய் மீது கொண்ட பாசத்தின் காரணமாக, தனது தாய் தினமும் வழிபாடு செய்யும் வகையில் சாயாவனேஸ்வரர் ஆலயத்தை, சொர்க்கலோகத்திற்கே கொண்டு சென்று விடுவது என்று முடிவெடுத்தான். இதற்காக தன்னுடைய வாகனமான ஐராவதம் என்ற பெயர் கொண்ட வெள்ளை யானையை வைத்து, கோவிலை இழுத்துச் செல்ல முயற்சித்தான். அப்போது பார்வதி தேவி, குயில் போல இனிமையாக கூவினாள். இதன் காரணமாகத்தான் இத்தல அம்மனுக்கு ‘குயிலினும் இனிமொழியம்மை’ என்ற பெயர் வந்தது. இனிமையான சத்தம் கேட்டதும், அந்த இடத்தில் தோன்றிய சிவபெருமான், இந்திரன் செய்யும் தவறை சுட்டிக்காட்டினார். பின்னர், “நீயும் உன் தாயாரும் இங்கேயே வந்து வழிபாடு செய்து கொள்ளுங்கள். தேவலோகத்திற்கு ஆலயத்தை எடுத்துச் செல்வது என்பது நடக்காத காரியம்” என்றார். இதையடுத்து இந்திரனும், அவனது தாய் அதிதியும் பூலோகத்திற்கு வந்தே ஆலயத்தை தரிசனம் செய்து சென்றனர்.
‘சாய்’ என்பதற்கு ‘கோரை’ என்று பொருள். இந்தப் பகுதியில் பசுமையான கோரைப்புற்கள் மிகுந்திருந்த காரணத்தால், இது ‘சாய்காடு’ என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள சாயாவனேஸ்வரர் ஆலயத்தை, சோழ மன்னர்களில் ஒருவனான கோச்செங்கட் சோழன் கட்டியிருக்கிறான். அவன் அமைத்த பெரும்பாலான கோவில்கள் மாடக்கோவில் அமைப்பைக் கொண்டதாகும். அதாவது யானையால் ஏறிச் செல்ல முடியாத வகையில் கட்டப்பட்ட ஆலயங்கள். அப்படிப்பட்ட மாடக்கோவில்களில் ஒன்றுதான், சாயாவனேஸ்வரர் கோவிலும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திருத்தலம் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதாக விளங்குகிறது. சிவனடியார்கள் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாத இயற்பகையார் பிறந்து, முக்தி அடைந்த திருத்தலம் இதுவாகும். மேலும் இந்த ஆலயத்தில் வில்லேந்திய திருக்கோலத்தில் வித்தியாசமான தோற்றத்தில் முருகப் பெருமான் வீற்றிருக்கிறார். பஞ்சலோகத்தால் ஆன திருமேனி இதுவாகும். நான்கு கரங்களுடன் உயர்ந்த மயிலுடன் வீற்றிருக்கும் இந்த சிலையை, நெடுங்காலத்திற்கு முன்பு கடலில் இருந்து கண்டெடுத்ததாகக் சொல் கிறார்கள். எதிரிகள் பயம் விலக இந்த வில்லேந்திய வேலவனை வழிபடலாம் என்கிறார்கள்.
இத்தல இறைவனான சாயாவனேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். வாழ்வில் அனைத்து இன்பங்களும் கிடைக்க, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபடலாம். தங்களின் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள், இறைவனுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும் சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த ஆலயத்தில் சித்திரை மாத பவுர்ணமி அன்று தொடங்கி 21 நாட்கள் நடைபெறும் இந்திர விழா பிரசித்தமானது. அதே போல் ஆடி அமாவாசையில் நடைபெறும் அன்னமளிப்பு விழா, இயற்பகை நாயனார் திருவிழா போன்றவையும் விமரிசையாக நடைபெறும்.
தேவலோகத்தின் அதிபதியான இந்திரனின் தாய் அதிதிக்கு, பூலோகத்தில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபாடு செய்ய வேண்டும் என்ற ஆசை நெடுநாட்களாக இருந்துவந்தது. அந்த ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, அதிதி பூமிக்கு வந்தாள். தாயை காணாமல் தேடிய இந்திரன், தனது தாய் சாயாவனத்தில் இருப்பதையும், அந்த வனத்தில் இருக்கும் இறைவனின் சிறப்பையும் பற்றி அறிந்துகொண்டான்.
அவன் தன் தாய் மீது கொண்ட பாசத்தின் காரணமாக, தனது தாய் தினமும் வழிபாடு செய்யும் வகையில் சாயாவனேஸ்வரர் ஆலயத்தை, சொர்க்கலோகத்திற்கே கொண்டு சென்று விடுவது என்று முடிவெடுத்தான். இதற்காக தன்னுடைய வாகனமான ஐராவதம் என்ற பெயர் கொண்ட வெள்ளை யானையை வைத்து, கோவிலை இழுத்துச் செல்ல முயற்சித்தான். அப்போது பார்வதி தேவி, குயில் போல இனிமையாக கூவினாள். இதன் காரணமாகத்தான் இத்தல அம்மனுக்கு ‘குயிலினும் இனிமொழியம்மை’ என்ற பெயர் வந்தது. இனிமையான சத்தம் கேட்டதும், அந்த இடத்தில் தோன்றிய சிவபெருமான், இந்திரன் செய்யும் தவறை சுட்டிக்காட்டினார். பின்னர், “நீயும் உன் தாயாரும் இங்கேயே வந்து வழிபாடு செய்து கொள்ளுங்கள். தேவலோகத்திற்கு ஆலயத்தை எடுத்துச் செல்வது என்பது நடக்காத காரியம்” என்றார். இதையடுத்து இந்திரனும், அவனது தாய் அதிதியும் பூலோகத்திற்கு வந்தே ஆலயத்தை தரிசனம் செய்து சென்றனர்.
‘சாய்’ என்பதற்கு ‘கோரை’ என்று பொருள். இந்தப் பகுதியில் பசுமையான கோரைப்புற்கள் மிகுந்திருந்த காரணத்தால், இது ‘சாய்காடு’ என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள சாயாவனேஸ்வரர் ஆலயத்தை, சோழ மன்னர்களில் ஒருவனான கோச்செங்கட் சோழன் கட்டியிருக்கிறான். அவன் அமைத்த பெரும்பாலான கோவில்கள் மாடக்கோவில் அமைப்பைக் கொண்டதாகும். அதாவது யானையால் ஏறிச் செல்ல முடியாத வகையில் கட்டப்பட்ட ஆலயங்கள். அப்படிப்பட்ட மாடக்கோவில்களில் ஒன்றுதான், சாயாவனேஸ்வரர் கோவிலும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திருத்தலம் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதாக விளங்குகிறது. சிவனடியார்கள் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாத இயற்பகையார் பிறந்து, முக்தி அடைந்த திருத்தலம் இதுவாகும். மேலும் இந்த ஆலயத்தில் வில்லேந்திய திருக்கோலத்தில் வித்தியாசமான தோற்றத்தில் முருகப் பெருமான் வீற்றிருக்கிறார். பஞ்சலோகத்தால் ஆன திருமேனி இதுவாகும். நான்கு கரங்களுடன் உயர்ந்த மயிலுடன் வீற்றிருக்கும் இந்த சிலையை, நெடுங்காலத்திற்கு முன்பு கடலில் இருந்து கண்டெடுத்ததாகக் சொல் கிறார்கள். எதிரிகள் பயம் விலக இந்த வில்லேந்திய வேலவனை வழிபடலாம் என்கிறார்கள்.
இத்தல இறைவனான சாயாவனேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். வாழ்வில் அனைத்து இன்பங்களும் கிடைக்க, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபடலாம். தங்களின் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள், இறைவனுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும் சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த ஆலயத்தில் சித்திரை மாத பவுர்ணமி அன்று தொடங்கி 21 நாட்கள் நடைபெறும் இந்திர விழா பிரசித்தமானது. அதே போல் ஆடி அமாவாசையில் நடைபெறும் அன்னமளிப்பு விழா, இயற்பகை நாயனார் திருவிழா போன்றவையும் விமரிசையாக நடைபெறும்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப மை பிரசாதம் வருகிற 23-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் பக்தர்களுக்கு வழங்க கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கோவிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் கடந்த நவம்பர் மாதம் 19-ந் தேதி ஏற்றப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் மகா தீபம் காட்சி அளித்தது.
மகா தீப கொப்பரையில் இருந்து எடுக்கப்பட்ட தீப மை ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜருக்கு திலகமிடப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படும். அதன்படி தீப மை நேற்று நடராஜருக்கு திலகமிடப்பட்டது.
தொடர்ந்து தீப மை பிரசாதம் வருகிற 23-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் பக்தர்களுக்கு வழங்க கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து கோவில் நிர்வாக அலுவலத்தில் தீப மை பெற்றுக் கொள்ளலாம் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகா தீப கொப்பரையில் இருந்து எடுக்கப்பட்ட தீப மை ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜருக்கு திலகமிடப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படும். அதன்படி தீப மை நேற்று நடராஜருக்கு திலகமிடப்பட்டது.
தொடர்ந்து தீப மை பிரசாதம் வருகிற 23-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் பக்தர்களுக்கு வழங்க கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து கோவில் நிர்வாக அலுவலத்தில் தீப மை பெற்றுக் கொள்ளலாம் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்விரத முறையை மேற்கொள்வதால் வாழ்வின் பதினாறு செல்வங்கள் கிடைக்கும். தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரத முறையை பின்பற்றுவதால் வாழ்வில் பெரும்பேறும், முக்தியும் கிடைக்கும்.
கைசிக ஏகாதசி விரதமுறையைப் பின்பற்றுவதால் உயர்ந்த நன்மைகள் கிடைக்கும். பூலோகத்தில் சொர்க்க வாழ்வு கிடைக்கும். கார்த்திகை மாதம் அனங்க திரயோதசி தினத்தன்று ரதி-மன் மதனை வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும்.
கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து பன்னிரெண்டு வாரங்கள் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. நவகிரகங்கள் இவ்விரதத்தை மேற்கொண்டே வரம் பெற்றனர். எனவே இவ்விரத முறையை கடைப்பிடிப்பதால் நவகிரகப் பாதிப்புகள் நீங்கி இறைவனின் அருள் கிடைக்கும். கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது.
கார்த்திகை விரதம் என்பது முருகப்பெருமானை குறித்து கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையில் பகலில் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்து வர வேண்டும். இவ்விரத முறையை மேற்கொள்வதால் வாழ்வின் பதினாறு செல்வங்கள் கிடைக்கும். தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரத முறையை பின்பற்றுவதால் வாழ்வில் பெரும்பேறும், முக்தியும் கிடைக்கும்.
கைசிக ஏகாதசி விரதமிருந்தால் காசியில் கங்கையில் குளித்த பலனைக் காட்டிலும், நைமிஷாரண்ய காட்டில் குளித்ததை விடவும், புஷ்கரணியில் குளித்ததை விடவும் பலன் அதிகம். கைசிக ஏகாதசியை பற்றி கேட்பவர்களுக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். சாளக்ராமக் கற்கள் அதிகமாக கிடைக்கும் கெண்டகி நதியில் குளித்த பலன் மற்றும் கோதாவரி நதியில் திங்கட்கிழமை வரும் பவுர்ணமி அன்று குரு பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரிக்கும் போது குளிக்கும் பலனை விட அதிகமாக கைசிக ஏகாதசி விரத பலன் தரும்.
கைசிக விரதம் இருப்பவர்களுக்கு இமய மலையில் கேதாரநாதரை தரிசித்த பலனை விட அதிகம் கிடைக்கும். குருக்ஷேத்திரத்தில் சூரிய கிரகணம் அன்று குளித்த பலனை விட அதிகம் பெறலாம். வேத சாஸ்திரங்களை படிப்பதை காட்டிலும் பலன் வாய்ந்தது. இந்த பூமியை அதன் காடுகள் சமுத்திரங்களோடு தானம் கொடுத்ததற்கு ஒப்பானது.
இந்த ஏகாதசி விரதமிருந்தால் எதிர்காலத்தில் பிறப்பின்றி வைகுண்டம் சேரலாம். முந்தைய ஜென்மங்களின் பாவ சுமையிலிருந்து விடுபடலாம். கைசிக ஏகாதசி விரதமிருப்போரை எமராஜனும் சித்திரகுப்தரும் அண்ட மாட்டார்கள். கைசிக ஏகாதசி அன்று ஒரு துளசி இலை கொண்டு விஷ்ணுவை வணங்குவது நவரத்தினங்களை பகவானுக்கு சமர்ப்பிப்பதை காட்டிலும் உத்தமமானது.
அன்றைய தினம் நெய் விளக்கு ஏற்றி ஸ்ரீஹரியை வணங்கினால் மூதாதையர்கள் சொர்க்கத்திற்கு முன்னேறுவார்கள். கைசிக ஏகாதசி அன்று துளசி தாயை வணங்குபவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடு படுவார்கள். கைசிக ஏகாதசி விரதமிருப்போரை தேவர்களும், நாகர்களும் போற்றுவார்கள். அன்றைய தினம் விரதமிருந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பவர்களுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கி அனைத்து நற்பலனும் கிடைப்பதோடு புத்திர தோஷமும் நீங்கும்.
கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் எல்லா பாவங்களும் விலகும். இப்படி நீராடுவதை, கார்த்திகை நீராடல் என்று கூறுவார்கள். ஸ்ரீவாஞ்சியம் என்ற தலத்தில் அமைந்துள்ள திருக்குளம் குப்தகங்கை என அழைக்கப்படுகிறது. கங்கையானவள் 999 பாகம் ரகசியமாக இந்த குப்தகங்கையில் வசிக்கிறாள். மீதி ஒரு பாகம்தான் காசியில் உள்ள கங்கையில் உள்ளாள். எனவே காசியை விட இங்குள்ள கங்கைக்கே பெருமை அதிகம் என்பர்.
கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்மஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள். கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து பன்னிரெண்டு வாரங்கள் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. நவகிரகங்கள் இவ்விரதத்தை மேற்கொண்டே வரம் பெற்றனர். எனவே இவ்விரத முறையை கடைப்பிடிப்பதால் நவகிரகப் பாதிப்புகள் நீங்கி இறைவனின் அருள் கிடைக்கும். கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது.
கார்த்திகை விரதம் என்பது முருகப்பெருமானை குறித்து கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையில் பகலில் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்து வர வேண்டும். இவ்விரத முறையை மேற்கொள்வதால் வாழ்வின் பதினாறு செல்வங்கள் கிடைக்கும். தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரத முறையை பின்பற்றுவதால் வாழ்வில் பெரும்பேறும், முக்தியும் கிடைக்கும்.
கைசிக ஏகாதசி விரதமிருந்தால் காசியில் கங்கையில் குளித்த பலனைக் காட்டிலும், நைமிஷாரண்ய காட்டில் குளித்ததை விடவும், புஷ்கரணியில் குளித்ததை விடவும் பலன் அதிகம். கைசிக ஏகாதசியை பற்றி கேட்பவர்களுக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். சாளக்ராமக் கற்கள் அதிகமாக கிடைக்கும் கெண்டகி நதியில் குளித்த பலன் மற்றும் கோதாவரி நதியில் திங்கட்கிழமை வரும் பவுர்ணமி அன்று குரு பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரிக்கும் போது குளிக்கும் பலனை விட அதிகமாக கைசிக ஏகாதசி விரத பலன் தரும்.
கைசிக விரதம் இருப்பவர்களுக்கு இமய மலையில் கேதாரநாதரை தரிசித்த பலனை விட அதிகம் கிடைக்கும். குருக்ஷேத்திரத்தில் சூரிய கிரகணம் அன்று குளித்த பலனை விட அதிகம் பெறலாம். வேத சாஸ்திரங்களை படிப்பதை காட்டிலும் பலன் வாய்ந்தது. இந்த பூமியை அதன் காடுகள் சமுத்திரங்களோடு தானம் கொடுத்ததற்கு ஒப்பானது.
இந்த ஏகாதசி விரதமிருந்தால் எதிர்காலத்தில் பிறப்பின்றி வைகுண்டம் சேரலாம். முந்தைய ஜென்மங்களின் பாவ சுமையிலிருந்து விடுபடலாம். கைசிக ஏகாதசி விரதமிருப்போரை எமராஜனும் சித்திரகுப்தரும் அண்ட மாட்டார்கள். கைசிக ஏகாதசி அன்று ஒரு துளசி இலை கொண்டு விஷ்ணுவை வணங்குவது நவரத்தினங்களை பகவானுக்கு சமர்ப்பிப்பதை காட்டிலும் உத்தமமானது.
அன்றைய தினம் நெய் விளக்கு ஏற்றி ஸ்ரீஹரியை வணங்கினால் மூதாதையர்கள் சொர்க்கத்திற்கு முன்னேறுவார்கள். கைசிக ஏகாதசி அன்று துளசி தாயை வணங்குபவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடு படுவார்கள். கைசிக ஏகாதசி விரதமிருப்போரை தேவர்களும், நாகர்களும் போற்றுவார்கள். அன்றைய தினம் விரதமிருந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பவர்களுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கி அனைத்து நற்பலனும் கிடைப்பதோடு புத்திர தோஷமும் நீங்கும்.
கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் எல்லா பாவங்களும் விலகும். இப்படி நீராடுவதை, கார்த்திகை நீராடல் என்று கூறுவார்கள். ஸ்ரீவாஞ்சியம் என்ற தலத்தில் அமைந்துள்ள திருக்குளம் குப்தகங்கை என அழைக்கப்படுகிறது. கங்கையானவள் 999 பாகம் ரகசியமாக இந்த குப்தகங்கையில் வசிக்கிறாள். மீதி ஒரு பாகம்தான் காசியில் உள்ள கங்கையில் உள்ளாள். எனவே காசியை விட இங்குள்ள கங்கைக்கே பெருமை அதிகம் என்பர்.
கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்மஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள். கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
ஆருத்ரா தினமான அன்று மட்டுமே, நடராஜரை மரகதக் கோலத்தில் கண்டுகளிக்கலாம். அன்றைய தினம் பூசப்படும் சந்தனக் காப்பிலேயே அடுத்த மார்கழி திருவாதிரை வரை நடராஜர் காட்சி தருவார்.
தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான சிவாலயங்கள் இருக்கின்றன. இவற்றில் 276 தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் என்ற சிறப்பை பெற்றவை.
இந்த பழம்பெரும் சிவத்தலங்களில் மகத்துவமும் தனித்துவமும் நிறைந்தது உத்தரகோசமங்கை எனும் திருத்தலமாகும். இந்த திருத்தலம் ராமநாதபுரத்துக்கு மிக, மிக அருகில் உள்ளது.
சிவத்தலங்களில் பாடல் பெற்ற முதல் தலம் இந்த தலம்தான். இதன்மூலம் இந்த தலமே தமிழ்நாட்டின் முதல் சிவாலயம் என்பதை உறுதிபடுத்துகிறது.
சமயக்குறவர்களில் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் தம் வாழ்நாளில் பெரும் பகுதியை இத்தலத்தில் கழித்தார். அவர் தன் பாடலில், சிவன் உண்பதும், உறங்குவதும் உத்தரகோசமங்கை தலத்தில்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓம் எனும் பிரணவ மந்திரத்தை பார்வதிதேவிக்கு சிவபெருமான் இத்தலத்தில் வைத்துதான் ரகசியமாக சொல்லி கொடுத்தார் என்பார்கள். அதுபோல பார்வதிக்கு நாட்டியக்கலையை ஈசன் இங்கு ரகசியமாக சொல்லிக் கொடுத்தார் என்பார்கள். ‘மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது’ என்பார்கள். உலகிலேயே முதலில் தோன்றிய சிவன் கோவில் இது என்று கூறப்படுகிறது.
ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது என்பதில் இருந்தே, இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம். சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும். அதனால் இந்த ஊருக்கு உத்தரகோசமங்கை என்ற பெயர் தோன்றியது என்று சொல்கிறார்கள். அதாவது உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது என்கிறார்கள்.
ஆனால் இத்தல பெயர் விளக்கத்துக்கு வேறொன்றும் சொல்லப்படுகிறது. உத்திரம் என்றால் உபதேசம். கோசம் என்றால் ரகசியம். மங்கை என்றால் பார்வதி என்று பொருள். பார்வதிதேவிக்கு ஈசன் ரகசியமாக வேதத்தை உபதேசம் செய்த இடம் என்ற அர்த்தத்தில் இத்தலம் உத்தரகோச மங்கை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது என்கிறார்கள்.
இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர். அந்த இலந்தை மரமே இவ்வாலயத்தின் தலவிருட்சமாக விளங்கு கிறது. மங்கள நாதரின் உடனுறை அம்பிகையின் திருநாமம் மங்களேஸ்வரி என்பதாகும். மாணிக்கவாசகர் இத் தலத்தில் சிவலிங்க வடி விலும், நின்ற கோலத் திலும் காட்சி தருகிறார். ‘நீத்தல் விண்ணப்பம்’ என்னும் திருவாசகப் பகுதி இத்தலத்தில் பாடப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. திருவாசகத்தில் 38 இடங் களில் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார் மாணிக்கவாசகர்.
உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது. பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள். அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள். மேலும் ராவணன்- மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.
இங்குள்ள நடராஜ பெருமான் ஐந்தரை அடி உயரம். முழுவதும் மரகத திருமேனி. ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை அன்று மட்டுமே சந்தனம் களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். அதுவும் 32 வகை மூலிகைகளால் அபிஷேகம் செய்யப்படும்.
ஆருத்ரா தினமான அன்று மட்டுமே, நடராஜரை மரகதக் கோலத்தில் கண்டுகளிக்கலாம். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு மீண்டும் சந்தனக் காப்பு செய்யப்பட்டு, நடராஜர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சூரிய உதயத்திற்கு முன்பு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்தச் சந்தனக் காப்பிலேயே அடுத்த மார்கழி திருவாதிரை வரை நடராஜர் காட்சி தருவார்.
இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட இத்தலத்தில் காலடி எடுத்து வைத்தாலே போதும், நம் மீதான தோஷங்கள் விலகி ஓடிவிடும். இத்தலம் ‘ஆதி சிதம்பரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அம்பிகைக்காக இங்கு அறையில் ஆடிய திருத்தாண்டவத்தை தான் நடராஜபெருமான், தில்லை அம்பலத்தில் முனிவர்களுக்காகவும், பக்தர்களுக்காகவும் ஆடுகிறார். எனவே இந்த ஆலயத்தில் உள்ள நடராஜர்தான், ஆதி நடராஜர் என்றும் கூறப்படுகிறது.
திருவாதிரை அன்று கோவிலில் அதிக கூட்டம் இருக்கும் காலை பத்து மணியில் இருந்து மரகத நடராஜரைப் பார்க்கலாம். இரவு 3 மணிக்கு மேல் சந்தனம் பூசிவிடுவார்கள் பிறகு அடுத்த வருடம்தான் மரகத நடராஜரை தரிசிக்க முடியும். அதனால் இரவு சாமி தரிசனம் செய்யும்போது வரிசையில் அதிகநேரம் நிற்கவேண்டியதிருக்கும் கூட்டமும் கட்டுக்கடங்காமல் இருப்பதால் சில நேரம் அதிக தொலைவில் இருந்து வந்து இருப்பவர்கள் மரகதநடராஜரை பார்க்காமலே சந்தனம் பூசப்பட்ட நடராஜரை பார்த்து செல்ல வாய்ப்பு உண்டு. இந்த ஏமாற்றத்தை தவிர்க்க காலையில் வந்துவிட்டால் கூட்டம் சற்று குறைவாக இருக்கும் நேரத்தில் மரகதநடராஜர் தரிசனத்தை எவ்வித சிரமமும் இன்றி தரிசித்து விட்டு செல்லலாம். வயதானவ்ர்கள் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் காலையில் வந்து விடுவது சிறந்தது.
மாணிக்கவாசகர் திருவாசகத்தில் நீத்தல் வண்ணம், திருப்பொன்னூஞ்சல் பாடியது மட்டுமல்லாமல், பல்வேறு இடங்களுக்கு சென்றாலும் அங்கும் உத்தரகோசமங்கை மன்னா என்றும் பாடியுள்ளார். இறைவனும், இறைவியும் பள்ளியறையில் அமர்ந்து பூஜை செய்யும்போது பள்ளியறை பாடல் திருஉத்தரகோசமங்கையில் பாடப்பெற்ற பாடலாகும். சிவாலயங்கள் அனைத்திலும் பள்ளியறை பூஜை சமயம் தினந்தோறும் பாடப்பட்டுவரும் ‘‘திருப்பொன்னூஞ்சல்’’ மாணிக்கவாசகரால் இவ் வாலயத்தில் வைத்து, இயற்றிப் பாடப்பெற்ற சிறப்பையும் பெற்றது.
மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற இத்தலம் அவரது திரு வாசகத்தில் 38 இடங்களில் சிறப்புறப் புகழப்பட்டுள்ளது.
இந்த பழம்பெரும் சிவத்தலங்களில் மகத்துவமும் தனித்துவமும் நிறைந்தது உத்தரகோசமங்கை எனும் திருத்தலமாகும். இந்த திருத்தலம் ராமநாதபுரத்துக்கு மிக, மிக அருகில் உள்ளது.
சிவத்தலங்களில் பாடல் பெற்ற முதல் தலம் இந்த தலம்தான். இதன்மூலம் இந்த தலமே தமிழ்நாட்டின் முதல் சிவாலயம் என்பதை உறுதிபடுத்துகிறது.
சமயக்குறவர்களில் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் தம் வாழ்நாளில் பெரும் பகுதியை இத்தலத்தில் கழித்தார். அவர் தன் பாடலில், சிவன் உண்பதும், உறங்குவதும் உத்தரகோசமங்கை தலத்தில்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓம் எனும் பிரணவ மந்திரத்தை பார்வதிதேவிக்கு சிவபெருமான் இத்தலத்தில் வைத்துதான் ரகசியமாக சொல்லி கொடுத்தார் என்பார்கள். அதுபோல பார்வதிக்கு நாட்டியக்கலையை ஈசன் இங்கு ரகசியமாக சொல்லிக் கொடுத்தார் என்பார்கள். ‘மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது’ என்பார்கள். உலகிலேயே முதலில் தோன்றிய சிவன் கோவில் இது என்று கூறப்படுகிறது.
ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது என்பதில் இருந்தே, இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம். சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும். அதனால் இந்த ஊருக்கு உத்தரகோசமங்கை என்ற பெயர் தோன்றியது என்று சொல்கிறார்கள். அதாவது உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது என்கிறார்கள்.
ஆனால் இத்தல பெயர் விளக்கத்துக்கு வேறொன்றும் சொல்லப்படுகிறது. உத்திரம் என்றால் உபதேசம். கோசம் என்றால் ரகசியம். மங்கை என்றால் பார்வதி என்று பொருள். பார்வதிதேவிக்கு ஈசன் ரகசியமாக வேதத்தை உபதேசம் செய்த இடம் என்ற அர்த்தத்தில் இத்தலம் உத்தரகோச மங்கை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது என்கிறார்கள்.
இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர். அந்த இலந்தை மரமே இவ்வாலயத்தின் தலவிருட்சமாக விளங்கு கிறது. மங்கள நாதரின் உடனுறை அம்பிகையின் திருநாமம் மங்களேஸ்வரி என்பதாகும். மாணிக்கவாசகர் இத் தலத்தில் சிவலிங்க வடி விலும், நின்ற கோலத் திலும் காட்சி தருகிறார். ‘நீத்தல் விண்ணப்பம்’ என்னும் திருவாசகப் பகுதி இத்தலத்தில் பாடப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. திருவாசகத்தில் 38 இடங் களில் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார் மாணிக்கவாசகர்.
உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது. பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள். அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள். மேலும் ராவணன்- மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.
இங்குள்ள நடராஜ பெருமான் ஐந்தரை அடி உயரம். முழுவதும் மரகத திருமேனி. ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை அன்று மட்டுமே சந்தனம் களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். அதுவும் 32 வகை மூலிகைகளால் அபிஷேகம் செய்யப்படும்.
ஆருத்ரா தினமான அன்று மட்டுமே, நடராஜரை மரகதக் கோலத்தில் கண்டுகளிக்கலாம். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு மீண்டும் சந்தனக் காப்பு செய்யப்பட்டு, நடராஜர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சூரிய உதயத்திற்கு முன்பு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்தச் சந்தனக் காப்பிலேயே அடுத்த மார்கழி திருவாதிரை வரை நடராஜர் காட்சி தருவார்.
இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட இத்தலத்தில் காலடி எடுத்து வைத்தாலே போதும், நம் மீதான தோஷங்கள் விலகி ஓடிவிடும். இத்தலம் ‘ஆதி சிதம்பரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அம்பிகைக்காக இங்கு அறையில் ஆடிய திருத்தாண்டவத்தை தான் நடராஜபெருமான், தில்லை அம்பலத்தில் முனிவர்களுக்காகவும், பக்தர்களுக்காகவும் ஆடுகிறார். எனவே இந்த ஆலயத்தில் உள்ள நடராஜர்தான், ஆதி நடராஜர் என்றும் கூறப்படுகிறது.
திருவாதிரை அன்று கோவிலில் அதிக கூட்டம் இருக்கும் காலை பத்து மணியில் இருந்து மரகத நடராஜரைப் பார்க்கலாம். இரவு 3 மணிக்கு மேல் சந்தனம் பூசிவிடுவார்கள் பிறகு அடுத்த வருடம்தான் மரகத நடராஜரை தரிசிக்க முடியும். அதனால் இரவு சாமி தரிசனம் செய்யும்போது வரிசையில் அதிகநேரம் நிற்கவேண்டியதிருக்கும் கூட்டமும் கட்டுக்கடங்காமல் இருப்பதால் சில நேரம் அதிக தொலைவில் இருந்து வந்து இருப்பவர்கள் மரகதநடராஜரை பார்க்காமலே சந்தனம் பூசப்பட்ட நடராஜரை பார்த்து செல்ல வாய்ப்பு உண்டு. இந்த ஏமாற்றத்தை தவிர்க்க காலையில் வந்துவிட்டால் கூட்டம் சற்று குறைவாக இருக்கும் நேரத்தில் மரகதநடராஜர் தரிசனத்தை எவ்வித சிரமமும் இன்றி தரிசித்து விட்டு செல்லலாம். வயதானவ்ர்கள் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் காலையில் வந்து விடுவது சிறந்தது.
மாணிக்கவாசகர் திருவாசகத்தில் நீத்தல் வண்ணம், திருப்பொன்னூஞ்சல் பாடியது மட்டுமல்லாமல், பல்வேறு இடங்களுக்கு சென்றாலும் அங்கும் உத்தரகோசமங்கை மன்னா என்றும் பாடியுள்ளார். இறைவனும், இறைவியும் பள்ளியறையில் அமர்ந்து பூஜை செய்யும்போது பள்ளியறை பாடல் திருஉத்தரகோசமங்கையில் பாடப்பெற்ற பாடலாகும். சிவாலயங்கள் அனைத்திலும் பள்ளியறை பூஜை சமயம் தினந்தோறும் பாடப்பட்டுவரும் ‘‘திருப்பொன்னூஞ்சல்’’ மாணிக்கவாசகரால் இவ் வாலயத்தில் வைத்து, இயற்றிப் பாடப்பெற்ற சிறப்பையும் பெற்றது.
மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற இத்தலம் அவரது திரு வாசகத்தில் 38 இடங்களில் சிறப்புறப் புகழப்பட்டுள்ளது.






