என் மலர்
முன்னோட்டம்
ஜே.கே.பிலிம் புரொடக்ஷன் சார்பில் கே.சி.பிரபாத் தயாரிக்கும் படம் ‘பில்லா பாண்டி’. இதில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார். ‘மேயாதமான்’ இந்துஜா, சாந்தினி கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் கே.சி.பிரபாத், தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
வசனம் -எம்.எம்.எஸ். மூர்த்தி,ஒளிப்பதிவு- ஜீவன், இசை-இளையவன், படத்தொகுப்பு-ராஜா முகம்மது, கலை- மேட்டூர் சௌந்தர், நடனம் - கல்யாண், விஜி, சாண்டி, சண்டைப் பயிற்சி-சக்தி சரவணன், தயாரிப்பு-கே.சி.பிரபாத், இயக்கம்- சரவணசக்தி.
“‘பில்லா பாண்டி’ திரைப்படம் முழுக்க முழுக்க தல ரசிகர்களுக்கு சமர்பிக்கும் விதமாக தயாராகி வருகிறது. அஜித் ரசிகராக வரும் ஆர்.கே.சுரேஷ் சாதிய வெறியை கடுமையாக எதிர்க்கும் விதமான காட்சிகளில் நடித்து இருக்கிறார். சூரி கவுரவ வேடத்திலும், சிறப்பு தோற்றத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர்” என்றார்.
படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இசை வெளியீடு நடைபெறுகிறது.





இதில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். இவருடைய ஜோடியாக ‘வனமகன்’ சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நடிகர் - நடிகைகள் நடிக்கிறார்கள்.
பாலமுரளிபாலு இசை அமைக்கும் இந்த படத்துக்கு பல்லு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு - பிரசன்னா ஜி.கே, கலை - கோபி ஆனந்த்.
இயக்கம் - சந்தோஷ் பி.ஜெயக்குமார். ‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படங்களை தொடர்ந்து இந்த படத்தை இவர் இயக்குகிறார்.
சூர்யா நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘கஜினி’ படத்தின் பெயரையும் ரஜினியின் பெயரில் இடம் பெற்றுள்ள காந்த்தையும் இணைத்து இந்த படத்துக்கு ‘கஜினிகாந்த்’ என்று பெயர் சூட்டி உள்ளனர்.

“இது குடும்ப சென்டிமென்ட், காமெடி கலந்த படமாக உருவாகிறது. ஆர்யா இதுவரை நடித்துள்ள படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது ஆர்யாவுக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும். அதற்கு ஏற்ப புதிய கோணத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் ‘கஜினிகாந்த்’ ரசிகர்களை கவரும்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்த படத்தின் தொடக்க விழா பூஜை சென்னையில் நடந்தது. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
இதில் உதயாவுடன் பிரபு இணைகிறார். பிரியங்கா, சேரா, நிஷா என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாசர், கோவைசரளா, ஸ்ரீமன், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சரவணன், தனஞ்செயன், தளபதி தினேஷ், சோனியா போஸ், பிரேம் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் குட்டிபத்மினி நடிக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர், நிர்வாகிகளுடன் முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - பாலாஜி ரங்கா. இவர் தமிழில் ‘ஓநாயும் ஆட்டுக் குட்டியும்’ மற்றும் பல இந்தி படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர்.

இசை - நரேன் பாலகுமாரன், படத்தொகுப்பு - சத்ய நாராயணன், நடனம் - சாண்டி, இயக்கம் - ஆஸிப் குரைஷி.
`உத்தரவு மகாராஜா’ படத்தின் திரைக்கதையில் ஒரு புதிய முயற்சியை இயக்குனர் கையாண்டிருக்கிறார். இது முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை, ஆக்ஷன் கலந்த சைக்கோ திரில்லர் கதை. இயக்குனராக ஆஸிப் குரைஷி அறிமுகமாகிறார். இவர் தமிழ், இந்தி மற்றும் பெங்காலி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
மைண்ட் ஸ்கிரீன் சினிமாஸ் தயாரிக்கும் படம் ‘சர்வம் தாளமயம்’. இதில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மலையாளத்தில் இருந்து வரும் அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் நெடுமுடி வேணு, குமரவேல், அதிரா, சாந்தா தனஞ்செயன், சுமேஷ், வினித் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசை- ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவு- ரவியாதவ், படத்தொகுப்பு- ஆண்டனி, கலை-ஜி.சி.ஆனந்தன், பாடல்கள்-மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், அருண் ராஜா, தயாரிப்பு- லதா. எழுத்து, இயக்கம்- ராஜீவ் மேனன்.
“ இது தாள இசை கலைஞர் பற்றிய கதை. இந்த படத்தில் மிருதங்க வித்வானாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் படத்துக்கு முதன் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த படத்துக்காக ஜி.வி. பிரகாஷ் பிரபல மிருதங்க வித்வான் ஒருவரிடம் முறைப்படி பயிற்சி பெற்றுள்ளார். இந்த படத்தில் 9 பாடல்கள் இடம் பெறுகின்றன” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
இதில் மா.கா.பா.ஆனந்த் நாயகனாக நடிக்கிறார். நிகிலா விமல் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சென்ட்ராயன், பாண்டியராஜன், தவசி, வித்யுலேகா, பாண்டு, அர்ஜுனா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இசை - டி.இமான், ஒளிப்பதிவு - மகேஷ் கே.தேவ். திரைக்கதை - ஜே.பி.சாணக்யா, எழில்வரதன், கோபாலகிருஷ்ணன், எஸ்.செந்தில்குமார். தயாரிப்பு - எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார். இயக்கம் - எஸ்.பி.மோகன்.
இயல்பாக நடக்க முடியாத யதார்த்த நிகழ்ச்சிகளை முதல் முறையாக, மாய யதார்த்தயுத்தியில் சொல்லி இருக்கும் கதை ‘பஞ்சுமிட்டாய்’. இந்த படத்தில் மா.கா.பா.ஆனந்த் கிராமத்தில் இருந்து சென்னை வரும் புரோட்டா மாஸ்டர். சென்ட்ராயன் சென்னையை சேர்ந்த டீ மாஸ்டர். ஆனந்த் ஜோடியாக வரும் நிகிலா கிராமத்து பெண்.

2 நண்பர்கள், கணவன் - மனைவி உறவு, குடும்பம், சென்னை வாழ்க்கை, கிராம சூழ்நிலை ஆகியவற்றை நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கி இருக்கிறோம். எல்லா மனித உணர்வுகளும் வயது வித்தியாசம் இல்லாமல் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
டி.இமான் இசையில் முதல் முறையாக உருவான முதல்-இரவு பாடல் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த படத்துக்கான மாய காட்சிகளை ‘2.0’ படத்தில் பணி புரியும் சீனிவாசமோகன் அமைத்திருக்கிறார். பஞ்சுமிட்டாய் படத்தை பார்த்த இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் மிகவும் பாராட்டினார்கள்” என்றார்.
இந்த படத்தில் நாயகனாக பரத் நடித்துள்ளார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடித்துள்ளனர். மருத்துவக் கல்லூரி பின்னணியில் பேய் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
வசனம் - செந்தில், ஒளிப்பதிவு - இனியன் ஹரீஷ், இசை - அம்ரீஷ், பாடல்கள் - விவேகா, கருணாகரன், சொற்கோ, ஏக்நாத், ஸ்டன்ட் - சூப்பர் சுப்பராயன், எடிட்டிங் - எலீசா, கலை - நித்யானந், நடனம் - ராபர்ட், தயாரிப்பு மேற்பார்வை - ஜி.சங்கர், தயாரிப்பு - ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்.
கதை, திரைக்கதை இயக்கம் - வடிவுடையான்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகும் `பொட்டு' படத்துக்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.
ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போதே விற்பனையாவது என்பது அனைத்து படங்களுக்கு அமைவதில்லை. அந்த வகையில் `பொட்டு' படத்திற்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
மனிதர்கள் செய்யும் சாகசங்களை விட, பேய்கள் செய்யும் சாகசங்களுக்கு மக்களிடம் அதிகமாக வரவேற்பு கிடைக்கிறது. தெலுங்கில் பொட்டு படத்தை என்.கே.ஆர். பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது. தெலுங்கில் தணிக்கைக்காக காத்திருக்கும் இந்த படம், தணிக்கை கிடைத்த உடன் எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது.






