search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandini"

    இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சமுத்திரகனி, வீரா, சாந்தினி, வர்ஷா, சுந்தர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `பெட்டிக்கடை' படத்தின் விமர்சனம். #Pettikadai #PettikadaiReview
    சாந்தினி ஒரு கிராமத்திற்கு மருத்துவராக செல்கிறார். அங்கே பெட்டிக்கடையே இல்லை. கார்ப்பரேட் என்னும் நிறுவனம் ஒன்று டோர் டெலிவரி மூலம் மக்களுக்கு தேவையான பொருட்களை விற்கிறார்கள். வேறு யாரும் கடை வைக்க கூடாது என்று மிரட்டி பணிய வைக்கிறார்கள். இந்த நிலையை எதிர்த்தவர்களை கொலை செய்து விடுகிறார்கள். அந்த நிறுவனத்துக்கு எதிராக சாந்தினி அறப்போராட்டத்தில் இறங்குகிறார். அவர் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு கிடைத்ததா? வெற்றி பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    சமுத்திரகனி வாத்தியாராக சில காட்சிகளில் வந்து போகிறார். அவர் பேசும் வசனங்களின் உள்ள உண்மை கைதட்டல்களை பெறுகிறது. துணிச்சலான போராளியாக சாந்தினி சிறப்பாக நடித்துள்ளார். வீரா - வர்ஷா ஜோடி படத்தின் இளமை பகுதியை தங்கள் குறும்பு காதல் மூலம் நிறைக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். களவாணி திருமுகன் வில்லத்தனமான போலீசாக மிரட்டுகிறார். 

    அருமையான அவசியமான கருத்தை கதைக்களமாக்கியதற்காக இயக்குனர் இசக்கி கார்வண்ணனை பாராட்டலாம். கார்ப்பரேட் நிறுவனங்களால் பெட்டிக்கடைகள் அழிந்து போனதையும் அதன் விளைவுகளையும் சொல்லும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். இன்றைய சமூக அவல நிலையை கதையாக எழுதிய இயக்குனர் இன்னும் சுவாரசியமான திரைக்கதையையும் உருவாக்கி இருக்கலாம். கிராமத்தை கார்ப்பரேட் கம்பெனி கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது முதல் பல காட்சிகளில் லாஜிக் மீறல்கள் தெரிகிறது.



    அருள், சீனிவாஸ் இருவரின் ஒளிப்பதிவும் கிராமத்தை அழகாக படம் பிடித்துள்ளது. மரியா மனோகர் இசையில் நா.முத்துகுமார் எழுதிய பாடல் ரசிக்க வைக்கிறது.

    மொத்தத்தில் `பெட்டிக்கடை' தேவை.
    சித்து +2 வில் அறிமுகமாகி ராஜா ரங்குஸ்கி, வண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்த சாந்தினி, தற்போது டீச்சராக ஒரு படத்தில் நடித்துள்ளார். #KadhalMunnetraKazhagam
    சித்து +2 வில் அறிமுகமாகி ராஜா ரங்குஸ்கி, வண்டி உள்பட பல படங்களில் நடித்த சாந்தினி கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்துக்கு பின்னும் தொடர்ந்து நடிக்கும் அவர் பிரித்விராஜனுக்கு ஜோடியாக நடித்த காதல் முன்னேற்ற கழகம் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. மலர்க்கொடி முருகன் தயாரிக்க மாணிக் சத்யா இயக்குகிறார்.

    சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, சிவசேனாதிபதி ஆகியோரும் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குநர் மாணிக் சத்யா பேசும்போது, “இந்தப் படம் 1985களில் நடக்கும் கதை. பிரித்விராஜன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர்.



    அவரை போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது, இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக இருப்பவர்.

    நட்புக்குள் ஏற்படும் துரோகத்தின் விளைவுகளை கூறி இருக்கிறோம். படத்தை பார்த்த பாண்டியராஜன் சார் பாராட்டியதுடன் 15 நிமிட கிளைமாக்ஸ் காட்சிகள் நெருப்பு மாதிரி இருக்கிறது என்றார். படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது’ என்றார்.
    ஆர்.கே.சுரேஷ், சாந்தினி, இந்துஜா நடிப்பில் ராஜ்சேதுபதி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பில்லா பாண்டி’ விமர்சனம். #BillaPandi #BillaPandiReview
    மதுரையில் தீவிரமான, வெறித்தனமான, பக்தியான அஜித் ரசிகராக இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். பில்லா படம் ரிலீசுக்கு பிறகு தனது பெயரை பில்லா பாண்டி என மாற்றிக் கொள்கிறார். அஜித்தை போற்றிப் பாடும் இவர் கட்டிட வேலை செய்து வருகிறார்.

    இவரது முறைப்பெண் சாந்தினி தமிழரசன். ஆர்.கே.சுரேஷும், சாந்தினியும் ஒருவர் மேல் ஒருவர் பிரியமாக இருக்கிறார்கள். கட்டிட தொழிலில் வரும் பணத்தையெல்லாம் ரசிகர் மன்றத்தின் மூலம் உதவி செய்வது வருவதால் சாந்தினியை, ஆர்.கே.சுரேஷ்க்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார் மாரிமுத்து.

    ஆர்.கே.சுரேஷ் காண்ட்ராக்ட் எடுத்து கட்டும் வீட்டுக்கு சொந்தக்காரரான இந்துஜாவுக்கு சுரேஷ் மீது காதல் ஏற்படுகிறது. ஆனால் ஆர்.கே.சுரேஷோ இந்துஜாவை கண்டுகொள்ளாமல், சாந்தினியையே காதலிக்கிறார்.



    இந்த நிலையில், இந்துஜாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க, அனைவர் முன்பும் இந்துஜா, தான் ஆர்.கே.சுரேஷை காதலிப்பதாக கூறுகிறார். இதற்கிடையே ஒரு விபத்தில் இந்துஜாவின் வீட்டார் அனைவரும் இறந்துவிடுகிறார்கள். இந்துஜா மனநிலை பாதிக்கப்படுகிறார்.

    தனது குடும்பத்தை இழந்த இந்துஜாவை தனது பொறுப்பில் கவனிக்க ஆரம்பிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இதனால் இவருக்கும், சாந்தினிக்கும் இடையே பிரிவு வருகிறது.

    கடைசியில், ஆர்.கே.சுரேஷ் காதல் என்ன ஆனது? இருவரில் யாரை கரம்பிடித்தார்? இந்துஜா பழைய நிலைமைக்கு திரும்பினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    வில்லன் வேடங்களில் பார்த்த ஆர்.கே.சுரேஷ் பில்லா பாண்டி மூலம் கதாநாயகனாக மாறி இருக்கிறார். தனக்கேற்ற ஒரு கதாபாத்திரத்தையும், கதையையும் தேர்வு செய்திருக்கிறார். முதல் பாதியில் கலகலக்கவும் இரண்டாம் பாதியில் கலங்கவும் வைக்கிறார். நடிப்பில் பக்குவம் தெரிகிறது.



    வழக்கமான கதாநாயகியாக அறிமுகமாகும் இந்துஜா விபத்துக்கு பின் குழந்தையாகவே மாறி நம்மை உருக வைக்கிறார். சாந்தினி தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளார். தம்பி ராமய்யா, அமுதவாணன் இருவரும் சிரிக்க வைக்கிறார்கள்.

    மதுரைப்பகுதியை பின்புலமாக கொண்டு நகைச்சுவை, காதல், குடும்ப செண்டிமெண்ட், ஆக்‌‌ஷன் எல்லாம் கலந்த ஒரு படத்தை ராஜ்சேதுபதி இயக்கி இருக்கிறார். எம்.எம்.எஸ்.மூர்த்தியின் எழுத்தில் மதுரை மண்மணம் இருக்கிறது.

    இளையவனின் இசையும் ஜீவனின் ஒளிப்பதிவும் படத்தை ரசிக்க வைக்கின்றன.

    மொத்தத்தில் `பில்லா பாண்டி' பார்க்கலாம் சீண்டி. 
    மெட்ரோ சிரிஷ், சாந்தினி நடிப்பில் தரணி தரண் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகி இருக்கும் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் விமர்சனம். #RajaRanguski
    போலீஸ் வேலை பார்த்து வருகிறார் நாயகன் சிரிஷ். இவர் வில்லா வளாகத்தில் தினமும் ரோந்து சென்று வருகிறார். அப்போது அந்த வில்லாவில் நாயகி சாந்தினியை பார்க்கிறார் சிரிஷ். இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. எழுத்து துறையில் ஆர்வமாக இருக்கும் சாந்தினி, ஒரு விஷயத்தை செய்யக்கூடாது என்றால் செய்யும் எண்ணம் கொண்டவர்.

    இவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் சிரிஷ். அவரே வேறொரு போனில், யாரோ ஒருவர் போல் பேசி, நீ சிரிஷுடன் பழக்கக்கூடாது என்று பேச, அவரோ நான் பழகுவேன் என்று கூற, இருவருக்கும் நெருக்கம் ஏற்படுகிறது.

    இந்நிலையில், சிரிஷுக்கு அவரது குரலிலேயே ஒரு போன் வருகிறது. அதிர்ச்சியடையும் சிரிஷ், அது யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கு போது, ஒரு மர்மான முறையில் கொலை நடக்கிறது. இந்த கொலைப்பழி சிரிஷ் மேல் விழுகிறது.



    இதிலிருந்து சிரிஷ் தப்பிதாரா? அந்த மர்ம குரல் யார்? கொலை செய்தது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    மெட்ரோ படம் மூலம் புகழ் பெற்ற சிரிஷ் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அப்பாவி போலீஸ் கதாபாத்திரம் இவருக்கு ஓரளவிற்கு செட்டாகி இருக்கிறது என்று சொல்லலாம். நடிப்பில் இன்னும் அதிக கவனம் செலுத்தினால், சிறப்பான இடத்தை பிடிக்கலாம்.

    நாயகியாக நடித்திருக்கும் சாந்தினிக்கு இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரம். காதல் காட்சிகளிலும் பிற்பாதியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிரிஷின் நண்பராக வரும் கல்லூரி வினோத், ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.



    ஜாக்சன் துரை படத்தை தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தரணி தரண். முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் நம் கவனத்தை அதிகப்படுத்தியுள்ளார். க்ரைம் திரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்து, அதை திறம்பட கொடுத்திருக்கிறார். படத்தின் திருப்பங்கள் ரசிக்கும் படி உள்ளது.

    யுவனின் இசை படத்திற்கு பலம் சேர்ந்திருக்கிறது. குறிப்பாக சிம்பு பாடிய பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணியிலும் நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார். யுவாவின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘ராஜா ரங்குஸ்கி’ ராஜா.
    சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டி கேட்கும் வழக்கறிஞராக, தன் குழந்தையை பறிகொடுத்த தந்தையாகவும், காதலர்களின் காவலனாகவும் சமுத்திரகனி நடிப்பில் ‘பற’ என்ற படம் உருவாகி வருகிறது. #Samuthirakani
    சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டி கேட்கும், அநீதிகளுக்கு எதிராக போராடும் வழக்கறிஞராக, தன் குழந்தையை பறிகொடுத்த தந்தையாகவும், காதலர்களின் காவலனாகவும் சமுத்திரகனி நடிக்கும் படம் ‘பற’.

    வர்ணாலயா சினி கிரியே‌ஷன் பிரைவேட் லிமிடேட் நிறுவனும் தயாரிக்கும் இந்த படத்தை பச்சை என்கிற காத்து, மெர்லின் படங்களை இயக்கிய வ.கீரா இயக்குகிறார். படம் பற்றி கூறும்போது,

    பிளாட்பாரத்தில் வாழ வழியற்ற ஒருவன், ஒரு கிராமத்திலிருந்து கிளம்பும் காதலர்கள், வயதான காலத்தில் தனிமையிலிருந்து விடுபட கிளம்பும் முதியோர்கள், ஒரு திருடன், ஒரு வழக்கறிஞர், ஒரு கட்சி தலைவர், ஒரு கிளப் டான்சர் என பல்வேறு மாந்தர்களின் வாழ்க்கையில் ஓர் இரவில் தொடங்கி அடுத்த பகலில் முடியும் 12 மணி நேர கதைதான் ’பற’. 

    படத்தில் சமுத்திரகனி, சாந்தினி, முனிஸ்காந்த், நிதிஷ் வீரா, முத்துராமன், சாஜீ மோன், வெண்பா, தீக்கதிர் குமரேசன், கம்பம் மீனா, சூப்பர் குட் சுப்ரமணி, பேராசிரியர் செல்வக்குமார், அஸ்மிதா, வின்னர் ரமச்சந்திரன், பிரின்ஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.’ என்றார். #Samuthirakani
    ×