search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veera"

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படையினர் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சோதனை அதிகாரி தங்களை அவமரியாதையாக நடத்தியதாக நமீதாவின் கணவர் வீரா புகார் கூறியுள்ளார். #Namitha #Veer
    பாராளுமன்ற தேர்தலையொட்டி சேலம் புலிக்குத்தி தெருவில் பறக்கும் படை அலுவலர் ஆனந்த யுவனேஷ் தலைமையில் நடிகை நமீதாவின் காரில் சோதனை நடத்தப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுக்கும் நமீதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதற்கு நமீதாவின் கணவர் வீரா விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    இந்த சம்பவம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தவறான செய்திகள் வெளியாகின்றன. அதற்கு நான் வருந்துகிறேன். நடந்த சம்பவம் குறித்து எனது சார்பிலும், எனது மனைவி தரப்பிலும் விளக்கம் அளிக்கிறேன்.

    படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நாங்கள் 8 மணி நேரம் காரில் பயணம் செய்தோம். எனது மனைவி நமீதா காரின் பின் இருக்கையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது இரவு 2.30 மணி இருக்கும்.

    இச்சம்பவம் நடப்பதற்கு முன்பு பல்வேறு இடங்களில் 3 தடவை காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதற்கு நாங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தோம்.



    சேலம் - ஆற்காடு சந்திப்பை அடைந்த போது பறக்கும் படை அதிகாரி காரை தடுத்து நிறுத்தி எங்கள் அனைவரிடமும் மிகவும் அவமரியாதையாக நடந்து கொண்டார். எங்களை குற்றவாளிகள் போன்று நடத்தினார்.

    எனது மனைவி அசதியில் தூங்கி கொண்டிருக்கிறார். தேவைப்பட்டால் அவரை எழுப்பிவிடுகிறேன் என்றேன். அதை பொருட்படுத்தாமல் நமீதா காரின் பின்புறம் கதவை திறந்தார். அப்போது அவர் காரில் இருந்து கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

    அதற்கு அவர் வருத்தம் தெரிவித்தார். ஆனால் நாங்கள் சில சட்ட விரோத பொருட்களை கடத்துவதாக கருதி காரில் சோதனை நடத்தினார். எங்களது அனைவரின் பைகளையும் சோதனை செய்தார்.

    நமீதாவின் பையை சோதனை செய்ய தொடங்கினார். ஆனால் அதை திறக்க நமீதா மறுத்துவிட்டார். எனது பையை பெண் போலீசை வைத்து சோதனை செய்யுங்கள் என்றார்.

    ஏனெனில் அதில் குறிப்பிட்ட சில முக்கியமான பொருட்கள் இருந்தன. பெண் போலீஸ் மூலம் சோதனை செய்தால் தனக்கு வசதியாக இருக்கும் என கருதினார். அதன் பின்னர் பெண் போலீஸ் வந்து பையை சோதனை செய்தார். அவ்வளவுதான் நடந்தது.

    அசவுகரியமான நேரத்தில் பெண் போலீசை அழைப்பது ஒவ்வொரு பெண்ணின் உரிமை. ஆனால் இந்த விவகாரம் முழுவதும் வேறு விதமாக ஊதி பெரிதுபடுத்தப்பட்டுள்ளது.

    அவர் ஒரு சாதாரண குடிமகனாக இருந்தால் அதுகுறித்து யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் அவர் ஒரு பிரபலமானவர் என்பதால் அனைவரும் உரிமை எடுத்துக் கொள்கிறார்கள். அவ்வளவு தான். இதை தவறாக எடுத்துக் கொள்வதற்கு பதிலாக இந்த விவகாரத்தில் இருந்து நமது நாட்டு பெண்கள் கற்றுக் கொள்வார்கள் என்றும் தங்களது உரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என்றும் நம்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Namitha #Veer

    இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சமுத்திரகனி, வீரா, சாந்தினி, வர்ஷா, சுந்தர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `பெட்டிக்கடை' படத்தின் விமர்சனம். #Pettikadai #PettikadaiReview
    சாந்தினி ஒரு கிராமத்திற்கு மருத்துவராக செல்கிறார். அங்கே பெட்டிக்கடையே இல்லை. கார்ப்பரேட் என்னும் நிறுவனம் ஒன்று டோர் டெலிவரி மூலம் மக்களுக்கு தேவையான பொருட்களை விற்கிறார்கள். வேறு யாரும் கடை வைக்க கூடாது என்று மிரட்டி பணிய வைக்கிறார்கள். இந்த நிலையை எதிர்த்தவர்களை கொலை செய்து விடுகிறார்கள். அந்த நிறுவனத்துக்கு எதிராக சாந்தினி அறப்போராட்டத்தில் இறங்குகிறார். அவர் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு கிடைத்ததா? வெற்றி பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    சமுத்திரகனி வாத்தியாராக சில காட்சிகளில் வந்து போகிறார். அவர் பேசும் வசனங்களின் உள்ள உண்மை கைதட்டல்களை பெறுகிறது. துணிச்சலான போராளியாக சாந்தினி சிறப்பாக நடித்துள்ளார். வீரா - வர்ஷா ஜோடி படத்தின் இளமை பகுதியை தங்கள் குறும்பு காதல் மூலம் நிறைக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். களவாணி திருமுகன் வில்லத்தனமான போலீசாக மிரட்டுகிறார். 

    அருமையான அவசியமான கருத்தை கதைக்களமாக்கியதற்காக இயக்குனர் இசக்கி கார்வண்ணனை பாராட்டலாம். கார்ப்பரேட் நிறுவனங்களால் பெட்டிக்கடைகள் அழிந்து போனதையும் அதன் விளைவுகளையும் சொல்லும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். இன்றைய சமூக அவல நிலையை கதையாக எழுதிய இயக்குனர் இன்னும் சுவாரசியமான திரைக்கதையையும் உருவாக்கி இருக்கலாம். கிராமத்தை கார்ப்பரேட் கம்பெனி கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது முதல் பல காட்சிகளில் லாஜிக் மீறல்கள் தெரிகிறது.



    அருள், சீனிவாஸ் இருவரின் ஒளிப்பதிவும் கிராமத்தை அழகாக படம் பிடித்துள்ளது. மரியா மனோகர் இசையில் நா.முத்துகுமார் எழுதிய பாடல் ரசிக்க வைக்கிறது.

    மொத்தத்தில் `பெட்டிக்கடை' தேவை.
    `குக்கூ' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மாளவிகா நாயர் அடுத்ததாக அரசியலை கிண்டல் செய்யும் காமெடி படத்தில் நடித்துள்ளார். #ArasiyallaIdhellamSaadharnamappa #MalavikaNair
    `குக்கூ' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா நாயர். அந்த படத்தில் பார்வையற்றவராக சிறப்பான நடிப்பை தந்த மாளவிகா அதன் பிறகு தமிழில் நடிக்கவில்லை.

    சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக உருவான `நடிகையர் திலகம்' படத்தில் ஜெமினி கணேசனின் முதல் மனைவியாக நடித்து இருந்தார். தற்போது அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் `ராஜதந்திரம்' பட புகழ் வீரா ஜோடியாக `அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்ற படத்தில் நடித்துள்ளார். 

    "இது பல்வேறு கதாபாத்திரங்களை உள்ளடக்கிய முழு நீள காமெடி திரைப்படம். பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர், சென்னையை சேர்ந்த திருமண ஒருங்கிணைப்பாளர் மற்றும் மும்பையை சேர்ந்த அடியாள் ஆகியோர் தங்கள் தொழிலில் மீண்டும் மேலே வரும் நோக்கில் இருக்கும் போது, ஒரு அரசியல்வாதியால் ஏற்படும் குழப்பத்தால் என்ன ஆகிறார்கள் என்பதே படத்தின் கதையாக நகர்கிறது" 



    முழுக்க முழுக்க அரசியலை கிண்டல் செய்து காமெடி படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் பசுபதி, ரோபோ ஷங்கர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்ய, மேட்லி ப்ளூஸ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

    மாளவிகாவுக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் அதிகம். எதிர்காலத்தில் பைலட் ஆவது தான் அவரது லட்சியமாம். அவருக்கு பிடித்த நடிகர்கள் கமல், தனுஷ். பிடித்த நடிகைகள் ஸ்ரீதேவி, சுருதிஹாசன் என்று மாளவிகா கூறினார். #ArasiyallaIdhellamSaadharnamappa #MalavikaNair

    ×