search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பில்லா பாண்டி"

    ஆர்.கே.சுரேஷ், சாந்தினி, இந்துஜா நடிப்பில் ராஜ்சேதுபதி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பில்லா பாண்டி’ விமர்சனம். #BillaPandi #BillaPandiReview
    மதுரையில் தீவிரமான, வெறித்தனமான, பக்தியான அஜித் ரசிகராக இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். பில்லா படம் ரிலீசுக்கு பிறகு தனது பெயரை பில்லா பாண்டி என மாற்றிக் கொள்கிறார். அஜித்தை போற்றிப் பாடும் இவர் கட்டிட வேலை செய்து வருகிறார்.

    இவரது முறைப்பெண் சாந்தினி தமிழரசன். ஆர்.கே.சுரேஷும், சாந்தினியும் ஒருவர் மேல் ஒருவர் பிரியமாக இருக்கிறார்கள். கட்டிட தொழிலில் வரும் பணத்தையெல்லாம் ரசிகர் மன்றத்தின் மூலம் உதவி செய்வது வருவதால் சாந்தினியை, ஆர்.கே.சுரேஷ்க்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார் மாரிமுத்து.

    ஆர்.கே.சுரேஷ் காண்ட்ராக்ட் எடுத்து கட்டும் வீட்டுக்கு சொந்தக்காரரான இந்துஜாவுக்கு சுரேஷ் மீது காதல் ஏற்படுகிறது. ஆனால் ஆர்.கே.சுரேஷோ இந்துஜாவை கண்டுகொள்ளாமல், சாந்தினியையே காதலிக்கிறார்.



    இந்த நிலையில், இந்துஜாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க, அனைவர் முன்பும் இந்துஜா, தான் ஆர்.கே.சுரேஷை காதலிப்பதாக கூறுகிறார். இதற்கிடையே ஒரு விபத்தில் இந்துஜாவின் வீட்டார் அனைவரும் இறந்துவிடுகிறார்கள். இந்துஜா மனநிலை பாதிக்கப்படுகிறார்.

    தனது குடும்பத்தை இழந்த இந்துஜாவை தனது பொறுப்பில் கவனிக்க ஆரம்பிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இதனால் இவருக்கும், சாந்தினிக்கும் இடையே பிரிவு வருகிறது.

    கடைசியில், ஆர்.கே.சுரேஷ் காதல் என்ன ஆனது? இருவரில் யாரை கரம்பிடித்தார்? இந்துஜா பழைய நிலைமைக்கு திரும்பினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    வில்லன் வேடங்களில் பார்த்த ஆர்.கே.சுரேஷ் பில்லா பாண்டி மூலம் கதாநாயகனாக மாறி இருக்கிறார். தனக்கேற்ற ஒரு கதாபாத்திரத்தையும், கதையையும் தேர்வு செய்திருக்கிறார். முதல் பாதியில் கலகலக்கவும் இரண்டாம் பாதியில் கலங்கவும் வைக்கிறார். நடிப்பில் பக்குவம் தெரிகிறது.



    வழக்கமான கதாநாயகியாக அறிமுகமாகும் இந்துஜா விபத்துக்கு பின் குழந்தையாகவே மாறி நம்மை உருக வைக்கிறார். சாந்தினி தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளார். தம்பி ராமய்யா, அமுதவாணன் இருவரும் சிரிக்க வைக்கிறார்கள்.

    மதுரைப்பகுதியை பின்புலமாக கொண்டு நகைச்சுவை, காதல், குடும்ப செண்டிமெண்ட், ஆக்‌‌ஷன் எல்லாம் கலந்த ஒரு படத்தை ராஜ்சேதுபதி இயக்கி இருக்கிறார். எம்.எம்.எஸ்.மூர்த்தியின் எழுத்தில் மதுரை மண்மணம் இருக்கிறது.

    இளையவனின் இசையும் ஜீவனின் ஒளிப்பதிவும் படத்தை ரசிக்க வைக்கின்றன.

    மொத்தத்தில் `பில்லா பாண்டி' பார்க்கலாம் சீண்டி. 
    ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பில்லா பாண்டி’ படத்திற்கு தடைகோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #BillaPandi #RKSuresh
    அஜித் ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் ‘பில்லா பாண்டி’. இந்த படத்தினை கே.சி.பிரபாத் ஜே.கே.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

    இவர் ஏற்கனவே ‘ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளரான ஏ.ஜமால் சாகிப் என்பவரிடம் ‘மருதாண்டசீமை’ என்கிற படத்தை இருவரும் சேர்ந்து எடுப்போம் என ஆசைவார்த்தை கூறி படம் 60% எடுத்துக் கொண்டிருக்கும் போது மேற்குறிப்பிட்ட கே.சி.பிரபாத் புதிதாக படம் எடுக்கப்போகிறேன் என்று ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளர் ஏ.ஜமால் சாகிப்பை ஏமாற்றவேண்டும் என்கிற நோக்கில் ‘பில்லா பாண்டி’ படத்தை தயாரித்துள்ளார்.

    ஏன் என்று விளக்கம் கேட்டபோது, ‘பில்லா பாண்டி’ படம் வெளியாவதற்கு முன்பு ‘மருதாண்டசீமை’ படத்தை முடித்துத் தருகிறேன் என்று உறுதியளித்தார்.



    ஆனால் இதுவரை மேற்படி ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளர் ஏ.ஜமால் சாகிப்பிற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் கே.சி.பிரபாத் செயல்படுவதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
    விஜய்யின் சர்கார், விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் உள்ளிட்ட 6 படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில படங்களின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. #Sarkar #ThimiruPudichavan
    இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித், விஜய், சூர்யாவின் படங்கள் ரிலீசாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு தாமதமானதால் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சூர்யாவின் என்ஜிகே உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. 

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியிருக்கும் நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா, விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படங்களும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



    ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்துள்ள பில்லா பாண்டி படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், அட்டகத்தி தினேஷ் - அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படமும் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 6-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமீர் கான் - அமித்தாப் பச்சன் இணைந்து நடித்துள்ள தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படமும் தீபாவளி ரேசில் இணைந்துள்ளது.



    3000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்த தமிழ்நாட்டில் இப்போது 1000 திரையரங்குகள் கூட இல்லை. எனவே ஒன்றுக்கு மேற்பட்ட பெரிய படங்கள் வெளியானால் சிக்கல் ஏற்படுகிறது. ஆறு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக வாய்ப்பு இல்லை. எனவே திரையரங்குகள் கிடைக்காமல் சிறிய படங்கள் தள்ளிப் போக வாய்ப்புள்ளது. #Sarkar #ThimiruPudichavan

    ×