search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பில்லா பாண்டி படத்திற்கு தடைகோரி நீதிமன்றத்தில் வழக்கு
    X

    பில்லா பாண்டி படத்திற்கு தடைகோரி நீதிமன்றத்தில் வழக்கு

    ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பில்லா பாண்டி’ படத்திற்கு தடைகோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #BillaPandi #RKSuresh
    அஜித் ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் ‘பில்லா பாண்டி’. இந்த படத்தினை கே.சி.பிரபாத் ஜே.கே.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

    இவர் ஏற்கனவே ‘ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளரான ஏ.ஜமால் சாகிப் என்பவரிடம் ‘மருதாண்டசீமை’ என்கிற படத்தை இருவரும் சேர்ந்து எடுப்போம் என ஆசைவார்த்தை கூறி படம் 60% எடுத்துக் கொண்டிருக்கும் போது மேற்குறிப்பிட்ட கே.சி.பிரபாத் புதிதாக படம் எடுக்கப்போகிறேன் என்று ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளர் ஏ.ஜமால் சாகிப்பை ஏமாற்றவேண்டும் என்கிற நோக்கில் ‘பில்லா பாண்டி’ படத்தை தயாரித்துள்ளார்.

    ஏன் என்று விளக்கம் கேட்டபோது, ‘பில்லா பாண்டி’ படம் வெளியாவதற்கு முன்பு ‘மருதாண்டசீமை’ படத்தை முடித்துத் தருகிறேன் என்று உறுதியளித்தார்.



    ஆனால் இதுவரை மேற்படி ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளர் ஏ.ஜமால் சாகிப்பிற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் கே.சி.பிரபாத் செயல்படுவதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
    Next Story
    ×