search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தம்பி ராமய்யா"

    வடிவுடையான் இயக்கத்தில் பரத் - சிருஷ்டி டாங்கே, நமீதா, இனியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பொட்டு' படத்தின் விமர்சனம். #Pottu #PottuReview
    தம்பி ராமையா - ஊர்வசியின் மகனான பரத் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் சிருஷ்டி டாங்கேவும் - பரத்தும் காதலிக்கிறார்கள். 

    அந்த கல்லூரியில் உள்ள ஒரு கட்டிடத்தில் அமானுசிய சக்தி இருப்பது தெரிய வருகிறது. ஒருகட்டத்தில் பரத்துக்கு பேய் பிடிக்கிறது. இதையடுத்து பரத் அவ்வப்போது பெண் போன்று நடந்து கொள்கிறார்.



    கடைசியில், பரத்துக்கு பேய் பிடிக்க காரணம் என்ன? அந்த பேயின் முன்கதை என்ன? பரத் மூலம் அந்த பேய் யாரை பழிவாங்கியது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பரத் பெண் வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அதற்காக அவர் தனது உடல் மொழிகளை மாற்றி அந்த கதாபாத்திரமாக மாறியிருப்பதை உணர முடிகிறது. இனியாவின் கதாபாத்திரம் படத்தின் கருவுக்கு முக்கிய காரணமாகிறது. மந்திரவாதியாக வரும் நமீதாவுக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை. சிருஷ்டி டாங்கே காதல், கவர்ச்சி என வழக்கம் போல வந்து செல்கிறார். மற்ற கதாபாத்திரங்களை சரியாக வேலை வாங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.



    மருத்துவக் கல்லூரி பின்னணியில் ஹாரர் படமாக இதை இயக்கியிருக்கிறார் வடிவுடையான். படத்தில் வழக்கம்போல வித்தியாசமான புரியாத சில வசனங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் திரைக்கதை வலுவில்லாமல் இருப்பதால படத்தை பொறுமையாக உட்கார்ந்து பார்க்க முடியவில்லை.

    அம்ரீஷ் கணேஷின் பின்னணி இசையில் எரிச்சலை உண்டுபண்ணுகிறது. பாடல்கள் சுமார் ரகம் தான். இனியன் ஜே.ஹாரிஸின் ஒளிப்பதிவு சிறப்பாக வந்துள்ளது.

    மொத்தத்தில் `பொட்டு' நமக்கான வேட்டு. #Pottu #PottuReview #Bharath #Namitha #Iniya #SrustiDange

    தன் மகனை வைத்து படம் இயக்கி வரும் தம்பி ராமய்யா, புதிய முயற்சியாக இப்படத்திற்கு இசையமைத்து அதில் ஒரு பிரபல இசையமைப்பாளரையும் பாட வைத்திருக்கிறார்.
    `மனுநீதி,' `இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' ஆகிய படங்களை டைரக்டு செய்த தம்பி ராமய்யா, குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தும் வருகிறார். இவருடைய மகன் உமாபதி, `அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்தில், கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அடுத்து இவர் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு, `மணியார் குடும்பம்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

    இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன் பொறுப்புகளை கவனித்து வந்த தம்பி ராமய்யா, பாடல்களை எழுதி இசையமைப்பாளராகவும் மாறியிருக்கிறார். `மணியார் குடும்பம்' படத்தை பற்றி அவர் கூறுகிறார்:-

    ``இது, வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தை பற்றிய கதை. ஒரு குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. வேலை எதுவும் செய்யாமல் ஊர் சுற்றும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில், ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அவள் வந்த பின், அவனுடைய வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது? என்பதே கதை.


    என் மகன் உமாபதி நடித்துள்ள 2-வது படத்தையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக, 5 மாதங்களாக நான் நடிக்கவில்லை. இதில், உமாபதி ஜோடியாக கேரளாவை சேர்ந்த மிருதுளா மேரி நடித்து இருக்கிறார். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ராதாரவி, ஜெயப்பிரகாஷ், சிங்கமுத்து, சிங்கம்புலி, மொட்ட ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

    என் இசையில், டி.இமான் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ``என் மனசுக்குள்ள நீ புகுந்து...'' என்று தொடங்கும் அந்த பாடலை ரூ.40 லட்சம் செலவில் அரங்கு அமைத்து படமாக்கியிருக்கிறோம். சென்னை, புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. தந்தை-மகன் இடையேயான பாசப் பிணைப்பை சொல்லும் படம், இது. இதில் நானும், உமாபதியும் தந்தை-மகனாகவே நடித்து இருக்கிறோம்.

    இந்த படத்தை எல்லோரும் பார்க்கும் வகையில் தணிக்கை குழுவினர், `யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.'' 
    ×