search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "comedy"

    • நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் அரசியல்-நகைச்சுவை திரைப்படம்
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது

    'காமெடி நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் அரசியல்-நகைச்சுவை திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'  .சினி கிராப்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் காமெடி எழுத்தாளர் சாய் ராஜகோபால் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

    இப்படத்தில் நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்கின்றனர்.




    கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். மாறுபட்ட ஒரு நகைச்சுவை பாத்திரத்தில் சிங்கமுத்துவும், சித்ரா லட்சுமணனும் நடிக்கின்றனர். மேலும், மொட்டை ராஜேந்திரன், ஒ.ஏ.கே.சுந்தர், ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, டாக்டர் காயத்ரி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து உள்ளார்.இந்த படத்தின் 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் சென்னை பரணி' டப்பிங் ஸ்டூடியோவில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டப்பிங் பணிகளில் கவுண்டமணி பங்கேற்றார். 8 மணி நேரம் தொடர்ந்து உற்சாகத்துடன் கவுண்டமணி 'டப்பிங்' பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

    இந்த படம் குறித்து இயக்குநர் சாய் ராஜகோபால் கூறியதாவது :-

    "சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன்.




     


    எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'பாய்ஸ்' மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 'கிச்சா வயசு 16' ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

    'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் கதையை கவுண்டமணியிடம் சொன்ன போது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தார்.இப்படம் 6 முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த நகைச்சுவை படம் ஆகும்.

    கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை ஜோடிக்கு பிறகு கவுண்டமணி-யோகி பாபு கூட்டணி மிகவும் பேசப்படுவதாக அமைந்து உள்ளது. இதற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளிப்பார்கள்."என்று கூறினார்.

    • சுமார் 5 ஆண்டுகளாக அவர் வீட்டிலேயே படுத்த படுக்கையில் இருந்துள்ளார்.
    • உடனடியாக அவரது மருத்துவரை அணுகி நடந்த சம்பவங்களை கூறினார்.

    அமெரிக்காவின் மிக்சிகன் பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றார். பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் அவரால் கோமாவில் இருந்து மீள முடியவில்லை. சுமார் 5 ஆண்டுகளாக அவர் வீட்டிலேயே படுத்த படுக்கையில் இருந்துள்ளார்.

    அவரை கோமாவில் இருந்து குணமாக்கி சாதாரண நிலைக்கு கொண்டு வர அவரது தாய் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். எனினும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜெனிபரின் தாய் வீட்டில் தனது மகனுடன் பேசி கொண்டிருந்த போது காமெடி செய்துள்ளார். அதை கேட்ட, ஜெனிபர் சிரித்துள்ளார். இதை கவனித்த அவரது தாய் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

    5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தனது மகன் தனது காமெடியை கேட்டு கோமாவில் இருந்து சற்று மீண்டதை அவரால் நம்பமுடியவில்லை. உடனடியாக அவரது மருத்துவரை அணுகி நடந்த சம்பவங்களை கூறினார். இதைத்தொடர்ந்து அவரை பேச வைப்பதற்கும், சாதாரணமாக இயங்க வைப்பதற்குமான நடவடிக்கைகளை மருத்துவ குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி 1.5 லட்சம் லைக்குகளை குவித்தது. பயனர்கள் பலரும் தாங்கள் அந்த நகைச்சுவையை கேட்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். 

    • மதுரையில் கரு.கருப்பையாவின் நகைச்சுவை சொல்லரங்கம் இன்று மாலை நடக்கிறது.
    • இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.

    மதுரை

    மதுரை கீழ மாரட் வீதி பந்தடி 4-வது முக்கில் உள்ள பழைய கோண அரச மரம் பிள்ளையார் கோவி லில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது.

    இதை யொட்டி இன்று மாலை 6 மணிக்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவரும், சிரிப்பு பட்டிமன்ற நடுவரு மான பிரபல ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு. கருப்பையாவின் நகைச் சுவை சொல்லரங்கம் என்னும் புதுமையான நிகழ்ச்சி நடைபெறுகிறது. ெதாடர்ந்து இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.

    • அண்ணாமலை ‘நான் தலைவன்’ என்று கூறுவது நகைச்சுவையாக உள்ளது என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.
    • கப்பலூர் சுங்கச்சாவடி முழுக்க முழுக்க மத்திய அரசுத்துறையை சார்ந்துள்ளது.

    திருமங்கலம்

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளிக்கு வந்தார். அவர் செயற்கை கோள் உருவாக்கிய பள்ளி மாணவி களை சந்தித்து பொன்னா டை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது குத்துச் சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு விருது வழங்கி கவுரவித்தார். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மரக்கன்று வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தலைவர் என்பவர் தனது தொகுதியில் வெற்றி பெற்றவராக வேண்டும். அதை விட்டுவிட்டு அண்ணா மலை தன்னைத்தானே எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா வரிசையில் மிகைப்படுத்தி கூறுவது நகைச்சுவையாக உள்ளது.

    அவர் சட்டமன்ற தேர்தலில் தோல்விய டைந்தவர். எங்களை பொறுத்தவரை அவர், 'நான் தலைவன்' என்று சொல்லுவது வடிவேலு "நானும் ரவுடி தான்" என்று கூறுவது போல் இருக்கிறது. அவர் ஏதேனும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று சொல்லட்டும். அதை ஏற்றுக் கொள்கிறோம்.

    கப்பலூர் சுங்கச்சாவடி குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியை நானும், கனிமொழியும் சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். அதற்கு அவர் மார்ச் மாதம் வரை எனக்கு அவகாசம் கொடுங்கள். உரிய முடிவு எடுப்பேன் என்று கூறினார்.

    மார்ச் முடிந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் ஏப்ரல் முதல் வாரத்தி லேயே அவரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்து வோம்.

    கப்பலூர் சுங்கச்சாவடி முழுக்க முழுக்க மத்திய அரசுத்துறையை சார்ந்துள்ளது. மக்கள் மீது அராஜகத்தை தூண்டும் வகையில் செயல்படும் கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்து வோம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    தமிழகத்தில், மின்வெட்டு உள்ளதாக ஸ்டாலின் கூறுவது நகைச்சுவையாக உள்ளது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
    கூத்தாநல்லூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் சில இடங்களில் நிலவி வரும் குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்யும் பொருட்டும், மின் இழப்பை குறைத்திடும் பொருட்டும் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு ரூ.3 கோடியே 73 லட்சம் நிதி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் ரூ.1 கோடியே 6 லட்சம் செலவில் 33.11 கி.வோ கூத்தாநல்லூர் துணை மின் நிலையத்தில் கூடுதலாக திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதன் தொடங்க விழா நேற்று கூத்தாநல்லூர் துணை மின் நிலையத்தில் நடந்தது. விழாவிற்கு திருவாரூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார், மன்னார்குடி செயற்பொறியாளர்கள் ராதிகா, காளிதாஸ், திருச்சி கட்டுமான மேற்பார்வை பொறியாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு புதிய திறன் மின்மாற்றியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கூத்தாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களில் நிலவி வந்த குறைந்த மின் அழுத்தம் புதிய திறன் மின்மாற்றியால் சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் கூத்தாநல்லூர் நகராட்சி பகுதியை சேர்ந்த கிராம மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், வடபாதிமங்கலத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவிற்கு உள்ள மின்பாதை வழியாக மின் சாரம் வந்தது தவிர்க்கப்பட்டு தற்போது 5 கிலோ மீட்டருக்குள்ளாகவே உள்ள மின் பாதை மூலம் மின்சாரம் வழங்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.

    இந்த கூடுதல் திறன் மின்மாற்றி மூலம் கூத்தாநல்லூர் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சுமார் 25 ஆயிரம் பயனாளிகள் பயன் அடைவர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர், தமிழகத்தில் மின்வெட்டு உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-

    தமிழகத்தில் மின்வெட்டு உள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறி வருவது காமெடியாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு தமிழகமே இருளில் மூழ்கியதை தமிழக மக்கள் மறந்து விட மாட்டார்கள். மு.க.ஸ்டாலினும் மறந்து விட மாட்டார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர்தான் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியது என்பதை யாரும் மறக்க மாட்டார்கள். தமிழகத்தில் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் அ.தி.மு.க. நகர செயலாளர் பசீர் அகமது, நகர துணை செயலாளர் உதய குமார், பொருளாளர் பாஸ் கரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முகமதுஅஸ்ரப், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜசேகரன், நகர ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மன்னார்குடி உதவி செயற்பொறியாளர் அருள்ராஜ் வரவேற்றார். முடிவில் கூத்தாநல்லூர் உதவி செயற்பொறியாளர் சங்கர்குமார் நன்றி கூறினார். 
    இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்த வடிவேலுக்கு, தயாரிப்பாளர் சங்கம் இறுதி கெடு விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Vadivelu
    சிறுவர்களையும் பெரியவர்களையும் சிரிக்க வைத்த வடிவேலுவுக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. இவர் நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் நல்ல வசூல் பார்த்ததால் அதன் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரிக்க முன்வந்தார்.

    இதற்காக வடிவேலுக்கு குறிப்பிட்ட தொகையை சம்பள முன்பணமாக கொடுத்து ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே டைரக்டு செய்ய முடிவானது. சென்னையில் பல கோடி செலவில் அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பையும் தொடங்கினர். சில நாட்கள் அதில் நடித்த வடிவேலு தொடர்ந்து நடிக்க முடியாது என்று விலகி விட்டார்.

    இதனால் படப்பிடிப்பு நின்று போனது. அரங்குகளையும் பிரித்து விட்டனர். இந்த பிரச்சினை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு போனது. வடிவேலுவிடம் பேசி படப்பிடிப்புக்கு அனுப்பி வைக்கும்படி ஷங்கர் மனு அளித்து இருந்தார். நடிகர் சங்கம் மூலம் வடிவேலுக்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்கபட்டது. படத்தில் நடிக்கும்படியும் வற்புறுத்தப்பட்டது.

    படப்பிடிப்பை தாமதமாக தொடங்கி தனக்கு பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தியதால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று பிடிவாதமாக மறுத்தார் வடிவேல். தொடர்ந்து பேசியும் பிரச்சினைக்கு தீர்வு வரவில்லை. படத்துக்கு செலவழித்த ரூ.9 கோடியை வடிவேலு தனக்கு நஷ்ட ஈடாக அளிக்க வேண்டும் என்று படக்குழு சார்பில் இன்னொரு புகார் மனு அளிக்கப்பட்டது.



    இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க வேண்டும் என்று கெடு விதித்து ஒரு வாரம் அவகாசம் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதற்கு மறுத்தால் வடிவேல் படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் கூறப்படுகிறது.
    ×