search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "I am the leader"

    • அண்ணாமலை ‘நான் தலைவன்’ என்று கூறுவது நகைச்சுவையாக உள்ளது என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.
    • கப்பலூர் சுங்கச்சாவடி முழுக்க முழுக்க மத்திய அரசுத்துறையை சார்ந்துள்ளது.

    திருமங்கலம்

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளிக்கு வந்தார். அவர் செயற்கை கோள் உருவாக்கிய பள்ளி மாணவி களை சந்தித்து பொன்னா டை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது குத்துச் சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு விருது வழங்கி கவுரவித்தார். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மரக்கன்று வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தலைவர் என்பவர் தனது தொகுதியில் வெற்றி பெற்றவராக வேண்டும். அதை விட்டுவிட்டு அண்ணா மலை தன்னைத்தானே எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா வரிசையில் மிகைப்படுத்தி கூறுவது நகைச்சுவையாக உள்ளது.

    அவர் சட்டமன்ற தேர்தலில் தோல்விய டைந்தவர். எங்களை பொறுத்தவரை அவர், 'நான் தலைவன்' என்று சொல்லுவது வடிவேலு "நானும் ரவுடி தான்" என்று கூறுவது போல் இருக்கிறது. அவர் ஏதேனும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று சொல்லட்டும். அதை ஏற்றுக் கொள்கிறோம்.

    கப்பலூர் சுங்கச்சாவடி குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியை நானும், கனிமொழியும் சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். அதற்கு அவர் மார்ச் மாதம் வரை எனக்கு அவகாசம் கொடுங்கள். உரிய முடிவு எடுப்பேன் என்று கூறினார்.

    மார்ச் முடிந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் ஏப்ரல் முதல் வாரத்தி லேயே அவரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்து வோம்.

    கப்பலூர் சுங்கச்சாவடி முழுக்க முழுக்க மத்திய அரசுத்துறையை சார்ந்துள்ளது. மக்கள் மீது அராஜகத்தை தூண்டும் வகையில் செயல்படும் கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்து வோம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    ×