என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Daniel Balaji"

    • பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கு ஆர்.பி.எம். என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி கடைசியாக நடித்த திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கு ஆர்.பி.எம். என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய்.ஜி.மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி. சுனில், சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயாபிரசாத் உள்பட பலர் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி கடைசியாக நடித்த திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜெ.செபாஸ்டியன் ரோஸாரியோ இசை அமைத்துள்ள இப்படத்தில் தாமரை, மோகன் ராஜா ஆகியோர் பாடல்களை எழுத சிட்ஸ்ரீராம் பாடி இருக்கிறார்.

    மேலும் படத்தின் தயாரிப்பாளரான கல்பனா ராவேந்தர், புரோக்கன் ஆரோ என்ற ஆங்கில பாடலுக்கு முதல் முறையாக இசையமைத்து பாடல் எழுதி பாடி இருக்கிறார். கிரைம், சஸ்பென்ஸ், திரில்லர் கதைகளத்தில் படத்தை சோல்டன் ரீல் இண்டர்நேஷனல் புரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரசாத் பிரபாகர் இணை தயாரிப்பாளராக இருக்கிறார்.

    இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. பேக்கர்ஸ் மூவர்ஸ் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார் டேனியல் பாலாஜி. அவர்கள் செல்லும் வீட்டில் கொள்ளை அடிக்கும் வேலையை அந்த கம்பெனி வழக்கமாக வைத்துள்ளது. அதில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் இடம் பெறுகிறது. இதுப்போன்ற சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை பிரபல பாடகி கல்பனா ராகவேந்தர் தயாரித்திருக்கிறார்.
    • எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், அனிருத் போன்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை கேட்டு வளர்ந்தவள் நான்.

    'வேட்டையாடு விளையாடு', 'காக்க காக்க' உள்பட பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் டேனியல் பாலாஜி.

    சினிமாவில் கொடூர வில்லன் தோற்றத்தை வெளிப்படுத்தி வந்த டேனியல் பாலாஜி நிஜ வாழ்க்கையில் ஆன்மீகத்தில் தீவிர ஆர்வம் கொண்டவர். ஆவடியில் ரத்தூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலை அவரது சொந்த செலவில் கட்டி இருக்கிறார்.

    சினிமாவில் வில்லனாகவும் நிஜ வாழ்க்கையில் ஆன்மீகவாதியாகவும் இருந்து வந்த டேனியல் பாலாஜி கடந்த ஆண்டு மார்ச் 29-ந்தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

    அவர் மரணம் அடைந்து முதல் ஆண்டு நேற்று நிறைவடைந்ததையொட்டி அவர் நடித்த கடைசி படமான ஆர்.பி.எம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை பிரபல பாடகி கல்பனா ராகவேந்தர் தயாரித்திருக்கிறார்.

    படத்தின் கதாநாயகனாக டேனியல் பாலாஜி மற்றும் கோவை சரளா, இளவரசு, தேவதர்ஷினி, ஒய்.ஜி மகேந்திரன் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

    சஸ்பென்ஸ் திரில்லர் கலந்து உருவாகியுள்ள ஆர்.பி.எம் படம் தான் டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம்.

    டிரெயிலர் வெளியீட்டு விழாவில் பாடகி கல்பனா ராகவேந்தர் பேசியதாவது:-

    எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், அனிருத் போன்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை கேட்டு வளர்ந்தவள் நான். மண் மணம் என்று சொல்வார்கள் அது போல் வளர்ந்த பொண்ணு நான். சின்ன வயதில் சில படங்களில் நடித்தேன் தொடர்ந்து பாடல்கள் மேல் எனக்கு இருந்த ஆர்வத்தினால் படங்களில் நடிக்கவில்லை. இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்து படத்தின் கதாநாயகனாக நடிப்பதற்கு டேனியல் பாலாஜியிடம் பேசினோம். பல கட்டங்கள் கதை கேட்ட பிறகுதான் நடிப்பதற்கு சம்மதித்தார்.

    அவர் மரணம் அடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு படக்குழுவினரிடம் நான் நடிக்க இருக்கும் கடைசி படம் இதுவாகத்தான் இருக்கும். இதற்குப் பின் நான் முழு நேர ஆன்மீகவாதியாக ஆகிவிடுவேன் என கூறியிருக்கிறார். ஆனால் எதிர்பாரவிதமாக காலமாகிவிட்டார். அவரது இறப்பு பேரிழப்பு. மிகச்சிறந்த நடிகர். படப்பிடிப்பு தளத்தில் அவரது நடிப்பை பார்த்து நான் நடிக்க கற்றுக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் டேனியல் பாலாஜி தாயாரும் பங்கேற்றார்.

    • பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
    • இவர் நடித்த வில்லன் பாத்திரங்களுக்கென தனி ரசிகர்கள் உண்டு.

    தென்னிந்திய திரையுலகில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி யாரும் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்தவர் டேனியல் பாலாஜி. சித்தி நாடகத்தில் நடிகராக அறிமுகமான இவர் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

    காக்க காக்க படத்தில் ஸ்ரீகாந்த், வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் சுகுமாறன் என இவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

    இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டேனியல் பாலாஜி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 

    • டேனியல் பாலாஜியின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட உள்ளது.
    • டேனியல் பாலாஜியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தென்னிந்திய திரையுலகில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி யாரும் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்த டேனியல் பாலாஜி (48) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

    மாரடைப்பு காரணமாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டு, அஞ்சலிக்காக புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

    டேனியல் பாலாஜியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கண்கள் தானம் செய்ததன் மூலம் நிஜ வாழ்க்கையில் டேனியல் பாலாஜி நாயகனாகவே திகழ்கிறார்.

    • இளவயது மரணங்களின் வேதனை பெரிது.
    • பாலாஜியின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை :

    நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது.

    இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி என தெரிவித்துள்ளார்.

    • இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் "BP180"
    • இப்படத்தில் மறைந்த டேனியல் பாலாஜி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ATUL INDIA MOVIES சார்பில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா வழங்கும், இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் "BP180". இப்படத்தில் மறைந்த டேனியல் பாலாஜி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்தப் படத்தின் தயாரிப்பாளரான அதுல் போசாமியா கனத்த இதயத்துடன் அஞ்சலி குறிப்பை வெளியிட்டார். அதில்

    அன்புள்ள டேனியல்,

    அதுல் இந்தியா மூவிஸ் ஆழ்ந்த வருத்தத்துடனும் கனத்த இதயத்துடனும் தனித்துவமான நடிகர் மற்றும் ஒரு நல்ல மனிதருக்கு பிரியாவிடை கொடுக்க இந்த அஞ்சலி குறிப்பை எழுதுகிறோம். உங்களது இந்த திடீர் மறைவு சினிமா உலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் திறமை, ஆர்வம் மற்றும் உங்கள் கதாபாத்திரத்திற்காக நீங்கள் கொடுத்த அர்ப்பணிப்பு ரசிகர்கள் உட்பட பலரது மனதிலும் அழியாத இடத்தை விட்டு சென்றிருக்கிறது.

    உங்களது கடைசி திரைப்படமான 'பிபி 180' இன் தயாரிப்பாளர் என்ற முறையில் கதாபாத்திரங்களை ஆழமாகவும், நுணுக்கமாகவும், நம்பகத்தன்மையுடனும் திரையில் கொண்டு வருவதற்காக எந்த அளவுக்கு நீங்கள் இணையற்ற அர்ப்பணிப்பை கொடுக்கிறீர்கள் என்பதை நேரடியாக காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. திரையில் உங்கள் நடிப்பு எப்போதும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும். உங்கள் சொந்த சேமிப்பில் நீங்கள் ஆவடியில் கோயில் கட்டி இருக்கிறீர்கள் என்ற விஷயம் அறிந்து நாங்கள் வியந்தோம். உங்களுடன் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இந்த கோயில் இல்லாமல் இன்னும் இரண்டு கோயில்கள் கட்ட வேண்டும் என்று விரும்பினீர்கள். ஒன்று சிவனுக்கு, இன்னொன்று லட்சுமிக்கு. கடந்த மாதம் நீங்கள் குஜராத்துக்குச் சென்றிருந்தீர்கள். அப்போது உடன் வந்த நாங்களும் சோம்நாத் ஜோதிர்லிங் மற்றும் ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் ஆகிய இடங்களை தரிசித்தோம். அங்கு நீங்கள் ருத்ர அபிஷேகம் செய்தீர்கள்.

     

    உங்கள் எல்லைக் கடந்த திறமைக்கு அப்பால், நீங்கள் ஒரு கனிவான மற்றும் கருணையான நபர். எப்போதும் உதவிக் கரம் நீட்டவும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் ஞானத்தைப் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருந்தீர்கள். படப்பிடிப்புத் தளத்தில் எங்களுடைய சோர்ந்து போன நாட்களைக் கூட ஒளிரச் செய்தது உங்கள் இருப்பு. மேலும், உங்கள் சிரிப்பு உங்களுடன் பணிபுரிந்த அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

     

    நீங்கள் இனி உடலால் எங்களுடன் இல்லாவிட்டாலும், உங்கள் கலைத்திறனால் நீங்கள் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் என்றும் வாழ்வீர்கள். நம் காலத்தின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக இனிவரும் தலைமுறைக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருப்பீர்கள்.

    அன்புள்ள டேனியல், நிம்மதியாக ஓய்வெடுங்கள். உங்கள் மீதான அன்பும் உங்கள் நினைவும் எங்கள் இதயங்களில் ஒருபோதும் குறையாது.

    ஆழ்ந்த அனுதாபங்களுடனும் என்றென்றும் நன்றியுடனும்,

    அதுல் போசாமியா   

    என  குறிப்பிட்டுள்ளார் .

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2024 ஆம் ஆண்டு நம்மை விட்டு பிரிந்த சினிமாத்துறை கலைஞர்களை பற்றி இச்செய்தியில் காணலாம்
    • டெல்லி கணேஷ் என்று அன்போடு அழைக்கப்படுபவர் கார்ப்போரால் எம்.கணேசன்.

    இந்தாண்டு நம்மை விட்டு பிரிந்த சினிமாத்துறை கலைஞர்களை பற்றி இச்செய்தியில் காணலாம்

    டெல்லி கணேஷ்

    டெல்லி கணேஷ் என்று அன்போடு அழைக்கப்படுபவர் கார்ப்போரால் எம்.கணேசன். 1944-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் பிறந்த இவர் இந்திய விமானப் படையில் (IAF) இணைந்து, 1964 முதல் 1974 வரை பணியாற்றினார். இதன்பிறகு 'டௌரி கல்யாண வைபோகமே' என்ற நாடகத்தில் குசேலர் கதாபாத்திரத்தில் நடித்ததுதான் டெல்லி கணேஷூக்கு திருப்புமுனையாக அமைந்தது. குசேலராக கணேஷின் நடிப்பு இயக்குநர் கே. பாலச்சந்தரின் கவனத்தை ஈர்த்தது.

    டெல்லி கணேஷ் 1976-ல் திரைத்துறைக்கு வந்தார். இவர் தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் 'டெல்லி' நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். டெல்லி கணேஷ் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம் (1977), தமிழ் திரையுலகுக்கு இவரை இயக்குனர் கே. பாலசந்தர் தான் அறிமுகம் செய்தார். டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது. ஆனால் அபூர்வ சகோதரர்கள் (கதாபாத்திரம்-பிரான்சிஸ்) போன்ற சில படங்களில் வில்லனாகவும் நடித்து கவனம் ஈர்த்தார். சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், ஆஹா, தெனாலி, சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.இதனிடையே, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் (80) காலமானார். அவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர்.

     

    பவதாரிணி

    தமிழ் திரையுலகில் முன்னணி பின்னணி பாடர்களுள் முக்கியமானவராக இருந்தார். இவர் இசை ஞானியான இளையராஜாவின் மகளாவார். இவர் ஒரு இசையமைப்பாளரும் கூட.இளையராசாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. இவர் இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா , கார்த்திக் ராஜா, தேவா மற்றும் பல இசையமைப்பாளர் இசையமைப்பில் பல பாடல்களை பாடியுள்ளார். இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இலங்கயில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி உயிரழந்தார்.

    டேனியல் பாலாஜி

    சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்து வில்லத்தனத்திற்கு பெயர் போனவர் டேனியல் பாலாஜி. 'காக்க காக்க' படத்தின் மூலம் அறிமுகமான இவர் 'பொல்லாதவன்', 'வடசென்னை', 'பிகில்' போன்ற படங்களில் நடித்து இவருக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மாரடைப்பு காரணமாக கடந்த மார்ச் 29 ஆம் தேதி சென்னையில் காலமானார். இறப்பிற்குப் பிறகு இவரது கண்கள் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     

    லொள்ளு சபா சேஷூ

    'மண்ணெண்ண வேப்பென வெளக்கெண்ண, யார் ஜெயிச்சா எனக்கென்ன' போன்ற நகைச்சுவை வசனங்களால் ரசிகர்களை கவர்ந்தவர் சேஷூ. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபாவின் மூலம் பிரபலமானவர். 'வேலாயுதம்', 'பாரிஸ் ஜெயராஜ்' போன்ற படங்களில் மூலம் தன் நடிப்பில் முத்திரை பதித்தவர். அதுவும் அச்சச்சோ இவரா பயங்கரமான ஆள் ஆச்சே போன்ற நகைச்சுவை வசங்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானார்.

    இலவச திருமணம்,கல்வி ,மருத்துவம் என தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்தவர் சேஷூ. உடல்நலமின்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் 26 ஆம் தேதி காலமானார்.

    நடிகை சி.ஐ.டி சகுந்தலா

    சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்த பழம்பெரும் நடிகை சி.ஐ.டி சகுந்தலா.

    'சிஐடி சங்கர்', 'படிக்காத மேதை', 'கை கொடுத்த தெய்வம்', 'வசந்த மாளிகை' உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தவர். சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவால் கடந்த செப்.17 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஜாகிர் உசேன்:

    இந்திய இசைத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன். பிரபல தபேலா இசைக் கலைஞரான ஜாகிர் உசேன் பல்வேறு மொழி திரைப்படங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். இவர் இசையமைத்த தேநீர் விளம்பரம் wah taj மிகவும் பிரபலமடைந்தது.

    தபேலா இசைக் கலைஞராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ஜாகிர் உசேன் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 73.

    ஷ்யாம் பெனகல்:

    இந்திய சினிமாவில் சுயாதீன சினிமாவை உருவாக்கியதில் முக்கிய இயக்குநராக பார்க்கப்படுபவர் ஷ்யாம் பெனகல் (90). ஷ்யாம் பெனகல் படங்கள் பல்வேறு ஜானர்களில் சமூக கருத்துக்களை வலுவாக எடுத்துரைத்தது. தனது திரை வாழ்வில் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி துறையிலும் முத்திரை பதித்துள்ளார்.

    இயக்குநர் ஷ்யாம் பெனகல் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை 5 முறை வென்றுள்ளார். அதேபோல் அவரது திரைப்படங்கள் 8 முறை தேசிய விருதுகள் வென்றுள்ளது. இவர் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி கல்லீரல் தொடர்பான நோய் காரணமாக உயிரிழந்தார்.

     

    எம்.டி.வாசுதேவன் நாயர்

    கேரளாவின் பழம்பெரும் எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், சிறு கதைகள், நாவல்கள், திரைக்கதை, இலக்கியம், பத்திரிகைத்துறை என மலையாள கலையுலகின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் எம்.டி.வாசுதேவன். 91 வயதான இவர் கோழிக்கோடு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 25ஆம் தேதி உயிரிழந்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • படத்துக்கு ஆர்.பி.எம். என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • விரைவில் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியிடப்படுகிறது.

    மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி ஏற்கனவே நடித்திருந்த படத்தின் தலைப்பு மற்றும் தோற்றத்தை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

    பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஆர்.பி.எம். என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய்.ஜி.மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி. சுனில், சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயாபிரசாத் உள்பட பலர் நடித்துள்ளனர்.

    ஜெ.செபாஸ்டியன் ரோஸாரியோ இசை அமைத்திருக்கிறார். தாமரை, மோகன் ராஜா ஆகியோர் பாடல்களை எழுத சிட்ஸ்ரீராம் பாடி இருக்கிறார்.

    மேலும் படத்தின் தயாரிப்பாளரான கல்பனா ராவேந்தர், புரோக்கன் ஆரோ என்ற ஆங்கில பாடலுக்கு முதல் முறையாக இசையமைத்து பாடல் எழுதி பாடி இருக்கிறார். கிரைம், சஸ்பென்ஸ், திரில்லர் கதைகளத்தில் படத்தை சோல்டன் ரீல் இண்டர்நேஷனல் புரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரசாத் பிரபாகர் இணை தயாரிப்பாளராக இருக்கிறார்.

    படம் பற்றி இயக்குநர் பிரசாத் பிரபாகர் பேசுகையில், நடிகர் டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம் இது. படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியிடப்படுகிறது. வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் இளம் நாயகிகள் பலரும் நடித்து வரும் நிலையில், மற்றுமொரு நாயகியாக அம்ருதா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
    விஜய் - அட்லி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கால்பந்து போட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு படமாக்கி வந்த நிலையில், தற்போது பாடல் காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில், படைவீரன், காளி உள்ளிட்ட படங்களில் நடித்த அம்ருதா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் தலைப்பு என்று சில பெயர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    விஜய் - அட்லி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படத்திற்கு தற்காலிகமாக தளபதி 63 என்று தலைப்பு வைத்துள்ளார்கள். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

    இந்த நிலையில் படத்துக்கான பெயரை படக்குழுவினர் தேர்வு செய்துவிட்டதாகவும், விஜய் பிறந்தநாளையொட்டி ஜூன் 21-ந் தேதி படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் போஸ்டர் வெளியாக இருக்கிறது. அட்லி - விஜய் கூட்டணியில் உருவான தெறி, மெர்சல், சர்கார் படங்களின் தலைப்புகளும் இதே தேதியில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்த வகையில், தளபதி 63 படத்திற்கு வெறி, வெறித்தனம், மைக்கேல், கேப்டன் மைக்கேல் உள்ளிட்ட பெயர்களில் ஒன்றை தலைப்பாக அறிவிப்பார்கள் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.



    விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், ஜாக்கி ஷெராப், இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Thalapathy63 #Vijay
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் விளையாட்டு சம்பந்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் விஜய் பேருந்து ஒன்றில் இருந்து இறங்குவது போன்ற ஒரு சிறிய வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அந்த வீடியோவில் விஜய் ஸ்டைலிஷ் தோற்றத்தில் இருந்தார்.

    தற்போது விளையாட்டு மைதானத்தில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இதில் விஜய் களத்திற்கு வெளியே கழுத்தில் காலர் பெல்ட் அணிந்து கொண்டு வீல் சேரில் உட்கார்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். 



    விஜய்யின் 63-வது படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், யோகி பாபு, இந்துஜா, ஆத்மிகா, ரெபா மோனிக்கா ஜான், வர்ஷா பொலம்மா, ஞானசம்பந்தம், ஆனந்த்ராஜ், சாய் தீனா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

    ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். #Thalapathy63 #Vijay #Nayanthara

    அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மூன்று இளம் நடிகைகள் ஒப்பந்தமாகி உள்ளனர். #Thalapathy63 #Vijay
    அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இதனால் கால்பந்து வீராங்கனைகளாக இளம் நடிகைகள் பலர் படத்தில் இணைந்து வருகின்றனர்.

    ஏற்கனவே இந்துஜா, ரெபா மோனிக்கா ஜான் ஆகியோர் நடித்து வரும் நிலையில் தற்போது 96 படத்தில் விஜய் சேதுபதியுடன் மாணவியாக நடித்த வர்ஷா பொல்லம்மா இணைந்துள்ளார். இந்த மாத இறுதி வரை சென்னையில் படப்பிடிப்பை நடத்தும் படக்குழு அதன்பின் டெல்லி செல்ல உள்ளது. டெல்லியில் மே 3-ந் தேதி முதல் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது.



    நயன்தாரா தற்போது தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்துவரும் நிலையில், விரைவில் அவர் இந்தப் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #Thalapathy63 #Vijay #Nayanthara #VarshaBollamma

    ×