search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reba Monica John"

    அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் இளம் நாயகிகள் பலரும் நடித்து வரும் நிலையில், மற்றுமொரு நாயகியாக அம்ருதா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
    விஜய் - அட்லி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கால்பந்து போட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு படமாக்கி வந்த நிலையில், தற்போது பாடல் காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில், படைவீரன், காளி உள்ளிட்ட படங்களில் நடித்த அம்ருதா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் தலைப்பு என்று சில பெயர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    விஜய் - அட்லி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படத்திற்கு தற்காலிகமாக தளபதி 63 என்று தலைப்பு வைத்துள்ளார்கள். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

    இந்த நிலையில் படத்துக்கான பெயரை படக்குழுவினர் தேர்வு செய்துவிட்டதாகவும், விஜய் பிறந்தநாளையொட்டி ஜூன் 21-ந் தேதி படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் போஸ்டர் வெளியாக இருக்கிறது. அட்லி - விஜய் கூட்டணியில் உருவான தெறி, மெர்சல், சர்கார் படங்களின் தலைப்புகளும் இதே தேதியில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்த வகையில், தளபதி 63 படத்திற்கு வெறி, வெறித்தனம், மைக்கேல், கேப்டன் மைக்கேல் உள்ளிட்ட பெயர்களில் ஒன்றை தலைப்பாக அறிவிப்பார்கள் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.



    விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், ஜாக்கி ஷெராப், இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Thalapathy63 #Vijay
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் விளையாட்டு சம்பந்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் விஜய் பேருந்து ஒன்றில் இருந்து இறங்குவது போன்ற ஒரு சிறிய வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அந்த வீடியோவில் விஜய் ஸ்டைலிஷ் தோற்றத்தில் இருந்தார்.

    தற்போது விளையாட்டு மைதானத்தில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இதில் விஜய் களத்திற்கு வெளியே கழுத்தில் காலர் பெல்ட் அணிந்து கொண்டு வீல் சேரில் உட்கார்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். 



    விஜய்யின் 63-வது படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், யோகி பாபு, இந்துஜா, ஆத்மிகா, ரெபா மோனிக்கா ஜான், வர்ஷா பொலம்மா, ஞானசம்பந்தம், ஆனந்த்ராஜ், சாய் தீனா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

    ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். #Thalapathy63 #Vijay #Nayanthara

    அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மூன்று இளம் நடிகைகள் ஒப்பந்தமாகி உள்ளனர். #Thalapathy63 #Vijay
    அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இதனால் கால்பந்து வீராங்கனைகளாக இளம் நடிகைகள் பலர் படத்தில் இணைந்து வருகின்றனர்.

    ஏற்கனவே இந்துஜா, ரெபா மோனிக்கா ஜான் ஆகியோர் நடித்து வரும் நிலையில் தற்போது 96 படத்தில் விஜய் சேதுபதியுடன் மாணவியாக நடித்த வர்ஷா பொல்லம்மா இணைந்துள்ளார். இந்த மாத இறுதி வரை சென்னையில் படப்பிடிப்பை நடத்தும் படக்குழு அதன்பின் டெல்லி செல்ல உள்ளது. டெல்லியில் மே 3-ந் தேதி முதல் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது.



    நயன்தாரா தற்போது தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்துவரும் நிலையில், விரைவில் அவர் இந்தப் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #Thalapathy63 #Vijay #Nayanthara #VarshaBollamma

    சஞ்சய் பாரதி இயக்கத்தில் உருவாகும் `தனுசு ராசி நேயர்களே' படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இரு நாயகிகள் நடிக்கும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. #DhanusuRasiNeyargalae #HarishKalyan
    `இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தை சஞ்சய் பாரதி இயக்குகிறார். 
    `தனுசு ராசி நேயர்களே' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது.

    படத்தின் பூஜையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர். தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் கேமராவை ஆன் செய்ய, இயக்குனர் பி.வாசு கிளாப் அடித்து படத்தை துவக்கி வைத்தார்.



    ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகும் இதில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி நடிக்கின்றனர். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

    ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் இந்த படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.



    ஒரு இளைஞனின் ஜோதிட நம்பிக்கைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளைஞனுக்கு ஜோதிட நம்பிக்கைகள் என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் கதையாக உருவாகிறது. #DhanusuRasiNeyargalae #HarishKalyan #RebaMonicaJohn #RheaChakraborty

    பிச்சுமணி இயக்கத்தில் ஜெய், ரெபா மோனிகா ஜான், டேனி, ரோபோ சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜருகண்டி’ படத்தின் விமர்சனம். #Jarugandi #JarugandiReview
    நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ஜெய். பணம் கட்டாதவர்களின் கார்களை எடுத்து செல்லும் வேலை செய்து வருகிறார். ஒருநாள் கவுன்சிலர் ஒருவரின் காரை தூக்குவதால் அவருடைய வேலை பறிபோகிறது. இதனால் ஏதாவது ஒரு தொழில் செய்து வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் முயற்சி செய்து வருகிறார். 

    டிராவல்ஸ் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து, பேங்க்கில் லோனுக்கு முயற்சி செய்கிறார். ஆனால், எங்கும் கிடைக்கவில்லை. இதை நண்பன் டேனியிடம் சொல்ல, அவரோ இளவரசு மூலம் போலி ஆவணங்கள் வைத்து லோன் வாங்குகிறார்.

    அந்த பணத்தை வைத்து கார்கள் வாங்கி டிராவல்ஸ் நடத்தி வருகிறார் ஜெய். சில நாட்களில் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட்டுக்கு, போலி ஆவணங்கள் வைத்து ஜெய் லோன் வாங்கியது தெரியவருகிறது. 

    ஜெய் மற்றும் டேனியை அழைத்து ரூ.10 லட்சம் தரவேண்டும் இல்லையென்றால் ஜெயிலில் அடைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார். மேலும் இந்த பணத்தை இரண்டு நாளில் தரும்படியும் போஸ் வெங்கட் கேட்கிறார்.



    என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நேரத்தில், செல்வந்தரும், நாயகி ரெபா மோனிகாவை காதலிப்பவருமான ரோபோ சங்கரை சந்திக்கிறார்கள். பத்து லட்சம் பணம் தர சம்மதிக்கும் ரோபோ சங்கர், அதற்கு பதிலாக, நாயகி ரெபா மோனிகாவை கடத்தி வர சொல்லுகிறார்.

    இறுதியில் ஜெய், நாயகியை ரெபா மோனிகாவை கடத்தினாரா? போஸ் வெங்கட்டுக்கு ரூ.10 லட்சம் கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஜெய்யை வேறொரு பரிமாணத்தில் பார்க்க முடிகிறது. வழக்கமான வெகுளித்தனமான ஜெய்யாக இல்லாமல், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும் திறம்பட செய்திருக்கிறார். ஜெய்யின் கதாபாத்திரம் அளவிற்கு டேனி மற்றும் ரோபோ சங்கரின் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக டேனிக்கு இது பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. போலீசாக வரும் போஸ் வெங்கட், அவருக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார்.

    கதாநாயகியாக நடித்திருக்கு ரெபா மோனிகா ஜான், அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். திரையில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். 



    வித்தியாசமான திரைக்கதையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிச்சுமணி. திரைக்கதையில் ஆங்காங்கே தோய்வு ஏற்பட்டிருந்தாலும் ஒரு சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். 

    போபோ ஷஷியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘ஜருகண்டி’ ரசிக்கலாம்.
    பிச்சுமணி இயக்கத்தில் ஜெய் - ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஜருகண்டி' படத்தின் முன்னோட்டம். #Jarugandi #Jai
    ஷ்ரத்தா என்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி மற்றும் ஷிவேதா குரூப் சார்பில் நடிகர் நிதின் சத்யா இணைந்து தயாரித்துள்ள படம் `ஜருகண்டி'.

    ஜெய் - ரெபா மோனிகா ஜான் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    இசை - போபோ சசி, ஒளிப்பதிவு - ஆர்.டி.ராஜசேகர், படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல்., கலை - ‌ரேமியன் ரெமி, சண்டைபயிற்சி - டான் அசோக், நடன இயக்குநர் - அஜய் ராஜ், உடை வடிவமைப்பாளர் - ஷில்பா உம்மிட்டி, தயாரிப்பு - பத்ரி கஸ்தூரி, நிதின் சத்யா, இயக்கம் - பிச்சுமணி. இவர் இயக்குநர் வெங்கட் பிரபவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பிச்சுமணி பேசியதாவது, 

    வேறு கதைக்கு வைத்த தலைப்பை, இந்த படத்திற்கு வைக்க சொல்லி உற்சாகப்படுத்தினார் வெங்கட்பிரபு. அனைவருமே படத்தில் விரும்பி நடித்தார்கள். போபோசிஸ் இசையில், பிரவீண்.கே.எல் படத்தொகுப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் திரைக்கதை வேகமாக நகரும் வகையில் இருக்கும். வேகம், ரன், ஸ்பீடு என பல பெயர்கள் வந்துவிட்டது. அடுத்ததாக ஜருகண்டி வரப்போகிறது. 

    நமக்கு தேவைனு வரும் போது நாம் ஒரு விஷயத்தை நியாயப்படுத்துவோம். அந்த வகையில் லோன் வாங்கி கஷ்டப்படும் ஒருவரை மையப்படுத்தி படத்தை படம் படத்தின் கதை நகரும் என்றார். #Jarugandi #Jai

    நிதின் சத்யா தயாரிப்பில் பிச்சுமணி இயக்கத்தில் ஜெய் - ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஜருகண்டி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Jarugandi #Jai
    வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கியிருக்கும் படம் ஜருகண்டி. ஜெய் - ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரோபோ சங்கர், டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    நடிகர் நிதின் சத்யா இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். நமக்கு தேவைனு வரும் போது நாம் ஒரு விஷயத்தை நியாயப்படுத்துவோம். அந்த வகையில் லோன் வாங்கி கஷ்டப்படும் ஒருவரை மையப்படுத்தி படத்தின் கதை நகர்கிறது. 

    போபோசிஸ் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், படம் வருகிற 
    செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

    அதேநோளில் தான் மணிரத்னமின் செக்கச்சிவந்த வானம் படமும், பா.ரஞ்சித் தயாரித்துள்ள பரியேறும் பெருமாள் படமும் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Jarugandi #Jai

    நிதின் சத்யா தயாரிப்பில் பிச்சுமணி இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜருகண்டி படத்தில் லோன் வாங்கி கஷ்டப்படும் கதாபாத்திரத்தில் ஜெய் நடித்துள்ளதாக தெரிகிறது. #Jarugandi #Jai
    வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜருகண்டி. ஜெய் - ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரோபோ சங்கர், டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நிதின் சத்யா பேசுகையில், 

    பிச்சுமணியை சென்னை 28 படத்தில் இருந்தே தெரியும். மங்காத்தா, சரோஜா என பல படங்களில் அவரது வேலை பிடித்துப் போனது. படத்தை சரியாக 46 நாட்களில் முடித்துவிட்டோம். ஜெய் உட்பட அனைவருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அனைவருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படத்தை விரைவில் சென்சாருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். சிங்கம்-3 படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்றார்.



    படத்தின் இயக்குநர் பிச்சுமணி பேசியதாவது, 

    வேறு கதைக்கு வைத்த தலைப்பை, இந்த படத்திற்கு வைக்க சொல்லி உற்சாகப்படுத்தினார் வெங்கட்பிரபு. அனைவருமே படத்தில் விரும்பி நடித்தார்கள். போபோசிஸ் இசையில், பிரவீண்.கே.எல் படத்தொகுப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் திரைக்கதை வேகமாக நகரும் வகையில் இருக்கும். வேகம், ரன், ஸ்பீடு என பல பெயர்கள் வந்துவிட்டது. அடுத்ததாக ஜருகண்டி வரப்போகிறது. 

    நமக்கு தேவைனு வரும் போது நாம் ஒரு விஷயத்தை நியாயப்படுத்துவோம். அந்த வகையில் லோன் வாங்கி கஷ்டப்படும் ஒருவரை மையப்படுத்தி படத்தை படம் படத்தின் கதை நகரும் என்றார். #Jarugandi #Jai

    ×