என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் பிரபுவுடன் ஏராளமான பக்தர்கள், கோவில் பணியாளர்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
    • ராமேசுவரம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

    ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் பிரபு தனது மனைவி புனிதாவுடன் வந்தார். அவர்கள் கோவிலில் விநாயகர், சாமி, அம்பாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தனர். அவருடன் சிவாஜி மன்ற நிர்வாகிகள் தேவதாஸ், பால்ராஜ், சீனி, கவுன்சிலர் முகேஷ் குமார், கோவில் பேஷ்கார் கமலநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கோவிலுக்கு வந்த நடிகர் பிரபுவுடன் ஏராளமான பக்தர்கள், கோவில் பணியாளர்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    தரிசனம் முடிந்து வெளியே வந்த பிரபு நிருபர்களிடம் கூறியதாவது:- நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்கும் மார்ஷல் திரைப்பட சூட்டிங் கீழக்கரையில் நடக்கிறது. அந்த படத்தில் நடிப்பதற்காக ராமநாதபுரம் வந்துள்ளேன். இத்திரைப்பட இயக்குனரும் ராமேசுவரத்தை சேர்ந்தவர்தான். ராமேசுவரம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது
    • 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள்.

    நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 நாளை முதல் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன.

    சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

    பிக்பாஸ் சீசன் 9 தமிழில் இன்று முதல் தொடங்கும் நிலையில், நேற்று போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

    15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையாக விஜய் சேதுபதி அழைத்து அறிமுகம் செய்து பிரம்மாண்ட வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

    இதில், தேனி மாவட்டத்தை சேர்ந்த 'அகோரி' கலையரசன் போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்டார்.

    தேனி மாவட்டம் போடி புதுக்காலனி அன்னை இந்திரா ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து வந்தவர் கலையரசன். இவர் இங்குள்ள சந்தனமாரியம்மன் ஆசியால் அருள்வாக்கு கூறும் சித்தராக மாறி தற்போது அகோரி சாமியாராக உருவெடுத்துள்ளார்.

    காசிக்கு சென்று அங்குள்ள பெரியவர்களிடம் தீட்சை பெற்று அகோரியாக மாறியதாக அவர் கூறுகிறார்.

    இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நடந்த சண்டை இணையத்தில் பேசுபொருளான நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் கலையரசன் நுழைந்துள்ளார்.

    • பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது
    • 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள்.

    நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 நாளை முதல் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன.

    சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

    பிக்பாஸ் சீசன் 9 தமிழில் இன்று முதல் தொடங்கும் நிலையில், நேற்று போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

    15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையாக விஜய் சேதுபதி அழைத்து அறிமுகம் செய்து பிரம்மாண்ட வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

    இதில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த திருநங்கையான அப்சரா சிஜே போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்டார்.

    மாற்று பாலினத்தவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து செயல்பட்டுவரும் அப்சரா சிஜே மாடலிங் துறையிலும் தற்போது அசத்தி வருகிறார்.

    மாடலிங் தவிர, சினிமாவிலும் தனது முத்திரையைப் பதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அப்சரா சிஜே நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    இதற்கு முன்னர் நமீதா மாரிமுத்து, ஷிவின் ஆகிய திருநங்கை போட்டியாளர்கள் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட நிலையில், இந்த முறை திருநங்கை போட்டியாளராக அப்சரா சிஜே களமிறங்கி இருக்கிறார்.

    • பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள்.

    நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 நாளை முதல் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன.

    சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

    பிக்பாஸ் சீசன் 9 தமிழில் இன்று முதல் தொடங்கும் நிலையில், நேற்று போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

    15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையாக விஜய் சேதுபதி அழைத்து அறிமுகம் செய்து பிரம்மாண்ட வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

    இதில், ரட்சகன், ஜோடி, நட்சத்திரம், துள்ளல் ஆகிய படங்களை இயக்கிய பிரவீன் காந்தி போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்டார்.

    சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு பிரவீன் காந்தி உள்ளன நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

    கடந்த முறை இதேபோல் சர்ச்சியாக்குரிய வகையில் பேசிய ரஞ்சித் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அடக்கி வாசித்தார். அதே போல் பிரவீன் காந்தி அடக்கி வாசிப்பாரா இல்லை அடித்து விளையாடுவாரா என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    • தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
    • இட்லி கடை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். 'இட்லி கடை' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இட்லிக்கடை திரைப்படத்தை பாராட்டி பேசிய சீமான், "வாழ்வதற்குதான் பணம் தேவை. பணமே வாழ்க்கை இல்லை. தன் இட்லி கடை படத்தில், நிறைய செய்திகளை கவித்துவமாக, உணர்ச்சி குவியலாக சொல்லியிருக்கிறார் தம்பி தனுஷ், இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டுள்ளார். இப்படத்தை பார்த்தபின், நாம் எல்லோரும் நம் வேர்தேடி பயணிப்போம்" என்று தெரிவித்தார்.

    15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள்.

    நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 நாளை முதல் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன.

    சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

    பிக்பாஸ் சீசன் 9 தமிழில் நாளை முதல் தொடங்கும் நிலையில், இன்று போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

    15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையாக விஜய் சேதுபதி அழைத்து அறிமுகம் செய்து பிரம்மாண்ட வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

    இதில், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்தாலும், சமீப காலமாகவே அவரது பேச்சு சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

    15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள்.

    நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 நாளை முதல் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன.

    சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

    பிக்பாஸ் சீசன் 9 தமிழில் நாளை முதல் தொடங்கும் நிலையில், இன்று போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

    15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையாக விஜய் சேதுபதி அழைத்து அறிமுகம் செய்து பிரம்மாண்ட வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். 

    இதில், இன்ஸ்டா பிரபலமான அரோரா சின்கிளர் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். பலூன் அக்கா என்று அழைக்கப்படும் அரோராவுக்கு பெரிய அளவில் ஃபாளோவர்ஸ் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதை நான் இரண்டு பேருக்கு இடையிலான சண்டையாகப் பார்க்கவில்லை.
    • காந்தாரா மீதான எனது நம்பிக்கை மீண்டும் ஒருமுறை உண்மையாகிவிட்டது

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' கடந்த அக்டோபர் 2 வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில் பேசிய படத்தின் இயக்குனரும் கதாநாயகனுமான ரிஷப் ஷெட்டி, 'காந்தாரா' உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள கதையை பகிர்ந்து கொண்டார்.

    அவர் கூறியதாவது, "சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் கிராமத்தில் ஒரு விவசாயிக்கும் வன அதிகாரிக்கும் இடையே விவசாய நிலம் தொடர்பாக ஒரு பெரிய மோதல் ஏற்பட்டது. அதை நான் இரண்டு பேருக்கு இடையிலான சண்டையாகப் பார்க்கவில்லை.

    அதை இயற்கைக்கும் மனித தேவைகளுக்கும் இடையிலான மோதலாகப் பார்த்தேன். 'காந்தாரா' கதையின் விதை அந்த யோசனையிலிருந்துதான் விதைக்கப்பட்டது. விவசாயத்தைச் சுற்றி நமது கலாச்சாரம் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதைப் பற்றி நான் சிந்திக்கத் தொடங்கினேன்.

    காந்தாரா படத்தில் எல்லோரும் கிளைமாக்ஸைப் பற்றிப் பேசுகிறார்கள். அந்தக் காட்சிகளை நான் கற்பனை செய்து பார்த்தேன். எனக்குப் பின்னால் ஏதோ இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி இருந்து அந்தக் காட்சிகளை எழுத வைத்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    படைப்பு சாமானியர்கள் கூட புரிந்துகொள்ள எளிதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது பிராந்திய எல்லைகளுக்கு அப்பால் அனைவரையும் சென்றடையும். காந்தாரா மீதான எனது நம்பிக்கை மீண்டும் ஒருமுறை உண்மையாகிவிட்டது" என்று அவர் கூறினார்.   

    • மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டுக்கே மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது.
    • லோகோவை பயன்படுத்துவதற்கான அனுமதியை நான் அரசிடம் கேட்டுப் பெற்றேன்.

    நடிகரும், ரேசருமான அஜித் குமார் சர்வதேச போட்டியின் போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) Logo-வை, கார்- ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து நடிகரும், ரேசருமான அஜித் குமார் மனம் திறந்துள்ளார்.

    அவர் கூறியதாவது:-

    இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் ரேசிங்கை தமிழ்நாடு அரசு சென்னையில் நடத்தியது மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டுக்கே மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது.

    ஒரு மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகனாக அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) லோகோவை பயன்படுத்துவதற்கான அனுமதியை நான் அரசிடம் கேட்டுப் பெற்றேன்.

    அவர்கள் எனக்கு ஸ்பான்சர் செய்யவில்லை, யாரிடமும் நான் ஸ்பான்சர்ஷிப் கேட்பதும் இல்லை. இந்த விளையாட்டு மட்டுமல்ல அனைத்து விளையாட்டுகளுக்கும் பல நல்ல விஷயங்களை SDAT செய்து வருகிறது.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • மண்டாடி என்பவர் நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர்
    • விபத்தில் படகில் இருந்த இரண்டு பணியாளர்கள் காயமடைந்தனர்.

    மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்து வரும் படம் `மண்டாடி' இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.

    மண்டாடி என்பவர் நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர் என்றும் கூறப்படுகிறது.

    இப்படத்தில் சூரி முத்துகாளி என்ற மீனவனாக நடித்துள்ளார். நாயகியாக மகிமா நம்பியார் நடிக்கிறார்.

    படத்தின் சத்யராஜ், சாச்சனா, அச்யுத் குமார், ரவிந்தர விஜய், சுகாஸ் நடிகின்றனர். இப்படம் கடலில் நடக்கும் படகு விளையாட்டு போட்டியை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி கடற்கரைப் பகுதியில் 'மண்டாடி' படத்தின் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.

    இந்நிலையில் நேற்று, படத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் கேமராக்கள் மற்றும் பிற முக்கிய உபகரணங்களுடன் ஒரு படகில் கடலுக்குள் சென்றனர்.

    இருப்பினும், அவர்கள் படப்பிடிப்பில் மும்முரமாக இருந்தபோது, படகு எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் படகில் இருந்த இரண்டு பணியாளர்கள் காயமடைந்தனர். தகவல் அறிந்த படக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் உடனடியாக அவர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர்.

    இருப்பினும், இந்த சம்பவத்தில், சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான உபகரணங்கள் கடலில் மூழ்கியது.    

    • இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது
    • மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

    1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

     இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

    இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.


    2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டுள்ளது. 

    • ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
    • ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு அவரிடம் இந்த பழக்கம் உருவானது.

    சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு அவரிடம் இந்த பழக்கம் உருவானது.

    இந்நிலையில், ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார். இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று பத்ரிநாத் செல்கிறார்.

    இதனை தொடர்ந்து பத்ரிநாத்திலிருந்து பாபா குகைக்கு செல்லவுள்ள ரஜினிகாந்த் ஒரு வாரம் அங்கு தங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

    ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து ரஜினிகாந்த் பத்ரிநாத் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×