search icon
என் மலர்tooltip icon

    ஏமன்

    • காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்துகிறது ஹவுதி.
    • ஹவுதி தாக்குதலை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக இணைந்து முறியடித்து வருகின்றன.

    செங்கடல் வழியாக செல்லும் வெளிநாட்டு வணிக கப்பல்கள் மீது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சிக்குழு தாக்குதல் நடத்தி வருகிறது. ஆளில்லா விமானங்கள் மூலம் கப்பல்களை குறிவைத்து தாக்குகிறது.

    இதனை எதிர்க்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஒன்றிணைந்து செங்கடலில் ஹவுதி கிளர்ச்சி குழு தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் ஹவுதியின் இரண்டு டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

    ஒரு டிரோன் செங்கடலில் பறந்து சென்றபோது சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், மற்றொரு டிரோன் தாக்குதலுக்கு புறப்பட தயாராக இருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்கா, "எங்களுடைய படைகளை பாதுகாக்கவும், கடற்பயணம் சுதந்திரமாக மேற்கொள்ளவும், சர்வதேச கடற்பகுதி பாதுகாப்பானது என்பதை உருவாக்கவும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் அதிகபட்ச பாதுகாப்பிற்காகவும் தேவையான நடவடிக்கை" எனத் தெரிவித்துள்ளது.

    ஏமனின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இது தொடர்பாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருக்கின்றன. மேலும் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதலும் நடத்தி வருகின்றன.

    • சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு கடற்கொள்ளையர்கள் சரண் அடைந்தனர்.
    • கடற்கொள்ளையர்களிடம் இருந்து 23 பாகிஸ்தானியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    ஏடன்:

    ஏமன் நாட்டின் சோகோட்ரா தீவுக்கு அருகே அரேபியன் கடலில் சென்று கொண்டிருந்த ஈரான் நாட்டுக்குச் சொந்தமான அல் கம்பார் 786 என்ற மீன்பிடிக்கப்பலை நேற்று முன்தினம் கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரையும் பணய கைதிகளாகப் பிடித்தனர்.

    கப்பல் கடத்தப்பட்டது குறித்த தகவல் கிடைத்ததும் அரபிக்கடலில் ரோந்து பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படையின் 2 கப்பல்கள் உடனடியாக அங்கு விரைந்தன. கடத்தப்பட்ட ஈரான் கப்பலை இந்திய கடற்படையின் கப்பல் நேற்று சுற்றிவளைத்தன. ஈரான் கப்பலில் பயங்கர ஆயுதங்களுடன் 9 கடற்கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்தும் கப்பலையும், பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள மாலுமிகளையும் மீட்கும் முயற்சியில் இந்திய கடற்படை தீவிரமாக ஈடுபட்டது. சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு கடற்கொள்ளையர்கள் சரண் அடைந்தனர். கப்பலில் இருந்த 23 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள்.

    இதுதொடர்பாக இந்திய கடற்படை அதிகாரிகள் கூறுகையில், கப்பல் கடத்தப்பட்ட தகவல் கிடைத்தவுடன் அதிரடி நடவடிக்கை எடுத்து 23 பேரையும் பத்திரமாக மீட்டுள்ளோம் என தெரிவித்தனர்.

    • இஸ்ரேலுடன் தொடர்புடைய நாடுகளின் சரக்கு கப்பல்கள் குறிவைக்கப்படும்- ஹவுதி
    • அமெரிக்கா- இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஹவுதிக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலுடன் தொடர்புடைய நாடுகளில் சரக்கு கப்பல்களை செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் ஈரான் ஆதரவுடன் ஏமனில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    சரக்கு கப்பலை நோக்கி அடிக்கடி ஏவுகணை தாக்குதல் நடத்திவரும் நிலையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கடற்படைகள் கூட்டாக பதிலடி கொடுத்து வருகின்றன.

    இந்த நிலையில் லைபீரியா நாட்டைச் சேர்ந்தவருக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று பார்படோஸ் கொடியுடன் ஏடன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

    இதில் மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கப்பலை அங்கேயே விட்டுவிட்டு பணியாளர்கள் வெளியேறிவிட்டனர்.

    மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். இது கவலை அளிக்கும் சம்பவம், அதேவேளையில் சர்வதேச கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பொறுப்பற்ற முறையிலான தாக்குதல் என ஏமனில் உள்ள இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.

    கடந்த இரண்டு நாட்களில் ஐந்து ஏவுகணைகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதோடு சேர்த்து இரண்டு ஏவுகணைகள் சரக்கு கப்பல்களை தாக்கியுள்ளன. மூன்றில் ஒரு ஏவகணையை அமெரிக்க கப்பல் தாக்கி அழித்துள்ளது.

    • கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து ஹவுதி கிளர்ச்சியார்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
    • முதன்முறையாக ஊழியர்கள் கப்பலை விட்டுவிட்டு வெளியேறியுள்ளனர்.

    இஸ்ரேல் ராணுவம் காசா மீது ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ்க்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியார்கள் செங்கடலில் செல்லும் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒன்றாக இணைந்து பதிலடி கொடுத்து வருகிறது. இருந்த போதிலும் நேற்று செங்கடலில் வந்து கொண்டிருந்த ஒரு கப்பலை ஏவுகணை மூலம் தாக்கியுள்ளனர். இதனால் கப்பலில் இருந்து ஊழியர்கள் வெளியேறிய நிலையில், அந்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மத்திய அமெரிக்கா நாடான  பெலீஸ் நாட்டின் கொடியுடன் ரூபிமார் கப்பல் சென்று கொண்டிருந்த போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறிய வகை வணிக கப்பலான ரூபிமாரில் இருந்த பணியாளர்கள் உடனடியான பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போர்க்கப்பல் மற்றும் வணிக கப்பலை தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் கப்பலில் இருந்து பணியாளர்களை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த கப்பல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பகுதியில் உள்ள உரிமையாளரால் பதிவு ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஹவுதி செய்தி தொடர்பாளர் கூறுகையில் "அடையாளம் தெரியாக இங்கிலாந்து கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் கப்பல் முற்றிலுமாக மூழ்கடிக்கப்பட்டுள்ளது" என்றார்.

    • ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சி குழுவான ஹவுதி, செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
    • அமெரிக்கா ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

    ஏமன் நாட்டின் பிரதமர் மைன் அப்துல்மாலிக் சயீத் இருந்து வந்தார். இவர் கடந்த 2018-ல் இருந்து அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்த நிலையில், நேற்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

    அவருக்குப் பதிலாக வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த அகமது அவாத் பின் முபாரக் புதிய பிரதமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சவுதி அரேபியாவுடன் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏமனின் ஆட்சிக்குழு பிரதமரை மாற்றியுள்ளது. ஆனால், நீக்கத்திற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.

    ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சி குழுவான ஹவுதி, செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக தற்போது பிரதமர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அகமது அவாத் பின் முபாரக்

    ஏமன் கடந்த 2014-ல் இருந்து உள்நாட்டு சண்டையில் சிக்கி தவித்து வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் உள்ளிட்ட இடங்களை பிடித்து. பின்னர் 2015-ல் சவுதி அரேபியா தலைமையிலான குழு ஏமன் நாட்டின் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த சண்டையில் இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    • செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.
    • தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் அமெரிக்கா, இங்கிலாந்து ராணுவம் ஒன்றிணைந்து பதிலடி கொடுத்து வருகிறது.

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதில் செங்கடலில் பயணிக்கும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, இங்கிலாந்து இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.

    இந்த நிலையில் ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் கார்னி போர்க்கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேவேளையில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்ற இங்கிலாந்தை சேர்ந்த எண்ணை கப்பல் மீதும் ஏவுகணைகளை வீசி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

    இங்கிலாந்தின் மார்லின் லுவாண்டா கப்பல், செங்கடலை கடந்து ஏமன் வளைகுடாவில் சென்றபோது ஏவுகணையால் தாக்கப்பட்டது. இதில் கப்பலில் தீப்பிடித்தது. அதை கப்பல் ஊழியர்கள் போராடி அணைத்தனர்.

    இதுகுறித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறும்போது அமெரிக்கா, இங்கிலாந்தின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையிலும் பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாகவும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றனர்.

    மத்திய கிழக்கு பகுதி கடலில் தொடர்ந்து வணிக கப்பல்களை தொந்தரவு செய்து வரும் ஹவுதி கிளார்ச்சியாளர்கள் தற்போது அமெரிக்காவின் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், கடந்த சில தசாப்தங்களில் மிகப்பெரிய மோதலாக பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில் இன்று அதிகாலை செங்கடலை குறிவைத்து தாக்குதல் நடத்த தயாராக வைத்திருந்த ஹவுதி கப்பல் எதிர்ப்பு ஏவுகணைக்கு எதிராக அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.

    ஹவுதியின் அல்-மசிராஹ் செயற்கைக்கோள் செய்தி சேனல், துறைமுக நகரான ஹொடெய்டா அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது எனத் தெரிவித்துள்ளது. ஆனால், சேதம் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

    கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். முதன்முறையாக அமெரிக்காவின் போர்க்கப்பலை குறிவைத்துள்ளது.

    • ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சிக்குழு செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
    • அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஹவுதி தாக்குதலை முறியடிக்க ஒன்றிணைந்துள்ளன.

    ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சிக்குழு செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்த போதிலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை.

    இதனால கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்கா, இங்கிலாந்து ராணுவம் ஒன்றாக இணைந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தியது.

    இந்த நிலையில் நேற்று இரவு 2-வது முறையாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

    அமெரிக்க போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், போர் விமானங்கள் மூலம் ஏவுகணைகள், டிரோன்கள், லாஞ்சர்கள் போன்வற்றை சேமித்து வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலுக்கு உளவு மற்றும் கண்காணிப்பு பணி ஆகியவற்றில் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, நெதர்லாந்து நாடுகள் பங்களிப்பு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. எங்களுடைய நோக்கம் செங்கடலில் பதற்றம் தணிய வேண்டும். நிலைத்தன்மை மீண்டும் திரும்ப வேண்டும் என்பதுதான் எனவும் தெரிவித்துள்ளது.

    அதேவேளையில் உலகின் முக்கிய கடல் போக்குவரத்து வழியான செங்கடலில் எளிதான வணிக போக்குவரத்து நடைபெறுவதற்கும், உயிரைக் காப்பாற்றுவதற்கும் ஹவுதிக்கு பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம் எனவும் எச்கரிக்கை விடுத்துள்ளது.

    • ஹமாஸ் அமைப்புக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது.
    • செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.

    சனா:

    இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவளித்து வருகிறது. இதற்கிடையே, செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்குச் செல்லும் சரக்கு கப்பல்களைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா, இங்கிலாந்து சமீபத்தில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

    இந்நிலையில், அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த அமெரிக்க சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    கப்பல் மீது தாக்குதல் நடைபெற்றதை ஒப்புக்கொண்ட அமெரிக்கா, இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.

    அதேவேளை, காசா முனையில் பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை நிறுத்தும்வரை இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்கள், அரபிக் கடல், செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.
    • பலமுறை எச்சரித்தும் ஹவுதி தாக்குதலை தொடர்ந்ததால் அமெரிக்கா ராணுவ நடவடிக்கை.

    ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் ஏமனில் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்த தொடங்கியது.

    பாதுகாப்பிற்காக அமெரிக்க போர் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த போதிலும் ஹவுதி தாக்குதலை குறைக்கவில்லை. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் செங்கடலில் வணிக கப்பல்களை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவதாக அறிவித்தன.

    மேலும், செங்கடலில் வணிக கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிறுத்த வேண்டும். இல்லையெனில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. அதனுடன் இதற்கு மேல் எச்சரிக்கை விடுவிக்கப்படாது என கறாராக தெரிவித்திருந்தது.

    இருந்தபோதிலும் ஆளில்லா படகை அனுப்பி வெடிக்கச் செய்தது ஹவுதி. டிரோன் மூலமாகவும் தாக்குதல் நடத்தியது.

    இந்த நிலையில் நேற்று அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை ஒன்றிணைந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ஏமனில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ராணுவ தாக்குதலை நடத்தியுள்ளன.

    இந்த ஒருங்கிணைந்த ராணுவ தாக்குதலில் போர்க்கப்பல், போர் விமானம் ஆகியவை ஈடுபட்டுள்ளன. டோமாஹாக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுத சேமிப்பு கிடங்கு, வான் பாதுகாப்பு சிஸ்டம் போன்றவற்றை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை காசாவில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    ஹமாஸ்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடலில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இருந்து 27 முறை வணிக கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் நடத்தியுள்ளது.

    • செங்கடலில் சர்வதேச கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.
    • தாக்குதல் தொடர்ந்தால் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை.

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போரில் ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் ஆதரவாளர்களாக செயல்படுகிறார்கள். இதையடுத்து செங்கடலில் இஸ்ரேலில் இருந்து செல்லும் கப்பல் மற்றும் இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த தாக்குதலை தடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. செங்கடலில் அமெரிக்க போர் கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டு, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசும் ஏவுகணை மற்றும் டிரோன்களை இடைமறித்து அழித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான 12 நாடுகள் கொண்ட கூட்டுப்படைகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் இல்லையென்றால் ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்காவின் எச்சரிக்கையை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிராகரித்து அடிபணிய மறுத்துள்ளனர். அவர்கள் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களுடன் ஆளில்லா படகு ஒன்றை அனுப்பினர். அமெரிக்கா கடற்படை மற்றும் செங்கடலில் பயணித்த வணிகக் கப்பல்கள் இருந்த 2 மைல்கள் பகுதிக்குள் அந்த ஆளில்லா டிரோன் படகு வெடித்தது. இதில் எந்த சேதமும் அல்லது உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அமெரிக்க கடற்படை தெரிவித்தது.

    • செங்கடலில் செல்லும் வெளிநாட்டு கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்.
    • கடந்த நவம்பரில் இருந்து 23 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

    செங்கடலில் செல்லும் வெளிநாட்டு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இந்தியா அரபிக் கடலில் உள்ள தனது எல்லையில் போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளது.

    இந்த நிலையில் செங்கடலில் சனிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இரண்டு ஏவுகணைகளை அமெரிக்க போர் கப்பல் வெற்றிகரமாக நடுவானில் தாக்கி அழித்தது.

    பின்னர் 4 படகுகளில் வந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சிங்கப்பூர் கப்பலில் ஏற முயன்றுள்ளனர். இதனால் அமெரிக்க கப்பற்படையின் ஹெலிகாப்டர் அந்த படகுகளை துரத்திச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளது.

    இதில் மூன்று படகுகளை குறிவைத்து தாக்தி அழித்துள்ளது. ஒரு படகு தப்பிச் சென்று விட்டது. இதில் தங்களது குழுவை சேர்ந்த 10 பேர் உயிரிழந்ததாக ஹவுதி கிளர்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இதற்கான விளைவு குறித்தும் எச்சரித்துள்ளது.

    நவம்பர் 19-ந்தேதியில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கப்பல் மீது 23 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வந்த நிலையில் முதன்முறையாக அமெரிக்க கப்பற்படை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குல் நடத்தி கொன்றுள்ளது.

    • செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம்- ஹவுதி
    • ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, கப்பல் மீது தாக்கியதில் தீப்பிடித்தது

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பினர் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதற்கிடையே செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஹவுதி அமைப்பினர் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் செங்கடலில் பாப் அல்-மண்டப் ஜலசந்திக்கு வடக்கே சுமார் 60 கடல் மைல் தொலைவில் வணிக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, கப்பல் மீது தாக்கியதில் தீப்பிடித்தது என்றும் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த தாக்குதலையடுத்து செங்கடல் பகுதியில் இருந்து அமெரிக்க போர் கப்பலான யு.எஸ்.எஸ். மேசன் அங்கு சென்று உதவியதாக தெரிவித்தனர். ஏற்கனவே பிரான்ஸ் நாட்டு கப்பல் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த ஹவுதி அமைப்பினர் முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×