என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
நெட்ஃபிலிக்ஸ் பயனர்கள் தங்கள் நண்பர்களுக்கு பாஸ்வேர்ட் பகிர்வதை தடுக்க நெட்ஃபிலிக்ஸ் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஓடிடி தளங்களில் ஒன்றாக நெட்ஃபிலிக்ஸ் இருக்கிறது. பலர் ஒரே நெட்ஃபிலிக்ஸ் கணக்கை தங்கள் நண்பர்களும் பயன்படுத்தும் வகையில் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகியவற்றை தந்து உதவுகின்றனர். இந்நிலையில் இந்த நடவடிக்கைக்கு முடிவுக்கட்டும் வகையில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் புதிய முடிவை எடுத்துள்ளது.
இதன்படி நெட்ஃபிலிக்ஸ் பயனர்கள் தங்கள் கணக்கில் நண்பர்களை இணைப்பதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
நெட்ஃபிலிக்ஸில் சில திட்டங்களில் தனி புரொஃபைல் உருவாக்கிக்கொள்ளும் அம்சமும் இருக்கிறது. ஆனாலும் பல நெட்ஃபிலிக்ஸ் பயனர்கள் தங்கள் நண்பர்களுக்கு பாஸ்வேர்டை கொடுத்து ஒரே கணக்கை பயன்படுத்திகொள்கின்றனர். இந்த நடவடிக்கை நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதாகவும், இதற்கு பதில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்யப்போவதாகவும் நெட்ஃபிலிக்ஸ் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் ஒரே வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் நெட்ஃபிலிக்ஸ் சேவையை தனியாக கட்டணம் இல்லாமல் பயன்படுத்தலாம். ஆனால் வேறு இடங்களில் இருந்து ஒரே நெட்ஃபிலிக்ஸ் கணக்கை பயன்படுத்தும் நபர்கள் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே கணக்கில் கூடுதலாக உறுப்பினர்களை சேர்க்க இந்திய மதிப்பில் ரூ.200 வரை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்தியாவில் இன்னும் அறிமுகமாகத நிலையில் பிற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் 3 பேர் வரை இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாட்ஸ்ஆப் பயனர்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
இந்தியாவில் வெளியாகியுள்ள காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படத்தின் இலவச இணைப்பு சைபர் குற்றவாளிகள் மூலம் வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படுகிறது. அதை கிளிக் செய்பவர்களுடைய போன் மால்வேர் மற்றும் பிற வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நொய்டா உள்ளிட்ட சில நகரங்களில் வாட்ஸ்ஆப்பில் வந்த இலவச இணைப்பை கிளிக் செய்து பலர் பணத்தை இழந்துள்ளதாக புகார்களும் எழுந்துள்ளன. 24 மணி நேரத்தில் 3 பேர் இந்த மோசடியில் சிக்கி ரூ.30 லட்சம் வரை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர்குற்றவாளிகளால் அனுப்பப்படும் மால்வேர் வங்கி கணக்குகளை ஹேக் செய்து தொகைகளை திருடி வருவதாகவும், வாட்ஸ்ஆப் மூலம் ஏதாவது லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
இந்த ரீசார்ஜ் திட்டத்தை பி.எஸ்.என்.எல் செல்ஃப் கேர் செயலி மூலம் ரீசார் செய்பவர்களுக்கு 4 சதவீதம் தள்ளுபடியும் உண்டு.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் புதிய ஆன்வெல் பிளான் வவுச்சரை அறிமுகம் செய்துள்ளது
இந்த திட்டத்தின் மூலம் ரூ.797-க்கு ரீசார்ஜ் செய்தால் முதல் 60 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 2ஜிபி ஹைஸ்பீடு டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்கள் வழங்கப்படும்.
60 நாட்களுக்கு பிறகு அழைப்புகளும், டேட்டாவும் வழங்கப்படாது. ஆனால் வேலிடிட்டி மட்டும் அடுத்த 10 மாதங்களுக்கு செயல்பாட்டில் இருக்கும். டேட்டா மற்றும் அழைப்புகள் தேவைப்படுபவர்கள் தனியாக டாக்டைம் வவுச்சர்கள், டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்துகொண்டு மீதம் உள்ள நாட்களின் வேலிடிட்டியை பெறலாம்.
பி.எஸ்.என்.எல்லை இரண்டாவது சிம்மாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் பெறிதும் பயன் தரும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தை ஜூன் 12-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டியுடன் சேர்த்து கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டியும் வழங்கப்படவுள்ளது.
இந்த ரீசார்ஜ் திட்டத்தைல் பி.எஸ்.என்.எல் செல்ஃப் கேர் செயலி மூலம் ரீசார் செய்பவர்களுக்கு 4 சதவீதம் தள்ளுபடியும் உண்டு.
அமேசான் மொபைல் சேவிங்ஸ்டே விற்பனையில் அனைத்து போன்களுக்கும் பலவீதமான கேஷ்பேக், தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.
அமேசான் நிறுவனத்தின் மொபைல் சேவிங்ஸ் டே விற்பனை மார்ச் 19 வரை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றன.
இதன்படி ஒன்பிளஸ் நார்ட் சி.இ 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,999-ல் இருந்து ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.21,999-க்கு விற்பனை ஆகிறது. அதேபோன்று ஒன்பிளஸ் நார்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999-ல் இருந்து ரூ.1,500 குறைக்கப்பட்டு ரூ.28,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதைத்தவிர ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் ரூ.49,999-க்கும், ரூ.36,999-க்கும் கிடைக்கின்றன.
இந்த போன்களை குறிப்பிட்ட வங்கி கார்டுகளில் வாங்கும்போது சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
மற்றொரு ஸ்மார்ட்போன் நிறுவனமான iQoo நிறுவனத்தின் iQoo 9 ப்ரோ 8ஜிபி/256 ஜிபி வேரியண்ட் தள்ளுபடி விலையில் ரூ.64,990-க்கு கிடைக்கிறது. இந்த போனை எந்த வங்கி கார்டு கொண்டு வாங்கினாலும் ரூ.4000 உடனடி தள்ளுபடியும் உண்டு. மேலும் இந்த போன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.3000 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதைத்தவிர iQoo Z3 மற்றும் iQoo Z5 ஸ்மார்போன்கள் ரூ.16,990-க்கும், ரூ.20,990-க்கும் கிடைக்கின்றன.
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி நார்சோ 50ஏ மற்றும் ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.1,500 வங்கி கேஷ்பேக், ரூ.2000 வரை அமேசான் கூப்பன்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் ரியல்மி நார்சோ 50ஏ ரூ.9,749-க்கும், ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.13,499-க்கும் கிடைக்கிறது. ரியல்மி நார்சோ 50 ஸ்மார்போன் ரூ.12,999-ல் இருந்து விலை குறைப்பு செய்யப்பட்டு ரூ.11,699-க்கு கிடைக்கிறது.

ஜியோமியின் Qualcomm Snapdragon 870 SoC பிராசஸர் கொண்ட எம்.ஐ 11எக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.22,999-க்கு கிடைக்கிறது. இந்த போனுக்கு கூடுதலாக ரூ.5,000 வரை தள்ளுபடியும் உண்டு. ஜியோமி 11 லைட் என்.இ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.26,999-ல் இருந்து விலை குறைக்கப்பட்டு ரூ.21,499-க்கு கிடைக்கிறது. இதில் வங்கி தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும் அடங்கும்.
தள்ளுபடியில் எம்.ஐ 11எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.36,999-ல் இருந்து ரூ.31,999-க்கும், ரெட்மி ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.19,999-க்கும், ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் ரூ.15,499-க்கும் கிடைக்கிறது. மேலும் ரெட்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் கேஷ் ஆஃபர் மூலம் ரூ.17,999-க்கு கிடைக்கும்.
இத்துடன் ஸ்மார்ட்போன் ஆக்ஸசரிஸ்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் ஆக்சஸரிஸ்கள் ரூ.69-ல் இருந்து தொடங்குகின்றன. மேற்கூறிய போன்களை அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.1,500 உடனடி தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்டாவெர்ஸில் இயங்குபவர்கள் என்.எஃப்.டியில் தங்களுக்கு பிடித்த டிஜிட்டல் உடை, தோற்றத்தை வாங்கிக்கொள்ளலாம் என மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார்.
இன்று உலகம் முழுவதும் அதிகம் பேசப்படும் பொருளாக என்.எஃப்.டி இருக்கிறது.
என்.எஃப்.டி எனப்படும் “நான் ஃபங்கியபில் டோக்கன்” ஒரு வகை டிஜிட்டல் டோக்கன் ஆகும். நிஜ உலக சொத்துக்கள் அல்லது டிஜிட்டல் கலைப்படைப்புகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ்களை உருவாக்கி, அவற்றை விற்பதற்கு என்.எஃப்.டி டோக்கன்கள் உதவுகின்றன.
இந்த என்.எஃப்.டியை விரைவில் இன்ஸ்டாகிராமிற்கு கொண்டு வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுயதாவது:-
இன்னும் சில மாதங்களில் என்.எஃப்.டி இன்ஸ்டாகிராமிற்கு கொண்டு வரப்படும். அதை வாங்குவதற்கும் விற்பதற்கும் கிரிப்டோ வேலட்டும் இன்ஸ்டாகிராமில் இடம்பெறும். மெட்டாவெர்ஸில் இயங்குபவர்கள் என்.எஃப்.டியில் தங்களுக்கு பிடித்த டிஜிட்டல் உடை, தோற்றத்தை வாங்கிக்கொள்ளலாம்.
இவ்வாறு மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
திறமை வாய்ந்த இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, அவர்களது படைப்புகள் இந்த ஓடிடியில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான ஷாரூக்கான் எஸ்.ஆர்.கே+ என்ற புதிய ஓடிடி செயலியை தொடங்கவுள்ளார்.
ஷாரூக் கான் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து எஸ்.ஆர்.கே+ ஓடிடி சேவை குறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஓடிடியில் ஷாரூக் நடித்த படங்கள் இடம்பெறும் என்றும், திறமை வாய்ந்த இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு அவர்களது படைப்புகள் எஸ்.ஆர்.ஹெச் பிளஸ்ஸ்ல் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
ஹாரூக் கானின் இந்த புதிய முயற்சிக்கு முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது ஒரு சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைத்து யூடியூப் செயலிகளுக்குமே தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் யூடியூப் செயலியில் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் நாம் வீடியோவில் வரும் ஆடியோவை வார்த்தைகள் வடிவில் பெற முடியும். ஏற்கனவே யூடியூப் டெஸ்க்டாப் தளத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த அம்சம் தற்போது மொபைல் செயலியிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தின் மூலம் நாம் வீடியோக்களில் வரும் வசனம், வரிகளை தேடத்தேவையில்லை. வீடியோக்கள் பக்கத்தில் இருக்கும் டிரான்ஸ்கிரிப்ட் ஆப்ஷனை கிளிக் செய்தால் முழு ஸ்கிரிப்டும் காட்டப்படும். அதில் நாம் தேவையான வார்த்தைகளை தேடி படிக்கலாம்.
தற்போது ஒரு சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைத்து யூடியூப் செயலிகளுக்குமே தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த சேவை விரைவில் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது.
முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக பின்டிரஸ்ட் இருந்து வருகிறது. புகைப்படங்களை பகிரும் சமூக வலைதளமான இதில் தற்போது இ-காமர்ஸ் சேவையும் இடம்பெறபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் கூறுகையில், பயனர்கள் இனி நேரடியாக பின்டிரஸ்ட் செயலியில் இருந்தே ஷாப்பிங் செய்து பொருட்களை வாங்க முடியும் என தெரிவித்துள்ளது.
தற்போது இந்த சேவை பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள இந்த சேவை, விரைவில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டு பின் உலகம் முழுவதும் கொண்டு வரப்படவுள்ளது.
இந்த புதிய சேவையில் பயனர்கள் தங்களுக்கு வேண்டிய வகையில் ஷாப்பிங் பக்கங்களை தேர்வு செய்யலாம். மேலும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தயாரிப்பாளர்கள், பிராண்டுகள் பரிந்துரைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பொருட்களை விற்பனை செய்பவர்களும் எளிதாக பொருட்களின் பட்டியலை உருவாக்கி, விலை மாற்றங்களையும் செய்ய முடியும் என கூறியுள்ளது.
இந்த போன்ககளை எஸ்.பி.ஐ கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.750 கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் பிங் சேவிங்ஸ் டேஸ் 2022 விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிக்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.
ஐபோன் எஸ்இ (2020): ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ (2020) ரூ.39,900-ல் இருந்து ரூ.9,901 விலை குறைக்கப்பட்டு ரூ.29,999-க்கு கிடைக்கிறது. இந்த போனை எஸ்பிஐ கிரெடிட் கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.750 கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.
மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன்: ரூ.24,999 மதிப்புள்ள மோட்டோ எட்ஜ் 20 ஃப்யூஷன் போன் ரூ.4,500 குறைக்கப்பட்டு ரூ.20,499-ஆக கிடைக்கிறது.
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.15,999-ல் இருந்து ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்ஃபினிக்ஸ் நோட் 11 ஸ்மார்ட் போன் ரூ.14,999-ல் இருந்து ரூ.3500 குறைக்கப்பட்டு ரூ.11,499-க்கு விற்கப்படுகிறது.
மேற்கூறிய போன்ககளை எஸ்.பி.ஐ கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.750 கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அப்டேட்டுகளில் டவுன்லோட் மேனேஜர், லைவ் ஸ்ட்ரீம் உள்ளிட்ட பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இன்று உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் செயலியாக டெலிகிராம் இருக்கிறது. வாட்ஸ்அப் போல இல்லாமல் டெலிகிராமில் நிறைய அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் டெலிகிராம் நிறுவனம் டெலிகிராம் செயலிக்கு புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டுகளில் டவுன்லோட் மேனேஜர், டவுன்லோட் மேனேஜர் உள்ளிட்ட பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
டவுன்லோட் மேனேஜர்
டெலிகிராம் ஏற்கனவே 2ஜிபி வரையிலான ஃபைல்ஸை ஷேர் செய்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் தற்போது டவுன்லோட் மேனேஜர் என்ற புதிய அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின்படி நாம் ஒரே நேரத்தில் எத்தனை ஃபைல்களை டவுன்லோட் செய்கிறோம் என்பதை காண முடியும், அதே நேரத்தில் எந்த ஃபைலை முதலில் டவுன்லோட் செய்ய வேண்டும் என்பதையும் தேர்வு செய்ய முடியும்.
அட்டாச்மெண்ட் மெனு
இந்த அம்சத்தின் மூலம் நாம் பல ஃபைல்களை ஒரே நேரத்தில் தேர்வு செய்து ஷேர் செய்ய முடியும். மேலும் இந்த அம்சத்தில் நாம் எந்த ஃபைல்களை சமீபத்தில் அனுப்பியிருக்கிறோம் என்பதையும் கண்காணிக்கவும், அனுப்பிய ஃபைல்களை தேடி எடுக்கவும் முடியும்.
செமி டிராஸ்பெரண்ட் இண்டர்ஃபேஸ்
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு டெலிகிராம் செயலி சற்று டிரான்ஸ்பரண்ட் டிசைனையும் வழங்குகிறது.
ஃபோன்நம்பர் லிங்க்ஸ்
இந்த அம்சத்தின்மூலம் டெலிகிராம் பயனர்கள் இனி யூசர் நேம்களை கொண்ட லிங்கினை உருவாக்க முடியும். நாம் பிறருக்கு போன் நம்பர் தராமல் இந்த லிங்கை கொடுத்து டெலிகிராமில் தொடர்புகொள்ள செய்யலாம்.

லைவ் ஸ்ட்ரீம்
டெலிகிராமில் ஏற்கனவே அன்லிமிட்டட் நபர்களுக்கு நேரலை ஸ்ட்ரீமிங் செய்ய முடியும். இந்நிலையில் தற்போது ஓபிஎஸ் ஸ்டூடியோ, எக்ஸ்ஸ்பிளிட் பிராட்கேஸ்டர் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் டூல்களை பயன்படுத்தியும் டெலிகிராமில் லைவ் ஸ்ட்ரீம் செய்ய முடியும். இதில் ஓவர்லே, மல்டி ஸ்க்ரீன் லே அவுட்ஸ் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.
t.me பக்கங்கள்
டெலிகிராம் பயனர்கள் t.me லிங்கை உருவாக்கி நமது புரொஃபைல், போஸ்ட்டுகளை பிரவுசரில் பிரீவிவ் செய்ய முடியும்.
இந்தியாவின் லாவா, டிக்ஸன் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களுடன் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
சீனாவில் 3 முக்கிய ஸ்மார்ட்போன் பிராண்டுகளான ஜியோமி, ஒப்போ, விவோ ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் போன்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதன்மூலம் எலக்ரானிக்ஸ் உற்பத்திக்கான மையமாக இந்தியா உருவாகும் என தெரிவித்துள்ளன.
இந்தியாவின் லாவா இண்டர்நேஷனல், டிக்ஸன் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும்பட்சத்தில் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் லாவா, டிக்ஸனின் தொழிற்சாலைகளில் அசம்பிள் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் சந்தைகளை கைப்பற்றியிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் உலக அளவில் தங்களை நிறுவிக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சீனாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் சீனா -அமெரிக்கா பிரச்சனையின் காரணமாக ஐரோப்பிய, அமெரிக்க சந்தைகளை எட்டவில்லை என்றும், இந்தியாவில் இருந்து போன்கள் தயாரிக்கும்பட்சத்தில் எளிதாக உலக சந்தையை எட்ட முடியும் எனவும் கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனம் கூகுள் மேசேஜ்கள், போட்டோஸ், கூகுள் அசிஸ்டெண்ட், லைவ் டிரான்ஸ்கிரைப், கூகுள் டிவி, ஜிபோர்ட் ஆகியவற்றில் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் அனைத்து ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் சில புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி கூகுள் மேசேஜ்கள், போட்டோஸ், கூகுள் அசிஸ்டெண்ட், லைவ் டிரான்ஸ்கிரைப், கூகுள் டிவி, ஜிபோர்ட் ஆகியவற்றில் புதிய அப்டேட்டுகள் வெளியாகியுள்ளன.
கூகுள் மெசேஜ்
கூகுள் மெசேஜ்களில் வெளியான புதிய அப்டேட்டுகளின்படி இனி ஐபோன் பயனர்களால் மெசேஜ்களில் அனுப்பப்படும் ரியாக்ஷன்கள் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எமோஜியாக காட்டப்படும்.
அதேபோன்று கூகுள் போட்டோகளின் லிங்கை மெசேஜ்ஜில் அனுப்பினால் அதில் இருக்கும் வீடியோக்களும், புகைப்படங்களும் அனுப்பப்பட்ட ரெஷலியூஷனிலேயே காட்டப்படும்.
இதுமட்டுமின்றி பயனர்களுக்கு தனிபட்ட முறையில் வரும் மெசேஜ்கள் தனியாகவும், மற்ற மெசேஜ்கள் பிஸ்னஸ் டேப்பிலும் தனித்தனியாக தொகுக்கப்படும். அதேபோன்று ஒடிபி மேசேஜ்கள் தானாகவே 24 மணி நேரத்தில் அழிந்துவிடும்.
பயனர்கள் படிக்க மறந்த அல்லது கூடுதலாக வரும் மேசேஜ்களை நியாபகப்படுத்துவதற்கு தனி அம்சமும் இந்த புதிய அப்டேட்டில் இடம்பெறும். இதில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட நினைவுப்படுத்தல்களும் அடங்கும்.
ஜிபோர்ட்
கூகுள் கீபோர்டில் கிராமர் கரக்ஷன் அம்சம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாம் டைப் செய்யும் வாக்கியங்களில் உள்ள இலக்கண பிழைகள் கண்டறிந்து காட்டப்படும். அதேபோல ஜிபோர்டில் 2000-க்கும் அதிகமான புதிய எமோஜ்ஜிகள் ஸ்டிக்கர்களாக தரப்படவுள்ளது. பிக்சல் பயனர்கள் தாங்கள் டைப் செய்யும் வார்த்தைகளை வண்ணமயமான ஸ்டிக்கர்களாக ஜிபோர்ட் மூலம் மாற்றலாம்.
லைவ் டிரான்ஸ்கிரைப்
நாம் பேசுவதை வார்த்தைகளாக மொழிபெயர்த்து தரும் லைவ் டிரான்ஸ்கிரைப் செயலி இனி அனைத்து ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பிக்ஸல் மற்றும் சாம்சங் போன்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த இந்த அப்டேட்டை இனி மற்ற ஆண்ட்ராய்டு போன் பயனர்களும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
அதேபோன்று வைஃபை அல்லது டேட்டா இல்லாதவர்களும் லைவ் டிரான்ஸ்கிரைப்பை பயன்படுத்தும் வகையில் ஆஃப்லைன் மோடும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் போட்டோஸ்
கூகுள் போட்டோஸில் புதிய போட்டோ பிளர் மோடை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் தங்கள் கேமரா செயலியில் போட்ரெய்ட் ஆப்ஷன் இல்லாத ஸ்மார்ட்போன் பயனர்களும் பிளர் செய்யப்பட்ட போட்டோக்களை எடுக்கலாம்.
ஆண்ட்ராய்டு டிவி
கூகுள் ஆண்ட்ராய்டு டிவிக்கும் புதிய பேட்டை வழங்கவுள்ளது. இதில் நமக்கு பிடித்த நிகழ்ச்சிகளை நாம் ஒரே ஒரு டச்சின் மூலம் ஹைலைட் செய்து வைத்துகொள்ள முடியும்.
கூகுள் அசிஸ்டெண்ட்
கூகுள் நிறுவனம் தனது கூகுள் அசிஸ்டெண்ட் சேவையில் பார்க்கிங்கிற்கு கட்டணம் செலுத்தும் அம்சத்தையும் கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் கூகுள் அசிஸ்டெண்டில் வாய்ஸ் கமெண்ட் கொடுப்பது மூலம் நாம் கூகுள் பேயில் இருந்து பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம், நமது பார்க்கிங் ஸ்டேட்டஸ் என்ன என்பதையும் சரிபார்க்கலாம்.

டிஜிட்டல் வெல் பீயிங்
கூகுள் நிறுவனம் ஸ்கிரீன் டைமை கணக்கிடும் புதிய விட்ஜெட்டை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் நாம் அதிகம் பயன்படுத்தும் 3 செயலிகளில் நாம் செலவிடும் நேரத்தை கணக்கிடமுடியும். அதேபோன்று நாம் செயலிகள், ஃபோக்கஸ் மோட், பெட் டைம் மோடுக்கும் டைமர் வைத்துகொள்ள முடியும்.
நியர்பை ஷேர்
இறுதியாக கூகுள் நியர்பை ஷேர் என்ற அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் நாம் விரும்பும் போட்டோ, வீடியோ, டாக்குமெண்டுகளை இனி ஒருவருக்கு மட்டும் இல்லாமல் ஒரே நேரத்தில் பலருக்கும் அனுப்ப முடியும். இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு 6 மற்றும் அதற்கு மேற்பட்ட ஓஎஸ்களில் இடம்பெறும் என கூறப்படுகிறது.






