search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகைப்படங்கள்"

    • தற்போது உள்ளாடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.
    • இந்த புகைப்படங்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலவித கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

    பிரபல இயக்குனர் கவுதம்மேனன் இயக்கத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை  சமந்தா.இப்படத்தின் தெலுங்கு மொழிபெயர்ப்பில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு ஹீரோயின் ஆகவும் மாறினார்.

    அதன்பின்னர் விஜய், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்விஜயுடன் சமந்தா ஜோடியாக நடித்த 'கத்தி', 'மெர்சல்' போன்ற படங்கள் தொடர் வெற்றி அடைந்தது.

    அதை தொடர்ந்து நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணமான 4 ஆண்டுகளில் நாக சைதன்வை விவாகரத்து செய்தார்.அதன்பின்னர் சமந்தா கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார்.புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து குத்தாட்டம் டான்ஸ் ஆடினார்.அதன்பின் 'மயோசிட்டிஸ்' என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது அதில் இருந்து மீண்ட அவர் மீண்டும் நடிக்க தொடங்கினார்.




    இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார். தற்போது உள்ளாடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

    இந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரசிகர்கள் பலவித கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கவரில் இருந்த ரூ.2000 நோட்டு கட்டுகள் முழுமையாக நனையாமல் பாதி அளவு நனைந்த நிலையில் இருந்தது.
    • ரூ.2000 ரூபாய் கட்டுகள் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் பரவியது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஆசாரிப்ப ள்ளம் அருகே வேம்பனூரில் பாசன குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற உள்ளது. இதையடுத்து குளத்திலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகி றது.

    குளத்தில் தண்ணீர் வற்றியதையடுத்து அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இன்று மதியம் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குளத்தின் கரை பகுதியில் பிளாஸ்டிக் கவர் ஒன்று கிடந்தது.

    அதில் ரூபாய் நோட்டுகள் இருந்தது. இதைப்பார்த்த அந்த சிறுவர்கள் குளத்தின் கரையில் கிடந்த கவரை எடுத்து கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் கவரை பிரித்து பார்த்தபோது ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கட்டுக்கட்டு கட்டாக இருந்தது.

    வங்கியில் இருந்து எடுத்ததற்கான அடையாளங்களும் அதில் இருந்தன. கவரில் இருந்த ரூ.2000 நோட்டு கட்டுகள் முழுமையாக நனையாமல் பாதி அளவு நனைந்த நிலையில் இருந்தது. 20 கட்டுகள் கவரில் இருந்தது. குளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டு கட்டுகள் தண்ணீரில் நனைந்து இருந்ததால் சேதம் அடைந்து காணப்பட்டது. அந்த ரூபாய் நோட்டுகளை வெயிலில் காய வைத்தனர்.

    குளத்தில் கட்டு கட்டாக ரூ.2000 ரூபாய் நோட்டுகள் சிக்கிய தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியது. இதையடுத்து பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். குளத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.2000 ரூபாய் கட்டுகள் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைப்பற்றப்பட்ட ரூ.2000 ரூபாய் நோட்டு கட்டுகள் குளத்துக்குள் எப்படி வந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகளா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×